கடந்த 28.04.2012 சனிக்கிழமை அன்று "இதை கேட்பாரே இல்லையா?" என்ற தலைப்பில் தினத்தந்தியில் வெளியான தலையங்கம் முஸ்லிம்களை மிகுந்த கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது. தாங்கள் சங்பரிவாரக் கும்பலின் கைக்கூலிகள் தான் என்பதை தினத்தந்தி வெட்ட வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் அந்தத் தலையங்கம் அமைந்துள்ளது.
இவ்வாறு விஷம் தோய்ந்த வினாக்களை எழுப்பி பொய்யான அவதூறுகளை முஸ்லிம்கள் மீது சுமத்தி ஏதோ பாகிஸ்தானில் பிற மதத்தவர்களை நிர்ப்பந்தப் படுத்தி ஆயிரக்கணக்கான இந்துக்களையும், கிறித்தவர்களையும் இஸ்லாத்திற்கு மாற வைக்கின்றார்களே எனவே இந்து மற்றும் கிறித்தவர்களே! நீங்களும் நீங்கள் சார்ந்த அமைப்புகளும் கொதித்தெழ வேண்டாமா?
அரசியல் கட்சிகள் கொதித்தெழ வேண்டாமா? என்ற கேள்விகளை கேட்டு எல்லோரையும் முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, அண்ணன் தம்பிகளாக தமிழகத்தில் வாழ்ந்து வரும் இந்து, கிறித்தவ, முஸ்லிம் சகோதரர் களுக்கு மத்தியில் கலவரத்தை உண்டு பண்ணி தமிழகத்தையும் குஜராத் போன்று சுடுகாடாகவும் கலவர பூமியாகவும் மாற்ற வேண்டும் என்பதுதான் தினத்தந்தியின் திட்டம் என்பது அதன் கேவலமான தலையங்க வார்த்தைகளிலிருந்து புலனாகின்றது.
முதலில் தினத்தந்தி எழுப்பியுள்ள வாதங்கள் முட்டாள் தனமானவை என்பதை நாம் சுட்டிக்காட்ட விரும்பு கின்றோம். இவர்கள் சொல்வது போல இந்துக்களும், கிறித்தவர்களும் மிரட்டப்பட்டுதான் முஸ்லிம்களாக மாற்றப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு ஏற்கனவே நாம் உணர்வு 16:31 இதழில் தெளிவாக தக்க ஆதாரங்களுடன் விளக்கமளித்திருந்தோம்.
கட்டாயப்படுத்தி மதம் மாற்றம் செய்து யார் ஒருவரையும் மிரட்டி ஒரு சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ள வைக்க முடியாது என்ற ஒரு அடிப்படை அறிவு கூட இவர்களுக்கு இல்லை. அது மட்டுமல்லாமல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கிறித்தவ மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவினாரே பாகிஸ்தானின் முன்னனி கிரிக்கெட் வீரர் யூசுப் யோகானா. அந்த யோகானாவை மிரட்டி இஸ்லாத்தில் வலுக்கட்டாயமாக சேர வைத்து முஹம்மது யூசுப் ஆக மாற்றியது யார்? அவரை மிரட்டியது யார்? என்பதை