கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 4 ஜூலை, 2012

அலை அலையாய் சத்தியத்தை நோக்கி…….


  கிருத்தவ மிஷினரிகளைப் போல திட்டமிட்ட பிரசாரம் எதுவும் இல்லை. எந்த இலவசங்களும் வழங்கப்படுவதில்லை. சவுதி அரேபியாவிலிருந்தோ அல்லது மற்ற எந்த வளைகுடா நாடுகளிலிருந்தோ பண உதவி பெறுவதில்லை. நாடு முழுக்க இஸ்லாத்தைப் பற்றிய தவறான பிரசாரம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. சில இந்துத்வ வாதிகள் கோவில்களிலும் பொது இடங்களிலும் மசூதிகளிலும் குண்டுகளை வைத்து விட்டு அதற்கு கச்சிதமாக முஸ்லிம்களையே கைது செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல அமெரிக்க இஸ்ரேலிய நாசகார திட்டங்களால் உலகம் முழுக்க இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்ற பிரசாரம் ஊடகங்களால் பரப்பப்படுகிறது. இந்தியாவில் அரசு நலத் திட்டங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அரசு வேலை வாய்ப்புகளிலும் திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர். இஸ்லாமியர்களுக்கு சிறந்த எதிர்காலம் இந்தியாவில் இருக்க முடியாது என்ற எண்ணமே பலரது எண்ணமாக இருக்கிறது.

இவ்வளவு இடர்பாடுகள் இருந்தும் அத்தனையையும் தூரமாக்கி இன்று சத்திய இஸ்லாத்தை ஏற்று வந்திருக்கும் இந்த புதிய முகங்களை இருகரம் நீட்டி அரவணைப்போம். நம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்து கொடுப்போம். பூர்வீக சொந்தங்கள் இவர்களை ஏசுவார்கள்: தூற்றுவார்கள்: அத்தனையையும் எதிர் நோக்கியே இன்று புதிய மார்க்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களை நம்முடைய உடன்பிறப்புகளாக நினைக்க வேண்டும். திருமண உறவுகளை அவர்களோடு ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமூட்ட வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகளை செல்வந்தர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். தையல் மிஷின், ஆட்டோ ரிக்ஷா, வட்டியில்லாத கடன் என்று அனைத்து தரப்பு உதவிகளையும் அந்த மக்களை நோக்கி திருப்பி விட வேண்டும்.

படித்து விட்டால் தீண்டாமையும் சாதி வெறியும் தணிந்து விடும் என்று நினைத்திருந்தோம். ஆனால் முன்பு இருந்ததை விட சாதி வெறி படித்தவர்களிடம்தான் அதிகம் இருப்பதை இணைய விவாதங்களில் பார்த்து வருகிறோம். எனவே ஆரியர்களால் புகுத்தப்பட்ட இந்த வர்ணாசிரம முறையை தகர்க்கும் ஒரே வழி: மிக இலகுவான வழி: வன்முறையற்ற வழி: இஸ்லாம்தான் என்றால் மிகையாகாது.

இந்த கணக்கெடுப்பு கடந்த ஒரு மாதத்தியது. அதிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கட்டுப்பாட்டில் மட்டுமே இஸ்லாத்தை தழுவியவர்களின் கணக்கெடுப்பு இது. கணக்கில் வராமல் மற்ற அமைப்புகள் மூலமும் அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். தவ்ஹீத் ஜமாத் மூலம் இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளதால் தர்ஹா வணக்கம், தாயத்து, பல தெய்வ வணக்கம், தீண்டாமை என்று மூடப் பழக்கங்களை விட்டும் தூரமாக்கப்படுவர். ஒரு வருடம் இஸ்லாமிய கல்லூரியில் சேர்க்கப்பட்டு இஸ்லாத்தின் அடிப்படையையும் தொழிற் கல்வியையும் இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுவர். கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து ஏக இறைவனை வணங்கி மூடப்பழக்கங்களை தூரமாக்கி சிறந்த முஸ்லிம்களாக இவர்கள் வாழ வாழ்த்துவோம். நம் தமிழகத்தின் தீராத தலைவலியாய் இருக்கும் தீண்டாமை எனும் அரக்கனை ஒழிக்கும் இது போன்ற முயற்சிகளுக்கு நம்மால் ஆன ஆதரவை தருவோம். திரு மூலர் அருளிய திருமந்திரம் கூறும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நம் மூதாதையர் மார்க்கத்தை நோக்கி அடியெடுத்து வைத்திருக்கும் இவர்களை அன்போடு அரவணைப்போம்.
-----------------------------------------------------------------------------------
1.




1.வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் கடந்த 5-6-2012 அன்று Phd படித்த கல்லூரி பேராசிரியர் விவேகானந்தம் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் தனது பெயரை அப்துர் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார்கள். இவர் குர்ஆனை நன்கு ஆராய்ந்த பிறகு இஸ்லாத்தை ஏற்றுள்ளது குறிப்பிடதக்கது.

-----------------------------------------------------------------------------------
2.



2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் கிளையில் கடந்த 8-6-2012 அன்று தீபா என்ற பெண்மணி இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மேலும் தனது பெயரை ஆயிஷா என மாற்றிக் கொண்டார்கள். அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

------------------------------------------------------------------------------------

3.



3.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் 20/05/12 அன்று காரைகாலில் இன்பமேரி என்ற சகோதரி இஸ்லாத்தை தன வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டு நஜ்மா என்று பெயர் மாற்றம் செய்துகொண்டார் .அல்ஹம்துலில்லாஹ்.

------------------------------------------------------------------------------------
4.தென் சென்னை மாவட்டம் தரமணி கிளையில் கடந்த 27-5-2012 அன்று பாண்டியராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சைஃபுல்லாஹ் என மாற்றிக் கொண்டார். இவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

4.


-------------------------------------------------------------------------------------



5.திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் கிளையில் கடந்த 19.05.2012 அன்று சங்கர நாராயணன் என்ற சகோதரர் இஸ்லாமிய மார்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய பெயரை சதாம் ஹுசைன் என்று மாற்றிக்கொண்டார்.
இந்த சகோதரருக்கு சகோதரர் மவ்லவி ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்புகளையும் இந்தக் கொள்கையை ஏற்பதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் சோதனைகள் போற்றவற்றையும் எடுத்துரைத்தார்கள்
மேலும் அவருக்கு இஸ்லாம் சம்பந்தமான நூல்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

5.


------------------------------------------------------------------------------------



6.நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளையில் கடந்த 18-05-2012 அன்று மூர்த்தி என்ற சகோதரர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

6.

------------------------------------------------------------------------------------



7.கரூர் மாவட்டத்தில் கடந்த 8-5-2012 அன்று சந்திரசேகர் என்ற சகோதரர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் எனது தனது குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ். இவர்களுக்கு நம் கொள்கைச் சகோதர்கள் மூலம் ஏகத்துவ பிரச்சார டிவிடிக்கள் மற்றும் நூல்கள் வழங்கி இஸ்லாத்தை கொள்கைகள் விளக்கிக் கூறிப்பட்டது.

7.


------------------------------------------------------------------------------------




8.சிவஙக்கை மாவட்டம் இளையாங்குடி கிளையில் கடந்த 4-5-2012 அன்று சகோதரர் அப்துல்லாஹ் அவர்களின் குடும்தார்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் சகோதரர் அப்துல்லாஹ் இரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தை ஏற்றது குறிப்பிடதக்கது. இவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.


8.


------------------------------------------------------------------------------------



9.விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கிளையில் கடந்த 4-5-2012 அன்று 66 வயதான பழனி சுப்பு என்ற பெரியவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்! அவருக்கு புத்தகம் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

9.


------------------------------------------------------------------------------------



10.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளையில் கடந்த 31-04-2012 அன்று சிவா என்ற சகோதரர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

10

-------------------------------------------------------------------------------------

படங்கள் குறிப்புகள் உதவி:tntj.net

0 கருத்துகள்:

கருத்துரையிடுக