கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 18 ஜூலை, 2012

தவ்ஹீத்வாதிகளே எச்சரிக்கை!!

  அன்பார்ந்த கொள்கை சகோதரர்களே...கடந்த முப்பது வருடங்களாக நம் உயரிலும் மேலான இந்த தவ்ஹீத் கொள்கையை பட்டி தொட்டி எங்கும் பிரச்சாரம் செய்துவருகின்றோம். அசத்தியம் கொண்டு ஆன்மீகம் வளர்த்துக்கொண்டு இருந்த நம் தமிழ் நாட்டிலே சத்தியத்தை சத்தம் போட்டு சொல்லி சாமானிய மக்களின் சிந்தனைகளை சீவிவிட்டோம்!!!கடந்த முப்பது வருடங்களாக நம்மை கொள்கையளவிலே வெற்றிகொள்ள முடியாத சில பேர் நம்மீது பல்வேறு அவதூறுகளை கிளப்பிவிட்டு மக்களை திசைதிருப்பிவிடலாம் என்ற எண்ணத்திலே செயல்பட்டு வந்துள்ளனர்.

  நம்மை சத்திய பிரச்சாரம் செய்யவிடாமல் அவர்களின் அபத்தமான கேள்விகளுக்கு பதில் சொல்ல வைத்து  நம்மை திசை திருப்பும் சதித்திட்டம் தான் இது என்று என்ன தோன்றுகிறது,  இதை அறிந்து நாமும் அவர்களின் வலையில் சிக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தற்போது தவ்ஹீத் எதிப்பு பிரசாரங்கள் தனி நபர்களை குறிவைத்து நடத்தபடுகின்றது.இவர்களின் நோக்கம் எல்லாம் நாம் எந்த நோக்கத்திற்காக அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தந்த வழிகளிலே செல்கின்றோமோ அதிலிருந்து நம்மை திசை திருப்பிவிடுவதுதான் ,அம்முயற்சியிலும் அவர்கள் சிறிதளவு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள் என்று தான் என்ன தோன்றுகிறது ஏனென்றால் நம் மீது அவர்கள் எந்த அளவிற்கு அவதூறு பரப்புகிறார்களோ அதையும் மிஞ்சும் அளவிற்கு நம்முடைய சில சகோதரர்களின் செயலை முகநூலிலே(Face Book) காணமுடிகிறது.

அவர்கள் நம்முடைய தலைவர்களின் புகைபடங்களை அசிங்கபடுத்தி செய்தி வெளியிடுகிறார்கள் என்பதற்காக நாமும் அவர்களைப் போல் செயல்படுவது என்பது தவ்ஹீத்வாதிகளின் செயல் அல்ல.மாறாக அவர்கள் நம்மை அசிங்கபடுத்தும் போது அவர்களின் மீது நமக்கு அனுதாபம் தான் வரவேண்டுமே தவிர ஆத்திரம் அல்ல!அவர்கள் தாங்களாக அதை செய்யவில்லை அவர்களின் கொள்கையிலே ஏற்பட்டுள்ள குறைபாடுதான் காரணமாக அமைகிறது .தயவு செய்து தவ்ஹீத்வாதிகள் இதுபோன்ற அபத்தமான செயல்களை தவிர்ப்போம்.நம் சிந்தனைகள் அனைத்தும் ஏகதுவமாய் இருக்கட்டும் செயல்கள் அனைத்தும் ஏகதுவவாதியாய் அமையட்டும்.

நாம் எந்த பிரச்சினைகளையும் சந்திக்கவில்லை என்றால் தவறான பாதையில் இருக்கின்றோம் என்றாகிவிடும் ஏனென்றால் சத்தியத்தை சொல்கின்றபோது பிரச்சினைகள் அவதூறுகள் வரத்தான் செய்யும் அந்த வகையில் பார்த்தால் இன்று நம்முடைய கொள்கைக்கு எதிராக பல்வேறு வசைபாடல்கள் அரங்கேரிதான் வருகிறது என்பதை நினைக்கும்போது நாம் சரியான் திசையில்தான் செல்கின்றோம் என்பதை விளங்கிகொள்ள முடிகிறது நம்மை எதிர்பவர்கள் அனைவரும் எதோ ஒருவகையில் இந்த ஏகத்துவ கொள்கையால் பாதிக்கபட்டவர்கலாகதான் இருக்க முடியும்! முழு நேர ஏகத்துவ பிரச்சாரத்தில் இருந்து நம்மை திசைதிருப்பும் அவர்களின் முயற்சிகளை முறியடிப்போம்.அவதூறுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதில் அளிப்பதிலேயே நேரத்தை வீணாக்காமல் மலிந்துகிடக்கும் நூதன மூடநம்பிக்கைகளையும் இனைவைப்புகளையும் வேரறுப்போம் அல்லாஹ்வும் அவன் தூதரும் காட்டித்தந்த வழிமுறையில்.

அன்பானவர்களே கண்ணியம் பொருந்திய அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்: மனிதனை படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும்போது அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.(அல்குர்ஆன் 50:16-18)இப்படிப்பட்ட கூர்மையான ஆற்றல் நிறைந்த நிர்வாகியான அல்லாஹ்விடத்தில் முறையிடுவோம், நம்முடைய நன்மைகளை பாழாக்கி விடும் செயல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வோம்.

 உலக ஆதாயத்தை எதிர்பாராமல் அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூய வடிவில் சொல்லும்போது அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவிகளும் நன்மைகளும் வந்துக்கொண்டே இருக்கும் அவன் ஒருபோதும் கைவிடுவதே இல்லை. 

வஸ்ஸலாம்
அபூ தஃப்ஹீம் கொள்ளுமேடு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக