கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 26 ஜனவரி, 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரணி

சென்னை : பாபர் மசூதி இடிப்பு தொடர்பான, அலகாபாத் கோர்ட்டின் தீர்ப்பை கண் டித்தும், சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கை மறு விசாரணை செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் சார்பில், நாளை சென் னையில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தப்படுகிறது.இது குறித்து சென்னையில், நேற்று இந்த அமைப்பின் மாநில பொது செயலர் அப்துல் ஹமீது நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:

பாபர் மசூதி இடிப்பு தொடர்பான, அலகாபாத் கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்தும், சுப்ரீம் கோர்ட் டில் இவ்வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகிலிருந்து ஐகோர்ட் வரை கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி, என் தலை மையில் நாளை நடத்தப்படுகிறது. இதில், தமிழகம் முழுவதிலிருந்தும் முஸ்லிம்கள் கலந்துக் கொள்கின்றனர். பேரணியின் முடிவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்தின் நிறுவனத் தலைவர் ஜைனுல் ஆபிதீன் உரையாற்றுகிறார்.இவ்வாறு அப்துல் ஹமீது கூறினார்.
- தின மலர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக