கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 2 பிப்ரவரி, 2011

சப்தமிட்டு ஆமின் சொல்லலாமா?

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடிந்ததும் ”ஆமீன்” கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும் (தொழ வைப்பவரும்) மஃமூமும் (பின் நின்று தொழுபவரும்) சப்தமிட்டு ஆமீன் கூற வேண்டும்.
782 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ سُمَيٍّ مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قَالَ الْإِمَامُ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ فَقُولُوا آمِينَ فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلَائِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ تَابَعَهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنُعَيْمٌ الْمُجْمِرُ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ رواه البخاري
இமாம் ”கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்” எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன் மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­), நூல்: புகாரி
2286 وأخبرنا أبو يعلي حمزة بن عبد العزيز الصيدلاني أنبأ أبو بكر محمد بن الحسين القطان ثنا أحمد بن منصور المروزي ثنا علي بن الحسن بن شقيق أنبأ أبو حمزة عن مطرف عن خالد بن أبي أيوب عن عطاء قال ثم أدركت مئتين من أصحاب النبي صلى الله عليه وسلم في هذا المسجد إذا قال المغضوب عليهم ولا الضالين سمعت لهم رجة بآمين ورواه إسحاق الحنظلي عن علي بن الحسن وقال رفعوا أصواتهم بآمين (سنن البيهقي الكبرى ج: 2 ص: 59)
இந்தப் பள்ளிவாச­ல் (சுமார்) 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். (அவர்கள்) இமாம் ”கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்” எனக் கூறும் போது ”ஆமீன்” என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: அதா, நூல்: பைஹகீ
நுஅய்ம் அல் முஜ்மிர் என்பவர் கூறுகையில். நான் அபூஹ‚ரைரா அவர்களுக்கு பின்னால் நின்று தொழுதேன். அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஓதினார்கள். பிகு சூரா பாத்திஹா ஓதினார்கள். அவர்கள் கைரில் மப்லூபி அலைஹிம் வலல்லாழ்ழீன் என்று ஓதியவுடன் ஆமின் என்று கூறினார்கள். மக்களும் ஆமின் என்று கூறினார்கள். இன்னும் அவர்கள் ஸஜ்தா செய்யும் போதெல்லாம் அல்லாஹ‚ அக்பர் என்று கூறுவார்கள். இரண்டாவது ரக்அத்தி­ருந்து எழுந்தால் அல்லாஹ‚ அக்பர் என்று கூறுவார்கள். அவர்கள் ஸலாம் கொடுத்து முடித்து விட்டால் என்னுடைய உயிர் எஹ்னுடைய கையில் இருக்கிறதோ அவன் மீது ஆனையாக நிச்சயமாக நான் ரசூல் ஸல் அவர்கள் எவ்வாறு தொழுது காட்டினார்களோ அவ்வாரே நான் உங்களுக்கு தொழது காட்டியுள்ளேன் என்று கூறினார்கள்.
நூல்: நஸயீ (895)
இந்த இடத்திலும் கவ்ல் என்ற வார்த்தைதான் உள்ளது. மக்கள் ஆமின் சொல்வார்கள் என்று வருகிறது. மக்கள் சப்தமிட்டு சொல்வதின் மூலமே அறிவிப்பவர் ஆமின் சொன்னார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
நன்றி:http://kadayanalluraqsha.com/

0 கருத்துகள்:

கருத்துரையிடுக