கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வெள்ளி, 23 நவம்பர், 2012

ஆணவக்கார ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட வரலாறு!



எகிப்து நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவன் ஃபிர்அவ்ன் என்ற கொடுங்கோலன். தனக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தால் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தவன். நானே மகத்தான இறைவன் என்று பிரகடனப்படுத்தியவன்.

இவன் தனது நாட்டின் மக்களை உயர்ந்தவர்,தாழ்ந்தவர் எனப் பிரித்து ஆட்சி செய்தான்.அவனது ஆட்சியில் கொத்தடிமைகளாக்கப்பட்டு   துன்புறுத்தப்பட்டவர்கள் இஸ்ரவேல் சமுதாயத்தினர். இந்த அக்கிரமக்கார அரசனிடம் இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்தான் நபி மூஸா(அலை) அவர்கள்.ஃபிர்அவ்னிடத்தில் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ததோடு ஒடுக்கப்பட்ட இஸ்ரவேல் சமுதாயத்துக்காக உரிமைக் குரல் கொடுத்து அம்மக்களை அடிமைத் தளையிலிருந்து மீட்கும் மாபெரும் பொறுப்பு நபி மூஸா(அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 

அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் அந்த வரலாற்றை எடுத்துக் கூறுகின்றான். திருக்குர்ஆன் கூறும் அந்த வரலாற்றை இப்போது பார்ப்போம்.

ஃபிர்அவ்னின் சர்வாதிகார ஆட்சி

மூஸா மற்றும் ஃபிர்அவ்ன் பற்றிய உண்மையான செய்தியை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்காக உமக்குக் கூறுகிறோம்.  ஃபிர்அவ்ன் பூமியில் ஆணவம் கொண்டிருந்தான். அதில் உள்ளவர்களைப் பல பிரிவுகளாக்கி அவர்களில் ஒரு பிரிவினரைப் பலவீனர்களாக ஆக்கினான். அவர்களில் ஆண் மக்களைக் கொன்றான். பெண்(மக்)களை உயிருடன் விட்டான். அவன் குழப்பம் செய்பவனாக இருந்தான். (அல்குர்ஆன்:  28:3,4)

மூஸா நபியின் பிறப்பு

பனூ இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்ன் இவ்வாறு கொடுமைப் படுத்திக் கொண்டிருந்த போது, நபி மூஸா(அலை) அவர்கள் பிறக்கின்றார்கள். நபி மூஸா(அலை) அவர்கள் பிறந்த காலகட்டத்தில் ஃபிர்அவ்ன் அந்தச் சமுதாயத்தின் ஆண் மக்களைக் கொன்று குவித்துக் கொண்டிருந்தான்.

நபி மூஸா(அலை) அவர்கள் பிறந்தவுடன் ஃபிர்அவ்ன் அவரைக் கொன்று விடுவான் என்று எண்ணி அஞ்சிக் கொண்டிருந்த நபி மூஸா(அலை) அவர்களின் தாயாருக்கு அல்லாஹ் ஒரு செய்தியை உள்ளுணர்வாக அறிவித்துக் கொடுத்தான். அதன் அடிப்படையில் அவர்கள் மூஸா நபியவர்களை ஒரு பெட்டியில் வைத்து, கடலில் போட்டு அனுப்பி விடுகின்றார்கள். அதன் பின் அந்தக் குழந்தை (மூஸா நபி) ஃபிர்அவ்னிடமே வந்து சேர்கின்றது.இந்த வரலாற்றை வல்ல அல்லாஹ் தன் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்..

தன் பகையை தானே வளர்த்த ஃபிர்அவ்ன்  அறிவிக்கப்பட வேண்டியதை உமது தாயாருக்கு நாம் அறிவித்ததை எண்ணிப் பார்ப்பீராக! இவரை (இக்குழந்தையை) பெட்டிக்குள் வைத்து அதைக் கடலில் போடுவாயாக! கடல் அவரைக் கரையில் சேர்க்கும். எனக்கும், இவருக்கும் எதிரியானவன் இவரை எடுத்துக் கொள்வான் (என்று உமது தாயாருக்கு அறிவித்தோம்). எனது கண்காணிப்பில் நீர் வளர்க்கப்படுவதற்காக உம் மீது என் அன்பையும் செலுத்தினேன். உமது சகோதரி நடந்து சென்று இக்குழந்தையை பொறுப்பேற்பவரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று கேட்டார். எனவே உமது தாயின் கண் குளிர்வதற்காகவும் அவர் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் அவரிடம் உம்மைத் திரும்பச் சேர்த்தோம். நீர் ஓர் உயிரைக் கொன்றிருந்தீர். உம்மைக் கவலையிலிருந்து காப்பாற்றினோம். உம்மைப் பல வழிகளில் சோதித்தோம். மத்யன்வாசிகளிடம் பல வருடங்கள் வசித்தீர்.மூசாவே பின்னர் (நமது) திட்டப்படி வந்து சேர்ந்தீர். (அல்குர்ஆன் 20:38-40)

நபித்துவம் வழங்கப்படுதல்

மூஸா அந்தக் காலக்கெடுவை முடித்து, தமது குடும்பத்தாருடன் இரவில் பயணம் மேற்கொண்ட போது தூர் மலையின் திசையில் ஒரு நெருப்பைக் கண்டார். இருங்கள்! நான் ஒரு நெருப்பைக் கண்டேன்.அது பற்றிய செய்தியையோ, அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக அதில் பந்தத்தையோ கொண்டு வருகிறேன் என்று தமது குடும்பத்தாரிடம் கூறினார். அவர் அங்கே வந்த போது பாக்கியம் பெற்ற இடத்தில், வலப்புறத்தில் இருக்கும் ஓடையில் உள்ள மரத்திலிருந்து மூஸாவே! நான் தான் அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் என்று அழைக்கப்பட்டார்.(அல்குர்ஆன்:;  28:29-30)

இரு பெரும் அற்புதங்கள் 

உமது கைத்தடியைப் போடுவீராக! (என்றான்) அதைச் சீறும்பாம்பாகக் கண்ட போது திரும்பிப் பார்க்காது பின்வாங்கி ஓடினார்.மூஸாவே! முன்னே வாரும்! அஞ்சாதீர்! நீர் அச்சமற்றவராவீர்.உமது கையை உமது சட்டைப் பைக்குள் நுழைப்பீராக! எவ்விதத் தீங்குமின்றி வெண்மையாக அது வெளிப்படும். பயத்தின் போது உமது விலாப்புறத்தை ஒடுக்கிக் கொள்வீராக!

வெள்ளி, 16 நவம்பர், 2012

முஹர்ரம் மாதமும் ஆஷுராவும்!


காலங்களைப் படைத்த கருணையாளனாகிய அல்லாஹ் தன் இறுதித் திருமறையில் கூறுகின்றான்... 

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! [அல்குர்ஆன் 9:36]

இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். இதை அல்லாஹ்வின் மாதமென்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத்திற்கென்று பல சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்த போதிலும், நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இம்மாதத்தில் இஸ்லாமியர் களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் காரியங்களெல்லாம் நம்மை நரகப்படுகுழியில் தள்ளிவிடக்கூடியவை என்பதை அறியாமல் இன்றும் அதிகமான இஸ்லாமியர்கள் முஹர்ரம் மாதத்தின் பெயரால் பல பாவமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... 
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல்ஆகிர் மாதத்திற்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி) ஆதாரம் : புகாரி 3197

பஞ்சா எடுப்பது

இந்த புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் பல ஊர்களில் பஞ்சா என்ற பெயரில் விழா எடுப்பார்கள். இஸ்லாத்தை நூற்றுக்கு நூறு சதவிகிதம் பின்பற்றக்கூடிய(?) இளைஞர்களும், இளைஞிகளும், ஆண்களும், பெண்களும் கலர்ஃபுல்லாக காட்சியளித்து, ஒருவரை ஒருவர் கண்டு இன்புற்று, மகிழ்ச்சியைக் கொண்டாடி இந்த பஞ்சாவை சிறப்பிப்பார்கள். இதனை கண்களும், கைகளும், கால்களும், உள்ளமும் செய்கின்ற விபச்சார விழா என்று கூட குறிப்பிடலாம். அந்த அளவிற்கு இந்த பஞ்சா விழாவில் அனாச்சாரங்களும், அட்டூழியங்களும் பெருக்கெடுத்துக் காணப்படும். 

பள்ளிவாசலில் தொழும்போது நபிவழியின் அடிப்படையில் விரலசைத்து தொழுததற்காக கொதித்தெழுகின்ற ஜமாஅத்தினரும், ஒன்றும் இல்லாத தொப்பிக்காக காவல்துறை வரை சென்று புகார் கொடுக்கின்ற ஜமாஅத்தினரும், ஆலிம் பெருமக்களும் இந்த அனாச்சாரங்களைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஏனென்றால் உண்மையான சமுதாய நலனை மார்க்க அடிப்படையில் அமைத்துக் கொள்ளவும், நிர்மாணிக்கவும் இவர்கள் நாடாததுதான் வணக்கத்தின் பெயரால் சமுதாயம் கெட்டுப்போவதற்கு முக்கிய காரணங்களாகி விட்டன. 

இந்த பஞ்சாவில் அப்படி என்னதான் நடக்கின்றது? மனிதனின் கை போன்று செய்யப்பட்ட ஒன்றை ஒரு குதிரையின் மீது வைத்துக் கொண்டு வருவார்கள். இந்த குதிரையின் மீது ஏறி உட்கார்ந்தாலோ, அல்லது அதன் பாதங்களில் தண்ணீர் ஊற்றினாலோ நாடியது நடக்கும் என்று இந்த பஞ்சாவைக் கொண்டாடக்கூடிய பக்தர்களும் மற்றும் திருமணமாகாத பக்தைகளும், குழந்தை பாக்கியம் இல்லாத பக்தைகளும் இந்த குதிரை மகான்(?) அருள் செய்து விடுவார் என்ற நம்பிக்கையில் போட்டி போட்டுக் கொண்டு அவர்களின் மதநம்பிக்கைப் பிரகாரம் அதற்கான சடங்கு சம்பிரதாயங்களில் ஈடுபடுவார்கள். 

படைத்த ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ் ஒருவன்தான் குழந்தைப் பாக்கியம் தரக்கூடியவன் என்ற நம்பிக்கையெல்லாம் இவர்களுக்கு கிடையாது. ஏனென்றால் இவர்களின் மதநம்பிக்கைப் பிரகாரம் குதிரைச் சாமியைத்தான் குழந்தை பாக்கியம் தருபவராக இவர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் உண்மையான முஸ்லிம்களுக்கு திருமறைக்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்...
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான். அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்;. ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 43: 49-50)

மேலும் குதிரையின் மீது கொண்டுவரப்படுகின்ற கையின் விளக்கமாகிறது அதிலுள்ள ஐந்து விரல்களும் இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ள ஐந்து கடவுள்களைக் குறிப்பதாகும். அவர்கள் முஹம்மது(ஸல்), அலி(ரலி), ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி), ஃபாத்திமா(ரலி) ஆகியோராவர்.

இந்த பஞ்சா எடுக்கின்ற சுன்னத் ஜமாத்தினர்(?) இந்த ஐவரையும் கடவுளாகத்தான் வணங்குகின்றனர் என்று நாமாக கற்பனை செய்து கூறவில்லை. இவர்கள் ஓதக்கூடிய மௌலிதுகளில் ஒன்றில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
லீ கம்ஸத்துன் உத்ஃபீ பிஹா ஹர்ரல் வபாயில் ஹாத்திமா அல்முஸ்தஃபா வல் முர்தலா வப்னாகுமா வல்பாத்திமா இதன் பொருள்: எனக்கு முஹம்மது, அலீ, ஹஸன், ஹுஸைன், ஃபாத்திமா ஆகிய ஐந்து

செவ்வாய், 13 நவம்பர், 2012

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது மன்னிப்பு அறிவிப்பு!

அபுதாபி:சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது, அல்லது அபராதம், சிறைத்தண்டனை இல்லாமல் சொந்த நாடுகளுக்கு திரும்பும் வகையில் பொது மன்னிப்பை ஐக்கிய அரபு அமீரக அரசு மீண்டும் அறிவித்துள்ளது. டிசம்பர் 4-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை பொது மன்னிப்பின் காலாவதியாகும்.

இக்காலக்கட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைத்து தொழிலாளர்களும் வசிப்பிட, குடியேற்ற துறையுடன் தொடர்புக்கொண்டு சட்டப்பூர்வமான ஆவணங்களை பெறவோ அல்லது அவுட் பாஸைப் பெற்று சொந்த நாடுகளுக்கு திரும்பவோ செய்யலாம். இத்தகவலை அஸிஸ்டெண்ட் அண்டர் செகரட்டரி மேஜர் ஜெனரல் நாஸர் அல் அவாதி மின்ஹலி தெரிவித்துள்ளார்.

திங்கள், 12 நவம்பர், 2012

அமீரக வாழ் கடலூர் மாவட்ட TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம்!



துபை, நவ 12: இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 30.11.2012அன்று அமீரகவாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டத்தின் ஒருங்கினைப்பு கூட்டம் ”துபை TNTJ தலைமை மர்கசில்” அஸர் முதல் மஃரிப் வரை நடைபெறயிருகின்றது.

இதில் மாவட்டத்தில் நடைபெறும் தஃவா வளர்ச்சிக்கு உதவுவது மற்றும் சமுதாய நலன் பெற உதவிகள் செய்யவும் ஆலோசனை நடைபெறயிருகின்றது.

இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சகோதரர்கள் கலந்துகொள்ளும்ப்படி அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.

தெரியாத சகோதரர்களுக்கும் இந்த செய்தியை எத்திவைத்து கலந்துகொள்ள சொல்லவும்.



இடம்: துபை TNTJ மர்கஸ் (தேய்ரா - துபை)

நாள்: 30.11.2012 (வெள்ளிக்கிழமை)

நேரம்: அஸர் முதல் மஃரிப் வரை

தொடர்புக்கு:

துபை: சாஜிதூர் ரஹ்மான் - 055 6184349

முஹம்மது இஸ்மாயில் - 050 5275642

அபுதாபி: யூசுப் அலி - 055 7911874

அன்புடன் அழைக்கின்றது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
அமீரகவாழ் கடலூர் மாவட்ட ஒருங்கினைப்பு குழு.


சனி, 10 நவம்பர், 2012

பாறைக்குள் வேரைப்போலே (மக்களை மாற்றியமைத்த தனிமனித ஆளுமை கொண்ட அறிஞர்கள்)

அரேபிய தீப கற்பத்தில் குறைஷி கோத்திரம் உயர்ந்த கோத்திரமாக காணப்பட்டது. இவர்களின் காலப்பகுதி ஜாஹிலிய மௌடீக காலப்பகுதியாக இஸ்லாமும் வரலாறும் சொல்கின்றது. ஆனால் இவர்களிடம் வியாபாரம் சிறந்து காணப்பட்டது. அதனால் மிதமிஞ்சிய பொருளாதாரம் இவர்களிடம் மேலோங்கியது. இவர்களின் சமூக நிலை ஓரளவு சிறந்திருந்தாலும் மார்க்கம் என்பது மிகவும் சீரளிந்தே காணப்பட்டது. தமது மூதாதையர் மார்கத்தை பின்பற்றுவதில் இவர்களுக்கு அவ்வளவு அலாதிப்பிரியம்.சிலை வணக்கத்தில் மூழ்கி கிடந்தனர் ,லாத் உஸ்ஸா போன்ற சிலைகளை கடவுளாக கொண்டனர்.கோத்திர ஒற்றுமை இவர்களின் பலம் இந்த சமுதாயத்தில்தான் முஹம்மத் நபி ஸல் நபி ஸல் பிறக்கின்றார்.

சிறுவயதிலே தாயை தந்தையை இழந்த இவர் தனது பாட்டனாரின் அரவணைப்பில் அன்பு ஆதரவாக வளர்ந்தார் .அந்த சமூகத்தில் உண்மையாளர் நம்பிக்கையாளர் என்று புகழப்பட்டார். திடீரென்று இவர் நிலை மாற்றம் அடைகிறது.அன்பு காட்டி வந்த இந்த மக்களே இவரை வெறுக்க ஆரம்பிக்கின்றனர்,நம்பிக்கையாளர் உண்மையாளர் என்று சொன்ன அதே சமுதாயம் இவரின் நம்பக தன்மையை மக்களில் இருந்து அகற்ற முயற்சி செய்கிறது.இவருக்கு எதிராக கூட்டங்களும் சதிகளும் நடந்தவண்ணம் இருந்தது . இந்த கெடுபிடிகளுக்கு கரணம் இந்த முஹம்மத் நபி ஸல் தான்.அப்படி அவர் என்ன செய்தார். புகழப்பட்ட வாயாலேயே இகழப்பட காரணம் என்ன ? காரணம் அந்த மக்களின் உள்ளத்தில் ஊறிப்போன ஜாஹிலிய வழிகெட்ட கொள்கையை இவர் மறுத்தார் ,அந்த இடத்தில் லாயிலாக இல்லால்லாஹு என்ற உயர்ந்த கலிமாவின் உன்னதத்தை அந்த சமூகத்தில் விதைக்க எத்தனித்தார்,தவ்ஹீதை அந்த மக்களுக்கு போதித்தார். இதுதான் இவர் செய்த தவறு,

இவரின் கொள்கையை ஏட்கின்றவர்கள் சொல்லாலும் கல்லாலும் அடிக்கப்பட்டு வந்தனர் வதைக்கப்பட்டு வந்தனர்,யாசிர் சுமைய்யா ,பிலால் ரலி போன்றவர்கள் மிகவும் துன்புருத்தபட்டனர் கொல்லப்பட்டனர், தவ்ஹீத் கொள்கையை ஏற்றுகொண்டவர்களின் பால் காபிர்களின் கெடுபிடி முடுக்கிவிடபட்டதும் ஹிஜ்ரத் என்ற உன்னத பயணம் இவர்களுக்கு தவிர்க்க முடியாதது ஆனது .முதலில் ஹபஷா என்ற கிறிஸ்தவ நாட்டின் சட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு அங்கு தமது மார்க்க கடமைகளை சுதந்திரமாக செய்ய முடபட்டனர் அதுகூட நீடிக்கவில்லை. . சிறிது காலத்தில் மதீனாவுக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஹிஜ்ரத் பயணம் சரித்திரம் படைத்தது.மதீனா வாசிகள் மக்கத்து வீரர்களை வரவேற்க மதீனா என்ற இஸ்லாமிய தேசம் மலர்ந்தது. தேசத்தின் எல்லைகள் பாதுகாக்க பட்டது,இஸ்லாமிய அரசின் எல்லைக்குள் சிறுபான்மை மக்கள் ஒப்பந்தத்துக்குள் உள்வாங்க பட்டனர்.இந்த தவ்ஹீதை காக்க அன்சாரிகள் முஹாஜிரீன்கள் உயிரையும் அற்பமாக கருதினர் .

தியாகங்கள்,ஊடாக இஸ்லாம் வளர்ந்தது,இரும்பு நெஞ்சம் கொண்ட உமர் ரலி காலித் பின் வலீத் ரலி போன்றவர்களின் உள்ள்ளத்திலும் இஸ்லாம் மிகவும் உன்னதமாக ஊடுருவியது.இஸ்லாத்துக்கு எதிராக இரண்டு யுத்தங்களில் கலந்துகொண்ட காலித் பின் வலீதின் உள்ளத்திலும் இஸ்லாம் சங்கமித்தது,இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாத்தின் காவலராக மாறினார்.தியாகம்,பொறுமை ,தாவாவில் தொய்வின்மை,எதிரிக்கு அஞ்சாத நெஞ்சம், போன்ற உன்னத குணங்களால் இஸ்லாம் மிகப்பெரும் வளர்ச்சிக்கு வித்திட்டது . இஸ்லாத்தின் வளர்ச்சிக்கி வித்திட்ட ஆரம்பகால தியாகிகளின் வரலாற்றை இந்த கட்டுரைக்குள்ளே சுருக்கிவிட முடியாது. வரலாற்றை ஆரம்பித்து வைத்த இவர்கள் விருட்சமாக வளர்ந்த மரத்தின் வேர்போன்றவர்கள். இந்த வரிசையில் பல தியாகிகள் இஸ்லாதுக்காக தியாகம் செய்து வந்தனர் என்பதை வரலாறு நெடுகிலும் காணமுடியும் ,

இந்த தியாக வேர்களை வாசிக்க விழுதுகளும் பின் தொடராமல் இல்லை அந்த வரிசையில் ஹிஜ்ரி ஏழாம் ,எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சமூகத்தில் அனாச்சாரம் பரவிக்கிடந்தது,இஸ்லாத்தின் பெயரில் வழிகெட்ட கொள்கைகள் தோன்றி இஸ்லாத்தை நாசமாக்க ஆரம்பித்தன இந்த சமுதாயத்தின் உள்ளத்திலும் ஜாஹிலிய தன்மைகள் அதிகம் காணப்பட்டது. . இதை இல்லாது ஒழிக்க தியாகத்தையும் பொறுமையையும் பண்பாக கொண்ட ஒரு மனிதர் அன்றைய திமஸ்கில் உருவாக்கினார் இவர் தனது சிறு வயது முதல் இஸ்லாமிய கலைகளை அக்குவேறு ஆணிவேராக கற்க ஆரம்பித்தார் அல் குரானை மனனம் செய்தார் .இஸ்லாமிய சமுதாயத்தில் பரவிக்கிடந்த இணைவைப்பு,பித்அதகளை ஒழிக்கிக்கும் உன்னத பணியை ஆரம்பித்தார்,தவ்ஹீதை நிலைநாட்ட பாடுபட்ட மனிதர்கள் பல இன்னல்களை அடைந்தனர் என்பதற்கு இவரும் மிக முக்கியமான எடுத்துகாட்டாகும்.பல துறைகளில் கரை கண்டார் அதை மனித சமுதாயத்துக்கு எத்திவைக்கும் பணியை அயராது தொடந்தார். . அவர்தான் பேரறிஞர் இப்னு தைமியா ஆவார்

இவரின் தாவா நகர்வுகளில் பல தடைக்கல்களை எதிர்கொண்டார் .அவ்லியா க்களின் கபுர்களில் தேவைகளை கேட்க முடியும் என்ற வழிகெட்ட கொள்கைகளை கொண்ட அறிஞர்களால் சோதனைக்கு உட்படுத்தபட்டார்.சிறைவாசம அனுபவித்தார்.இஸ்லாத்துக்குள் மட்டுமல்ல அதற்கு வெளியில் இருந்து

வியாழன், 8 நவம்பர், 2012

வட்டி இல்லா கடன் திட்டம் ஏன்?



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வட்டியை வாங்கி உண்ணுபவன், அதனை உண்ணச் செய்பவன், அதற்கு சாட்சி கூறும் இருவர் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். இன்றும் அவர் அனைவரும் (குற்றத்தில்) சமமானவர்கள் என்றார்கள் (முஸ்லிம் 3258)

வட்டி என்றால் என்ன?

ஒருவரிடம் இருந்து கடனாகப் பெரும் பணத்திற்கு செழுத்தப்படும் வாடகை வட்டி எனப்படுகிறது. பெரும்பாலும் மனிதன் தனது தேவைகளுக்கு மனிதாபிமான உதவியை எதிர்பார்க்கிறான். அப்படி ஒருவர் மற்றவருக்கு கொடுத்து உதவது ஒருவகை தர்மம். 
“நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் – அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது” (அல்-குர்ஆன் 57:18)
அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொள்வோராக இருந்தால் அதைத் தர்ம மாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது (அல்குர்ஆன் 2:280)
மனிதாபிமான உதவிகளை இஸ்லாம் ஆதரிக்கிறது, கடன் பெற்றவரின் நிலைமையை கருத்தில் கொண்டு அவருக்கு அவகாசம் அளிக்கச் சொல்கிறது அதற்கும் மேல் அவருக்கு திருப்பித் தர வசதியில்லாத நிலையில் அதை தர்மமாக்கிவிட வழியுறுத்துகிறது. 
ஆனால் இந்த நடைமுறை இன்று மக்களிடையே இல்லாமலேயே போய்விட்டது. மனிதாபிமான உதவிகள் இன்று வியாபரமாக மாற்றப்பட்டு விட்டது.
வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.83'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்குர்ஆன் 2:275. 
பாதிக்கப்பட்வனுடைய இயலாமையை மூலதனமாக கொண்டு இன்று வட்டித்தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. இதில் பெரும்பாலும் முஸ்லீம் சமூகத்தை கொண்டு மற்றவர்கள் வாழும் அளவிற்கு நம்முடைய ஆடம்பரங்களும், கட்டுப்பாடற்ற செலவீனங்களும் சென்று விட்டதைப் பார்க்கிறோம். இன்றைய நாட்களில் சாப்பாட்டுக்கே கஷ்டம் என்ற நிலையில் இருப்பவர்கள் மிகக்குறைவான-வர்களே. பெரும்பாலான கடன்கள் தமது வருமானத்திற்கு மீரிய செலவினங்களால் ஏற்படுவதே. 

வட்டி அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிரான போர் பிரகடனம்

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விட-மிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279)

வட்டி ஏழு பெரும் பாவங்களில் ஒன்று

நபி(ஸல்) அவர்கள், 'பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்த்து விடுங்கள்' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை யாவை?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, முறையின்றி கொல்லக் கூடாதென அல்லாஹ் புனிதப்படுத்திய உயிரைக் கொல்வது, வட்டியைப் புசிப்பது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, இறைநம்பிக்கை கொண்ட அப்பாவிகளான பத்தினிப் பெண்களின் மீது அவதூறு கூறுவது ஆகியவையே (அந்தப் பெரும்பாவங்கள்)' என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரலி)  புஹாரி 6857

வட்டியை அல்லாஹ் அழிக்கிறான் தர்மத்தை வளர்க்கிறான்

அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 2:276)
(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்.  (அல்குர்ஆன் 30:39)

வட்டி ஏற்படுத்தும் மறுமை வேதனை

மறுமையில் வெற்றி பெறுவதே ஒவ்வொரு முஸ்லிமின் நோக்கமாக இரக்க வேண்டும் .வட்டி வாங்கியவர்கள் மறுமையில் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்தப் படுவார்கள் என்று திருக் குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம். (அல்குர்ஆன் 4:161)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற

வியாழன், 1 நவம்பர், 2012

சுவனத்தைப் பெற்றுத்தரும் முன் பின் சுன்னத்துக்கள்- Rasmin Misc


ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை. (51:56)தன்னால் படைக்கப்பட்ட மனிதன் தன்னை வணங்க வேண்டும் என்று கட்டளையிட்ட இறைவன் கட்டாயம் செய்ய வேண்டிய கடமைகள் என்றும் செய்தால் நிறைய நன்மைகள் கிடைக்கும், செய்யாவிட்டால் பாவமாக கருதப்படாத கடமைகள் என்றும் இறைவன் இரு வகையான கடமைகளை மனிதர்கள் மீது சுமத்தியிருக்கிறான்.
உதாரணமாக ஒரு நாளைக்கு ஐந்த நேரம் தொழுவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும். இதே நேரம் ஐந்து நேரத் தொழுகைகளுக்கு முன் சுன்னத்தான தொழுகைகள் என்று இறைவன் சில தொழுகைகளை ஏற்படுத்தியுள்ளான். இவை கட்டாயக் கடமையாக இல்லையென்றாலும், இவற்றை செய்யும் போது மிகச் சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.
பொதுவாக இறைவனுக்காக நாம் செய்யும் அனைத்துக் காரியங்களிலும் சில சில தவறுகள் நடக்கும் இந்தத் தவறுகளை அவ்வப்போது நாம் செய்யும் சுன்னத்தான காரியங்கள் ஈடு செய்துவிடும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் கூறுகிறான்: யார் எனது நேசரைப் பகைத்துக் கொள்கிறாரோ அவருடன் நான் போர் தொடுக்கின்றேன்.  நான்  என் அடியான் மீது கடமையாக்கியிருக்கும் வணக்கத்தின் மூலமாகவே என் அடியான் எனக்கு நெருக்கமாகின்றான். அதுவே எனக்குப் பிரியமான வணக்கமாகும்.
எனது அடியான் உபரியான வணக்கங்கள் மூலம் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறான்.  அதன் பயனாக அவனை நான் நேசிக்கிறேன். நான் அவனை நேசிக்கும் போது அவன் செவியுறுகின்ற செவியாகவும், அவன் பார்க்கின்ற பார்வையாகவும், அவன் நடக்கின்ற காலாகவும் நான் ஆகி விடுகின்றேன்.  அவன் என்னிடம் கேட்டால், நான் அவனுக்குக் கொடுக்கின்றேன்.  அவன் என்னிடம் பாதுகாவல் தேடினால் பாதுகாப்பு அளிக்கிறேன். முஃமினுடைய உயிரைக் கைப்பற்றும் போது அடையும் சங்கடத்தைப் போன்று நான் செய்கின்ற வேறு எந்தக் காரியத்திலும் நான் சங்கடம் அடைவதில்லை.  (ஏனெனில்) என் அடியான் மரணத்தை வெறுக்கின்றான். நான் அவனுக்கு வேதனை அளிப்பதை வெறுக்கிறேன்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி),  நூல் : புகாரி
உபரியான வணக்கங்கள் புரிவது இறைவனிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி நமது தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்வதற்கு வழி வகுக்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான்.  அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும்.  அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவிப்பவர் : தமீமுத் தாரி (ரலி),  நூல் : தாரமீ (1321)
கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி விடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன என்பதை மேற்கண்ட செய்தி தெளிவுபடுத்துகின்றது.
யார் இரவிலும், பகலிலும் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி),  நூல் : முஸ்லிம் (1198)
கடமையான தொழுகையல்லாத உபரியான தொழுகைகளை நாம் தொழுவதினால் இவ்வளவு