கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 2 பிப்ரவரி, 2011

தொழுகையில் விரலை நீட்டலாமா?

தொழுகை இருப்பில் விரலசைக்க வேண்டுமென்ற செய்தி பலமானதாகும். அதை உறுதிப்படுத்தும் வேறு அறிவிப்புகளும் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் இடது தொடை மீது இடது முன்னங்கை வைப்பார்கள். வலது தொடை மீது வலது முன்கையை வைப்பார்கள். கடைசி இரண்டு விரல்களை மடக்கிக் கொண்டு கட்டை விரலையும் நடு விரலையும் வளையம்போலாக்கி தமது ஆள்காட்டி விரலை உயர்த்தி அழைப்பதுபோல் அசைத்;ததை நான் பார்த்தேன் ‘
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்கள்: நஸயி (879), அப்னு ஹிப்பான், தாரமி, அஹ்மத் أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ زَائِدَةَ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظَرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا قَالَ وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ لَمَّا رَفَعَ رَأْسَهُ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ وَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا ( النسائ : 879)

2.
و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَعَدَ فِي التَّشَهُّدِ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى وَعَقَدَ ثَلَاثَةً وَخَمْسِينَ وَأَشَارَ بِالسَّبَّابَةِ (مسلم : 912)

‘நபி (ஸல்) அவர்கள் தமது தஷஹ்ஹுதில் உட்கார்ந்து விரலை உயர்த்தி இஷார செய்வார்கள்’
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் தமது அத்தஹியாத்தில் தமது ஆள்காட்டி விரலால் இஷாரா செய்வார்கள்’
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: தாரமி

இதே கருத்தை வலியுறுத்தி இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. இதில் இரண்டாவது மூன்றாவது ஹதீஸ்களிலும் இதை வலியுறுத்தும் ஹதீஸ்களிலும் ‘இஷாரா’ என்ற பதம் வந்துள்ளன. ஒரு செயலை வாயால் மொழியாமல் செயலால் செய்வதே ‘இஷாரா’ வாகும். உதாரணமாக வாய் பேச முடியாதவர்களின் எல்லா செயல்களும் ‘இஷாரா’ தான்.

நபி (ஸல்) ‘இஷாரா’ செய்துள்ளார்கள் என்பது தெளிவான விஷயம். அந்த இஷாரா எப்படி இருந்தது? அதை விளக்குகிறது நாம் முதலாவதாக எடுத்துக்காட்டிய செய்தி.
‘ நபி (ஸல்) இஷாரா செய்வார்கள் அந்த இஷாரா எப்படி இருந்ததென்றால் விரலை உயர்த்தி (யாரையோ) அழைப்பதுபோல்’ இருந்தது என வயில் பின் ஹுஜ்ர் (ரலி) தெளிவாக விளக்குகிறார். இஷாரா என்பதும், விரலசைப்பு என்பதும் முரண்பட்ட விஷயமல்ல. ஒன்றை விள்கும்படியாக மற்றொண்டு அமைந்துள்ளது.

‘பேனாவால் எழுதுவதைப் பார்த்தேன். அது !மை! போனாவாக இருந்தது’ என்று எவரும் கூறினால் இதை முரண்பாடாக கருத மாட்டோம். முதல் வாசகம் பேனா என்கிறது. இரண்டாம் வாசகம் பேனாவின் தன்மையைக் கூறுகிறது. இதே போன்றுதான் இஷாராவிற்கு விளக்கமாக விரல் அசைப்பார்கள் என்ற பதம் வந்துள்ளது. எனவே, இஷாரா என்று வரும் ஹதீஸை எவராவது செயல்படுத்துவதாக இருந்தால் இன்னொரு ஹதீஸ் இதற்கு விளக்கமாக அமைந்துள்ளதால் விரல் அசைப்பின் மூலமாகத்தான் செயல்படுத்த முடியும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக