கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தவ்ஹீத் ஜமாஅத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தவ்ஹீத் ஜமாஅத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 மே, 2014

கொள்ளுமேடு தீ விபத்து தவ்ஹீத் ஜமாஅத் நிவாரண உதவி!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொள்ளுமேடு சலாமத் புது நகரில் இருக்கும் மர்ஹூம் கரிகடை அன்வர் அவர்களின் வீடு நள்ளிரவு 1 மணிக்கு மர்ம நபர்களால் எரிக்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானயின.இதைத் தொடர்ந்து கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியதோடு நிவாரண உதவியாக 5 ஆயிரம் ரூபாய் பணமாக வழங்கப்பட்டது.அவர்கள் அல்ஹம்துலில்லாஹ்.. அவர்களின் துயர் போக்க இறைவனிடம் தூஆ செய்வோமாக.
படங்கள்: முஹம்மது ரஜ்வி (நமது செய்தியாளர்)

செவ்வாய், 24 டிசம்பர், 2013

TNTJ கொள்ளுமேடு கிளையின் சிறை நிரப்பும் போராட்ட அழைப்பு!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளையின் போராட்ட அழைப்பிதழ்!


திங்கள், 26 ஆகஸ்ட், 2013

பரங்கிப்பேட்டை ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் - வீடியோ!


பரங்கிப்பேட்டை, ஆக.25: அல்லாஹுவின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 15.06.2013 அன்று பரங்கிப்பேட்டையில் மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதனுடைய வீடியோவை உங்கள் பார்வைக்கு






உரை: E.முஹம்மத் (மாநில செயலாளர்)
தலைப்பு: தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள்




உரை: கோவை ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச்செயலாளர்)
தலைப்பு: தவ்ஹீத் கொள்கை


உரை: சகோ.பாஷா (நகர பொருளாளர்)
தலைப்பு: தீர்மானங்கள்



உரை: முஹம்மது இஸ்மாயில் (அமீரக கடலூர் மாவட்ட பொறுப்பாளர்)
தலைப்பு: நன்றியுரை

வியாழன், 14 மார்ச், 2013

சனி, 9 பிப்ரவரி, 2013

லால்பேட்டையில் மார்க்கவிளக்கப் பொதுக்கூட்டம்


            ஏக  இறைவனின் திருப்பெயரால்.....
கடலூர்  மாவட்டம் லால்பேட்டையில்....

மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

நாள்:- 16-2-2013 சனிக்கிழமை மாலை 6.00 மனி 

கோவை.ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச்செயலாளர்)
இஸ்லாமிய சட்டமே தீர்வு

தாவூத் கைசர்

தவ்ஹீத் கொள்கையும், தவ்ஹீத் ஜமாத்தும்

இஸ்லாம் சட்டம் சொல்லும் தீர்வை மற்றவர்களுக்கு உணர்த்திட அனைவரையும் அன்போடு அழைக்கிறது.....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்-லால்பேட்டை 
கடலூர்-மாவட்டம்

சனி, 29 டிசம்பர், 2012

காவல் துறை அதிகாரிகளின் அடக்குமுறைகளைக் கண்டித்து சனிக்கிழமை மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் இன்ஷா அல்லாஹ் (நேரடி ஒளிபரப்புடன்)



விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும்வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும்நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும்முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகளை  கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
திருவல்லிக்கேணியில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப்படும்.
பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.
இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ளயுத்தத்திற்குபதிலடிகொடுக்கும்மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.
அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்
29 -12-2012 அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.
 எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
நன்றி; தலைமை 

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

கூத்தாடிகளின் கொட்டத்தை ஒடுக்குவது எப்படி? 15,000 நோட்டீஸ் விநியோகம்!


கடலூர், டிச 16: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட சார்பாக கூத்தாடிகளின் கொட்டத்தை ஒடுக்குவது  எப்படி? என்ற தலைப்பில் மாவட்ட முழுவதும் அனைத்து கிளைகளிலும் 15,000 நோட்டீஸ் விநியோகம்!




புதன், 12 டிசம்பர், 2012

Facebook மூலம் தஃவா செய்து இஸ்லாத்தை தழுவிய தினகரன்!


கடலூர், டிச 12: கடலூர் மாவட்டம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் வசித்து வருகிறார் தினகரன் (படத்தில் வையிலட் கலர் சட்டை அனிந்து, கண்ணாடியுடன் அல் குர்ஆன் மற்றும் புத்தங்களை பெறுபவர்) என்ற சகோதரர் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பனி புரிகிறார். இவர் இன்டர்நெட் உபயோகிக்கும் பழக்கம் உடையவர்.


இந்நிலையில் 2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் தற்கொலை செய்து கொண்டதாக சாதிக் பாஷா அவர்களின் செய்தி பத்திரிக்கையில் வந்ததை பார்த்து தனது Facebook முகநூல் நண்பரான சவூதி அரேபியா ரியாத்தில் பனி புரிந்துவரும் கடலூர் மாவட்டம் ஆயங்குடியை சேர்ந்த சகோ.சபியுல்லாஹ் (AbuUsama) என்பவரிடம் தற்கொலை இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதா? என்ற முதல் கேள்வியை வைக்கின்றார்?


அதற்கு பதில் கூறி மேலும் இஸ்லாத்தை பற்றி கூறி உள்ளார் சகோ.சபியுல்லாஹ்.

அதன் பின் பல்வேறு நாட்களில் இஸ்லாத்தை பற்றிய சகோதரர் தினகரனின் சந்தேகங்களுக்கு தெளிவான பதில்களை தொடர்ந்து முகநூல் மூலமே தஃவா செய்து கொண்டிருந்தார் சகோ.சபியுல்லாஹ். 

இந்நிலையில் சகோ.சபியுல்லாஹ் அவர்கள் கடலூர் நகர செயலாளர் சகோ.ஷாநவாஸ் அவர்களுக்கு போன் செய்து தினகரன் என்ற சகோதரர் இஸ்லாத்தை ஏற்றுகொள்வதாக கூறி இருக்கின்றார் உங்களை நேரில் பார்க்க சொல்லி இருக்கிறேன் என கூறினார். 

அதன் பின் சகோ தினகரன் அவர்களும் நேரில் வந்தார்வந்தவர் நான் தற்போது இருக்கும் மதத்தில் மிகுந்த கடவுள் பக்தி உடையவனாக இருந்தேன். ஆனால் இறை திருப்தியை என்னால் அங்கே உணர முடியவில்லை. ஒரு வருட காலமாகவே மனதில் எழுந்த சந்தேகங்களுக்கு முடிவு கட்டி இன்று இஸ்லாத்தை ஏற்க வந்துள்ளேன் என கூறினார். அல்லாஹ் அக்பர்! 

அவருக்கு இஸ்லாம் சம்பந்தமாக TNTJ நிர்வாகிகள் மூலம் மேலும் தஃவா செய்யப்பட்டது. அதன்பின் அவர் அணிந்திருந்த தாயத்து மற்றும் மத சம்பந்தப்பட்ட மோதிரம் ஆகியவைகள் அவரிடமிருந்து அவரின் முழு விருப்பத்தோடு அகற்றப்பட்டது. 

அதன் பின் நேற்று 11.12. 2012 அன்று TNTJ நிர்வாகிகள் முன்னிலையில் அந்த சகோதரர் வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ் ஒருவனே என்றும் 
அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மத் நபி (ஸல் ) அவர்கள் என்றும் தான் உளபூர்வமாக ஏற்றுகொள்வதாக கூறி சத்திய இஸ்லாத்தை ஏற்று கொண்டு அப்துல்லாஹ் வாக (அல்லாஹ்வின் அடிமையாக) மாறினார். 

அல்லாஹு அக்பர்! (எல்லாஹ் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) 

Facebook (முகநூல்) மூலம் பல்வேறு தீமைகள் நடந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் அதே முகநூலை சத்திய இஸ்லாத்திற்கான பிரட்சாரகளமாக ஆக்கி செயல்பட்டால் நிறைய நன்மைகள் அடையலாம் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். 

[இவருக்கு தஃவா செய்த சகோதரர் சபியுல்லாஹ் அவர்களின் சொந்த இடத்தில்தான் ஆயங்குடி TNTJ மர்கஸ் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது]

புகைப்படம் மற்றும் செய்தி: D.முத்துராஜா [கடலூர் மாவட்ட தலைவர்]

நன்றி: 
Facebook / Cuddalore Tntj (கடலூர் மாவட்டம்)

திங்கள், 3 டிசம்பர், 2012

அமீரகவாழ் கடலூர் மாவட்ட முதல் ஒருங்கிணைப்பு கூட்டம்!


துபை டிச 01: அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அமீரக வாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட முதல் ஒருங்கிணைப்பு கூட்டம் 30.11.2012  அன்று துபை மண்டல TNTJ தலைமை மர்கசில் மாலை 4:00 மணியளவில் மண்டல பொருளாளர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

முதலில் தலைமையுராக சகோ.சாஜிதுர் ரஹ்மான்   "ஏன் இந்த ஒருங்கிணைப்பு?"  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஒருங்கிணைப்பு அவசியத்தை வலியுறுத்தி பேசினார்கள்.


அதனை தொடர்ந்து வந்துயிருந்தவர்களின் அறிமுகம் நடைப்பெற்றது. இதில் அவரவர்கள் தங்களை சுய அறிமுகப்படுத்தி கொணடனர்.

இதையெடுத்து தாயகத்திலிருந்து அலைப்பேசி மூலம் தலைவர் சகோ.முத்துராஜா, செயலாளர் சகோ.நிசார் அஹமத், பொருளாளர் சகோ.சிராஜ் , துணை செயலாளர்கள் சகோ.சலாம், சகோ.அஷ்ரப் அலி ஆகிய நிர்வாகிகள் மாவட்டதின் நடக்கும் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை பற்றி விளக்கினார்கள்.



பின்பு அமீரகத்திற்க்கான கடலூர் மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.

பொறுப்பாளர் 1 : சகோ.முஹம்மது இஸ்மாயில் 00971 50 52754642 
                                   [பரங்கிப்பேட்டை - துபை] 

பொறுப்பாளர் 2 : சகோ.முஜிபூர் ரஹ்மான் 00971 55 7295202 
                                   [சிதம்பரம் - அபுதாபி -  ஜகாட்]

பொறுப்பாளர் 3: சகோ.ஹாஜா சாதிக் அலி 00971 557294845 
                                    [பரங்கிப்பேட்டை - அபுதாபி]


இதையெடுத்து மண்டல் பொருளாளர் மெளலவி.முஹம்மது நாஸிர் MISC அவர்கள் "பொறுப்பார்களின் பண்புகள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்த்தினார்கள்.


அதனை தொடர்ந்து சகோ.யூசுப் அலி " நாம் ஏன் தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக்கின்றோம்?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். தன்னுடைய உரையில் தவ்ஹீத் ஜமாத்தின் பணிகள் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்க்கும் மற்ற அமைப்புகளுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்கி பேசினார்கள்.


முன்னாள் கடலூர் மாவட்ட பேச்சாளர் சகோ.பாஜுல் ஹீசைன் அவர்கள் தற்போதைய மாவட்டத்தின் நிலவரம் மற்றும் தஃவாவின் அவசியம் ஆகியவற்றை பற்றி பேசினார்கள்.

தீர்மானங்கள்:-
  • கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு எல்லாம் வகையிலும் உறுதுனையாக இருப்பது என தீர்மானிக்கப்பட்டது.
  • கடலூர் மாவட்டத்தை தஃவா மற்றும் சமுதாய பணிகளில் மாநிலத்தில் முதலிடத்தில் கொண்டு வரவேண்டும்.
  • மாவட்டத்தில் இரத்தானத்திற்க்கான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி இரத்தான முகாம் நடத்துவது.
  • கடலூர் மாவட்டம் புவனகிரியில் புதிய கிளையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்தை கோருவது.
  • மாவட்டத்தில் கத்னா முகாம் நடத்துவது.
  • அமீரகவாழ் ஒருங்கிணைப்பிற்கு அதிகமான உறுப்பினர்களை சேர்ப்பது.
  • இன்ஷாஅல்லாஹ் அடுத்த கூட்டம் வருகின்ற 25.01.2013 அன்று நடைப்பெறும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அல்லாஹ் அக்பர்!

கூட்டத்தின் நிறைவாக கடலூர்

வியாழன், 18 அக்டோபர், 2012

சகோ.பிஜே. அவர்களின் உடல் நலத்திற்க்காக துஆ செய்யுங்கள்!


யா அல்லாஹ் அவருக்கு நோய் நிவாரணம் அளிக்க நீயே போதுமானவன்!

நீங்கள் ஒவ்வொருவரும் நமது அன்பிற்கினிய சகோ. பீஜே-வுக்காக அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சகோதரர் பி.ஜே. அவர்களுக்கு வலதுபுற மார்பின் மேற்பகுதியில் (Skin) தோலுக்கடியில் சிறிய அளவில் ஒரு கேன்சர் கட்டி உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும் இதுவல்லாத மாற்று மருத்துவ முறைகளிலும் சிகிச்சைகள் உள்ளதாக சிலர் ஆலோசனை கூறுகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக படைத்தவனின் அருள் கொண்டே தவிர நிவாரணம் இல்லை என்பதே நமது நம்பிக்கை.
வழக்கம் போல் அவர்கள் தமது பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
எனவே அவர்களுக்காக வல்ல அல்லாஹ்விடம் அதிகமதிகம் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். நேரிலோ அல்லது தொலைபேசியிலோ அவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து சகோதரர் பி.ஜே. அவர்கள் மாநில நிர்வாகத்திற்கு அனுப்பிய கடிதத்தை கீழே தருகிறோம்.
இப்படிக்கு
மாநில நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

10.10.2012


சகோதரர் பி.ஜே. அவர்களின் கடிதம்

மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். எனது உடல் நிலை குறித்து உங்களுக்கு இருக்கும் அக்கரையை நான் அறிவேன். ஆனாலும் என்ன சிகிச்சை செய்ய வேண்டி வந்தாலும் என் சக்திக்கு உட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதை இன்ஷா அல்லாஹ் நான் செய்து கொள்வேன். ஜமாஅத் மூலமோ தனிப்பட்ட நபர்கள் மூலமோ எனது சிகிச்சைக்காக செலவு செய்வதை நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

எனது நோய் தனிப்பட்ட மனிதன் என்ற முறையில் எனக்கு ஏற்பட்டுள்ளது. ஜமாஅத் பணிகளால் ஏற்படும் இழப்புகளைத் தான் ஜமாஅத் செய்யும் கடமை உண்டு.

ஒருவேளை என்னால் செலவு செய்ய இயலாத அளவுக்கு பெரும் செலவு ஏற்படும் நிலை வந்தால் நான் அழகிய பொறுமையை மேற்கொள்வேனே தவிர யாருடைய உதவியையும் நான் பெற்று சிகிச்சை மேற்கொள்ள நான் தயாராக இல்லை. இதற்காக யாரிடமும் கடனாகக் கூட வாங்கி செலவிடவும் நான் தயாராக இல்லை. என் சக்திக்கு உட்பட்ட வகையில் நான் முடிவு செய்யும் வகையில் என்னை விட்டுவிடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

என் மருத்துவ செலவு தொடர்பாக எந்த ஆலோசனையும் செய்ய வேண்டாம் என்று கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சில நிர்வாகிகள் இதை தமக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருப்பதாகக் கேள்விப்படுகிறேன். இது மறைக்க வேண்டிய விஷயம் அல்ல. மறைப்பதால் எந்த நன்மையும் இல்லை. நோய் வந்தால் ஃபித்னா செய்வார்கள் என்று நீங்கள் நினைப்பது முற்றிலும் தவறாகும். எந்த ஃபித்னா வந்தாலும் அதற்கு மார்க்க அடிபடையில் பதில் இருக்கும் போது பித்னாக்களுக்குப் பயந்து மறைப்பது ஏற்புடையதாக இல்லை. மறைக்கவும் முடியாது.

நான் மருத்துவமனையில் சேர்க்கப்படும் போது அடுத்த நிமிடம் உளவுத்துறைக்கு தெரிந்து எதிரிகளின் இயக்கங்களுக்கும் உடனே தெரிந்து விடும். அவர்கள் வழியாக நம் நிர்வாகிகளுக்குத் தெரியவரும் போது அது ஜமாஅத்தைப் பாதிக்கும். மனிதனுக்கு நோய் வருவது இயல்பானது தான். அல்லாஹ் இதுவரை எந்தப் பெரிய நோயும் இல்லாமல் எனக்கு பேருதவி புரிந்துள்ளான். இதுதான் ஆச்சரியமானது. இப்போது நோய் வந்துள்ளது ஆச்சரியமானது அல்ல. ஏதோ கொலைக் குற்றத்தை மறைப்பது போல் நோயை நீங்கள் மறைப்பதாக நான் கருதுகிறேன்.

புற்றுநோய் என்பது ஆபத்தான நோய் என்றாலும் மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் பயனளிப்பதில்லை என்றாலும் அல்லாஹ்வின் அருளால் குணமாக வாய்ப்பு உள்ளது. எனவே இதை நிர்வாகிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் சொல்வதால் பலருடைய துஆக்கள் எனக்குக் கிடைக்கும். அதை நீங்கள் தடுக்கத் தேவை இல்லை.

அன்புடன்
பி.ஜைனுல் ஆபிதீன்

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012

கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாத்தின் பிஃத்ரா விநியோகம்!

 நமதூர் தவ்ஹீத் ஜமாத்தின் வருடாந்திர பிஃத்ரா விநியோகம் கடந்த வருடத்தைப் போன்றே இந்த ஆண்டும் சிறப்பாக செய்யப்பட்டது.நமதூர் மட்டுமில்லாமல் பக்கத்துக்கு ஊர்களான T.புத்தூர் மற்றும் கந்தகுமாரன் ஊர்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டது.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது தவ்ஹீத் கிளையின் பணிகள் பக்கத்து ஊர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.அல்ஹம்துல்லிலாஹ்...
வசூல் விபரம்:
உள்ளூர் வசூல் (தவ்ஹீத் குடும்பங்கள் மட்டும்) 13,250/-
வெளிநாடு வசூல் :                                                               11,325/-
TNTJதலைமை மூலம்  :                                                     10,000/-
மொத்த வசூல்:34,575/-

கொடுக்கப்பட்ட பொருட்கள்:
1.அரிசி 
2.கோதுமை ரவா
3.சீனி 
4.கருப்பு உளுந்து 
5.து.பருப்பு 
6.ஆயில் 
7.பொ.கடலை  
8.செமியா  
9.கோழி  


செய்தி:T .முஹம்மது 

புதன், 1 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை: கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளுக்கு TNTJ கடும் கண்டனம்!


அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலை: கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளுக்கு TNTJ கடும் கண்டனம்!


மாநில தலைமையின் கண்டன அறிக்கை

கடலூர் மாவட்ட கண்டன அறிக்கை

புதன், 18 ஜூலை, 2012

தவ்ஹீத்வாதிகளே எச்சரிக்கை!!

  அன்பார்ந்த கொள்கை சகோதரர்களே...கடந்த முப்பது வருடங்களாக நம் உயரிலும் மேலான இந்த தவ்ஹீத் கொள்கையை பட்டி தொட்டி எங்கும் பிரச்சாரம் செய்துவருகின்றோம். அசத்தியம் கொண்டு ஆன்மீகம் வளர்த்துக்கொண்டு இருந்த நம் தமிழ் நாட்டிலே சத்தியத்தை சத்தம் போட்டு சொல்லி சாமானிய மக்களின் சிந்தனைகளை சீவிவிட்டோம்!!!கடந்த முப்பது வருடங்களாக நம்மை கொள்கையளவிலே வெற்றிகொள்ள முடியாத சில பேர் நம்மீது பல்வேறு அவதூறுகளை கிளப்பிவிட்டு மக்களை திசைதிருப்பிவிடலாம் என்ற எண்ணத்திலே செயல்பட்டு வந்துள்ளனர்.

  நம்மை சத்திய பிரச்சாரம் செய்யவிடாமல் அவர்களின் அபத்தமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வைத்து  நம்மை திசை திருப்பும் சதித்திட்டம் தான் இது என்று என்ன தோன்றுகிறது,  இதை அறிந்து நாமும் அவர்களின் வலையில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது தவ்ஹீத் எதிப்பு பிரசாரங்கள் தனி நபர்களை குறிவைத்து நடத்தபடுகின்றது.இவர்களின் நோக்கம் எல்லாம் நாம் எந்த நோக்கத்திற்காக அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தந்த வழிகளிலே செல்கின்றோமோ அதிலிருந்து நம்மை திசை திருப்பிவிடுவதுதான் ,அம்முயற்சியிலும் அவர்கள் சிறிதளவு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள் என்று தான் என்ன தோன்றுகிறது ஏனென்றால் நம் மீது அவர்கள் எந்த அளவிற்கு அவதூறு பரப்புகிறார்களோ அதையும் மிஞ்சும் அளவிற்கு நம்முடைய சில சகோதரர்களின் செயலை முகநூலிலே(Face Book) காணமுடிகிறது.

அவர்கள் நம்முடைய தலைவர்களின் புகைபடங்களை அசிங்கபடுத்தி செய்தி வெளியிடுகிறார்கள் என்பதற்காக நாமும் அவர்களைப் போல் செயல்படுவது என்பது தவ்ஹீத்வாதிகளின் செயல் அல்ல.மாறாக அவர்கள் நம்மை அசிங்கபடுத்தும் போது அவர்களின் மீது நமக்கு அனுதாபம் தான் வரவேண்டுமே தவிர ஆத்திரம் அல்ல!அவர்கள் தாங்களாக அதை செய்யவில்லை அவர்களின் கொள்கையிலே ஏற்பட்டுள்ள குறைபாடுதான் காரணமாக அமைகிறது .தயவு செய்து தவ்ஹீத்வாதிகள் இதுபோன்ற அபத்தமான செயல்களை தவிர்ப்போம்.நம் சிந்தனைகள் அனைத்தும் ஏகதுவமாய் இருக்கட்டும் செயல்கள் அனைத்தும் ஏகதுவவாதியாய் அமையட்டும்.

நாம் எந்த பிரச்சினைகளையும் சந்திக்கவில்லை என்றால் தவறான பாதையில் இருக்கின்றோம் என்றாகிவிடும் ஏனென்றால் சத்தியத்தை சொல்கின்றபோது பிரச்சினைகள் அவதூறுகள் வரத்தான் செய்யும் அந்த வகையில் பார்த்தால் இன்று நம்முடைய கொள்கைக்கு எதிராக பல்வேறு வசைபாடல்கள் அரங்கேரிதான் வருகிறது என்பதை நினைக்கும்போது நாம் சரியான் திசையில்தான் செல்கின்றோம் என்பதை விளங்கிகொள்ள முடிகிறது நம்மை எதிர்பவர்கள் அனைவரும் எதோ ஒருவகையில் இந்த ஏகத்துவ கொள்கையால் பாதிக்கபட்டவர்கலாகதான் இருக்க முடியும்! முழு நேர ஏகத்துவ பிரச்சாரத்தில் இருந்து நம்மை திசைதிருப்பும் அவர்களின் முயற்சிகளை முறியடிப்போம்.அவதூறுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிப்பதிலேயே நேரத்தை வீணாக்காமல் மலிந்துகிடக்கும் நூதன மூடநம்பிக்கைகளையும் இனைவைப்புகளையும் வேரறுப்போம் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தந்த வழிமுறையில்.

அன்பானவர்களே கண்ணியம் பொருந்திய அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: மனிதனை படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.(அல்குர்ஆன் 50:16-18)இப்படிப்பட்ட கூர்மையான ஆற்றல் நிறைந்த நிர்வாகியான அல்லாஹ்விடத்தில் முறையிடுவோம், நம்முடைய நன்மைகளை பாழாக்கி விடும் செயல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வோம்.

 உலக ஆதாயத்தை எதிர்பாராமல் அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூய வடிவில் சொல்லும்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவிகளும் நன்மைகளும் வந்துக்கொண்டே இருக்கும் அவன் ஒருபோதும் கைவிடுவதே இல்லை. 

வஸ்ஸலாம்
அபூ தஃப்ஹீம் கொள்ளுமேடு

செவ்வாய், 10 ஜூலை, 2012

கடலூர் மாவட்ட TNTJ செயற்குழு!


சிதம்பரம், ஜுலை 10: அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் 08. 0 7 .2012 அன்று சிதம்பரம் TNTJ மர்கசில் மாவட்ட தலைவர் D.முத்துராஜா தலைமையில் நடைப்பெற்றது.

இதில் மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலிருந்தும் திரளான செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆர்வத்தோடு வந்திருந்தனர்.

காலை 10 . 30 மணியளவில் தொடங்கிய இந்த செயற்குழுவின் தொடக்கத்தில் "அழைப்பு பனியின் அவசியங்கள் " என்ற தலைப்பில் மெளலவி.அப்துல் மஜீத் உமரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.


பின்னர் அனைத்து கிளை நிர்வாகிகளும் தலா இரண்டு நிமிடங்கள் செயல்பாடுகள் குறித்து பேசினார்கள்.

இதனை தொடர்ந்து  மாநில மாணவரணி சகோ.சித்திக் அவர்கள் மற்ற அமைப்புகளுக்கும் TNTJ விற்கும் உள்ள வித்தியாசங்களை விளக்கினார்.


தொழுகைக்கும் , உணவிற்கும் இடைவெளிவிட்டு மதியம்  இரண்டு  மணிக்கு தொடங்கிய இரண்டாம் அமர்வின் முதலில் ”முஸ்லிம்கள் மத்தியில் கிறிஸ்த்துவத்தை  எப்படியெல்லாம் கிறிஸ்த்துவர்கள் விதைக்கிறார்கள் அதை எப்படி முஸ்லிம்கள் முறியடிக்க  வேண்டும் என்று மிக தெளிவாக

திங்கள், 11 ஜூன், 2012

முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது TNTJ!


ஜே அரசின் பச்சை துரோகம்: 1349 அரசு மருத்துவர்களில் ஒரு முஸ்லிம் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை! இல்லை!, டிஎன்பிஎஸ்ஸி அலுவலகம் முற்றுகை!
தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதாஇ ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை. அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.

இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.
இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:
அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்
கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும். ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?
இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும். முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில்

திங்கள், 21 மே, 2012

லால்பேட்டை யில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மே29 2012

ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவிய கூத்தாநல்லூர் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்!


கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 20-5-2012 அன்று மாபெரும் வரதட்சனை ஒழிப்பு பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் அபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
பொதுக் கூட்டம் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தாலும் மாநாட்டை மிஞ்சும் அளிவிற்கு மக்கள் கூட்டம் நிரம்பியது.
சகோதரர்கள் அமர்வதற்கு கூட இடமில்லா நின்று கொண்டும் சுவர்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு சொற்பொழிவை கேட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. மேலும் இரண்டு சகோதரர்களும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாத்தை தங்களை வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர். அல்லாஹம் லில்லாஹ்!
உலகம் முழுவதும் உள்ள நம் கொள்கைச் சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி ஆன்லைன் பி.ஜே. இணையதளத்தில் நேரடி ஒளிரப்பு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை எப்படியாது தடுத்தி நிறுத்திட வேண்டும் என சுன்னத் ஜமாஅத் உள்பட பல்வேறு அமைப்பினர் இரவு பகலாக  பெருமளவு பணத்தை செலவு செய்து சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவைகளை முறியடிக்கம் வண்ணம் பொதுக் கூட்டம் மாநாடாக மாறியது குறிப்பிடதக்கது. எல்லா புகழும் இறைவனுக்கே.
விரிவான செய்திகள் பின்னர் வெளியிடப்படும்.







source: www.tntj.net

திங்கள், 7 மே, 2012

பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் கலந்து கொண்ட கோவை மாவட்ட குடும்பவியல் மாநாடு!

கடந்த 6-5-2012 அன்று கோவை மாவட்டம் சார்பாக கோவையில் மாபெரும் குடும்பவியல் மாநாடு நடைபெற்றது. இதில் இம்மை மறுமை வெற்றிக்கு வழிவகுக்கும் 15 க்கும் மேற்பட்ட அரங்கங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் P. ஜைனுல் ஆபிதீன் , சம்சுல்லுஹா, பக்கீர் முஹம்மத் அல்தாபி, M.I. சுலைமான், ரஹ்மத்துல்லாஹ், M.S. சுலைமான் ஆகியோரின் மார்க்க சொற்பொழிவுகள் இடம் பெற்றது. இம்மாநாட்டில் ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது குறிப்பிடதக்கது. அல்ஹம்துலில்லாஹ்



ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

இஸ்லாமிய குடும்பவியல் மாவட்ட மாநாடு ஏன்?



நோட்டிசை பெரிதாக பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்.

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

S.P பட்டினம் பள்ளிவாசல் தவ்ஹீத் ஜமாஅத் வசமானது

அல்லாஹு அக்பர்...............!! அல்லாஹு அக்பர்....................!! S.P பட்டினம் பள்ளிவாசல் பிரச்சினை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவாக தீர்ப்பு.................!!

   இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாச்சியர் உத்தரவின்படி பூட்டி சீல் வைக்கப்பட்டது.

 இதற்கு எதிராக பல்வேறு சட்டப்போராட்டங்களையும் அறவழிப் போராட்டங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வந்தது இப்பள்ளிக்கு உரிமை கொண்டாடி சுன்னத் ஜமாஅத்தினர் திருவாடனை உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு போட்டனர், இவர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது இதன் பின்னர் வட்டாச்சியர் அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து தனது தடை உத்தரவை ரத்து செய்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசலை திறந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தனர் இத்தீர்ப்பை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை 8 மணிக்கு பள்ளிவாசல் திறக்கப்பட்டது , காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்க உறுதி அளித்துள்ளனர் மேலும் சுன்னத் ஜமாஅத்தினர் யாரும் பள்ளிவாசலை தவ்ஹீத் ஜமாஅத் திறக்கும் போது எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று பள்ளிவாசலில் பொது அறிவிப்பு