கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

உங்களின் ஃபித்ராவை (நோன்புப் பெருநாள் தர்மம்) வாரி வழங்கிடுவீர்

அல்லாஹ்வின் அருளால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளை ஒவ்வோரு வருடமும் ஃபித்ரா வசூல் செய்து ஃபித்ராவை பெற தகுதியானவர்களை வீடு தேடி சென்று வினியோகம் செய்து வருகிறது. பெருநாளில் உணவு சமைப்பதற்கான பொருள்கள் உள்பட இறைச்சி வாங்குவதற்கு பணமும் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த காலங்களில் சுமார் 112 ஏழை குடும்பங்கள் பயன்பெற்றன.

நமது ஊரில் வசதி படைத்தவர்கள் சரியான முறையில் ஃபித்ராவை வழங்கினால், நமது ஊரில் உள்ள அனைத்து ஏழை குடும்பங்களும் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும்.

எனவே, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் நமது ஊர் சகோதரர்கள் உங்களின் ஃபித்ராவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளைக்கு அனுப்பி தாருங்கள். உங்களின் ஃபித்ராவை அனுப்ப கீழ்காணும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்ளுமேடு கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்:
ஒரு நபருக்கு ஃபித்ரா தொகையாக ரூபாய் 75 (எழுபத்தி ஐந்து) நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது.

M.T. யாசின் மற்றும் முஹம்மது ரஜவி

அமீரகத்தில் உள்ள நமது சகோதரர்கள் அமீரக கொள்ளுமேடு கிளை தலைவர் M.I அபுல் மல்கர் (050-5404642/050-2634035) அவர்களை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவன் : தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் - கொள்ளுமேடு கிளை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக