கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

நமதூர் தவ்ஹீத் மதரசா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நம்முடைய தவ்ஹீத் மதரசாவின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி ௦01.08.2011 அன்று அசர் தொழுகை முதல இஷா தொழுகை வரை இரண்டு அமர்வுகளாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சி முஹம்மது தாரிப் அவர்களின் முன்னிலையில் இமாம் அவர்களின் கிராத்துடன் தொடங்கியது. தேனீ முபாரக் அவர்கள் கல்வியின் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.கடலூர் மாவட்ட தலைவர் ஜாகிர்ஹுசைன்  அவர்களும் செயலாளர் தாஜுத்தின் அவர்களும் சிறப்பு அழைபாலர்கலாக கலந்துக்கொண்டனர்.  

முதல் அமர்வில் முபாரக் அவர்களின் பயானும் இரண்டாம் அமர்வு மக்ரிப் தொழுகைக்கு பிறகு மதரசா மாணவ மாணவிகளின் பயான் மற்றும் கிராத் ஓதும் போட்டியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பெரும் அளவில் மக்களிடையே பேசப்பட்டது என்றால் அது அல்லாஹ் நமக்கு அளித்த மிகப் பெரிய கண்ணியம் என்றேதான் சொல்லவேண்டும்.
செய்தி:அபூ தஃப்ஹீம் 

1 கருத்துகள்:

கருத்துரையிடுக