கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

செவ்வாய், 24 டிசம்பர், 2013

TNTJ கொள்ளுமேடு கிளையின் சிறை நிரப்பும் போராட்ட அழைப்பு!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளையின் போராட்ட அழைப்பிதழ்!


கொள்ளுமேடுTNTJ யின் சிறையின் நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம்!

கொள்ளுமேடுTNTJ யின் சிறையின் நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம்…1527085_458094784302149_212428518_n
1452040_458094787635482_287360314_n
1513290_458094847635476_385531333_n
1460126_458094754302152_1068898423_n
1530554_458094757635485_407755359_n

திங்கள், 26 ஆகஸ்ட், 2013

பரங்கிப்பேட்டை ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் - வீடியோ!


பரங்கிப்பேட்டை, ஆக.25: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 15.06.2013 அன்று பரங்கிப்பேட்டையில் மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனுடைய வீடியோவை உங்கள் பார்வைக்கு






உரை: E.முஹம்மத் (மாநில செயலாளர்)
தலைப்பு: தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள்




உரை: கோவை ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச்செயலாளர்)
தலைப்பு: தவ்ஹீத் கொள்கை


உரை: சகோ.பாஷா (நகர பொருளாளர்)
தலைப்பு: தீர்மானங்கள்



உரை: முஹம்மது இஸ்மாயில் (அமீரக கடலூர் மாவட்ட பொறுப்பாளர்)
தலைப்பு: நன்றியுரை

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

ஆறு நோன்பு!

ஷவ்வால் மாத ஆறு நோன்பு! ரமளான் முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் நோன்பு நோற்க நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

யார் ரமளான் மாதம் நோன்பு நோற்று அதை தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறு நாட்கள் நோன்பு நோற்கின்றாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ அய்யுப்(ரலி) நூல்கள்: முஸ்லிம் 1984 திர்மிதி, அபுதாவூத் 

 மேலும் நம் பகுதியிலுள்ள மக்கள் இந்த நோன்பை பெண்களுக்கு உண்டானது என்று கூறி ஆண்கள் அலட்சியமாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ்வும் அவனது ரஸுலும் அப்படி கட்டளையிடவில்லை. அதனால் சுன்னத்தான நோன்பு தானே என அலட்சியமாக இருக்காமல் அல்லாஹ்வின் அன்பைப்பெற முயற்சிக்க வேண்டும். பெருநாளை தொடர்ந்து ஷவ்வால் மாதம் முழுவதும் நமக்கு வசதியான நாட்களில் இந்த ஆறு நோன்புகளையும் நோற்று காலமெல்லாம் நோன்பு நோற்ற பலனை அடைந்திட முயற்சி செய்ய வேண்டும். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவர் மீதும் அருள் செய்திடுவானாக!

சனி, 10 ஆகஸ்ட், 2013

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளி ஈத் பெருநாள் புகைபடக்காட்சி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் சிறப்பான முறையில் பெருநாள் கொண்டாடப்பட்டது ...கடந்த ஆண்டுகளைப்போல் திடல் தொழுகைக்கான திடல் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது ஆனால் பெருநாள் முதல் நாள் பெய்த மழையால் திடல் தொழுகை தடைப்பட்டது இதைத்தொடர்ந்து பள்ளிக்கு உள்ளே தொழுகை நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்...

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிஃத்ரா விநியோகம் -2013


கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பிஃத்ரா  விநியோகம் கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் சிறப்பான முறையில் நடைப்பெற்றது...மேலும் கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் நமது பக்கத்துக்கு கிராமங்களான கந்தகுமாரன் மற்றும் புத்தூர் மக்களுக்கும் பயன்படும் வகையில்  பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டது.. விபரம் வருமாறு

மொத்த வரவுகள் :ரூ 41,574/- 
                                       உள்ளூர் வசூல் (ஜமாஅத்தினர் மட்டும் )ரூ 18,174/-
                                       வெளிநாடு வசூல் ரூ 13,400/-
                                       தலைமை மூலம் ரூ 10,000/-

மொத்த செலவுகள்: ரூ 41,574/-
மளிகை பொருட்கள் மொத்தம் ரூ 29,074/-
கோழி விநியோகம் மொத்தம்    ரூ:12,500/-


குடும்பத்தினர்க்கு தலா ரூ 361.51 வீதம் மொத்தம் 115 குடும்பங்களுக்கு விஃத்ரா  விநியோகம் செய்யப்பட்டது...அல்ஹம்துல்லில்லாஹ்

செய்தி,படங்கள் :முஹம்மது ராஜவீ , இஜ்ஜுல்  

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்!-லைலதுல் கத்ர்

ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில் மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி (35)

லைலத்துல் கத்ரு எந்த நாள்?
லைலதுல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந்தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவு தான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன. ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லி விட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700) மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக்

திங்கள், 29 ஜூலை, 2013

பாவங்களுக்கு பரிகாரம் இறைச்சோதனை!


சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறதே! இதற்கு முடிவே இல்லையா? என்று தினமும்; அதிகமானோர் புலம்புவதைக் காணலாம்.  ஆனால் இவ்வுலகத்தின் சோதனைகளிலிருந்து தப்பியோர் யாரும் கிடையாது என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய உண்மை. அதாவது இவ்வுலகில் அல்லாஹ் நம்மைப் படைத்து, சகல வாழ்வாதார வசதிகளையும் நமக்களித்து, சீரான வாழ்க்கைப் பாதைகளையும் அமைத்துக் கொடுத்து நமக்கு இன்பங்களையும் துன்பங்களையும் மாறி மாறி வரச் செய்வதிலிருந்து இவ்வுலக வாழ்க்கையை ஒரு சோதனைக் களமாக, பரீட்சை மண்டபமாக ஆக்கியுள்ளான்.

நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். (திருக்குர்ஆன் 29 : 2,3)

மேலும் கூறுகின்றான்: 
ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவையோ தாங்கள் சோதிக்கப்படுவதை அவர்கள் உணர மாட்டார்களா?பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை.படிப்பினை பெறுவதுமில்லை. (அல்குர்ஆன்: 9:126) 

ஒரு பரீட்சை எழுதுவதாக இருந்தால் கூட கஷ்டப்பட்டு கண்விழித்துப் படித்து, பரீட்சைக்குத் தேவையான தகவல்களை திரட்டுவதில் அலைந்து திரிந்து, பொழுது போக்கு அம்சங்களான தொலைக்காட்சி, வானொலி, நண்பர்களுடனான அரட்டை, விளையாட்டு போன்றவற்றை தியாகம் செய்து, கற்றோரிடம் ஆலோசனைகள் பல கேட்டு பரீட்சைக்குத் தயாராகிறோம். படித்து வெற்றி பெற்றால் தான் நல்ல தொழில் கிடைக்கும், கஷ்டப்படாமல் சம்பாதிக்கலாம் என்று விடாமுயற்சியுடன் படிக்கின்றோம். எல்லாம் எதற்காக? இந்த உலகத்திலே கஷ்டப்படாமல் வாழ்வதற்காக. அதுவும் நிரந்தரமில்லாத, எந்நேரமும் மரணம் வரலாம் என்ற நிலையற்ற வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக எல்லாத் துன்பங்களையும் சகித்துக் கொண்டு பரீட்சையை எதிர் கொள்கின்றோம்.

ஆனால் மறுமையில் நிரந்தரமான வெற்றி பெறுவதற்காக அமைக்கப்பட்ட இவ்வுலக வாழ்க்கையில் ஏற்படுகின்ற துக்கங்களை, துன்பங்களை, சோகங்களை, கஷ்டங்களை சகித்துக் கொள்ள நம்மால் முடிகின்றதா? அதற்கு ஒரு துளி கூட நம்மிடம் பொறுமை இல்லை என்று தான் கூறலாம். அல்லாஹ் கூறுகிறான்,

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்!அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.(அல்குர்ஆன் 2 : 153)

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன்: 2:155)

அல்லாஹ் எல்லா வழிகளிலும் நமக்கு சோதனையை ஏற்படுத்துவான். வறுமையை வழங்கி, செல்வத்தை வழங்கி, நம் உயிர்களைப் பறித்து, நம் சொத்துக்களில் இழப்புகளை ஏற்படுத்தி நம்மை நிச்சயம் சோதனை செய்வான். ஆனால் நாம் நம்பிக்கை இழக்காமல் அவனிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்று முஃமின்களுக்கு கட்டளையிடுகிறான்.

நாம் இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் எந்த அளவுக்கு அல்லாஹ் மீது நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று நம்மை அவன் சோதிக்கிறான். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுமாறும் கூறுகிறான். மனிதன் செல்வம் வந்தால், அல்லாஹ்வையே மறந்து ஆடம்பரமாக நடந்து கொள்கின்றானா? அல்லது அச்செல்வத்தை அல்லாஹ் தடுத்த வழிகளில் செலவிடுகின்றானா? அல்லது நன்மையான காரியங்களில் செலவிடுகின்றானா? என்றும் வறுமை வந்தால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கையிழந்து அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானா? அல்லது அல்லாஹ் அல்லாதவை களிடம் உதவி தேடுகின்றானா? அல்லது பொறுமையுடன் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேடுகின்றானா? என்றும் சோதிக்கின்றான்.

எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.(திருக்குர்ஆன் 2 : 286)

அது மட்டுமல்ல ஆரோக்கியத்தை வழங்கியும் நோய் நொடிகளை வழங்கியும் அல்லாஹ் நம்மை சோதித்துப் பார்க்கின்றான். ஆகவே நம் வாழ்க்கையில் நிகழும் அனைத்து சம்பவங்களும், நமக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்துமே சோதனை தான். அதனை ஒவ்வொரு முஃமினும் முதலில் உணர்ந்து

செவ்வாய், 9 ஜூலை, 2013

சனி, 6 ஜூலை, 2013

ரமளானை வரவேற்போம்!

மகத்துவமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்...
இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது.(அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)


மனித குல மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் நம்பிக்கைக் கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ, அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும். அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி 37

கோடையின் கடுமை நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வருட ரமலானை இன்ஷாஅல்லாஹ் சந்திக்க இருக்கிறோம்.இடைநிலை,கடைநிலை ஊழியர்கள் எல்லாம் ஒருவித தவிப்போடு ரமளானின் நோன்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதை பரவலாக நாம் பார்த்து வருகிறோம்.காலத்தைப் படைத்து அதன் சுழற்சியை தன் கையில் வைத்திருக்கும் கருணையாளனாகிய அல்லாஹ் இந்த கடின கோடையை சந்திக்கும் ஆற்றலையும் இன்ஷா அல்லாஹ் நமக்கு வழங்குவான்.உணவுகள் மட்டுமல்லாது,நம் உள்ளத்திற்கும் வழங்கும் திடமும் ஆற்றலுமே நோன்பை நிறைவு செய்ய உதவுகிறது.

எனவே சகோதர,சகோதரிகள் தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு பயந்து அலட்சியங்களுக்கோ, பலவீனங்களுக்கோ இடம் தந்துவிட வேண்டாம்.

ரமளான் மகத்தான அல்லாஹ்வின் அருட்கொடை. மனித இனம் தனது குற்றங்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டு, தன்னைப் படைத்த இரட்சகனின் திருப்பொருத்தத்தின் நெருக்கத்தை இலகுவாகப் பெற்றுத்தரும் இனிய தினங்கள் நிறைந்ததே ரமளான்.

இஸ்லாத்தின் பெயரால் பிரிவுகளும், மாறுபட்ட சிந்தனைகளும் தோற்றுவிக்கும் குழப்பங்களிலிருந்து மனித குலம் நீங்கிட அல்லாஹ்வின் ஒருவழியை மட்டும் தெளிவுப்படுத்தும் பேரொளிமிக்க  திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட மாதம் ரமளான்.

உள்ளும் புறமும் எந்தவொரு அடையாளத்தைக் கொண்டும், நம்மால் இனங்காண முடியாமல் உணர்வுகளாலேயே இறைக்கருணையின் பக்கம் அடியார்களை இழுத்துச் செல்லும் அற்புத வணக்கமே நோன்பு.

அது பிற நாட்களில் நோற்பதை விட குறிப்பிட்ட இம்மாதத்தில் நோற்பது இறைமார்க்கத்தை நிலை நிறுத்தும் கடமையும் ஏக இறைவனுக்குப் பிரியமான அம்சமும் ஆகும். 

இறையச்சம் இல்லாத அமல்கள் எதற்கும் பயனளிக்காத விழலுக்கு நீர் இறைப்பது போன்றதாகும். ஒட்டு மொத்த வாழ்வையும் இறையச்சத்திற்கு அப்பாற்பட்டு தொலைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ரமளானின் நோன்பு இறையச்சத்தை புனரமைத்துக் கொள்ள உதவும் கண்ணியமிக்க கருவியாகும்.
தீங்கான எண்ணங்களும், மனோ இச்சைகளும் மனிதர்களை -  அது ஆணாயினும், பெண்ணாயினும் -  ஆட்டிப் படைக்கிறது. ஈமானுக்கு ஏற்படும் மிகப் பெரும் நோவினை இதுதான். ஈமானுக்கு நோவினை என்றால் 

மனிதன் பிற வளங்கள் என்னதான் பெற்றிருந்தாலும் பயனற்ற வாழ்வுக்கு தான் பலியாகி விடுவான்.

நமக்குள் இருந்து கொண்டே நம் வாழ்வை வேரறுக்கும் தீய ஊசலாட்டத்தின் ஆணிவேரை அடையாளம் கண்டு அறுத்தெறியும் ஆன்மீகப் பயிற்சி தான் நோன்பு. 

மகத்தான இரட்சகனின் நேசமும், மறுமையில் நற்பயனும் பெற்றிட வழிகாட்டும் வசந்தமே ரமளான் மாதம்! 

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுகிறான்:
  
நம்பிக்கைக் கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (2:183)

இந்த நோன்பை அல்லாஹ் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் கடமையாக்கவில்லை. மாறாக முன் சென்ற சமுதாயத்திற்கும் கடமையாக்கி

வெள்ளி, 28 ஜூன், 2013

இலகுவாக கிடைத்த இஸ்லாம்!

கண்ணியத்துக்குரிய வல்ல நாயன் தன் திருமறையில்: 

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே! (அல்குர்ஆன் 3:19) மேலும்,இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம்,இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு இழைத்த மிகக் கடுமையான துன்பம் எதுவென்று எனக்கு அறிவியுங்கள்!என்று கேட்டேன்.அதற்கவர்கள் கூறினார்கள்: ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் வளாகத்தில் (ஹிந்த் பகுதியில்) தொழுது கொண்டிருந்த போது, உக்பா பின் அபீமுஜத் என்பவன் முன்னோக்கி வந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது தோளைப் பிடித்து தன் துணியை அவர்களது கழுத்தில் போட்டு முறுக்கி (மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் முன்னால் வந்து அவனது தோளைப் பிடித்து இழுத்து விட்டு, (நபியவர்களைத் துன்புறுத்த விடாமல் தடுத்து) என் இறைவன் அல்லாஹ் தான் என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார் (அல்குர்ஆன் 40:28) என்று கேட்டார்கள். (உர்வா பின் ஸூபைர் (ரஹ்) புகாரி 4815, 3678,3856)

இஸ்லாம் என்பது தியாகங்களால் எழுப்பப்பட்ட மாளிகை! அலட்சியமாகவோ ஏனோ தானோ என்றோ பின்னப்ட்டதல்ல.ஏதோ பத்தோடு பதினொன்றாக தத்துவமாகவோ புரியாத புதிராகவோ சொல்லப்பட்டதல்ல.

மனித சமூகத்தை வீண் கற்பனைகளிலும் கனவுகளிலும் மிதக்க வைக்க வந்த புராணக் கதைகளின் கோர்வையுமல்ல.மாறாக உண்மை இறைவனின் உள்ளமையையும் வல்லமையையும் உணர்ந்து யதார்த்த வணக்கங்களால் ஏக நாயனை பணிந்து வாழ வகை செய்யும் உயர்வான கொள்கையே இஸ்லாம்.

அஞ்ஞானமும் அறியாமையும் காரிருளாய் மனித சமூகத்தை பீடித்து அழிவின் விளிம்பில் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த போது கருணையாளனின் கிருபையால் ஏகத்துவப் போராளி நபியின் வழியாக வேதத்தின் வழியாக மனித சமுதாயத்தின் ஒரு கூட்டத்தை எட்டியது. அந்தப் போராளியை உயிரினும் மேலாக அந்தக் கூட்டம் கருதியது.பற்றிப் பிடித்தது. அதற்காக அதைப் பின்பற்றுவதற்காக அந்தக் கொள்கையின் வளர்ச்சிக்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்யத் தயாரானது!

உயிரானாலும், பொருளானாலும், குடும்பம், நட்பு, எந்தவொன்றையும் இறைக்கொள்கைக்காக தியாகம் செய்யத் தயாரானது. செய்தது. அத்தகைய தியாகத்தால் உலகில் இஸ்லாம் சுவடுபதிக்காத இடமே இல்லை என்கின்ற அளவுக்கு வளர்ந்து மேன்மையுற்றது.

சிந்தனைகளும், செயல்களும் அல்லாஹ்வுக்காக என்ற நிலையே அவர்களிடம் மேலோங்கியிருந்ததால் இஸ்லாத்தினால் அவர்களும்,அவர்களால் இஸ்லாமும் சிறப்புற்றது. ஹிஜ்ரத் என்பது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு! கொள்கை வளர்ச்சிக்கு ஹிஜ்ரத் ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது. 

ஹிஜ்ரா என்பது தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து சொந்த மண்ணில் உள்ள உடமைகளை அப்படியே விட்டு விட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த 

நாட்டை,சொந்த ஊரை துறந்து அன்னிய நாட்டுக்கு அன்னிய ஊருக்கு செல்வதாகும். செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டி வரும்.உயிர் பறிபோகலாம். உடமைகள் அபகரிக்கப்படலாம். செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ?அங்கு என்னென்ன கவலைகளும் துக்கங்களும் துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று எதுவும் அறியாத நிலையில் மேற்கொள்ளப்படும் பயணமே ஹிஜ்ரத்தாகும்.

இவை அனைத்தையும் தெரிந்துதான் முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்யத் தொடர்ந்தனர். முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்து ஓரிடத்தில் ஒன்று கூடிவிட்டால் தங்களுக்கு ஆபத்துகள்  ஏற்படலாம் என்று உணர்ந்திருந்த மக்கா முஷ்ரிக்குகள் முஸ்லிம்களை ஹிஜ்ரா செய்ய விடாமல் தடுத்தனர்.இதற்கு சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்.

ஹிஜ்ரா செய்த முதல் கூட்டத்தில் அபூஸலமாவும் ஒருவர். இவர் இரண்டாவது அகபாவிற்கு ஒரு வருடத்திற்கு முன் ஹிஜ்ரா செய்தார். அபூஸலமா(ரலி) தனது மனைவியுடனும், தனது சிறிய குழந்தையுடனும் ஹிஜ்ரா செய்ய நாடியபோது  அவரது மனைவியின் உறவினர்கள் அபூஸலமாவை நோக்கி நீ எங்களை புறக்கணித்து விட்டதால், நீ வேண்டுமானால் சென்று விடு: எங்களுடைய பெண்ணை ஊர் ஊராக அழைத்துத் திரிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவரின் மனைவியையும் குழந்தையையும் அவரிடமிருந்து பிரித்து விட்டனர்.

இதைப் பார்த்த அபூஸலமாவின் குடும்பத்தினர் நீங்கள் உங்களது பெண்ணை எங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து வீட்டீர்கள்.எனவே, எங்கள் மகனுக்குப்

செவ்வாய், 4 ஜூன், 2013

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்!

மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.

மிஃராஜ் ஓர் அற்புதம் மஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1) ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான். ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே! அழகிய தோற்றமுடைய வலிமைமிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்ன் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்நது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?. (53:5-12)

ஜிப்ரில் என்னும் வானவரை நபி (ஸல்) அவர்கள் முதன் முதல் சந்தித்ததை இறைவன் மேற்கூறிய வசனங்களில் கூறுகின்றான். இந்தச் சந்திப்பு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது நடந்தது. இந்த வசனங்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஜிப்ரீலை மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறான். ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:13-18) இந்தச் சந்திப்பு ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் நடந்ததாகவும் அந்த இடத்தில் தான் சுவர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் சென்றதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன.

இல்லையெனில் வானுலகில் உள்ள ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்திருக்க முடியாது. எனவே இதுவும் மிஃராஜ் பற்றியே கூறுகிறது. (முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60) இவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்கு சோதனையாக அமைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர். நபி (ஸல்) அவர்களை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியைக் கூறிய பொழுது மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று குறிப்பிடுகிறான்.

அக்காட்சியை நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டி அவர் மக்களுக்கு கூறும் பொழுது மக்கள் நம்புகிறார்களா? என்று சோதித்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார்? பலவீன நம்பிக்கை உள்ளவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்ட இதைச் செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான். எனவே நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் உண்மையான இறை நம்பிக்கையாளர்களைப் பிரித்து அடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக மிஃராஜ் என்னும் நிகழ்ச்சி அமைந்துள்ளது. மிஃராஜ் என்னும் விண்ணுலகப்பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த இதழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வைப் பற்றி முஸ்லிம்களிடம் பரவலாக நிலவி வரும் தவறான நம்பிக்கைகளை அடையாளம் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மிஃராஜ் நடந்தது எப்போது? மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதற்குச் சரியான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லை நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே மிஃராஜ் நடந்து விட்டது என்று வரலாற்று ஆசிரியர் இப்னு இஸ்ஹாக் என்பவர் குறிப்பிடுகின்றார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என ஸுஹ்ரீ அறிவிப்பதாக பைஹகீயில் இடம் பெற்றுள்ளது. ஹிஜ்ரத் நடப்பதற்கு 16 மாதங்களுக்கு முன்னால் தொழுகை கடமையாக்கப் பட்டது. எனவே துல்காயிதா மாதத்தில் தான் மிஃராஜ் நடந்தது என்று இஸ்மாயீல் ஸதீ என்பவர் அறிவிப்பதாக ஹாகிமில் கூறப்பட்டுள்ளது. உர்வா, ஸுஹ்ரீ ஆகியோர் ரபிய்யுல் அவ்வல் மாதம் நடைபெற்றதாகக் கூறுகின்றார்கள். யானை ஆண்டில் திங்கட்கிழமை ரபிய்யுல் அவ்வல் பிறை 12ல் மிஃராஜ் நடைபெற்றது என்று ஜாபிர், இப்னு அப்பாஸ் (ர) ஆகியோர் கூறுகின்றார்கள். ரஜப் மாதம் 27ல் நடைபெற்றது என்று ஹாபிழ் அப்துல் கனி இப்னு ஸுரூருல் முகத்தஸ் கூறுகின்றார். ரஜப் மாதம் முதல் ஜும்ஆ இரவில் நடைபெற்றது என்று வேறு சிலர் குறிப்பிடுகின்றார்கள்.

இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இமாம் இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் விண்ணுலப் பயணம் எந்த ஆண்டு, எந்த மாதத்தில், எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை. எனவே இந்த விண்ணுலகப் பயணம் நடந்தது உண்மை என்று நம்பி அல்லாஹ்வின் வல்லமையை நாம் ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் துôதர் (ஸல்) அவர்களோ கூறிடவில்லை நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஓரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி எந்த நாளில் நடந்தது என்று அல்லாஹ்வும் அவனுடைய துôதருமே குறிப்பிடாத போது எப்படி நம்மால் கணிக்க முடியும்?

மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள் எல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத் எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச் செய்து வருகின்றது. ரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக் கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர். “மிஃராஜ் இரவில் வானத்திருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர்” என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர். இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்கள், மவ்த் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். அந்த இரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று எண்ணுகின்றனர்.

எப்பொழுதும் வழமையாக ஒருவர் இரவில் தொழுது வருகிறாரென்றால் அவ்விரவில் தொழுவது தவறல்ல. ஆனால் பிரத்யேகமாக இந்த இரவுக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான் தவறு. அதிலும் வழக்கமான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதால் கூட பரவாயில்லை. புதிய புதிய முறைகளில் தொழுகையைத் தாங்களாக உருவாக்கி தொழுவது தான் இதில் வேதனைக்குரிய விஷயம். 6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3ம் கமா 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும். 3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும். இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃபவும், ஈலாஃபி குறைஷ் சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி தொழுகை முறையை மாற்றி, இதைத் தொழுதால் ஏராளமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர். இவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா? நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (2697) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (3243) இவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக் கூடாது? என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கின்றான் உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா? (49:16) அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்குச் சமமாக ஆகி விடும். லைலத்துல் கத்ர் எனும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அது போல் இந்த மிஃராஜ் இரவுக்கும்

திங்கள், 3 ஜூன், 2013

இறைவனை அஞ்சுவோரின் இனிய பண்புகள்!

உண்மையான இஸ்லாமியர்களின் உன்னத குறிக்கோள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பது தான். இந்த இலட்சியத்திற்காகவே தொழுகின்றனர்.நோன்பு நோற்கின்றனர். தர்மம் அளிக்கின்றனர்.இது போன்ற நன்மையான காரியங்களில்,மார்க்கம் பணிக்கின்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.இவைகள் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் காரியங்களே.இருப்பினும் சொர்க்கத்தை அடைய வேண்டுமெனில்,அதில் நாம் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கப்பட வேண்டுமெனில் நம்மிடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கிய தகுதி என்ன?என்பதை சிந்திக்க மறந்து விட்டனர். 

இறையச்சம் தான் இறைவன் நிர்ணயித்திருக்கின்ற மிக முக்கிய தகுதி.நாம் இறைவனை உண்மையான முறையில் அஞ்சுபவர்களாக இருந்தால் மட்டுமே சொர்க்கத்திற்குள் நுழைய முடியும்.சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்க வேண்டுமெனில் இறையச்சம் எனும் தகுதி நிச்சயம் நம்மிடத்தில் இருந்தாக வேண்டும்.இதை பின்வரும் வசனத்தி­ருந்து புரிந்து கொள்ளலாம். 

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சு வோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.(அல்குர்ஆன் 3:133)

இறைவனை அஞ்சுவோருக்குத்தான் சொர்க்கம் படைக்கப் பட்டுள்ளது என்பதை இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.சொர்க்கத்தில் புக வேண்டும் என்று விரும்புபவர்கள் இறைவன் விரும்பும் இந்த தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் அது சாத்தியமில்லை.

இனியவர்களின் இலக்கணங்கள்:

இறைவனை அஞ்சுவோர்களே சொர்க்கத்தில் நுழைவார்கள் என்பதை கூறிவிட்டு,அவர்களுக்கு சில இலக்கணங்களையும், பண்புகளையும் குறிப்பிட்டு இவைகள் ஒவ்வொரு இறையச்சவாதியிடத்திலும் இருக்க வேண்டும், அவர்களே உண்மையில் இறைவனை அஞ்சுவோர்கள் என்பதாக இறைவன் தெரிவிக்கின்றான்.நாம் உண்மையில் இறைவனை அஞ்சுவோர்களாக இருந்தால் இறைவன் கூறும் அந்த இலக்கணங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும். அந்த பண்புகள் அனைத்தையும் ஒரு சேர பெற்றுக்கொண்டாலே தவிர இறைவனது பார்வையில் அவனை உண்மையாய் அஞ்சும் விசுவாசிகளாக முடியும் என்பதை புரிந்து,அவைகளை வளர்த்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். 

இனி இறைவன் கூறும் இலக்கணங்கள் :

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள்.அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்(அல்குர்ஆன்3:134, 135)
எந்நிலையிலும் தர்மம்   அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள்.(அல்குர்ஆன் 3 : 134,)

உண்மையான முறையில் இறைவனை அஞ்சுவோர்கள் எந்த ஒரு நிலையிலும் இறைவனது பாதையில் செலவிடுபவர்களாக இருப்பார்கள் என்பதாக ஒரு இலக்கணத்தை வகுக்கின்றான். அதாவது அவர்கள் இன்பத்தில் மூழ்கியிருந்தாலும் படைத்த இறைவனை மறக்காமல்,இந்த இன்பத்தை தந்தவன் இறைவனே என்று இறைவழியில் செலவிடுவார்கள், அதே போல் துன்பத்தில் துவண்டிருந்தாலும்,இதையளித்தவன் இறைவன் தான் என்றாலும் நம்மை சோதிப்பதற்காகவே இந்த துன்பத்தை அளித்திருக்கின்றான்.இதனால் என் இறைவனது 

பாதையில் தர்மம் செய்வதை நிறுத்த மாட்டேன் என்பதில் உறுதியாய் இருப்பார்கள் என்பதாக  இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

ஆனால் செல்வச் செழிப்புடன் இருக்கும் போது தர்மமளிக்கும் பல இஸ்லாமியர்கள் தங்களுக்கு துன்பம் ஏற்பட்டுவிட்டால் தாங்கள் தர்மம் செய்வதை நிறுத்திவிடுகின்றார்கள். எங்களுக்கு ஏன்? இறைவன் வறுமையை தர வேண்டும் என்று இறைவன் மீதே கோபித்துக் கொள்ளும் அதிக பிரசங்கித் தனத்தை மேற்கொள்கின்றார்கள்.

இன்னும் சிலர் தாங்கள் வறுமையில் இருக்கும் போது இறைவா! எங்கள் வறுமையை நீக்கிவிடு என்று பிரார்த்திப்பதுடன் அதற்காக  தர்மம் அளித்து வருவார்கள்.இறைவன் அவர்களது துன்பத்தை போக்கியவுடன் அத்தோடு இறைவனை மறந்து இன்பத்தில் மூழ்கி திளைத்திடுவார்கள்.இது போன்ற இழிவான குணம் இறைவனை அஞ்சுவோர்களிடம் இருக்காது.அவர்கள் தர்மம் அளித்து வருவதை இன்பம்,துன்பம்,வறுமை,செழிப்பு போன்ற எதுவும் தடுத்திராது என்று இறைவன் கூறுகின்றான்.இத்தகைய நிலையை நபிகளாரும்,அவர்களின் தோழர்களும் பெற்றிருந்தார்கள்.இந்த பண்பை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கோபத்தை மென்று விழுங்குதல்:
கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். 

(அல்குர்ஆன் 3 : 134, )

இறைவனை அஞ்சும் அடியார்கள் தங்களுக்கு கோபம் ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்திக் கொள்வார்கள் என மேற்கண்ட வசனத்தில் இறைவன் தெரிவிக்கின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே ஆவான். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ர­), புகாரி 6114
இன்று கோபம் கொள்வது பெருமைக்குரிய விஷயமாக ஆகிவிட்டதை காண்கிறோம். ஒரு சிலர்கள் தாங்கள் கோபம் கொள்வதை(எனக்கெல்லாம் கோபம் வந்துச்சுன்னா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது)என்பதாக பெருமை பொங்க கூறுகின்றார்கள்.பெண்கள் தங்கள் குழந்தைகளின் மீது கோபம்

செவ்வாய், 14 மே, 2013

பொறியியல் - தெரிந்து கொள்ள வேண்டியவை....

      +2 தேர்வு முடிவுகள் வெளிவந்து விட்டதால் அடுத்தக்கட்டத்திற்கு மாணவர்கள் தங்களை தற்போது தயார்படுத்திக் கொண்டிருப்பார்கள். எந்த பாடப்பிரிவை தேர்வு செய்யலாம்? எந்தக் கல்லூரியை தேர்வு செய்யலாம்? எந்தக் கல்லூரியை தேர்வு செய்தால் வேலைவாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்? உள்ளிட்ட எண்ணற்ற சந்தேகங்கள் மாணவர்கள் மனதில் எழாமல் இல்லை. இன்ஜினியரிங், MBBS, கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் எது தனக்கு பொருத்தமானது என்பதை மாணவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

கலை அறிவியல் படிப்புகள் சிறந்த படிப்புகள் இல்லை என்று கூறி விட முடியாது . அதேபோல் பொறியியல் மட்டும் தான் சரியான தேர்வு என்றும் கூறி விட முடியாது. மாணவருக்கு எதில் தகுதி இருக்கிறதோ அதை சரியாக அடையாளம் கண்டு, அத்துறையில் தடம் பதிக்க வேண்டும். பொறியியல் மட்டும் தான் கல்வி என்பது அல்ல. எந்த படிப்பு படித்தாலும் அதிலிருந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பெற்றோர்களைப் பொறுத்தவரை எப்படியாவது கஷ்டப்பட்டு தனது மகனையோ மகளையோ இன்ஜினியர் ஆக்கிவிட வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர, நான்கு ஆண்டுகள் படிப்பை தொடர்வதில் சிக்கல்கள் இருக்குமா என்பதைப் பற்றி ஒருபோதும் அவர்கள் யோசிப்பதில்லை. தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புக்கு வங்கிக் கடன் கிடைக்குமா, அப்படிக் கிடைத்தால் எவ்வளவு சதவிகிதம் கிடைக்கும் என்பதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதில்லை. மீதம் எவ்வளவு கட்ட வேண்டியிருக்கும். அதை நம் குடும்பத்தின் தற்போதைய சூழ்நிலையில் கட்ட முடியுமா? இதையெல்லாம் பெற்றோர்கள் முதலில் யோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டும்.

இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்யும் முன் இவற்றையெல்லாம் திட்டமிட வேண்டும். பள்ளிப் படிப்பு வரை பொதுவாக பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துகிறார்கள். அதுவே கல்லூரியில் சேர்ந்த பிறகு அது படிப்படியாக குறைகிறது. எனவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை அவர்களின் வளர்ச்சியில் அக்கறை கட்டாயம் செலுத்த வேண்டும்.. இன்றைய மாணவர்களின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிக்கும் முதன்மையான படிப்புகளில் ஒன்றாக, பொறியியல் துறை கருதப்படுகிறது. இறைவன் படித்த இந்த உலகை, இறைவன் கொடுத்த கல்வியாற்றலின் மூலம் கட்டமைத்தவர்கள் பொறியாளர்களே என்று சொல்லும் அளவுக்கு இன்றைய பொறியாளர்கள் செய்யும் பணிகள் ஏராளம். எனவே இந்த துறையில் நாமும் தடம் பதிக்க வேண்டும்.

பொறியியல் தொடர்பாக எழும் சந்தேகங்களை தெளிவுபடுத்தவே இந்த பதிவு கட் ஆஃப் மதிப்பெண்கள்! +2 மதிப்பெண்கள் அடிப்படையில் தான் ஒருவரது ரேங்க் நிர்ணயிக்கப்படுகிறது என்பதால், அதிக மதிப்பெண் பெற்றவர் களுக்கு கவுன்சிலிங்கின் முதல் நாளில் இருந்து அழைப்பு இருக்கும். +2 தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களைத் தலா 200 மதிப் பெண்களுக்கு எழுதி இருப்பீர்கள். இதில் ஒரு மாணவர் கணிதத்தில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 100-க்குக் கணக்கிடுவார்கள். அதேபோல இயற்பியலில் 200-க்கு எடுத்த மதிப்பெண்களை 50-க்குக் கணக்கிடுவார்கள். வேதியியலுக்கும் இதே நிலை. ஆக, கணிதம் 100, இயற்பியல் மற்றும் வேதியியல் தலா 50 என மொத்தம் 200-க்குக் கணக்கிடப்படும் மதிப்பெண்கள்தான் அவரது கட் ஆஃப் மதிப்பெண்கள்!

 ரேண்டம் நம்பர் என்றால் என்ன? ஒரே கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ரேங்க் நிர்ணயிப்பதில் குழப்பத்தை ஏற்படுத்தும். இதற்குத் தீர்வு காணத்தான் கவுன்சிலிங் விண்ணப்பத்தில் ‘ரேண்டம் நம்பர்’ (random number) என்ற ஒன்றைக் குறிப்பிட்டு இருப்பார்கள். கிட்டத் தட்ட ஒரு டோக்கன் போலத்தான் இந்த ரேண்டம் எண். இரண்டு மாணவர்கள் கட் ஆஃப் மதிப்பெண்களில் 200-க்கு 190 எடுத்திருக்கும் போது, அவர்கள் இருவருக்கும் ஒரே ரேங்க் தர முடியாது. அப்போது அவர்களில் யார் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்களோ, அவருக்கு அதிகப்பட்ச ரேங்க் வழங்குவார்கள். இருவரும் கணிதத்தில் நூற்றுக்கு நூறோ அல்லது அதிலும் ஒரே மதிப்பெண்கள் எடுத்திருந்தால், இயற்பியலில் யார் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறாரோ அவருக்கு முன்னுரிமை அளிப்பார்கள். அதிலும் ஒரே மதிப்பெண் சிக்கல் இருந்தால், வேதியியல் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த மூன்று பாடங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பெண்கள் பெற்றிருந்தால், அடுத்து அவர்களின் பிறந்த தேதியைக் கணக்கில்கொள்வார்கள். அதில் யார் மூத்தவரோ, அவருக்கு முன்னுரிமை. இருவரும் ஒரே தேதி, ஒரே வருடத்தில் பிறந்திருந்தால், அப்போதுதான் இந்த ரேண்டம் நம்பருக்கு வேலை வரும். இருவருக்கும் வழங்கப்பட்ட ‘ரேண்டம் நம்பரில்’ எவருடையது குறைந்த மதிப்பு உள்ளதோ, அவருக்கு ரேங்கில் முன்னுரிமை தரப்படும். தவிர்க்கவே முடியாத சூழலில்தான்

ஞாயிறு, 17 மார்ச், 2013

நமதூரில் பெண்களுக்கான மாபெரும் தர்பியா நிகழ்ச்சி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளையின் சார்பாக நமதூரில் பெண்களுக்கான மாபெரும் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

நமது கிளையின் சார்பாக மாதந்தோறும் இரண்டு முறை பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது இதன் மூலம் பெண்கள் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக்கொள்ளகூடிய வாய்ப்பு ஏற்பட்டது வாரந்திர பயான் என்றில்லாமல் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சியை  நடத்தி  அவர்களின் மார்க்க சம்மத்தமான சந்தேகங்களுக்கு விடை அளிக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நமது கிளையின் சார்பாக பெண்களுக்கான இந்த தர்பியா நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்யப்படடிருந்தது.

இந்நிகழ்ச்சியில் சகோதரி சம்சுல்ஹுதா ஆலிமா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றி பெண்களுக்கான தொழுகை பயிற்சியையும் அளித்தார்.மேலும் சகோதரி ஆயிசா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் என்றதலைப்பில் உரையாற்றினார்.மதிய உணவு இடைவேளையின் பொது சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் சிறிய உரை நிகழ்த்தினார்.காலை 10 மணியளவில் ஆரம்பமான நிகழ்ச்சி மாலை 4 மணி வரை பெரும் நெகிழ்ச்சியோடு நடைபெற்றது.மதிய உணவு நமது கிளையின் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது.

சகோதரர் தல்ஹா அவர்களின் வீட்டில் பெண்களும் தவ்ஹீத் மர்க்கஸில் ஆண்களும் நிரம்பி இருந்ததனர்.இந்நிகழ்ச்சியில் சுமார் 150பெண்கள் கலந்துகொண்டனர்.மானியம் ஆடூர்,லால்பேட்டை,ஆயங்குடி மற்றும் T.நெடுஞ்ச்சேரி போன்ற ஊர்களில் இருந்தது பெண்கள் பெரும் அளவில் கலந்த்துக்கொண்டனர்.நெடுஞ்சேரில் இருந்து சுமார் 12 பெண்கள் கலந்துக்கொண்டது தவ்ஹீதின் எழுச்சி எந்த அளவிற்கு பெண்களின் உள்ளங்களில் சென்றடைந்துள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே அமைந்தது.எல்லா புகழும் கண்ணியம் பொருந்திய அல்லாஹ் ஒருவனுக்கே..


செய்தி:மு.இ.அன்வர்தீன்
படம்: த.முஹம்மது

வியாழன், 14 மார்ச், 2013

செவ்வாய், 5 மார்ச், 2013

குவைத்தில் சகோ.பிஜே உரை நிகழ்தினார்!


குவைத் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் பொது குழுவும் அதை தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியும் நேற்று (01.03.2013) நடைபெற்றது.

சுமார் 800 நபர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு அரங்கத்தை ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று வியாழன் இரவில் 11 மணிக்கு மேல் முறையான தகவல் மண்டல நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு அல்லாஹ்வின் கிருபையால் நேற்று 3.30 மணிக்கு பொது குழு ஆரம்பிக்கப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்களே சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

அதை தொடர்ந்து மாலை 6.00 மணி அளவில் பிஜே அவர்கள் ”இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய சதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

ஏற்கனவே பொதுகுழு உறுப்பினர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கத்தின் முன்பு மக்கள் குவிய தொடங்கினர். 

இந்த கூட்டத்தை அறியாத அரங்க நிர்வாகதினர் எங்களால் சமாளிக்க முடியாது. நீங்கள் இப்போதே இடத்தை காலி செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்தனர்.


என்ன செய்வது என்று இருந்த நிலையில் அல்லாஹ்வின் அளப்பரிய கிருபை என்பார்களே அது நடந்தேறியது. ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தை விட இரு மடங்கு பெரிய இடம் கிடைக்கப்பட்டு 10 நிமிடத்திற்குள் எந்த வித விளம்பரம் இல்லாமல் ஆண்களும் -ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாரை சாரையாக மாற்று இடத்தை நோக்கி படை எடுத்தனர்.

அதன் பிறகு மாநில தலைவர் பிஜே அவர்கள் ”இஸ்லாத்திற்கு எதிரான உலகாளவிய சதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இது TNTJ WEB TV மூலம் நேரலை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், 110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

நன்றி: மேலாப்பாளையம் ஹீசைன்

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

கடலூர் மாவட்ட அமீரக TNTJ ஒருங்கிணைப்பு கூட்டம்!



துபை, பிப் 22: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடலூர் மாவட்ட அமீரக ஒருங்கிணைப்பு கூட்டம் 22.02.2013 அன்று துபை TNTJ தலைமை மர்கசில் பொறுப்பாளர் துபை மண்டல் துனை செயலாளர் மெளலவி.சைய்யது சுல்தான் தலைமையிலும் மற்றும் கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

முதலில் துவக்க உரை மற்றும் சென்ற தீர்மானங்கள் ஒர் பார்வை ஆகியவற்றை பொறுப்பளார் சகோ.முஹம்மது இஸ்மாயில் அவர்கள் விளக்கி உரை நிகழ்த்தினார்கள்.

அதனை தொடர்ந்து மாவட்டத்தின் செயல்பாடுகளை சகோ.சாதிக் அலி அவர்கள் வாசித்தார்கள்.

அதனை தொடர்ந்து அழைப்பாளர் சகோ.ஃபாஜுல் ஹீசைன் அவர்கள் "தர்மம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மேலும், தாயகத்திலிருந்து கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அலைப்பேசி மூலம் மாவட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை பற்றி விளக்கினார்கள்.

பின்னர் சகோதரர்களின் ஆலோசனைகளுக்கு பிறகு கூட்டம் இனிதே நிறைவுப்பெற்றது.

இதில் ஏரளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!
 
 






source: http://www.tntjpno.com

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

லால்பேட்டை பொதுக்கூட்டம் இஸ்லாமியே சட்டமே தீர்வு! (video)


அல்லாஹ்வின் கிருபையால் கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் நடைபெற்ற இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டத்தில் “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் ஆற்றிய முழு உரை.



திங்கள், 18 பிப்ரவரி, 2013

லால்பேட்டை இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம்!


அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளை சார்பாக 16.02.2013 அன்று ”இஸ்லாமிய எழுச்சி பொதுக்கூட்டம்” நடைப்பெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளர் சகோ.கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் 'இஸ்லாமிய சட்டமே தீர்வு' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும்இ மாநில பேச்சாளர் சகோ.தாவூத் கைஸர் அவர்கள் 'தவ்ஹீத்தும்இதவ்ஹீத் ஜமாஅத்தும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், லால்பேட்டை மற்று அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்தும் திரளான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே.காம் மற்றும் டிஎண்டிஜே கடலூர்.நெட் இணையதளத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!