கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

S.P பட்டினம் பள்ளிவாசல் தவ்ஹீத் ஜமாஅத் வசமானது

அல்லாஹு அக்பர்...............!! அல்லாஹு அக்பர்....................!! S.P பட்டினம் பள்ளிவாசல் பிரச்சினை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவாக தீர்ப்பு.................!!

   இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டினம் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான பள்ளிவாசல் சுன்னத் ஜமாஅத்தினர் உரிமை கொண்டாடியதால் வட்டாச்சியர் உத்தரவின்படி பூட்டி சீல் வைக்கப்பட்டது.

 இதற்கு எதிராக பல்வேறு சட்டப்போராட்டங்களையும் அறவழிப் போராட்டங்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தி வந்தது இப்பள்ளிக்கு உரிமை கொண்டாடி சுன்னத் ஜமாஅத்தினர் திருவாடனை உரிமையியல் நீதி மன்றத்தில் வழக்கு போட்டனர், இவர்கள் தொடுத்த வழக்கு நீதிமன்றத்தில் சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டது இதன் பின்னர் வட்டாச்சியர் அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்து தனது தடை உத்தரவை ரத்து செய்து தவ்ஹீத் ஜமாஅத்தினர் பள்ளிவாசலை திறந்து கொள்ளலாம் என்று தீர்ப்பு அளித்தனர் இத்தீர்ப்பை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இன்று காலை 8 மணிக்கு பள்ளிவாசல் திறக்கப்பட்டது , காவல் துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்க உறுதி அளித்துள்ளனர் மேலும் சுன்னத் ஜமாஅத்தினர் யாரும் பள்ளிவாசலை தவ்ஹீத் ஜமாஅத் திறக்கும் போது எந்த இடையூறும் செய்யக்கூடாது என்று பள்ளிவாசலில் பொது அறிவிப்பு
செய்துள்ளனர்.

  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கடை பிடித்து காட்டிய முன் மாதிரியை அடிப்படையாக கொண்டு ஆர்ப்பாட்டமோ, அமர்க்களமோ இல்லாமல் திறப்பு விழா என்ற பெயரில் அதிக அளவில் மக்களை திரட்டி மற்றவர்களை புண்படுத்தக் கூடாது என்பதால் அமைதியான முறையில் திறக்கப்பட்டது நல்ல படியாக பிரச்சினை ஏதுமில்லாமல் பள்ளிவாசல் திறக்கப்பட்டு இறைப்பணி நடக்க வல்ல இறைவனை இறைஞ்சுமாறு கேட்டுக்கொள்கிறோம்..........

0 கருத்துகள்:

கருத்துரையிடுக