கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சனி, 19 பிப்ரவரி, 2011

ஜுமுஆ உரை:தொழுகையைப் பேணுவோம்

எல்லாம் வல்ல அல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்தினருக்கும் வழங்கிய பாக்கியங்களில் மிகப் பெரும் பாக்கியம் ஜும்ஆ வெள்ளிக்கிழமையாகும்.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்  கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் 18.02.2011 வெள்ளிக்கிழமை அன்று பேரணாம்பட்டு யாசின் "அவர்கள் "மறுமை சிந்தனைகள்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடம் பற்றாக்குறையாக போனதும் பெண்கள் எல்லாம் பள்ளிக்கு வந்து சொற்பொழிவை  கேட்க வாய்ப்பாக அமைந்திருப்பதும் நமது தவ்ஹீத் பள்ளியின்  சிறப்பம்சம் என்றே சொல்லவேண்டும்.

”சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும்.  அதில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள்.  அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள்.  யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : திர்மிதி 450

0 கருத்துகள்:

கருத்துரையிடுக