கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 29 செப்டம்பர், 2010

நக்கீரன் அலுவலகம் முற்றுகை-TNTJ அறிவிப்பு!


நாட்டில் நடந்த அணைத்து குண்டு வெடிப்புகளுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிறுவனர் பி.ஜே அவர்கள் தான் காரணம் என்ற பொய்யான செய்தியை வெளியிட்ட கேடுகெட்ட நக்கீரன் இதழைக் கண்டித்து இன்ஷா அல்லாஹ் 2-10-2010 சனிக்கிழமை அன்று நக்கீரன் அலுவலகம் முற்றுகை!

ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும்: ஜெர்மனி அதிபர் மெர்கல்!


பெர்லின் : ஜெர்மனியில் முஸ்லீம்கள் அதிகரித்து வருதல் மற்றும் ஜெர்மனியின் சமூக தளத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து ஜெர்மானியர்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றும் வருங்காலத்தில் சர்ச்சுகளை விட மசூதிகள் அதிகம் இருக்க போகும் யதார்த்தத்தை ஜெர்மானியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் மெர்கல் கூறியதாக ப்ராங்க்பர்டர் அல்லெஜெமின் ஜெய்துங் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் மெர்கல் " நிச்சயமாக ஜெர்மனியின் சமூக தளம் மிகப் பெரும் மாறுதலை சந்தித்து வருவதாகவும் இனி வரும் காலங்களில் மசூதிகள் நம் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 45 இலட்சம் முஸ்லீம்கள் வாழும் ஜெர்மனியில் சமீபத்தில் திலோ சராஜின் எனும் அரசியல்வாதி முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுப்பதாகவும் குழந்தை பிறப்பின் மூலம் தங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதற்கு பதிலளிக்கும் முகமாகவே ஜெர்மனி அதிபரின் அறிக்கை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சுட்டி காட்டுகின்றனர். பிற ஐரோப்பிய தேசங்களை போல் விரைவில் ஜெர்மனியும் இஸ்லாத்தின் இரும்பு கோட்டையாகும் என்றும் மெர்கல் குறிப்பிட்டார். மெர்கல் சொல்வதை போல் பிரான்ஸில் 20 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30 % முஸ்லீம்களாகவும் பாரீஸ்போன்ற நகரங்களில் 45% மேலும் உள்ளது. இங்கிலாந்திலும் சுமார் 1000 மசூதிகள் உள்ளதாகவும் அதில் சில சர்ச்சுகளாக முன்னர் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியத்தில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 50 % முஸ்லீம்களாக உள்ளனர். சமீபத்தில் லிபிய அதிபர் கடாபி ஐரோப்பா கத்தியின்றி, தோட்டாவின்றி, தீவிரவாதிகளின்றி விரைவில் இஸ்லாத்தை தழுவும் என்று குறிப்பிட்டதை மேற்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாக சமூகவியல் ஆய்வாளர்கள்

திங்கள், 27 செப்டம்பர், 2010

கியாமத் நாளின் அடையாளங்கள்!!!

மகளின் தயவில் தாய்
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777, 50

பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை
மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு
நாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 4777

ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)
குறிப்பிட்டார்கள்.
நூல்: புகாரி 50

குடிசைகள் கோபுரமாகும்

இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 7121

விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்
யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று
நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.

நூல் : புகாரி 80, 81, 5577, 6808, 5231

தகுதியற்றவர்களிடம் பொறுப்பு
'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள்
நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு
காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று
விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 59, 6496

பாலை வனம் சோலை வனமாகும்
செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்
கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக
மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
நூல் : முஸ்லிம் 1681

காலம் சுருங்குதல்
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)
ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.
(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு
விநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.
நூல் : திர்மிதீ 2254)

கொலைகள் பெருகுதல்
கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம்
(ஸல்) கூறியுள்ளனர்.
நூல் : புகாரி 85, 1036, 6037, 7061

நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
பூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள்
நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.
நூல்: புகாரி 1036, 7121

பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
மனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.
நூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.

நெருக்கமான கடை வீதிகள்
கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்
என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: அஹ்மத் 10306

பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்
அடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

ஆடை அணிந்தும் நிர்வாணம்
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 3971, 5098

உயிரற்ற பொருட்கள் பேசுவது
விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்
நபிமொழி.
நூல்: அஹ்மத் 11365

பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: அஹ்மத் 1511

தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்
தெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493

பள்ளிவாசலை பாதைகளாகப் பயன்படுத்துதல்
பள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.
நூல்: ஹாகிம் 4/493

சாவதற்கு ஆசைப்படுதல்
இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல்
செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 7115, 7121

இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக
முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.
நூல்: புகாரி 3609, 7121

முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்
நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி 3456, 7319

யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.
நூல்: புகாரி 2926

கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.
நூல் : புகாரி 5179

யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.
புகாரி 7119

கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்
மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 3517, 7117

அல்ஜஹ்ஜாஹ் மன்னர்
ஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5183

எண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்
கடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப்
பார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 5191

செல்வம் பெருகும்
செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.
நூல் : புகாரி 1036, 1412, 7121

ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.
நூல் : புகாரி 1424

மாபெரும் யுத்தம்
இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்
ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே
வாதத்தையே எடுத்து வைப்பார்கள்.
நூல் : புகாரி 3609, 7121, 6936

பைத்துல் முகத்தஸ் வெற்றி

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!

1. எனது மரணம்

2. பைத்துல் முகத்தஸ் வெற்றி

3. கொத்து கொத்தாக மரணம்

4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு

5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்

6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12
ஆயிரம் பேர் இருப்பார்கள்.
நூல் : புகாரி 3176

மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 2451

அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.
நூல் : முஸ்லிம் 3546

மாபெரும் பத்து அடையாளங்கள்

இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து
விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.

1 - புகை மூட்டம்

2 - தஜ்ஜால்

3 - (அதிசயப்) பிராணி

4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது

5 - ஈஸா (அலை) இறங்கி வருவது

6 - யஃஜுஜ், மஃஜுஜ்

7 - கிழக்கே ஒரு பூகம்பம்

8 - மேற்கே ஒரு பூகம்பம்

9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்

10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்

ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள்
நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி),
நூல்: முஸ்லிம் 5162.

புகை மூட்டம்
வானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக!
அப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக
அமைந்திருக்கும்.
(அல்குர்ஆன் 44:10,11)

உங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.
அவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல் பிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது
செவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.
மூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூமாலிக்(ரலி)
நூல்: தப்ரானி

யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை
இறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே
அவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.
(அல்குர்ஆன் 21:96)

ஈஸா(அலை) அவர்களின் வருகை
நிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம் கொள்ளாதீர்கள்! என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.(அல்குர்ஆன் 43:61)

மூன்று பூகம்பங்கள்
(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு
தீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை யுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்

பெரு நெருப்பு
எமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச் செல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹுதைபா(ரலி)
நூல்: முஸ்லிம்

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

புதன், 22 செப்டம்பர், 2010

பாபர் மஸ்ஜித் தீர்ப்பின் போது அமைதி காப்போம்! TNTJ வெளியிட்டுள்ள அறிக்கை!

பாபரி மஸ்ஜித் நிலம் உரிமை குறித்து வருகின்ற 24.09.2010(வெள்ளி) அன்று தீர்ப்பு வெளிவரவிருப்பது அறிந்ததே. இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் சமுதாயத்திற்கும், தனது கட்டுப்பாட்டில் உள்ள 600 பள்ளிவாசல்களுக்கும் பின் வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த 1949ஆம் ஆண்டு வரை பாபர் மஸ்ஜிதில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்தனர். அதாவது உரிமை மற்றும் அனுபவம் ஆகிய இரு அடிப்படைகளில் அந்த இடம் முஸ்லிம்களுக்குத்தான் சொந்தம் என்று உறுதியாகிறது.
இந்திய நீதி மன்றங்களில் சிவில் வழக்குகளில் இவ்விரண்டையும் அடிப்படையாகக் கொண்டுதான் தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன. இதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் முஸ்லிம்களுக்கு அனுகூலமாகவே அமைய உள்ளது.

அவ்வாறு தீர்ப்பு அநுகூலமாக அமையும் பட்சத்தில் முஸ்லிம்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் அடக்கமும் அமைதியும் காத்து அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த இரு அடிப்படைகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு மேல் முறையீடு செய்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே அலஹாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு எப்படி அமைந்தாலும் முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சமுதாய மக்களிடம் கேட்டுக் கொள்கிறது.

எதிர் வரும் தீர்ப்பு தொடர்பாகவே கடந்த 21.09.2010 அன்று டிஎன்டிஜே பொதுச் செயலாளர் எம்.அப்துல் ஹமீது, துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கலீல் ரசூல், மாநில மேலான்மைக்குழுத் தலைவர் எம்.ஷம்சுல்லுஹா, மேலான்மைக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஆகியோர் அடங்கிக குழுவினர் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் அவர்களை சந்தித்தனர். இச்சந்திப்பின்போது அயோத்தி தீர்ப்பையொட்டி தமிழகத்தில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்கள்.

அதற்குக் காவல் துறைத் தலைவர் டிஎன்டிஜே நிர்வாகிகளிடம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு முஸ்லிம் சமுதாயத்தினர் முழுமையாக ஒத்துழைக்க வேண்டுமாறு கேட்கும்படிக் கேட்டுக் கொண்டார்.
பள்ளிவாசல்களில் இதுபற்றிய அறிவிப்பு செய்யும்படியும் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார். தமிழகம் முழுவதும் பலத்த ஏற்பாடுகள் போடப்பட்டு வருகின்றன. சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கு முயலும் தீயசக்திகள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியையும் காவல்துறைத் தலைவர் அளித்திருக்கிறார்.
இவ்விஷயத்தில் காவல்துறையினருக்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு வழங்குவதாக டிஎன்டிஜே நிர்வாகிகள் தெரிவித்தனர். எனவே அமைதி காப்போம்.

பி.ஜெய்னுலாப்தீன் ( PJ ) தவ்ஹீத்வாதியா? தீவிரவாதியா?லக்பிம நிவ்ஸ் ஆங்கில நாளேட்டுக்கு மறுப்பு.

கடந்த 19.09.2010 ஞாயிற்றுக் கிழமையன்று வெளியிடப்பட்ட லக்பிம ஆங்கில நாளேட்டில் இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகள் அனைத்தும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதாகவும் அந்த இயக்கங்களுக்கும் தீவிரவாத இயக்கங்களான லக்ஷர் அல்உம்மா போன்ற அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

ரங்கா ஜயசூரிய என்ற ஒருவரினால் எழுதப்பட்ட அந்த கட்டுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரு தீவிரவாத இயக்கம் என்றும் அதன் அமைப்பாளர் சகோதரர் பி.ஜெ அவர்கள் தீவிரவாதி என்றும் அபான்டமான குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.

Wahhabist terriorist traning in srilanka ? என்ற தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரையில் இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகள் தான் என்றும் இங்குள்ள அமைப்புகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தான் பயிற்சியளிப்பதாகவும் அந்த பத்திரிக்கை செய்தி குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத இயக்கமா?
லக்பிம ஆங்கில நாளேட்டின் செய்தியில் தமிழகத்தில் மார்க்க மற்றும் சமுதாய பணியில் ஈடுபட்டு வரும் மபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை தீவிரவாத இயக்கமாக குறிப்பிட்டுள்ளது.

கடந்த 25 வருடகாலமாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடந்த 2006ம் ஆண்டு 10லட்சம் மக்களை கூட்டி மபெரும் அரசியில் மாநாட்டை கும்பகோணத்தில் நடத்திக் காட்டியது.

அது போல் கடந்த 2008ம் ஆண்டு தஞ்சையில் சுமார் பத்து லட்சம் மக்களை கூட்டி மாபெரும் மாநாட்டை இந்த அமைப்பு நடத்தியதின் மூலம் அரசாங்கத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்லாமல் தற்போது தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு அமைவதற்கு ஒட்டுமொத்த தமிழக முஸ்லீம்களின் வாக்குகளையும் பெற்றுக் கொடுத்த பெருமை இந்த அமைப்புக்கே உரியது.

இருதியாக கடந்து ஜுலை 4ம் தேதி அன்று சுமார் பல லட்சம் மக்களை ஒன்று கூட்டி இந்திய முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மாபெரும் அரசியல் மாநாட்டையும் நடத்திக்காட்டியது.

இப்படி மக்கள் பேரியக்கமாக திகழும் ஒரு இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக காட்டி அவர்களுடன் இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகள் இணைந்து தீவிரவாத பயிற்சி மேற்கௌ;வதாக கூறியிருப்பது ஒரு இயக்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் மாபெரும் குற்றமாகும்.

கடந்த நான்கு வருடங்களாக இரத்ததானம் செய்வதில் தமிழகத்திலேயே முதல் இடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தான் இருக்கிறது இப்படிப்பட்ட ஒரு அமைபை தீவிரவாத இயக்கமாக லக்பிம பத்திரிக்கை வர்ணித்ததின் மூலம் பத்திரிக்கையின் நம்பகத்தன்மையை இந்தப் பத்திரிக்கை இழந்துள்ளது.

யார் இந்த பி.ஜெ?

தமிழுலகறிந்த பிரபல பேச்சாளரும் எழுத்தாளரும் குர்ஆன் மொழிபெயர்பாளரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிருவனத்தலைவருமான அறிஞர் பி.ஜெ அவர்கள் தமிழ்நாட்டில் தொன்டி என்ற ஊரில் பிறந்தவர் தனது பாடசாலைக் கல்வியின் பின்னால் அரபிமொழியைப் படித்து இஸ்லாமிய மார்க்கத்தை மிகத் தொளிவாக விளங்கிய பி.ஜெ அவர்கள் திருமறைக் குர்ஆனையும் நபியவர்களின் வார்த்தைகளையும் மாத்திரம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டு தனது பிரச்சாரப் பணியை ஆரம்பித்தார்.

இளவயதிலேயே தனது பிரச்சாரத்தின் மூலம் பெரும் புரட்சியை உண்டு பண்ணிய அறிஞர் பி.ஜெ அவர்கள் இஸ்லாத்தின் மீது கலங்கம் சுமத்தியவர்களிடம் பகிரங்க விவாதம் செய்து அவைகளில் வெற்றியும் பெற்றார்.அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாமியர்களின் புனித ஆலயம் கஃபாவை விமர்சித்த மதுரையைச் சேர்ந்த ஜபமனியுடன் விவாதித்து இஸ்லாமே உண்மை மார்க்கம் என்பதை தனது இளவயதிலேயே நிரூபித்துக் காட்டினார்.

நபியவர்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு தூதர் வருவார் என்று கூறி மிர்சா குலாம் என்ற பொய்யனை இறைவனின் தூதர் என்று வாதிட்ட காதியானிகளுடன் விவாதித்ததின் மூலம் தமிழகத்தில் அவர்களின் கொட்டத்தை அடக்கினார்.

சுன்னத் ஜமாத் என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத காரியங்களை செய்துவரும் கப்ரு வணங்கிகளுடன் பல விவாதங்கள் செய்து இணைவைத்தல் என்னும் பெரும்பாவத்திலிருந்த மக்கள் அந்த பாவத்தை விட்டும் விளகிவர இறைவனின் உதவியினால் இவரின் ஆழ்ந்த மார்க்க அறிவும் சிறந்த பேச்சாற்றலும் மிகவும் முக்கியத்துவப்பட்டது.

கடவுலே இல்லை என்று தமிழகத்தில் பிரச்சாரம் செய்துவந்த திராவிடக் கலகத்தைச் சேர்ந்வர்களுடன் விவாதித்து இருதியில் அவர்கள் அனைவரும் திருமறைக்குர்ஆனை சகோதரர் பி.ஜெயிடம் கேட்டுவாங்கிப் போவதற்கு அது காரணமாக அமைந்தது.

திருமறைக் குர்ஆனை மிக எழிய தமிழில் மொழியாக்கம் செய்து அதற்கு மிகத் தெளிவான விளக்கவுரைகளை வழங்கியதின் மூலம் படித்த மற்றும் பாமர மக்களிடமும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

அத்துடன் இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
அவருடைய புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளன.
அச்சத் என்கின்ற மாணவர் சகோதரர் பி.ஜெயுடைய வரலாற்றை எழுதி முதுகலைப்பட்டத்தை வென்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது

கடந்த 25 வருடங்களாக பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் மார்க்கப் பிரச்சாரம் செய்துவரும் சகோதரர் பி.ஜெ அவர்கள் சமுதாய சேவையிலும் தன்னை அர்ப்பனித்துக் கொண்டவர்.

சகோதரர் பி.ஜெ அவர்களை லக்பிம நாளேடு தீவிரவாதியாக வர்ணித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயமாகும்.

தீவிரவாதத்திற்கு எதிராக பி.ஜெ அவர்களின் பங்களிப்பு என்ன?
கடந்த 25 வருடங்களாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற மாற்று மத அன்பர்களுக்கான நிகழ்சி நடத்துவதின் மூலம் தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் கடுமையாக எதிர்த்துவருகிறார்.

1980களிலிருந்து இலங்கையில் தீவிரவாதத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளை எதிர்த்த இந்தியாவின் ஓரே அமைப்பு டி.என்.டி.ஜெ மாத்திரம் தான் அதுபோல் ஒரே தலைவரும் சகோதரர் பி.ஜெ மாத்திரம்தான்.

இலங்கையில் நடந்த இருதி யுத்தத்தின் போது சிவாஜிலிங்கம் எம்.பி.இந்தியாவிற்கு சென்று போரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதவு தரும்படி கேட்டதற்கு ஒருக்காலும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க முடியாது என்று தெளிவாக அறிவித்தவர் இந்த பி.ஜெ

முன்னால் முதல்வர் ஜயலலிதா முதல் இன்னால் முதல்வர் கருணாநிதி வரை பல முறை முஸ்லீம்கள் விஷயமாக பல சந்திப்புகளை இவர் மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜுலை 4ம் தேதி டி.என்.டி.ஜெ நடத்திய மாநாட்டின் பின் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களை டெல்லிக்கு அழைத்து பேசியதும் விஷேசமாக குறிப்பிடத்தக்கது.

லக்பிம பத்திரிக்கை ஆசிரியரே உங்களிடம் சில கேள்விகள்.

இஸ்லாமியப் பேரறிஞர் சகோதர் பி.ஜெ அவர்களை தீவிரவாதிகளாக தாங்கள் சித்தரித்துள்ளீர்கள்………

உங்கள் நாளேடு வெளியிடும் செய்திகள் அனைத்தினதும் உண்மைத் தன்மையை அறியாமல் தாங்கள் வெளியிடுவதை நிருத்திக் கொள்ளுங்கள்.

பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தீவிரவாதி என்றால் தீவிரவாதி பிரதமருடன் பகிரங்க சந்திப்பை மேற்கொள்ள முடியுமா?

டி.என்.டி.ஜெ தீவிரவாத இயக்கமெனில் தீவிரவாத இயக்கத்திடமா தி.மு.க அரசு தேர்தலில் ஆதரவு கேட்டது?

கலைஞர் கருணாநிதிக்கும் பி.ஜெக்கும் இடையில் பல முறை சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது அப்படியெனில் கருணாநிதியும் தீவிரவாதியா?

மன்மோகன்சிங்குடன் பி.ஜெ பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியப் பிரதமரையும் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று லக்பிம செய்தி வெளியிடுமா?

தவ்ஹீத் இயக்கங்களை தீவிரவாத இயக்கங்களாக சித்தரித்ததற்காகவும் தமிழக முஸ்லீம் பேரியக்கமான டி.என்.டி.ஜெயையும் அதன் அமைப்பாளரையும் தீவிரவாதிகளாக பொய் குற்றம் சாட்டியதற்காகவும் பகிரங்க மண்ணிப்பு கேட்க வேண்டும்.

அப்படி மண்ணிப்புக் கேட்காத பட்சத்தில் லக்பிம நாளிதல் பெரும் சட்டச் சிக்களை எதிர் கொள்ளவேண்டிவரும் என்பதையும் பத்திரிக்கையின் விற்பனை கேள்விக்குறியாக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Source:Rasmin M.I.Sc (Sri Lanka)

திங்கள், 20 செப்டம்பர், 2010

இஸ்லாத்துக்கு புரிந்த சேவைக்காக நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ்!

செப்டம்பர் 11 அன்று குரானை எரிக்க போவதாக சொன்னவர் இப்பாதிரியார்

1. குரான் அதிக விற்பனையானது : அமேசான், உள்ளூர் மற்றும் வெளியூர் கடைகளிலும் இணையம் மூலமாகவும் குரான் அதிக அளவு விற்பனையானது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட குரானை மானுடம் சிந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.

2. வியாபரம் சூடு பிடித்தது : நிறைய குரான்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் விற்பனையானதின் மூலம் இஸ்லாமிய நிறுவனங்களின் உரிமையாளர்களூக்கு நல்ல லாபம் கிடைத்தது.

3. பள்ளிவாயில்களுக்கு அதிகமானோர் வருகை : உங்கள் சர்ச்சையால் இஸ்லாத்தை அறிந்து கொள்ள பள்ளி வாயில்களுக்கு அதிகமானோர் வருகை புரிந்ததின் மூலம் இஸ்லாத்தின் செய்தியை பெற்று கொன்டனர்.

4. இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது : இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.

5. கூகுளில் குரான் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன : நீங்கள் குரானை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குரான் குறித்து தேடுவோரின், இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

6. நூலகங்களில் குரான் காணாமல் போயின : எத்துணை பிரதிகள் வாங்கிய போதும் ஐரோப்பா, கனடா, அமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குரானை அனைவரும் எடுத்து கொண்டு போவதால் குரான் ஸ்டாக் இல்லாமல் போனது.

7. முஸ்லீம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் :மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பிரச்சாரத்தை தங்களின் வெறும் அறிக்கைகள் உண்டாக்கியதால் தஃவாவில் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.

8. முஸ்லீம்கள் உணர்வுகள் தூக்கத்திலிருந்து எழுந்தன : உலகெங்கும் வாழும் முஸ்லீம் சமூகம் உங்களின் உரைக்கு பின் தன் தூக்கத்தை கலைத்து குரானின் செய்தியை அறிந்து கொள்வதில், குரானுடனான தங்கள் உறவை புதுப்பித்து கொள்வதில், குரானின் செய்தியை பிற மக்களுக்கு அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டின.

9. நிறைய மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் : முன்பை காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

10. நீதியை நேசிப்பவர்களை ஒன்றிணைத்தது : இஸ்லாம், கிறிஸ்துவம், யூதர்கள், ஹிந்துக்கள், இறை மறுப்பாளர்கள் என அனைத்து பிரிவிலும் உள்ள நீதியை நேசிப்பவர்களை இக்கொடுமைகளை கண்டித்ததன் மூலம் ஒன்றிணைத்தது.

பாதிரியார் டெர்ரி ஜோன்ஸூக்கு ஒரு வேண்டுகோள் : நீங்கள் எரிக்க நினைத்த அக்குரானை திறந்த மனதோடு படியுங்கள். இயேசுவை பின்பற்றுபவராக இருந்தால் இயேசுவின் மார்க்கமான, நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மது (ஸல்) போன்ற நபிமார்களின் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்.

குரானோடு மோதியவர்கள் ஒன்று குரானால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அழிந்து போயிருக்கின்றார்கள். எது வேண்டும் என்று தீர்மானிப்பதுஉங்கள் கையில் தான் உள்ளது சகோதரரே

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

ரமளான் சொன்ன சேதி என்ன?

மாசு மருவற்ற தூய இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்...

'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்கள் முன் சென்றோர் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது'(அல்குர்ஆன் 2:183)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்....
'ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றார்கள்' அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரீ 1899
கண்ணியமிக்க மாதம் விடை பெற்றுவிட்டது. கருணையாளனாகிய அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றுக் கொண்டோம். இரவும் பகலும் வணக்கங்களால் பள்ளிகள் அலங்காரமாய் இருந்தன. ஐவேளை தொழுகைகளை பேணாதவர்களெல்லாம் வந்திருந்து தினமும் தொழுகைகளை பேணக்கூடியவர்களுக்கு ரமளானில் பள்ளியில் நெருக்கடியை ஏற்படுத்தி இருந்ததை காண முடிந்தது.


புதுப்புது முகங்கள்! ஆர்வத்தோடு அமல்கள்! அகமும், புறமும் அமைதியில் லயித்து கிடந்த மனிதர்கள்! எந்நேரமும் பள்ளிகளில் தித்திக்கும் திருமறையை ஓதுபவர்களின் ரீங்காரம். இடைவிடாத தொடர் பயான்கள்! நன்மைகளை ஒருவருக் கொருவர் எத்திவைத்தல்! தர்ம சிந்தனைகள்! நோன்பு திறப்பு சேவைகள்! இரவுத் தொழுகைகள்! ஸஹர் நேர காரியங்கள்! லைலத்துல் கத்ர் இரவு! ஃபித்ராக்கள்! என்றெல்லாம் அமல்களின் அலங்காரத்தால் அழகிய மாதம் நிறைவு பெற்றுவிட்டது. ஸுப்ஹானல்லாஹ்

புதன், 15 செப்டம்பர், 2010

கொள்ளுமேடு கிளையின் ஃபித்ரா விநியோகம்! ரூபாய் 36500

நமதூர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக ஃபித்ரா விநியோகம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த ஆண்டு கொள்ளுமேடு கிளையின் சார்பாக ரூபாய் முப்பத்தி ஆராயிரத்தி ஐநூறு(ரூ36500) மதிப்பிற்கு 100 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.வழங்கப்பட்ட பொருட்கள்:
உயிர் கோழி,எண்ணை மற்றும் மளிகை சாமான்கள்

கிளையின் தலைவர் யாசின் அவர்களின் தலைமையில் சென்ற நமது நிர்வாகிகள் ரஜ்வீ, கிளை துணைத்தலைவர் ரபீக், செயலாளர் இத்ரீஸ் மற்றும் அபூ பக்கர், ஜாவித், ஆசிக் ,சலீம் ஆகியோர் சிறப்பான முறையில் ஃபித்ரா விநியோகம் செய்து அனைவரின் பாராட்டுதலையும் பெற்றனர்.

செய்தி :அபுல் மல்ஹர் அமீரக தலைவர் (KTJ)

திங்கள், 6 செப்டம்பர், 2010

திருவாரூர் கொலை விவகாரம்: TNTJ வெளியிட்டுள்ள பத்திரிக்கைச் செய்தி

திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி என்ற கிராமத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹாஜி முஹம்மது என்பவர் துப்பாக்கியால் சுட்டு இருவர் இறந்து விட்டதாகவும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு முரணானதாகும்.

துப்பாக்கியால் சுட்டவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியோ, உறுப்பினரோ, அனுதாபியோ அல்ல. அவர் எங்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்தக்கூடியவரும் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளை ஆதரிப்பவரும் அல்ல.

அவரது உறவினர் குத்புதீன் என்பவரை சிலர் தாக்கிவிட்டனர் என்பதால், உறவினருக்காக நியாயம் கேட்க அவர் வந்தபோது ஊர் ஜமாஅத்தார்களுக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது தான் அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுடப்பட்டவர்களில் முஸ்லிமல்லாதவர் மூன்று பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தச் சம்பவத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எந்தக் காலத்திலும் இது போன்ற வன்முறையை தவ்ஹீத் ஜமாஅத் கையில் எடுத்ததில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கொள்ளுமேடு TNTJ ஃபித்ரா பணிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளை ஒவ்வோரு வருடமும் ஃபித்ரா வினியோகம் செய்துவருகிறது அதன் அடிப்படையில் இந்த ஆண்டும் கிளை நிவாகிகள் மும்புறமாக ஈடுப்பட்டுள்ளனர். கிளையின் நிர்வாகி ரஜ்வி அவர்களிடம் நாம் தொடர்புக் கொண்டுக் கேட்டபொழுது, அவர் ஃபித்ரா வழங்கும் பணிகள் சிறப்பாக செல்வதாகும் மற்ற இயக்கங்கள் வீடு வீடாக சென்று வசூல் செய்கிறார்கள் ஆனால் நாம் அவ்வாறு ஓவ்வொரு வீடாக செல்ல வில்லை என்றாலும் மக்கள் நம்மை தேடி வந்து தங்களின் ஃபித்ராவை வழங்கி வருகின்றனர் என்றும் கடந்த ஆண்டைவிட இந்த வருடம் சிறப்பான முறையில் ஃபித்ரா வசூலும் வினியோக பணிகளும் செல்வதாகவும் கூறினார்.

செய்தி : அபுல் மல்ஹர் (அமீரக தலைவர் ktj )

வியாழன், 2 செப்டம்பர், 2010

முதல் இடத்தில் www.onlinepj.com

தமிழ் பேசும் மக்களால் அதிகமாக பார்க்கப்படும் இணையதளங்களில் முதல் இடத்தையும் ஜெய்னுலாப்தீன் அவர்களின் www.onlinepj.com என்ற இணையதளம் பிடித்துள்ளதை இணையதளங்களின் தர வரிசையை வெளியிடும் Alexa இணையதளம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஒரு நாளைக்கு சுமார் 6000ம் மேற்பட்டவர்கள் இந்த இணையதள்த்தை பார்ப்பதாக அலெக்ஸா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.