கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

சிதம்பரத்தில் பெண்களுக்கான மாபெரும் தர்பியா!



சிதம்பரம், ஜன 19: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை சார்பாக பெண்களுக்கான மாபெரும் தர்பியா இன்ஷாஅல்லாஹ் இன்று   (20.01.2013) நடைபெறயிருகின்றது.
பரங்கிப்பேட்டையிலிருந்தும் சகோதரரிகள் கலந்து கொள்கின்றனர்.





கொள்ளுமேடு மேலத் தெருவில் பெண்கள் பயான்

நமதூர் மேலத் தெருவில் சகாபுதீன் அவர்கள் வீட்டில் கொள்ளுமேடு தவ்ஹீத் கிளையின் சார்பில் இன்று மதியம் பெண்கள் பயான் நடைபெற்றது. மானியம் ஆடூரைச் சேர்ந்த கொள்கை சகோதரி ஆலிமா நிசாரா அவர்கள் மஹ்சரில் மனிதனின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

கொள்ளுமேடு தவ்ஹீத் மர்கசில் நல்லொழுக்க தர்பியா முகாம்

கொள்ளுமேடு தவ்ஹீத் மர்கசில் நேற்று 13.01.2013 (ஞாயிறு) அஸர் முதல் இஸா வரை நல்லொழுக்க தர்பியா முகாம் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. ஆயங்குடி தவ்ஹீத் மார்கஸ் இமாம் முஹம்மது தம்பி அவர்கள் கொள்கை உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார். நமதூரை சேர்ந்த தவ்ஹீத் சகோதரர் முஹம்மது ரஜ்வி அவர்கள் குர் ஆன் இறக்கப்பட்ட வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார். மேலும் அமீரகத்திலிருந்து தாயகம் சென்றுள்ள முஹம்மது தாரிப் சபை ஒழுக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 நமதூர் மர்கஸ் இமாம் நியமத்துல்லாஹ் அவர்கள் நல்லொழுக்க தர்பியா முகாமை தொகுத்து வழங்கினார்கள்.திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே

செய்தி: அபுஇஹாப்