கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வியாழன், 15 டிசம்பர், 2011

நெல்லையில் நடைபெற்ற TNTJ வின் 13 வது மாநிலப் பொதுக்குழு – முழு விபரத்துடன்!

பிரம்மாண்டமாய் கூடிய 13 வது மாநிலப் பொதுக்குழு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 13 வது மாநிலப் பொதுக்குழு கடந்த 11/12/2011 அன்று திருநெல்வேலி மாநகரத்தில் இருக்கும் பார்வதி சேஷ மஹாலில் காலை 10.30 க்கு கூடியது. மேலாண்மைக் குழுத்தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அலை கடலென திரண்ட நிர்வாகிகள் :

கடந்த 2011 ஜனவரி மாதம் சேலத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், மாநிலத்திற்கு புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பொதுக்குழு அனைவரின் மத்தியிலும் எதிர்பார்ப்பை உண்டாக்கியது. இதில் 3000க்கும் அதிகமாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

நெல்லை மாநகரில் இருக்கும் மண்டபங்களிலேயே மிகப்பெரியது இந்த பார்வதி மஹால்தான். இருந்தாலும் மக்கள் வெள்ளத்தால் இதுவும் கூட இடப்பற்றாக்குறையாய் இருந்தது. பொதுக்குழு உறுப்பினர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் அரங்கம் காலை 10 மணிக்கே நிரம்பி வழிய ஆரம்பித்தது. அரங்கத்தின் மாடி, பக்கவாட்டுப் பகுதிகள் அனைத்திலும் இருக்கைகள் நிரம்பி வழிந்தன. அரங்கத்திற்கு வெளியே ஷாமியானா பந்தல் போடப்பட்டு அதிலும் நாற்காலிகள் குவிக்கப்பட்டன. ஆனாலும் இடமின்றி மக்கள் பலர் நின்ற வண்ணமே இருந்தனர்.

வானுயர்ந்த உறுப்பினர்களின் கோஷம்:

பொதுக்குழுவின் முதல் நிகழ்ச்சியாக நிர்வாகக் குழு எடுத்த சில நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. சைபுல்லாஹ் ஹாஜாவின் தவறான செயல்பாடு காரணமாக அவரை நீக்கியதை பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் கேட்கப்பட்டது. “அல்லாஹ் அக்பர்” என தங்களின் கைகளை உயர்த்தி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அதற்கு ஒப்புதல் தெரிவித்தனர்.

அதுபோல சொந்தக் காரணங்களுக்காகவும், வேலைப்பளு காரணமாகவும் தங்களின் பொறுப்புகளை ராஜினாமா செய்த சகோ.அப்துந்நாசர், தணிக்கைக் குழு உறுப்பினர் சகோ.தம்மாம் தவ்ஃபீக், மாநிலச் செயலாளர் சகோ.மாலிக் ஆகியோரின் விலகல் குறித்தும் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது.

எழுச்சியடைய வைத்த லுஹாவின் உரை:

பொதுக்குழுவின் முதல் அமர்வின் முதல் நிகழ்ச்சியாக மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா ரஹ்மானி “கொள்கை உறவு” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த ஜமாஅத்தில் இருக்கும் உறுப்பினர்கள் உறவுகளைப் பேணுபவர்கள், அதே நேரம் அந்த உறவுகள் கொள்கைக்கு மாற்றமாகச் செயல்படும் சமயத்தில் அதைத் தூக்கி எறிந்து விட்டு இந்த சத்தியக் கொள்கையைத் தூக்கிப் பிடிப்பவர்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) காலத்திய ஒரு வரலாற்றைச் சுட்டிக் காட்டி

வியாழன், 8 டிசம்பர், 2011

நமதூர் தஹ்வ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற மாதாந்திர பெண்கள் பயான்

நமதூர் தஹ்வ்ஹீத் பள்ளியில் பெண்களுக்காக மாதந்தோறும் நடைபெறும் பயான் நிகழ்ச்சி நேற்று சிறப்புடன் நடைபெற்றது சகோதரர் பெண்ணடம் யாசின் அவர்கள் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சி மாலை 3  மணி முதல் அஸ்ர் தொழுகை வரை நடைபெற்றது. இதில் 40  க்கும்  மேப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், 24 நவம்பர், 2011

இஸ்லாமிய ஆண்டு உருவான வரலாறு!

மகத்தான படைப்பாளன் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்...

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரென்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி ( 9:36 )

இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி 1433வது ஆண்டு துவங்கியுள்ளது.

ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தை பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில்; கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி. (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு. (கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

இஸ்லாமியர்கள் ஹிஜ்ரி ஆண்டு என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது? என்பது இஸ்லாமியர்களில் பலருக்கே தெரியாது. இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது என்பதை நாம் விரிவாக காண்போம்...!

நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த வரை இந்த ஹிஜ்ரி ஆண்டு இருந்ததில்லை. மேலும் ஆண்டின் முதல் மாதம் என்பது முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே குறிப்பிட்டு வந்தனர்.

நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னர் அப்ரஹா என்ற மன்னன் யானைப் படையுடன் கஅபத்துல்லாவை அழிக்க வந்த போது அல்லாஹ் பறவைகள் மூலம் அந்தப் படையை முறியடித்தான். (திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் இது தொடர்பாக பேசுகிறது. இந்த அத்தியாயத்திற்கு ஃபீல் - யானை என்றே பெயரிடப்பட்டுள்ளது). இந்தச் சம்பவம் அரபுலகத்தில் பிரபலமானது. இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு தான் அன்றைய அரபுலகில் வருடத்தைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.

நானும் நபி(ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம் என்று கைஸ் பின் மக்ரமா(ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.(நூல்: திர்மிதி 3552, அஹ்மத் 17218)

இந்த செய்தி நபிகளார் காலத்தில் ஆண்டுக் கணக்கை, யானை ஆண்டு என்று குறிப்பிட்டு வந்ததை தெளிவாக எடுத்துரைக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்குச் சென்றபோது வருடத்தைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார்கள். ரபீவுல் அவ்வல் மாதத்தில் கணக்கிடப்பட்டது என்ற செய்தி இமாம் ஹாகிமின் அல்இக்லில் என்ற நூலில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இது முஃளல் என்ற வகையை சார்ந்த மிகவும் பலவீனமான செய்தி என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ : பாகம் 7 பக்கம் 268)

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபுபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரி ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு

செவ்வாய், 22 நவம்பர், 2011

வேகமாக வளர்ந்து வரும் மானியம் ஆடூர் மஸ்ஜித்!!!

நன்றி:MY யாசீன் 

ஞாயிறு, 20 நவம்பர், 2011

எனது கஷ்டத்தை அல்லாஹ் நீக்கமாட்டானா ?


நன்றி:பிரான்ஸ்tntj
கேள்வி : அச்சலம் அலைக்கும், எனது கேள்வி நான் வழக்கை முழுவதும் கஷ்ட படுபவனாக உள்ளேன்,என் இரு மத குழைந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்தேன் பிறகு இரண்டு வருடத்திற்கு பிறகு என் தந்தைக்கு ஹார்ட் பிளாக் அறுவை சிகிச்சை செய்தேன் இதற்கு நடுவில் என் உடல்நிலை ரொம்ப மோச மாகிவிட்டது பிறகு தெரியவந்தது எனக்கு கிட்னியில் கல் உள்ளது ,இந்த நோய் அறியாமலேயே நான் ரொம்ப செலவு செய்தà  விட்டேன் ,இப்பொழுது மருந்து வாங்கி கொண்டுயிருக்கிறேன்,என் தொழிலும் சரியில்லை ,அப்பா பல வர்சமாக வெளிநாட்டில் உள்ளார் ,அவருக்கு அறுவைசிகிச்சை முடிந்த பின்பும் வெளிநாட்டுக்கு சென்று விட்டார் ,இன்று அவரால் முடியவில்லை, எனக்கும் அவரை அனுப்ப விருப்பம் இல்லை ,என் குடும்பமோ ,பெரியது நான் சம்பாரிப்பது பத்தாது ,என் குடும்பத்தை காப்பற்ற நான் மிகவும் வெயிலில் சுத்தி திர ிந்து கஷ்ட படுகிறேன் ஒண்ணுமே சம்பரிப்பு காணோம் ,அதிகமாக வெய்யிலில் சுத்தினாலும் என் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்னும் நோய் அதிகரிக்குது,ஏன் வழக்கை முழுவதும் கஷ்டங்களே உள்ளன,வறுமை தலைதுக்குது செலவுகளோ அதிகம் ,பெரி குடும்பத்தில் பிறந்து இன்று ஒரு மத விட்டின் செலவு மிகவும் பாரமாக உள்ளது ,ஒரு சின்ன குடும்பத்தின் செலவோ 3 ,000 ருபாய் ,அனால் நான் பிறந்து வளந்த குடு ம்ப மாத செலவு 10 ,000 ருபாய் இதற்காக நான் மிகவும் பாடுபடுகிறேன் ,என்னால் முடியவில்லை,ஏன் கேள்வி எனக்கு ஏன் அல்லாஹ் துன்பத்துக்கு மேல் துன்பம் தருகிறான் பல வருசங்கள் ஓடி விட்டன என் கஷ்டங்கள் இன்னும் போகவில்லை இதற்க்கு இஸ்லாமிக் முறையில் தீர்வு என்ன ? நான் அல்லாஹ் வை தவிர யாரையும் வணங்குவதில்லை ,நான் ஒரு தவ்ஹீத் வாதி,எனக்கு இஸ்லாமிக் முறையில் பதில் சொல்லுங்கள்

பதில் : உலக மக்களுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உலக மக்களின் விடிவுக்கு இறைவன் மூலமாக நமக்கு திருமறைக் குர்ஆன் என்ற ஒரு பொக்கிஷத்தை பெற்றுத் தந்துள்ளார்கள். திருமறைக் குர்ஆன் உங்கள் பிரச்சினைக்கு மிகத் தெளிவான பதிலைத் தருகிறது.

பிரச்சினைகள் நமது ஈமானை சோதிப்பதற்கே!

இறைவன் நமது வாழ்வில் பலவிதமான சோதனைகளையும் நமக்குத் தந்து நம்மை சோதிப்பான் அந்த நேரத்தில் உண்மையான ஓர் ஏகத்துவவாதி பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகாமல் நமது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (2-155)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் நம்மை எப்படியெல்லாம் சோதிப்பான் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறான். குறிப்பிட்டு விட்டு வசனத்தின் இறுதியில் பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!என்றும் குறிப்பிடுகிறான். நமக்கு துன்பங்களை அல்லாஹ் தந்து நம்மை சோதிக்கும் போது பொருமையாக நாம் இருக்கிறோமா? இல்லையா? என்பதைத் தான் இறைவன் கண்காணிக்கிறான்.
தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது 'நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.(2-156) 

அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும் அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். (2-157)
மேற்கண்ட வசனங்களில் துன்பம் நேருகின்ற நேரத்தில் நாம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் இறைவன் குறிப்பிடுகின்றான்.

செல்வம் இருப்பதும் சோதனை இல்லாமல் இருப்பதும் சோதனையே!

செல்வத்தைப் பொருத்தவரையில் அது நம்மிடம் நிறைய இருப்பதும் சோதனை தான் இல்லாமல் இருப்பதும் சோதனைதான். இருப்பவன் அதை எப்படியெல்லாம்

திங்கள், 7 நவம்பர், 2011

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளி தியாக திருநாள்

நமதூர் தவ்ஹீத் பள்ளியில் இன்று சிறப்பான முறையில் தியாக திருநாள் தொழுகை, ஹஜ்ரத் நியமத்துல்லாஹ் அவர்களின் சிறப்பு பயானுடன் நடைபெற்றது.அதன் சமயம் ஆண்களும் பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்....

தொழுகை முடிந்து குர்பானி கொடுக்கப்பட்ட ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகள் ஏழை எளிய மக்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டது.

சனி, 29 அக்டோபர், 2011

இன்று துல் ஹஜ் முதல் நாள் – தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பிறை பார்க்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை,திருவள்ளுர்,ராமநாதபுரம்,நீலகிரி,தஞ்சை,உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிறை பார்க்கப்பட்டதால் இன்று (28-10-2011) மக்ரிப்லிருந்து தமிழகத்தில் துல் ஹஜ் பிறை 1 ஆரம்பமாகின்றது. இதன் அடிப்படையில் வருகின்ற நவம்பர் 7 ஆம் தேதி தமிழகத்தில் ஹஜ் பெருநாள் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

வியாழன், 27 அக்டோபர், 2011

உள்ளாட்சித் தேர்தல்!!!

அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்” என்று கூறுவீராக! ஆலு இம்ரான்-26

ஆட்சி அதிகாரத்தில் சிறிய அளவில் பயன்பெறும் வாய்ப்பை இந்த உள்ளாட்சி தேர்தல் மக்களுக்கு வழங்கியுள்ளது.

தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் யாரும் எதிர்பாரத வகையில் ஒவ்வொரு கட்சியும் ஏறத்தாழ தனித்தே போட்டியிட்டுள்ளன. இதே முறையை சட்டமன்றம் பாராளுமன்றத்திலும் கடைப்பிடித்தால் ஒரு கட்சியின் உண்மையான சக்தி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிடக்கூடாது என்பதைக் கொள்கையாக வைத்துள்ள இந்த ஜமாஅத்தை பல வகையில் எதிர்த்தவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.

நாம் ஒற்றுமையைக் குலைப்பதாக குற்றம் சாட்டியவர்களின் சாயம் இந்த தேர்தலில் வெளுத்துவிட்டது.

உலக ஆதாயத்திற்காகவே நம்மை எதிர்த்தார்கள் என்பதை இந்த்த் தேர்தல் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. உண்மையில் இவர்கள் ஒற்றுமையை வலியுறுத்துபவர்கள் என்றால் ஏன் அனைவரும் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்தவில்லை? ஒரு வார்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பது ஒற்றுமையின் அடையாளமா?

தங்களின் சுய லாபத்திற்காகவே தவ்ஹீத் ஜமாஅத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதை மக்கள் இந்த்த் தேர்தல் மூலம் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.

சட்டமன்றத் தேர்தலில் நின்று இரண்டு இடங்களை வெற்றி கொண்டவர்கள் சட்டமன்றத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்காக செய்த நன்மைகள் என்ன? இந்த சமுதாயத்திற்காக குறைந்த பட்சம்

புதன், 26 அக்டோபர், 2011

வெளிநாட்டில் இருப்பவர் ஊரில் கொடுக்கும் குர்பானியின் சட்டம் என்ன?

குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ்ஜு மாதம் பிறை ஒன்று முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம், முடி இவற்றில் எதையும் வெட்டக் கூடாது. என்று இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது.

"நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ்ஜு பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை தனது முடியை, நகத்தை வெட்ட வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3655), நஸயீ (4285)

குர்பானி கொடுப்பவர் எங்கிருந்தாலும் சரி, எங்கு குர்பானியைக் கொடுத்தாலும் சரி குர்பானி கொடுப்பதற்குத் தீர்மானித்தவர் துல்ஹஜ் பிறை ஒன்றில் இருந்து குர்பானியைக் கொடுக்கும் வரை நகம், முடி போன்றவற்றை களையக் கூடாது.
கொடுப்பவர் எங்கிருந்தாலும் இதைத் தான் சட்டமாக இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது.

நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் குர்பானி கொடுப்பதற்கு நீங்கள் தீர்மானித்தால் இதுதான்

துபை தலைமை மர்கஸ்: பேச்சு பயிற்சி!



தேய்ரா: இறைவனது கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல தலைமை மர்கசில் வாராந்தோறும் செவ்வாய்கிழமைகளில் "பேச்சு பயிற்சி" வகுப்பு நடைப்பெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் 25.10.2011 அன்று துபை மண்டல அழைப்பாளர் சகோ.சாஜிதூர் ரஹ்மான் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இதில் பயிற்சி பெறக்கூடிய சகோதரர்கள் ஆர்வமூடன் பங்கேற்றனர். அல்ஹம்துலில்ல்லாஹ்!


வெள்ளி, 14 அக்டோபர், 2011

குர்பானியின் சட்டங்கள்




நாம் எந்த ஒரு வணக்கத்தைப் புரிந்தாலும் அதை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்தவாறு செய்ய வேண்டும். நாம் விரும்பியவாறு செய்தால் அந்த செயல் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியதைப் போல் குர்பானியின் சட்டங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஆனால் குர்பானி தொடர்பாக பல தவறான நம்பிக்கைகள் மக்களிடத்தில் நிலவுகின்றன. ஆகையால் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு குர்பானி தொடர்பான சட்டங்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. எல்லாப்புகழும் இறைவனுக்கே.

தலைப்பு எண்தலைப்பு
1குர்பானியின் பின்னணி
2குர்பானியின் நோக்கம்
3குர்பானியின் சிறப்பு
4யார்மீது கடமை?
5கடன் வாங்கி குர்பானி
6குர்பானி கொடுப்பவர் கடைபிடிக்க வேண்டியவை
7குர்பானிப் பிராணிகள்
8பிராணிகளின் தன்மைகள்
9ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணி
10பாலூட்டும் பிராணி
11குர்பானிப் பிராணியை பயன்படுத்தலாமா?
12கூட்டுக் குர்பானி
13எங்கே கொடுப்பது?
14அறுக்கும் முன் கவனிக்க வேண்டியவை 




தலைப்பு எண்தலைப்பு
15குடும்பத்தினர் ஆஜராக வேண்டுமா?
16கிப்லாவை முன்னோக்கித் தான் அறுக்க வேண்டுமா?
17பிராணியை அறுப்பதற்கு முன்பு கூற வேண்டியவை
18எப்போது அறுக்க வேண்டும்?
19எவ்வளவு நாட்களுக்குள் அறுத்துப் பலியிட வேண்டும்?
20பெண்கள் அறுக்கலாமா?
21எத்தனை பிராணிகள் கொடுக்க வேண்டும்?
22பங்கிடுதல்
23மாற்றப்பட்டச் சட்டம்
24பங்கில் அவசியம் சேர்க்கப்பட வேண்டியவர்கள்
25தோல்
26இரத்தம்
27இறந்துவிட்டவர்கள் சார்பாகக் குர்பானி
28அல்லாஹ் அல்லாதவர்களுக்குக் குர்பானிகொடுக்கலாமா?

இஸ்மாயீல் (அலை) அவர்களைத் தனக்காக அறுத்துப் பலியிட வேண்டும் என்று இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவில் அறிவித்தான்.
இப்ராஹீம் (அலை) தள்ளாத வயதில் இஸ்மாயில் (அலை) அவர்களைப் பெற்றெடுத்ததால் அதிகப் பாசம் அவர்களிடம் இருந்தது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியில் மகனை அறுக்க முற்பட்டார்கள்.. அப்போது ஷைத்தான் அவர்களுடைய மனதில் தீய எண்ணங்களை ஏற்படுத்தினான். ஆனால் இப்ராஹீம் (அலை) ஷைத்தானிற்குக் கட்டுப்படாமல் இறைக் கட்டளையை நிறைவேற்றத் துணிந்தார்கள்.

அவர்களின் இந்தத் தியாகத்தை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பலியிடுவதற்கு பதிலாக ஒரு பிராணியைப் பலியிடுமாறு கட்டளையிட்டான். இந்த விவரங்கள் திருக்குர்ஆனின் 37 வது அத்தியாயத்தில் 100 முதல் 111 வது வசனம் வரை கூறப்படுகிறது.

என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று இப்ராஹீம் கேட்டார்.) அவருக்கு சகிப்புத்தன்மை மிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார். என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார்.
இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம். இப்ராஹீமின் மீது ஸலாம் உண்டாகும்! நன்மை செய்வோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம். அவர் நம்பிக்கை கொண்ட நமது அடியார்களில் ஒருவர்.
அல்குர்ஆன் (37 : 100)
ந்த மாபெரும் தியாகத்திலிருந்து படிப்பினைகளை பெற வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் மாதத்தில் ஆடு, மாடு ஒட்டகங்களை அறுத்துப் பலியிடுமாறு நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

குர்பானியின் நோக்கத்தைப் புரியாத பலர் புகழுக்காக இந்த வணக்கத்தை நிறைவேற்றுகிறார்கள். ஒரு வருடம் கொடுத்து அடுத்த வருடம் கொடுக்காவிட்டால் மற்றவர்கள் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள். படைத்தவனின் திருப்தியை விட மனிதர்களின் திருப்திக்கே முன்னுரிமை தருகிறார்கள். நம்மிடம் இறைவன் எதை மிக முக்கியமாக எதிர்பார்க்கிறானோ அதில் தவறிழைத்து விடுகிறார்கள்.
அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் (22 : 37)

குர்பானியின் சிறப்புப் பற்றி வரும் பெரும்பாலான ஹதீஸ்கள் பலவீனமானவை. என்றாலும் துல்ஹஜ் மாத்தின் முதல் பத்து நாட்களில் செய்யும் நற்காரியங்களுக்கு தனிச்சிறப்பு இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(துல் ஹஜ்) பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் (அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும் தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத பேராளியைத் தவிர (அதாவது அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதானவரைத் தவிர) என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி (969)
குர்பானி கொடுப்பது முஸ்லிம்களின் வழிமுறையாக அல்லாஹ்வால் ஆக்கப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றுபவர் முஸ்லிம்களின் வழியில் நடந்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்னால் (பிராணியை) அறுக்கின்றாரோ அவர் தம் (சொந்த தேவைக்காகவே) அறுத்தவர் ஆவார். யார் தொழுகைக்குப் பின்னால் அறுக்கிறாரோ அவரது (குர்பானி) வழிபாடு பூர்த்தியாகிவிடும். மேலும் அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி (5546)
அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்காக நாம் தொழுகை நோன்பு தர்மம் போன்ற வணக்கங்களை அதிக ஆர்வத்துடன் செய்து வருகிறோம். அல்லாஹ்விடத்தில் நம்மை நெருக்கமாக்கி வைக்கும் இது போன்ற வணக்கங்களில் குர்பானியும் ஒன்றாகும். இதை நபி (ஸல்) அவர்கள் வழிபாடு என்று குறிப்பிடுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பெருநாளன்று நிகழ்த்திய உரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது நமது தொழும் திசையை (கிப்லாவை) முன்னோக்கி நமது குர்பானி வழிபாட்டைச் செய்கிறாரோ அவர் தொழுவதற்கு முன் குர்பானிப் பிராணியை அறுக்க வேண்டாம். என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)

நூல் : புகாரி (955)

குர்பானி கொடுப்பது வலியுறுத்திச் சொல்லப்பட்ட சுன்னத்தாகும். வசதியுள்ளவர்கள் அவசியம் இந்த வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பது போன்று கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள்.

ஈமான் பதிவாகும் எஃகு (Steel) உள்ளங்கள்

இந்த மாத (ஜுலை 2011) ஏகத்துவ தலையங்கத்தில் வெளியான ஆக்கத்தை சமுதாய நலன் கருதி வெளியிடுகிறோம்.

அல்லாஹ்வின் அருளால் தமிழகத்தில் தொடர் வளர்ச்சியைக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான். இதற்கு அடிப்படைக் காரணம், அது ஏகத்துவக் கொள்கையை உயிர் மூச்சாகக் கொண்டிருப்பது தான்.

இப்படிப்பட்ட இயக்கத்திலிருந்து ஒரு சிலர் விடுபடுவதும், விலகுவதும் உள்ளே இருக்கின்ற கொள்கைச் சகோதரர்களில் சிலரது உள்ளத்தில் ஒருவித விரக்தியையும் வியப்பையும் ஏற்படுத்துகின்றது. "இவர்களே இப்படிப் போய் விட்டார்களே! நமது நிலை என்ன?' என்று எண்ணத் தலைப்பட்டு விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஓர் அருமருந்தாக, அற்புத அரணாக இந்த வசனம் அமைந்திருக்கின்றது.

அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்பவர்களை, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர் நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்கள் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள். (அல்குர்ஆன் 58:22)

அல்லாஹ்வின் எதிரிகளை,

விரைவில் வர இருக்கிறது இஸ்லாமியர்களுக்கான செல்போன்

இந்த நவீன காலத்தில் ஒவ்வரு நாளும் ஒவ்வரு கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போதைய உலக நடப்புபடி பெரும்பாலான மக்கள் செல்போன் தான் அதிகம் உபயோகித்து வருகிறார்கள். புதிய வசதிகள், புதிய மாடல்களில் செல்போன்களின் உற்பத்திகளும் நாளுக்கு நாள் பெருகி கொண்டுதான் வருகிறது. இவ்வாறு தற்போது ஐ டெல் நிறுவனம் இஸ்லாமியர்களுக்கான செல்போன் ஒன்றை விரைவில் அறிமுகபடுத்த இருக்கிறது.

ஐ டெல் நிறுவனம் அறிமுகபடுத்த இருக்கும் இந்த ஐ டெல்-786 என்ற 2 சிம் பொருந்த கூடிய மாடல் செல்போனில் இஸ்லாமியர்களுக்கு 5 வேலை தொழுகையின் நேரத்தை கொண்டு அலாரம் அடிக்க கூடிய வசதியும், இஸ்லாமியர்களுக்காக தயாரிக்கப்பட்ட காலேண்டர் மற்றும் சாக்கட் காலேண்டர் வசதிகளும், 1.3 பிக்சஸ் கேமரா, சிறப்பான விடியோ ரேக்கார்டிங் வசதிகள், புழு டூத் வசதிகள், பொழுது போக்கு அம்சம் கொண்ட mp3 ,mp4 ,மிடியா பிளேயர் வசதிகளையும் கொண்டது,மேலும் இந்த செல்போனில் பயன்பாட்டிற்கு ஆங்கிலம்,ஹிந்தி,உருது,இந்தோனேசியா,துருக்கி, பெர்ஷியன் போன்ற 11 மொழிகளை கொண்டுள்ளது. மேலும் இந்த செல்போன் மூலம் வருகிற வருவாய் மூலம் 2.5 சதவீதம் பங்கு ஏழை இஸ்லாமிய குழந்தைகளுக்கு

இல்லாத பெயரில் பொல்லாத பித்அத்கள்

             அன்னையர் தினம், முதியோர் தினம், ஆசிரியர் தினம், என்று பல விதமான தினங்களை இன்று மக்கள் கொண்டாடி வருகிறார்கள். அந்த தொடரில் நமக்கும் காலத்திற்குக் காலம் ஏதாவது சில தினங்களை உருவாக்க வேண்டும் என்று நினைத்த இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த மத குருமார்கள் சிலர், நபியவர்களின் பிறந்த தினம், நபியவர்கள் மிஃராஜ் சென்ற தினம், என்று பல வகையான மார்க்கத்தில் இல்லாத கொண்டாட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு அவற்றையும் மார்க்கம் என்ற பெயரில் காலா காலமாக அரங்கேற்றி வருகிறார்கள்.

அந்த வகையில் ஷஃபான் மாதம் 15ம் நாளை கபுராளிகள் தினம் (பராஅத் இரவு) என்று உருவாக்கி அதனை வெகு விமர்சையாக முஸ்லீம்களில் சிலர் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த கபுராளிகள் தினம் என்பது மார்க்கத்தில் உள்ளதா? நபியவர்கள் இதனை காட்டித் தந்தார்களா? கபுராளிகள் தினம் கொண்டாடுவதினால் நமக்கு ஏதும் நன்மை உண்டா? மரணித்தவர்களுக்கு ஏதும் நன்மை ஏற்படுமா என்பதையெல்லாம் மிகத் தெளிவாக விளக்குவதற்காகவே இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.

நபியவர்கள் காட்டித்தராதவை மார்க்கமாக முடியாது.

இஸ்லாமிய மார்க்கத்தில் எதையாவது ஒன்றை இபாதத்தாக (வணக்கமாக) செய்ய வேண்டும் என்றால் அந்த வணக்கம் அல்லாஹ்வினாலும் அவனுடைய தூதரினாலும் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். எந்த வணக்கத்திற்கு இந்த அங்கீகாரம் இல்லையோ அந்த வணக்கம் இஸ்லாத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நிராகரிக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம் நிராகரிக்கப்படும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2697

நமது அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
நூல்: முஸ்லிம் 3243

ஆக நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

கொள்ளுமேடு ஊராட்சி தேர்தல் ஒரு பார்வை!!

ஊராட்சி தேர்தல் அறிவிப்பு வந்தவுடனே நமதூரில் ஆர்ப்பாட்டங்களும் அலும்பல்களும் ஆரம்பம்மாகிவிட்டது.முன்பு எப்பொழுதும் இல்லாத வகையில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.பரம்பரை அரசியல்வாதிகள் கூட தோற்றுவிடும் அளவிற்கு கோசங்களும் தோற்றங்களும் நமதூரில் தினம் தினம் அரங்கேரி வருகிறது.இப்போது நமதூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை பற்றி பார்ப்போம்.

அ.சாதுல்லாஹ் (கத்தரிகோல் சின்னம் ):
           மிகுந்த அரசியல் அனுபவம் நிறைந்த தலைவர், ஊராட்சி மன்ற துணை தலைவராக இருந்து அப்போதைய தலைவர் தவறு செய்த போதெல்லாம் வார்ட் உறுப்பினர் அப்துர்ரஹ்மான் அவர்களோடு இணைந்து ஊ.ம.தலைவரின் தவறுகளை மக்கள் மத்தியில் அம்பலபடுத்தினார் இவர் அண்ணாதிமுக முதல் விடுதலை சிறுத்தைவரை பல கட்சிகளில் இருந்துயிருக்கிறார்.
எந்த ஜாமத்தையும் சாராமல் சுயேச்சையாக போட்டியிடுகிறார். மதினா பள்ளி ஜமாஅத் மற்றும் பெரிய பள்ளி ஜமாத்தின் ஓட்டு வங்கியை பெரும் அளவில் பிரித்துவிடுகிறார் மேலும் வெற்றி வாய்பை நிர்னயிக்கும் ஓட்டுகளாக கருதப்படும் தவ்ஹீத் குடும்பங்களின் ஓட்டுகளை முழுமையாக பெற்றுவிடுவார் என்றே சொல்லபடுகிறது.குடிசை கடைகளை கட்டிடங்களாக மாற்றி கடைத் தெருவை அழகுப்படுத்துவது சிறந்த குடி நீர் ஆகியவை இவரின் வாக்குறுதிகலாகும்.

த.சிராஜுத்தீன் (கை உருளை சின்னம்) :  
          துடிப்பான இளைஞர்,எப்படியும் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்போடு செயல்படுகிறார்.பெரிய பள்ளிவாசல் ஆதரவோடும் மதினா பள்ளி ஜமாத்தின் கனிசமான வாக்குகளை நம்பியும் களத்தில் இறங்கியுள்ளார்.த மு மு கவில் கிளை செயலாளராக இருந்த இவர் தற்போது அவர்களுக்கு எதிராக முழுவீச்சில் செயல்பட்டுவருகிறார்.தேமுதிக ஆதரவு இவருக்கு கூடுதல் பலம்,தேமுதிக வில் உள்ளவர்கள் அனைவரும் முன்னால் தமுமுக தொண்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 24 மணி நேரமும் தண்ணீர் கிடைக்க வசதி செய்து தருவேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

மை.சபிக்குர்ரஹ்மான் (பூட்டு சாவி சின்னம்):
     நமதூரில் எலக்ட்ரிசன் வேலை செய்யும் துடிப்பான இளைஞர்,மம கட்சியின் ஆதரவோடு களத்தில் உள்ளார்.ஊழலற்ற ஊராட்சி என்ற கோசத்தோடு செயல்படுகிறார்.இவரின் இந்த கோசம் மக்கள் மத்தியில் கடந்த பத்து ஆண்டுகளில் ஏதேனும் ஊழல் நடந்துதிருக்குமோ என்று பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவர் வெற்றிபெறும் பட்சத்தில் ஊழல் செய்தவர்களையும் ஊழலையும் வெளிக்கொண்டுவருவார் என்று நம்பப்படுகிறது.மதரசா கட்டித் தருவோம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

இஸ்லாதின் பார்வையில் பதவி:
பதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம்.பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து ,நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில்

சட்டமன்றத்தில் ஒரு ஜனாஸா!

(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது” என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு. Al Quran: 3:178

தமிழ்நாட்டில் இந்த ஆண்டின் மொத்த வருவாய் 85,685 கோடி ரூபாய்! இதில் ஐந்தில் ஒரு பகுதி மது விற்பனை மற்றும் அதற்காக விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கின்றது.
இப்படி ஒரு வருவாயை ஈட்டுகின்ற மாநில அரசு மதுக்கடைகளை மூடுகின்ற அளவுக்கு முன்வருமா? ஒருபோதும் வராது.
தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமலாகுமா?என்ற கேள்விக்கு சட்டமன்றத்தில் ஆயத்தீர்வை மற்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அளித்த பதில் வருமாறு:

டாஸ்மாக் மூலம் அரசின் கருவூலத்திற்கு 14 ஆயிரம் கோடி வருகின்றது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் இந்த வருவாய் சமூக விரோதிகளுக்கும் தனியார் சாராய சாம்ராஜ்யத்திற்கும் சென்று விடும்.
இந்தச் சில்லறை மதுக்கடைகள் ஈட்டுகின்ற வருவாய்க்கு ஈடுகட்டுகின்ற வகையில் மத்திய அரசு நிதி ஒதுக்கினால் மாநில அரசு அவற்றை மூடுவதற்குத் தயார்.

சுற்றியிருக்கும் அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லாத போது தமிழகத்தில் மட்டும் அதை அமல்படுத்துவது அசாத்தியம்.
ஆனால் மதுவின் தீமைகளை விளக்கும் முகாம்களையும் மறுவாழ்வு மையங்களையும் அமைத்து மக்களை மதுவின் பிடியிலிருந்து காப்பாற்றும் முயற்சிகளை அரசு மேற்கொள்கின்றது.
மதுவின் தீமைகளிலிருந்து மக்களைக் காப்பதற்காக சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், திருவள்ளுவர் தினம், காந்தி பிறந்த தினம், மஹாவீர் ஜெயந்தி, வள்ளலார் தினாம், முஹம்மது நபி பிறந்த தினம் ஆகிய தினங்களில் டாஸ்மாக்கிற்கு அரசு விடுமுறை அளிக்க உள்ளது.
இதுதான் மதுவிலக்கு (?) துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பதில் ஆகும்.

திங்கள், 3 அக்டோபர், 2011

எங்கே செல்லும் இந்தப் பாதை???

'அல்லாஹ் ஒருவன்' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.112:1,2,3,4

அம்மனா ? அவ்லியாவா ?

அம்மன் கோயில் கட்டி வழிப்படும் முஸ்லீம் தம்பதிகள் என்ற தலைப்பிட்டு சமீபத்தில் சில ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி இருந்தன.

சிதம்பரம் அருகில் கிள்ளை என்ற கிராமத்தில் தான் மேல்படி சம்பவம் நடந்துள்ளது அம்மனுக்கு கோயில் கட்டி அதற்கு ''' மஹா மாரியம்மன் ஆலயம்'' என்றுப் பெயரிட்டு தீப ஆராதனை ஏற்றி வேத மந்திரங்களை புர்கா அணிந்த பஷீரா என்ற முஸ்லிம் பெண்ணே ஓதி காலை, மாலை பூஜை நடத்தி வருவதாகவும் அதற்கு அவரது கணவர் ஜின்னா முழு ஆதரவு அளித்து வருவதாகவும் அதை ஏராளமான பக்த, பக்தையர்கள் அம்மனை தரிசித்துவிட்டு செல்கின்றனர் என்று தொடருகிறது அந்த செய்தி.

உருவ வழிப்பாட்டை ஒழித்துக்கட்டிய இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்து வளர்ந்த நீங்கள் அம்மனுக்கு கோயில் கட்டி வழிப்பாடு செய்வதற்கு எது காரணமாக இருந்தது என்று நிருபர் கேட்க? பத்து வருடங்களுக்கு முன் மாரியாத்தா எனது கணவில் தோன்றி தனக்கு கோயில் கட்டி வழிபடச் சொன்னதாக மிகவும் பக்தி பரவசத்துடன் பதில் கூறினாராம் பஷீரா...

பஷீராவின் கணவில் அம்மன் தோன்றியது உண்மை என்றால் பஷீரா வாழும் காலத்தில் அம்மனை பலத் தடவை நேரில் சந்தித்துப் பேசி இருக்க வேண்டும். அம்மனை இவர் நேரில் பார்த்ததில்லை அம்மன் இன்ன வடிவில்தான் இருப்பார் என்றும் இவருக்குத் தெரியாது இவரல்லாமல் அம்மனுக்கு கோவில் கட்டி அன்றிலிருந்து இன்றுவரை வழிப்படும் ஹிந்துக்களிலும் எவரும் அம்மனை நேரில் பார்த்தவர்கள் கிடையாது.

கிள்ளையில் அல்லது பக்கத்து ஊரில் உள்ள அம்மன் சிலையை பஷீரா அடிக்கடிப் பார்த்திருக்கலாம். அம்மனின் கற்சிலை பஷீராவின் கணவில் காட்சி அளித்திருக்கலாம். பன்றிகள் அதிகம் மேயும் வழியாக போய் வரும் நிலை முஸ்லீம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவரது கணவில் பன்றிகள் காட்சி அளிக்கவேச் செய்யும் பன்றிகளை கணவில் கண்டதற்காக அதை அவர் ஹலாலாக்கிக் கொள்ள முடியுமா ?

இணை வைப்பாளர் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் இணைவைப்பு பிரச்சாரம் சமீப காலமாக சூடு பிடித்திருப்பதால் அது பஷீராவின் மனதில் மாற்றத்தை எற்படுத்தி இருக்கலாம். பஷீரா ஜின்னா தம்பதிகள் வசிக்கும் பகுதியில் ஹிந்துக்கள் அதிகம் என்பதால் அங்கே தர்ஹா கட்டினால் கல்லா (உண்டியல்) நிறையாது என்றுக் கருதி கோயிலைக்கட்டி வசூலை முடுக்கி விட்டிருக்கலாம்.

வியாழன், 29 செப்டம்பர், 2011

புதன், 31 ஆகஸ்ட், 2011

ந‌ம‌தூர் கொள்ளுமேட்டில் இந்த‌ வ‌ருட‌ பித்ரா வ‌சூல் 26,300 ரூபாய்

ந‌ம‌தூர் கொள்ளுமேட்டில், த‌வ்ஹீத் கிளையில் இந்த‌ வ‌ருட் பித்ரா வ‌சூல் 26,300 ரூபாய். இது ந‌ம‌து இறைத்தூத‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் ந‌மக்கு காட்டித் த‌ந்த‌ இறை வ‌ழியின் அடிப்ப‌டையில் ஏழை எளிய‌ ம‌க்க‌ளுக்கு வினியோகிக்க‌ப் ப‌ட்ட‌து.இந்த‌ அடிப்படையில் நம‌தூரில் வ‌சிக்கும் 100 ஏழை குடும்ப‌ங்க‌ளுக்கு தலா 260 ரூபாய் பொருமான‌ 13 பொருட்க‌ள் (அரிசி, கோதுமை, ம‌சாலா பொருட்க‌ள், கொழி இறைச்சி 1/2 கிலோ, முந்திரி, திராட்சை,எண்ணெய், நெய் ம‌ற்றும் ப‌ருப்பு வ‌கைக‌ள்) வினியோகிக்க‌ப்ப‌ட்ட‌து.

கொள்ளுமேடு TNTJ நிர்வாகிக‌ள் முன்னிலையில் இந்த‌ பொருட்க‌ள் பொது ம‌க்க‌ளுக்கு வினியோகிக்க‌ப்ப‌ட்ட‌து.

செய்தி : அபூ த‌ப்ஹீம்

கொள்ளுமேடு

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

நமதூர் தவ்ஹீத் மதரசா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி

 அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நம்முடைய தவ்ஹீத் மதரசாவின் முதலாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி ௦01.08.2011 அன்று அசர் தொழுகை முதல இஷா தொழுகை வரை இரண்டு அமர்வுகளாக நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சி முஹம்மது தாரிப் அவர்களின் முன்னிலையில் இமாம் அவர்களின் கிராத்துடன் தொடங்கியது. தேனீ முபாரக் அவர்கள் கல்வியின் சிறப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.கடலூர் மாவட்ட தலைவர் ஜாகிர்ஹுசைன்  அவர்களும் செயலாளர் தாஜுத்தின் அவர்களும் சிறப்பு அழைபாலர்கலாக கலந்துக்கொண்டனர்.  

முதல் அமர்வில் முபாரக் அவர்களின் பயானும் இரண்டாம் அமர்வு மக்ரிப் தொழுகைக்கு பிறகு மதரசா மாணவ மாணவிகளின் பயான் மற்றும் கிராத் ஓதும் போட்டியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி பெரும் அளவில் மக்களிடையே பேசப்பட்டது என்றால் அது அல்லாஹ் நமக்கு அளித்த மிகப் பெரிய கண்ணியம் என்றேதான் சொல்லவேண்டும்.
செய்தி:அபூ தஃப்ஹீம் 

வெள்ளி, 8 ஜூலை, 2011

கொள்ளுமேடு த‌வ்ஹீத் ம‌ர்க‌ஸில் க‌ல்வி உத‌விக்காக‌ இந்த‌ வார‌ ஜும்மா வ‌சூல்

த‌மிழ்நாடு த‌வ்ஹீத் ஜமாத்தின் வேண்டுகோளுக்கு இண‌ங்க‌ க‌ல்வி உத‌வித்தொகைக்காக‌ கொள்ளுமேடு த‌வ்ஹீத் ம‌ர்க‌ஸில் இன்று ஜும்மா உறைக்கு பின்பு வ‌சூல் செய்ய‌ப்ப‌ட்ட‌து. அல்லாஹ்வின் உத‌வியால் ரூ.1500  வ‌சூல் ஆன‌து அதை த‌லைமைக்கு அனுப்பி வைக்க‌ப்ப‌ட்ட‌து.

இன்று கொள்ளுமேடு த‌வ்ஹீத் ம‌ர்க‌ஸில் மேல்பட்ட‌ம்பாக்க‌ம் ம‌வ்ல‌வி திவான் பிர்த‌வ்ஸி அவ‌ர்க‌ள் இணைவைப்பு ஒரு பெரும் பாவ‌ம் என்ற் த‌லைப்பில் உறையாற்றினார்.

திங்கள், 4 ஜூலை, 2011

தமிழகத்தில் ஷஃபான் பிறை ஆரம்பம்


கடந்த ஜூலை 2 ஆம் நாள் சனிக்கிழமை அன்று மாலை ரஜப் மாதம் 29ஆம் நாள் கழிந்து 30 நாள் இரவில் மஃரிபிற்கு பிறகு தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.

எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபி வழியின் அடிப்படையில் ரஜப் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, ஜூலை 3 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிபிலிருந்து ஷாஃபான் மாதம் பிறை 1 ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றோம்

செவ்வாய், 28 ஜூன், 2011

தவ்ஹீத் பள்ளி ஜும்ஆ உரை- "மிஹ்ராஜ் தரும் படிப்பினை "

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் 24.06.2011 வெள்ளிக்கிழமை அன்று இலங்கை அப்துல் ஹக்கீம் அவர்கள் "மிஹ்ராஜ் தரும் படிப்பினை " என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தன.
மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.

மிஃராஜ் ஓர் அற்புதம்

மஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே!

மமகவிற்கு மரண அடி– சென்னை ஆர்ப்பாட்டப் புகைப்படங்கள்!

கடந்த 14 ஆண்டுகளாக இயங்கி வந்த உணர்வு வார இதழின் அலுவலகம் மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவருடைய வகையறாக்களால் ஆக்கிரமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு அது காவல்துறையால் முறியடிக்கப்பட்டது.

உணர்வு பத்திரிகைக்கு சொந்தமான அலுவலகத்தை தங்களின் அரசியல் பலத்தைக் கொண்டு ஆக்கிரமிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தி இன்று (28/06/2011) சென்னை பார்க்டவுன் மொமோரியல் ஹால் அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், பொதுமக்களும் திரளாகப் பங்கேற்று மமகவிற்கு எதிராக தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மது அல்தாபி கண்டன உரையாற்றினார். மாநிலத் தலைவர் பி.ஜே உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்

செவ்வாய், 7 ஜூன், 2011

சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்

மமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா? அல்லது அரசுக்குத் தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், 09/06/2011 வியாழக்கிழமை அன்று தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதற்காக மக்களை பெருந்திரளாக திரட்டும் பணியையும் முடுக்கியும் விட்டது.

தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்களைக் கண்டு சுறுசுறுப்படைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து ”உணர்வு அலுவலகம் உங்களுடையது தான், 9 ஆம் தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவகம் ஒப்படைக்கப்படும்” என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர்.

அவர்களின் வாக்குறுதி நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலும், அதிகாரிகள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாலும் இந்த சட்டசபை முற்றுகைப் போராட்டம் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டள்ளது.

ஞாயிறு, 5 ஜூன், 2011

தவ்ஹீத் பள்ளி ஜும்ஆ உரை -"பெற்றோரை பேணுவோம்"

 கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் 03.06.2011அன்று வெள்ளிக்கிழமை பென்னடம் யாசீன் அவர்கள் "பெற்றோரை பேணுவோம் " என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தன

ஒருவர் நபி அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் தமது பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்னவென்று கேட்டார். அதற்கு நபி "அவ்விருவரும்தான் உமக்கு சுவர்க்கமும் நரகமும் ஆவார்கள். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: இப்னு மாஜ்ஜா

ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு நபி அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் அவர்கள் இரண்டாவது முறையும் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் அவர்கள் உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும் என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லிம்

பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! அல்குர்ஆன் 17:23

பெற்றோரை பேணுதலும் ஜிஹாத்

சனி, 9 ஏப்ரல், 2011

தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு!

கடலூர்:பண்ருட்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வது என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்தது.

மாவட்டத் தலைவர் அப்துல் ரஜாக் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். நெல்லிக்குப்பம் நகர தலைவர் அப்ரோஸ்தீன், துணைத் தலைவர் அனீஸ்ரஹ்மான், பொருளாளர் சவுக்கத் அலி, மேல்பட்டாம்பாக்கம் செயலர் முகமதுயூனிஸ், பொருளாளர் அப்துல்கபூர் உட்பட பலர் பங்கேற்றனர்.

பண்ருட்டி தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் சபா ராஜேந்திரனை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு அவரை வெற்றி பெறச் செய்வது எனவும், 9 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றபட்டன.

நன்றி: தினமலர், புகைப்படம்: டி.என்.டிஜே.pno

முஸ்லிம்களை அடிக்க விளக்கு பிடித்த மம கட்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திமுக கூட்டணியை ஆதரித்து கோவை மாவட்டத்தின் சார்பாக கரும்புக்கடை சாரமேடு பகுதியில் நேற்று (08-04-2011) இரவு மாநில பொதுச்செயலாளர் ரஹம்த்துல்லா தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா திமுக கூட்டணியை TNTJ ஆதரிப்பது ஏன் என்ற தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். சுமார் 9.45 மணியளவில் திடீரென அந்தக் கூட்டத்திற்குள் உருட்டுக்கட்டைகள் மற்றும் கற்களுடன் புகுந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த பெரிய ஸ்பீக்கரை கூட்டத்தினர் மீது பிடித்து தள்ள கூட்டத்தினரிடையேபரபரப்பு ஏற்பட்டது.

என்னவென்று சுதாரிப்பதற்குள் SDPI வேட்பாளர் உமர் தலைமையில் அங்கு வந்த மமகவின் பொருப்பாளர்கள் அங்கிருந்த விளக்குகளை அடித்து நொறுக்க ஆரம்பித்தார்கள்.

இந்த நேரத்தில் அதிமுக குண்டர்கள் அங்கே ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரின் வயரைப் பிடிங்கி விட அந்த இடமே இருளில் மூழ்கியது.
மேடைக்கு முன்னாள் திரண்டிருந்த பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் பொருட்டு இந்த கலவர சூழ்நிலையிலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர்கள் பெண்களைச் சுற்றி அரணாக நிற்க அவர்கள் மீது பிளாஸ்டிக் சேர்களை தூக்கி அடித்து விட்டு பெண்கள் கூட்டத்திற்குள் நுழைந்த அதிமுக குண்டர்கள் அங்கிருந்த இஸ்லாமிய பெண்களை வெளியே சொல்ல முடியாத கொச்சை வார்த்தைகளால் திட்டி அவர்கள் மீதும் சேர்களைத் தூக்கி அடிக்க பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் அங்குமிங்கும் ஓட ஆரம்பித்தனர்.

ஆனால் மாற்றானின் இந்த வேலைகளையெல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாத மமக மற்றும் எஸ்டிபிஐ ரவுடிகள் அவனை அடி, இவனை அடி ஒவ்வொருவர் மீதும் செல்போனின் விளக்கைப் பிடித்து காட்ட அவர்கள் காட்டிய ஒவ்வொருவர் மீதும் அதிமுக குண்டர்கள் வெறித்தனமான தாக்குதல்களை தொடுக்க ஆரம்பித்தனர்.

மேடையில் உள்ளவன்களையும் அடியுங்கள்” என மமகவினருக்கு அதிமுக குண்டர்கள் உத்தரவிட அங்கே திரண்டிருந்த மமக SDPI ரவுடிகள் மேடையை நோக்கி சராமாரியாக கற்களை வீச ஆரம்பிக்க, மேடையின் மீது இருந்த பொதுச்செயலாளர் ரஹ்மத்துல்லா உள்ளிட்ட பல நிர்வாகிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டது

ஆனால் என்ன நிகழ்ந்தாலும் மேடையை விட்டு இறங்க மாட்டோம் என உறுதியாக நின்ற நிர்வாகிகள் இரத்தம் சொட்ட சொட்ட மேடையிலேயே நின்றனர்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளி ஜும்ஆ உரை- "ஜனாசாவின் சட்டங்கள்"

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் 08.04.2011அன்று வெள்ளிக்கிழமை ஆயங்குடி அபூ பக்கர் அவர்கள் "ஜனாசாவின் சட்டங்கள்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தன.



 மாறி மாறி வரக்கூடிய திருநாள்: வெள்ளிக்கிழமையின் சிறப்புக்களில் ஒன்றுதான் இந்நாளில் தனித்து நோன்பு நேற்பது  தடுக்கப்பட்டுள்ளது, யூதர்களுக்கும், கிறிஸதவர்களுக்கும் மாற்றமாக நடப்பதற்காக முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட நாள் வெள்ளிக்கிழமை, குறிப்பாக ஒரு அடியான் இந்த நாளில் தொழுவதிலும், பிரார்த்திப்பதிலும், இவை அல்லாத வணக்கங்களிலும் ஈடுபட்டு இறைவனை வழிப்பட வேண்டும்.
 பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரு நேரம் உள்ள நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“வெள்ளிக்கிழமையில் ஒரு நேரம் இருக்கின்றது; அதில் எவரொருவர் இறைவனை தொழுது அவனிடம் பிரார்த்திக்கின்றாரோ நிச்சயமாக அல்லாஹ் அவனுடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வான் என்று கூறிவிட்டு, அது செற்பமான நேரம் என்று தனது கையினால் சுட்டிக்காட்டினார்கள்.” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
 மறுமை நாள்  நிகழக்கூடிய நாள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வெள்ளிக்கிழமை நாளிலே மறுமை நிகழும்” (ஆதாரம்: முஸ்லிம்)
செய்தி: அபுல் மல்ஹர்

வியாழன், 7 ஏப்ரல், 2011

ஒரு கடவுள் மரணத்தை நோக்கி!

என்னப்பா இது? தலைப்பே தவறாக இருக்கிறதே! என்று எண்ணி முழுவதுமாக படிக்காமல் விட்டு விடாதீர்கள் முழுவதையும் படித்த பின்பு, உங்களுக்கு சரி என்று பட்டால் இதை பிறருக்கும் அனுப்புங்கள்.

ஆந்திர மா நில புட்டர்பத்தி சாய்பாபவை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் இந்துக்களில் பல பேர் நம்புகின்றனர். படிக்காத பாமர மக்கள் முதல் படித்த பட்டதாரி வரை, ஏழை முதல் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் பணக்காரன் வரை பல பேர் இவருடைய பக்தர்களாக இருக்கிறார்கள்.

தன்னுடைய பேச்சாற்றல் மூலமாகவும், தந்திர வித்தைகள் மூலமாகவும் பல மக்களை கவர்ந்து தன்னை ஒரு மிகப்பெரிய அவதாரமாக ஆக்கிக்கொண்டவர்தான் இந்த புட்டர்பத்தி சாய்பாபா! சமீபத்தில் தொலைகாட்சியிலும், நாளிதழ்களிலும் ஒரு பரவலான் செய்தி வந்து கொண்டிருக்கிறது. அதுதான் சாய்பாபாவின் உடல் நிலைப் பற்றி.

சாய்பாபாவிற்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவும், அவருக்கு செயற்கை சுவாசக் கருவி (ஃபேஸ் மேக்கர்) பொருத்தப்படிருப்பதாகவும், நாளுக்கு நாள் அவருடைய உடல் நிலை மோசமாகி வருவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த கட்டுரையை படிக்கக் கூடியவர்கள் யாராவது இவரை கடவுள் என்றோ, கடவுளின் அவதாரம் என்றோ நம்புபவர்களாக இருந்தால் பொறுமையாக இந்த கட்டுரையை படிக்கவும். அதன் நன்றாக அமர்ந்து குறைந்தது 5 நிமிடமாவது சிந்தியுங்கள், நிச்சயமாக சத்தியம் உங்களை வந்தடையும்.

திங்கள், 4 ஏப்ரல், 2011

பிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்வோம்

நம்மில் சிலர் எதற்கெடுத்தாலும் மற்றவரிடம் உதவி கேட்பதும்,ஒரு தேவை என்றால் மாற்று வழியை யோசிக்காமல் உடனடியாக அடுத்தவரிடம் யாசிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.இப்படிப்பட்டவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.

முகீரா இப்னு ஷுஅபா(ரலி)யின் எழுத்தர் (வர்ராது) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட ஒன்றை எனக்கு எழுதுங்கள்" என முஆவியா(ரலி) முகீரா(ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு முகீரா(ரலி) 'நிச்சயமாக அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான்; இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார் (என ஆதாரமின்றிப் பேசுவது). பொருள்களை வீணாக்குவதும் அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதும்!" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என பதில் எழுதினார்.

புஹாரி 1477

யாசிக்காதவர்களின் சிறப்பு:
தங்கள் மீது மற்றவர்களுக்கு அனுதாபம் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் அந்த அனுதாபத்தை வைத்து நிறைய யாசிக்கலாம் என்பதற்காகவே தங்களுடைய உடைகளை கிழித்துக் கொண்டும் தங்களையே வருத்திக் கொண்டும் அலங்கோலமான நிலையில் இருப்பவர்களை நீங்கள் பார்க்கலாம்.

இவர்களை போன்றவர்கள் ஒரு புறம் இருக்க,மறுபுறம் தான் ஏழை என்பதை மறைத்து தன் மீது எவரும் அனுதாபம் கொள்ளக் கூடாது என்பதற்காகவும் தன் சுய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் வெளியில் பார்ப்பவர்களுக்கு தான் ஏழை என்று காட்டிக் கொள்ளாமலும் யாரிடமும் யாசிக்காமலும் அல்லாஹ்விடம் மட்டும் பிரார்த்து உதவி கேட்பவர்களை அல்லாஹ் சிறப்பித்துக் கூறுகிறான்.இவர்களையே தேர்ந்தெடுத்து நாம் உதவி செய்ய வேண்டும் என்பதாகவும் அல்லாஹ் தன் திருமறையிலே குறிப்பிடுகிறான்.


(பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். (அல்குரான் 2:273)

செவ்வாய், 29 மார்ச், 2011

தயவு செய்து சிந்தியுங்கள்!

தொகுப்பு: Habiburrahman
அஸ்ஸலாமு அலைக்கும்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்’தின் தேர்தல் ஆதரவு நிலையை தொடர்ந்து பல்வேறு கேள்விகளை முன் வைக்கும் நம் சகோதரர்கள் அனைவரும் இந்த மடலை ஒரு முறையேனும் முழுதாக படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாமெல்லாம் முதன் முதலில் ஓர் அடிப்படையை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

தி.மு.க வாக இருந்தாலும் அது அ.தி.மு.க வாக இருந்தாலும் ரெண்டுமே இஸ்லாமிய சமுதாயத்திற்கு பாதகங்களைத்தான் அதிகம் செய்திருக்கின்றன என்பதை யாராலும் மறுக்க இயலாது.

அரசியல் என்றாலே அரசியல்வாதிகள் என்றாலே ஊழல், அவரவர்களுக்கு சொத்து சேர்த்துக்கொள்ளுதல், அடக்குமுறைகள், லஞ்சம், சிறுபான்மை சமுதாயத்தை நசுக்குதல்... இவையெல்லாம் அவர்களோடு ஒட்டி பிறந்த ரெட்டை குழந்தைகள். இதில் அவர்களுக்குள் யாருக்கும் விதிவிலக்கில்லை.

இந்த நாட்டில் சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தில் வாழும் நாம் இந்த அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய போகிறேன் என கிளம்பினால், முழுநேர அரசியலில் ஈடுபட்டால் - முஸ்லிம் அல்லாத மற்ற மற்ற சமுதாயத்தவர்களின் ஆதரவையும் பெற்றால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதற்காக வளைந்து கொடுக்க ஆரம்பித்து; அனைத்து விழயங்களிலும் வளைந்துகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு; இறுதியில் படைத்த இறைவனுக்கு இணைவைக்கும் பகிரங்க வழிகேட்டு காரியங்களும் நம் கண் முன்னே நடக்கும்போது அதை தடுக்க திராணியற்றவர்களாக மாறி,இறுதியில் அரசியல் சாக்கடையில் விழுந்த பன்றிகளாக உருவெடுப்போம்,தள்ளப்படுவோம். நமது ஒரே உயர் நோக்கமான மறுமை வாழ்கையை பாழாக்கி கொள்வோம். மரணத்திற்குப்பின் நிரந்தர நரகத்தில் தள்ளப்படுவோம்.

சனி, 26 மார்ச், 2011

மூன்று முறை பேசியும் முஸ்லிம்களைப் புறக்கணித்த அதிமுக

வரும் சட்டமன்றத் தேர்தலில் முஸ்லிம்கள் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை ( 26.03.11 ) சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் மாநில மேலாண்மைக்குழுத் தலைவர் ஷம்சுல்லுஹா தலைமையில் நடைபெற்றது.

முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரித்துத் தருவதாக தேர்தல் அறிக்கையில் அதிமுக வாக்களித்தால் அதிமுக கூட்டணியை ஆதரிப்பது என்று சேலத்தில் நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் அதிமுக சார்பில் அதன் மூத்த தலைவர்கள் ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொன்னையன், அன்வர் ராஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகிய முக்கிய தலைவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு மூன்று தடவை நேரில் வந்து ஆதரவு கேட்டனர். தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிக்க உறுதியளிப்போம் என்று சொன்னால் தவிர நாங்கள் ஆதரிக்க முடியாது என்று நாம் திட்டவட்டமாகச் சொன்னோம். இதன் பின்னர் பல தடவை பேச்சு வார்த்தை நடத்திய பின் தேர்தல் அறிக்கையில் சொல்வதாகவும் அதற்கான வாசகங்கள் எப்படி அமைய வேண்டும் என்று நம்மிடம் கேட்ட போது அந்த வாசகத்தை நாம் எழுதிக் கொடுத்தோம். கட்டாயம் தேர்தல் அறிக்கையில் சொல்வோம் என்று அவர்கள் உறுதி மொழி அளித்தாலும் தேர்தல் அறிக்கையைப் பார்க்காமல் நாங்கள் முடிவு சொல்ல முடியாது என்று கூறினோம்.

இதன் காரணமாகவே அதிமுக வின் தேர்தல் அறிக்கை வரும் வரை யாருக்கு ஆதரவு என்னும் முடிவை எடுக்காமல் தள்ளி வைத்தோம்.

ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீட்டை அதிகப்படுத்தித் தருவதாக ஒரு வார்த்தையும் இல்லை.

ஆனால் திமுக வின் தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அதிகரிப்பது பற்றி கூறப்பட்ட பின்பும் திமுக வின் தேர்தல் அறிக்கையை வரிக்கு வரி காப்பியடித்த ஜெயலலிதாவுக்கு முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்த பாராவை மட்டும் காப்பியடிக்கக் கூட மனமில்லை.

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளி ஜும்ஆ உரை- "மறுமை சிந்தனைகள்"

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளியில் 24.03.2011அன்று வெள்ளிக்கிழமை சிகாபுத்தீன் அவர்கள் "மறுமை சிந்தனைகள்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரையாற்றினார். ஜும்ஆ உரைக்கு பின் நடைபெற்ற தொழுகையில் ஏராளமான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தன.



தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தையும் கொடுங்கள்! ருகூவு செய் வோருடன் ருகூவு செய்யுங்கள் (அல் குர்ஆன் 2.43)
அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்; மக்களிடம் அழகானதையே பேச வேண்டும்; தொழுகையை நிலை நாட்ட வேண்டும்; ஸகாத்தையும் கொடுக்க வேண்டும்' என்று இஸ்ராயீலின் மக்களிடம் நாம் உறுதி மொழி எடுத்த பின்னர் உங்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்து அலட்சியப்படுத்தினீர்கள்.(அல் குர்ஆன் 2.83)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன் (அல் குர்ஆன் 2:110)

தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள் (அல் குர்ஆன் 2:238)