கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 31 ஆகஸ்ட், 2011

ந‌ம‌தூர் கொள்ளுமேட்டில் இந்த‌ வ‌ருட‌ பித்ரா வ‌சூல் 26,300 ரூபாய்

ந‌ம‌தூர் கொள்ளுமேட்டில், த‌வ்ஹீத் கிளையில் இந்த‌ வ‌ருட் பித்ரா வ‌சூல் 26,300 ரூபாய். இது ந‌ம‌து இறைத்தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ந‌மக்கு காட்டித் த‌ந்த‌ இறை வ‌ழியின் அடிப்ப‌டையில் ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கு வினியோகிக்க‌ப் ப‌ட்ட‌து.இந்த‌ அடிப்படையில் நம‌தூரில் வ‌சிக்கும் 100 ஏழை குடும்ப‌ங்க‌ளுக்கு தலா 260 ரூபாய் பொருமான‌ 13 பொருட்க‌ள் (அரிசி, கோதுமை, ம‌சாலா பொருட்க‌ள், கொழி இறைச்சி 1/2 கிலோ, முந்திரி, திராட்சை,எண்ணெய், நெய் ம‌ற்றும் ப‌ருப்பு வ‌கைக‌ள்) வினியோகிக்க‌ப்ப‌ட்ட‌து.

கொள்ளுமேடு TNTJ நிர்வாகிக‌ள் முன்னிலையில் இந்த‌ பொருட்க‌ள் பொது ம‌க்க‌ளுக்கு வினியோகிக்க‌ப்ப‌ட்ட‌து.

செய்தி : அபூ த‌ப்ஹீம்

கொள்ளுமேடு

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

நமதூர் தவ்ஹீத் மதரசா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நம்முடைய தவ்ஹீத் மதரசாவின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி ௦01.08.2011 அன்று அசர் தொழுகை முதல இஷா தொழுகை வரை இரண்டு அமர்வுகளாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சி முஹம்மது தாரிப் அவர்களின் முன்னிலையில் இமாம் அவர்களின் கிராத்துடன் தொடங்கியது. தேனீ முபாரக் அவர்கள் கல்வியின் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.கடலூர் மாவட்ட தலைவர் ஜாகிர்ஹுசைன்  அவர்களும் செயலாளர் தாஜுத்தின் அவர்களும் சிறப்பு அழைபாலர்கலாக கலந்துக்கொண்டனர்.  

முதல் அமர்வில் முபாரக் அவர்களின் பயானும் இரண்டாம் அமர்வு மக்ரிப் தொழுகைக்கு பிறகு மதரசா மாணவ மாணவிகளின் பயான் மற்றும் கிராத் ஓதும் போட்டியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பெரும் அளவில் மக்களிடையே பேசப்பட்டது என்றால் அது அல்லாஹ் நமக்கு அளித்த மிகப் பெரிய கண்ணியம் என்றேதான் சொல்லவேண்டும்.
செய்தி:அபூ தஃப்ஹீம்