கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திங்கள், 13 டிசம்பர், 2010

அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 27 ல் சென்னையில் / மதுரையில் ஆர்த்தெழுவோம்

அன்புடன் அழைக்கிறது .........
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளை

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

அநீதிக்கு மேல் அநீதி.. அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 4ல் ஆர்த்தெழுவோம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பாபர் மஸ்ஜித் தீர்ப்பை கண்டித்து ஜனவரி 4 ல்அறிவித்திருந்த கண்டனப் போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் ஜனவரி 27 ல் சென்னை மற்றும் மதுரையில் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அநீதியைத் தட்டிக் கேட்க ஜனவரி 27 ல் சென்னையில் / மதுரையில் ஆர்த்தெழுவோம்

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டது முதல் அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜிதை இடித்த பாவிகளை சட்டத் தின்படி தண்டிக்க வலியுறுத்தியும் நாம் உள்பட பல்வேறு இயக்கங்கள் டிசம்பர் ஆறாம் நாளில் போராட்டங்களை விடாமல் நடத்தி வந்தோம். நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்கக் கோரி நாம் நடத்திய அனைத்து போராட்டங்களையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அர்த்தமற்றதாக்கி விட்டது.

சனி, 11 டிசம்பர், 2010

ஆஷூரா நோன்பு !


நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப் படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1592


இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1901
மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும் சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆஷூரா நோன்பு ஏன் ?
ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதைக் கூட இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். இது என்ன நாள் என்று கேட்டார்கள். இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள் என்று யூதர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3397

நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய கூட்டத்தினர் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.
ஆனால் இன்றைக்குப் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் இதைக் கூட அறியாமல் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹசனார் ஹுசைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எனவே இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.

ஆஷூரா நோன்பின் சிறப்புகள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை
நூல்: புகாரி 2006
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம்
நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)
நூல்: முஸ்லிம் 1977

யூதர்களுக்கு மாறு செய்வோம்
ஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபி (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று நோன்பு நோற்குமாறு மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள் அது) யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.
மற்றொரு அறிவிப்பி அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)நூல்: முஸ்லிம் 1916, 1917
நபி (ஸல்) அவர்கள் ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதா நாம் ஒன்பது பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்

சனி, 4 டிசம்பர், 2010

துபையில் பெரும் எழுச்சியோடு நடைப்பெற்ற தவ்ஹீத் மாநாடு


கடந்த வெள்ளிக்கிழமை 03.12.2010 அன்று துபாயில் உள்ள அல் மக்தூம் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் பெரும் எழுச்சியோடு தவ்ஹீத் மாநாடு மண்டலத் தலைவர் அப்துல் நாசிர் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. தாயகத்தில் இருந்து வருகைத் தந்த மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல்லுகா அவர்கள் வஞ்சிக்கப்பட்டோரின் கோரிக்கைகள் என்ற தலைப்பில் பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை விளக்கி கூறியதோடு தவ்ஹீதுக்கு எதிராய் புறப்பட்டுள்ள 19 கூட்டத்தை பற்றியும் விளக்கி பேசினார்.

துபாய் மண்டல தலைவர் ஹாமீம் இப்ராஹீம் அவர்கள் தடம் மாறாத தவ்ஹீத் ஜமாஅத் என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராய் சொல்லப்படுகின்ற, பரப்பபடுகின்ற பொய் புரட்டுகளை பற்றியும் இந்த ஜமாஅத் என்றும் கொள்கை மாறாமல் குரான் ஹதீஸ் வழிமுறையில் நிற்கிறது என்ற கருத்தோடு எழுச்சி உரை நிகழ்த்தினர்.

எத்துனை 19 கூட்டங்கள் வந்தாலும் தவ்ஹீத் எனும் சத்தியக் கொள்கையை அழிக்க முடியாது
((நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக.Al Quarn 17:81))என்பதை பறைச் சாற்றும் விதமாக மக்கள் பெரும் திரலாக கலந்துக்கொண்டு சிறபித்தனர்.

ஊர்களில் வருவதுபோல் மக்கள் பஸ்கலையும் வேன்கலையும் வைத்துக்கொண்டு வந்து மாநாட்டை வெற்றிப்பெற வைத்தனர் எல்லப் புகழும் அல்லாஹ்விற்கே !!!

புதன், 1 டிசம்பர், 2010

திங்கள், 22 நவம்பர், 2010

அவதூறுகளுக்கு அப்பால்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.., எல்லாம் வல்ல ஏக இறைவனான அல்லாஹ்வின் அளப்பரிய கிருபையினால் இன்று நாம் இணைவைத்தல் மற்றும் இன்னபிற வழிகேடுகளை விட்டும் விலகி இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் அறியும் வாய்ப்பை பெற்றுள்ளோம்.

ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னாள் சென்றால் முஸ்லிம்களுக்கு குர்ஆன் மட்டுமே தெரியும். அதுவும் நூற்றுக்கு இரண்டு மூன்று சதவீதத்தினர்களுக்கு மட்டுமே குர்ஆனை ஓதத் தெரிந்து இருந்தார்கள். அவர்களிடம் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பு பற்றிய எந்த அறிவும் அப்போது இருக்க வாய்ப்பில்லை.

ஏனென்றால் அந்த கால கட்டத்தில் குர்ஆன் மொழிபெயர்ப்புகளோ ஹதீஸ் மொழிபெயர்ப்புகளோ இன்று இருக்கும் நிலையைப் போல் இல்லை.

ஆலிம்கள் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பிய காலம். மார்க்கம் என்ற பெயரில் இந்த ஆலிம்கள் செய்த காரியங்கள் ஒரு சாதாரண முஸ்லிம் சிறிது நேரம் சிந்தித்தால் விளங்கிவிடும். அதற்கென்று தனியாக ஒரு பட்டியல் தேவை.

நாம் பல வருடங்களாக பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். இந்த மக்கள் தங்கள் அறிவையும் பொருளாதாரத்தையும் மார்க்கத்திற்கு புறம்பான துளியும் சம்பந்தமில்லாத காரியத்திற்கு செலவழிப்பதை காணலாம். இதை தடுக்க வேண்டிய ஆலிம்கள் அதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் கண்டும் காணமல் இருப்பதை பார்க்கிறோம்.

இந்த ஆலிம்கள் பெயரளவில் தான் முஸ்லிம்களாக வாழ்கிறார்கள். இவர்களே இப்படி இருந்தால் மார்க்கம் தெரியாத அன்றைய முஸ்லிம்களின் நிலை. இந்த ஆலிம்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆடம்பரத்திற்காக பெருமைக்காக மார்க்கத்தை மறைத்து உலக ஆதாயம் தேடினார்கள். இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இன்று அல்லாஹ் இதுபோன்ற அறியாமையில் இருந்தும் நம்மை காத்தான். குர்ஆன் என்றால் என்ன ஹதீஸ் என்றால் என்ன மொத்தத்தில் இஸ்லாம் என்றால் என்ன என்று சாதாரண முஸ்லிம்கள் கூட அறியும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்தினான். குர்ஆன் மொழிபெயர்ப்புகளும் ஹதீஸ் மொழிபெயர்ப்புகளும் இன்று நம் கையில் இருக்கிறது.

ஆனால் சில அல்ல பல மூட கோமாளிகள் இன்னும் உளறிக் கொண்டிருக்கிறார்கள் மார்க்க மேதை என்ற பெயரில். அது என்னவென்றால் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பை ஒரு சாதாரண முஸ்லிம் வாசித்தால் அவர்களால் விளங்க முடியாது என்று. ஆனால் அனைத்தையும் அறிந்த அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான் இந்த குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம் படிப்பினை பெறுவோர் உண்டா என்று.

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஏகத்துவ தென்றல் அல்லாஹ்வின் அளப்பரிய கிருபையினால் வீச ஆரம்பித்தது. அந்த தென்றலின் சுகத்தை பலர் உணர ஆரம்பித்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு கடந்த முப்பது வருடங்களாக இந்த தென்றலை பல பகுதிகளுக்கு சாதாரண முஸ்லிம்களுக்கு கொண்டு சென்றது.

இந்த ஜமாத்தை நிறுவி இஸ்லாத்தையும் அதன் ஓரிறைக் கொள்கையையும் உயிர் மூச்சாகக் கொண்டு இன்றளவும் இந்த ஜமாத்தை கட்டுக் கோப்பாக ஒரு சாதாரண முஸ்லிமாக ஜமாத்தின் பல உறுப்பினர்களில் ஒரு உறுப்பினராக இருந்து சேவையாற்றி வரும் மௌலவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக. அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.

மார்க்கத்தை வைத்து வயிறு வளர்த்த ஆலிம்கள் என்ற பெயரில் திரிந்தவர்களுக்கு இந்த தவ்ஹீத் ஜமாஅத் சாவு மணி அடித்தது. இதன் காரணமாக பொங்கி எழுந்த இந்த உலமா பெருமக்கள்??? தவ்ஹீத் ஜமாத்தின் மீதும் மௌலவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் மீதும் அதிகமான விமர்சனங்களையும் மற்றும் அவதூறுகளையும் பரப்பினார்கள். ஆனால் இதில் எந்த அடிப்படையும் இருக்காது ஆதாரமும் இருக்காது.

இந்த ஒன்றுக்கும் உதவாத ஆலிம்கள் இதுவரை மார்க்கத்திற்காக ஒரு போராட்டத்தையோ அல்லது முஸ்லிம்களுக்காக ஒரு போராட்டத்தையோ செய்தது கிடையாது. இவர்கள் தங்கள் வாழ்நாளை மௌலூது ஓதுவதிலும் பாத்திஹா ஓதுவதிலும் சந்தனம் பூசுவதிலும் சந்தனக் கூடு இழுப்பதிலும் கழிப்பவர்கள். இவர்கள் தங்கள் நிலையை குறித்து ஆராய வேண்டும்.

ஆனால் அல்லாஹ்வின் உதவியோடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கப் பணியோடு சமூகப் பணியையும் சேர்த்து செய்தது. அத்துடன் எதிர்தரப்பினர்களின் விமர்சனங்களுக்கும் அவதூறுகளுக்கும் அவ்வப்போது தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது இந்த ஜமாஅத். ஏனென்றால் இந்த ஜமாத்திற்கு இருக்கிற பணிகள் போதாத காரணத்தினால் இந்த எதிர்தரப்பினர்கள் அளிக்கும் கூடுதல் பணி இது.

எனவே இது போன்ற அவதூறுகளும் ஆரோக்கியமற்ற விமர்சனங்களும் இந்த அறிவிளிகளால் ஏறபடுவது எதிர்பார்த்த ஒன்று தான். இவைகளையும் இவர்களையும் அலட்சியம் செய்வோம். தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகளில் பங்கு கொள்வோம். நம் முஸ்லிம் சமுதாயத்தை பலமான சமுதாயமாக கல்வி வேலைவாய்ப்பில் முன்னேறிய சமுதாயமாக மாற்றுவது நம்மீது உள்ள கடமை. அல்லாஹ்வின் உதவியால் நாம் சாதனை படைப்போம். தவ்ஹீத் ஜமாஅத் சேவைகளுக்கு அரணாய் இருப்போம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்

இஸ்லாம் ஒரு அறிமுகம் என்ற நிகழ்ச்சியை முதல் முறையாக தொலைக்காட்சி வாயிலாக அறிமுகப்படுத்தியது.
ஒவ்வொரு வருடமும் ரமளானில் தொடர் உரைகள் மூலமாக முஸ்லிம்களுக்கு சொற்பொழிவாற்றுதல்.
உண்மையான இஸ்லாத்தை முஸ்லிம்கள் அறிவதற்காக ஒவ்வொரு மாதமும் பல ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்துவது.


வரதட்சணை ஒழிப்பு கருத்தரங்குகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தி வரதட்சணை என்ற சமூக கொடுமைக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
எந்த அரசு வந்தாலும் தவறை சுட்டிக் காட்டும் முதுகெலும்புடன், இடஒதுக்கீட்டிற்காக வரலாறு கண்டிராத போராட்டங்களை நடத்தி, முஸ்லிம்களுக்கு இறைவனின் நாட்டத்தால் இடஒதுக்கீடு பெற்றுத் தந்து 50 ஆண்டு கால வரலாற்றை மாற்றியமைத்தது.
தற்கொலைக்கு காரணமான கொடிய வட்டிக்கு எதிராக மக்களிடையே பிரச்சாரங்கள் செய்வது.


வட்டிக்கு எதிரான பிரச்சாரத்தோடு மட்டும் நின்று விடாமல் உதவி செய்யும் விதமாக ஜமாஅத் மூலம் பல கிளைகளில் வட்டியில்லா கடன் வழங்குவது. இன்னும் பல கிளைகளில் இதை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வது.
முஸ்லிம்களுக்காக உணர்வு என்ற வார இதழையும், ஏகத்துவம் என்ற மாத இதழையும் முஸ்லிம் பெண்களுக்காக தீன்குலப் பெண்மணி என்ற மாத இதழையும் நடத்துவது.
உயிர்காக்கும் இரத்ததான உதவி செய்தல்.
ஏழைகளுக்காக பல ஊர்களில் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்கள்.


பித்ரா என்றால் என்னெவென்று தெரியாமல் இருந்த முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் முஸ்லிம்களிடம் இருந்து பித்ரா தொகை வசூல் செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தல்.
ஒவ்வொரு வருடமும் பல கிளைகள் மூலமாக கூட்டு குர்பானி ஏற்பாடு செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தல்.
சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவி செய்தல். அவர்களுக்காக களத்தில் இறங்கி நிதி திரட்டி உதவி செய்தல்.


பொது மற்றும் நடமாடும் நூலகங்களை ஏற்படுத்தி அதன்மூலம் சிடி மற்றும் நூல்களை தங்கள் இல்லத்திற்கு இலவசமாக எடுத்துச் சென்று படிக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல்.
இஸ்லாத்தை தழுவும் சகோதரர்களுக்கு தாவா மையங்களை ஏற்படுத்தி அதன்மூலம் இலவசமாக மார்க்க கல்வி பயிற்றுவித்தல்.
இஸ்லாத்தை அறிய விரும்பும் சகோதரர்கள் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினால் அவர்களுக்கு இலவசமாக நூல்களை அனுப்பி கொடுத்தல்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீடியாக்களின் மூலமாக உள்ளூர், வளைகுடா மற்றும் பிற நாடுகளில் வாழும் சகோதரர்களுக்காக மார்க்க நிகழ்சிகளை ஒளிபரப்புதல்.

முஸ்லிமல்லாதவர்களுக்காக இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியும் முஸ்லிம்களுக்காக இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியும் பல ஊர்களில் நடத்தி வருவது.
அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கு கிடைக்கும் உதவிகளை அறிய விரும்புபவர்களுக்கு உதவி செய்தல்.
முதியோர் உதவித்தொகை, ஏழைப் பெண்கள் திருமண உதவித்தொகை, விதவைகளுக்காக உதவித்தொகை மற்றும் பிரசவ உதவித்தொகை மற்றும் இதுபோன்ற அரசு நலத் திட்டங்களை அறியாத மக்களுக்கு வழிகாட்டுதல்.
வீட்டிலிருந்து சம்பாதிக்க வழிமுறைகளை விளக்குதல்.
சமூகத்திற்கு பாதிப்பு, அநீதி, அரசாங்க அடக்குமுறை இவைகளுக்கு எதிராக களமிறங்கி போராடுவது.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இழைக்கப்படும் கொடுமைக்காக சக்திக்கு உட்பட்டு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தல்.
இதுபோன்ற பணிகள் சிறப்பாக நடக்க நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிகளை உங்கள் ஊரிலும் செயல்படுத்தவும் உங்களுக்காக உழைக்கவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத தயாராக இருக்கிறது. அதற்காக தலைமையகத்தை தொடர்பு கொண்டால் தகுந்த விளக்கத்தைப் பெறலாம்.

இதுபோன்ற பல மார்க்க மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க வரம்புக்கு உட்பட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி மறுமை வாழ்கையை இலக்காகக் கொண்டு நாணயம் மற்றும் நேர்மையை கடைபிடித்து வெளிநாட்டு அரசாங்கத்திடமோ அல்லது வெளிநாட்டு நிறுவனத்திடமோ பொருளாதார உதவியை பெறாமல் பொதுமக்களுக்காக பொதுமக்களிடமே நிதி வசூல் செய்து அதில் ஒரு பைசாவைக் கூட முறைகேடாக பயன்படுத்தாமல் முறையாகப் பயன்படுத்தி வருகிறது.

எனவே அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே இந்த ஜமாத்தின் மீதுள்ள வெறுப்புகளையும் தவறான எண்ணங்களையும் விட்டுவிட்டு இந்த ஜமாத்தின் செயல்பாடுகளை அறிந்து உங்களை நீங்கள் இந்த ஜமாத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். மேலும் அறிய கிளிக் செய்யவும்.


வெள்ளி, 19 நவம்பர், 2010

பக்ரித் பெருநாளையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெருநாள் சிறப்புத் தொழுகை-படம்:தினகரன்

பக்ரித் பெருநாளையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெருநாள் சிறப்புத் தொழுகை நேற்று (18/11/2010) நடைபெற்றது. தொழுகைக்கு திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்



சனி, 13 நவம்பர், 2010

பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்


‘அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1909

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நோன்பு மற்றும் பெருநாட்கள் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அமைந்து வருகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் சமீப காலமாக இலங்கை, சவூதி என்று பிற நாடுகளையோ அல்லது கேரளா, கர்நாடகா என்று பிற மாநிலங்களையோ பிறை விஷயத்தில் பின்பற்றாமல் தமிழக அளவில் பிறை பார்த்து நோன்பு வைத்து வருவதால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை.
கடந்த நோன்பு மற்றும் நோன்புப் பெருநாளில் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்ததால் அல்லாஹ்வின் அருளால் தமிழகமெங்கும் ஒரே நாளில் நோன்பும், பெருநாளும் அமைந்தது.
தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதந்தோறும் பிறையைப் பார்த்து வருகின்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை (07.11.2010) அன்று பிறை தென்படுகிறதா என்று பார்த்த போது, தமிழகமெங்கும் மேகமூட்டமாக இருந்ததால் அன்று பிறை தென்படவில்லை.

‘மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907
மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக முழுமையாக்குங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி நமக்கு முன்னால் உள்ள ஒரே வழி துல்கஅதா மாதத்தை முப்பதாக முழுமைப்படுத்துவது தான்.

இதன் அடிப்படையில், திங்கள்கிழமை துல்கஅதா மாதத்தின் முப்பதாம் நாள் ஆகும். செவ்வாய்கிழமை (09.11.2010) அன்று துல்ஹஜ் பிறை 1 ஆகும். எனவே 17ம் தேதி அரஃபா நோன்பும், 18ஆம் தேதி வியாழக்கிழமையன்று துல்ஹஜ் பிறை 10 அன்று ஹஜ் பெருநாளும் வருகின்றது.
அந்தந்த பகுதிகளில் பிறை பார்த்தே நோன்பு மற்றும் பெருநாட்களை முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்கம் கூறும் அடிப்படையில் நாம் செயல்படுவதால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த ஆண்டின் அரஃபா நோன்பு மற்றும் ஹஜ் பெருநாளை அமைத்துக் கொள்வோமாக!
பொதுவாக முஸ்லிம்களிடம், ஹஜ் பெருநாளுக்காகப் பிறை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும் இருந்து வருகின்றது. இது தவறாகும்.

காரணம், குர்பானி கொடுப்பவர்கள் பிறை தென்பட்டதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை நகம், முடிகளைக் களையக் கூடாது என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளையாகும். இத்துடன் துல்ஹஜ் பிறை 9ல் நோன்பு நோற்பதும் சுன்னத்தாகும்.
எனவே இந்த வணக்கங்களைச் செய்வதற்காக துல்ஹஜ் பிறை 1 துவங்கியதும் மக்களுக்குப் பிறையை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை யாரும் பிறையை அறிவிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். எனவே தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த அறிவிப்பைச் செய்கின்றது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற ஹதீஸ் அடிப்படையில் 18.11.2010 வியாழக்கிழமை அன்று பெருநாள் கொண்டாடி, நமது குர்பானி கடமைகளை நிறைவேற்றுவோமாக!

ஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் பிறை பார்க்க வேண்டும். தமது பகுதி அல்லாத வேறு பகுதிகளில் பார்க்கப்படும் பிறை நமது பகுதியில் பார்த்த பிறையாக முடியாது.
”பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1906

பிறையை கண்களால் பார்த்துதான் நோன்பை துவக்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் வலியுறுத்துகிறது உலகில் எங்காவது பார்த்த பிறையை நாம் ஏற்றுக் கொள்ளலாமா? என்பதற்கும் இந்த ஹதீஸில் விடையிருக்கிறது.
உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்று பொருள் கொள்ள இந்த ஹதீஸின் பிற்பகுதியே தடையாக நிற்கிறது.உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற வாசகமே அது.உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.

எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பகுதியினரும் தத்ததமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

பகுதி எது என்பது குறித்து பலவிதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. முடிவில் மொழியாலும் தனி நிர்வாகத்தாலும் ஒருங்கிணைக்க்கப்பட்டுள்ள தமிழகம் என்பது நமது பகுதி என்ற முடிவுக்கு நாம் வந்தோம். அது போல் சுன்னத் ஜமாஅத்தினரும் இந்த அடிப்படையில் தான் முடிவு செய்து வந்தனர்.
கடந்த பல வருடங்களில் வட மாநிலங்களில் பிறை பார்க்கப்பட்டு அவர்கள் நொன்பு நோற்ற போது தமிழகத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத்தினரும் நாமும் அதை ஏற்காமல் தமிழகத்தில் பிறை காணப்பட்டதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்து வந்துள்ளோம்.
டெல்லிக்கு ஒரு பெருநாள் சென்னைக்கு ஒரு பெரு நாள் என பல வருடங்களாக இருந்து வந்ததை நாம் மறந்து விட முடியாது.

அந்த அடிப்படையில் இந்த மாதம் தமிழகம் முழுவதும் நாம் சல்லடை போட்டு விசாரித்ததில் எங்கும் பிறை பார்க்கப்படவில்லை என்பது உறுதியானது. பிறை காணப்படாத போது இதற்கு முன் நாம் எவ்வாறு முடிவு எடுத்து வந்தோமோ அவ்வாறு முடிவு எடுப்பது தான் முரண்பாடு இல்லாத கொள்கை முடிவாக இருக்க முடியும்.
இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் எங்கும் பிறை காணப்படாத நிலையில் வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டதைப் பின்பற்றி முடிவு செய்தால் எதிர் காலத்தில் ஆண்டு தோறும் மீண்டும் குழப்பங்கள் தொடர் கதையாகி விடும். நபிவழியை மீறியதாகவும் ஆகி விடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்
-TNTJ

செவ்வாய், 9 நவம்பர், 2010

ஞாயிறு, 7 நவம்பர், 2010

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள்

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.

அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.

'இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். 'உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்' என்று அவன் கூறினான். 'எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)' என்று அவர் கேட்டார். 'என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது' என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன ?

இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப் பட்டது தான். ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதயாம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு! ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.


இந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார். (பார்க்க அல்குர்ஆன் 21:51-70)

இந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்!

இந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 29:26)

நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கின்றார்கள். பின்னர் குழந்தை பிறந்து, அதன் முகம் பார்த்து அகமகிழ கொஞ்சும் வேளையில் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் தண்ணீரில்லாத பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவை ஏற்று அவ்வாறே அங்கு கொண்டு போய் விடுகின்றார்கள்.

குழந்தை இளவலாகி அவர்களுடன் நடை போடும் வயதை அடைந்ததும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அக்குழந்தையை அறுக்க முன் வந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 37:99-107)

இவை அனைத்தும் அவர்களது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ் வைத்த சோதனைகள்! இந்த எல்லாச் சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வென்றார்கள். அதனால் தான் அவர்களை இமாமாக ஆக்கியது மட்டுமல்லாமல் அவர்களை அல்லாஹ் தன் நண்பராகவும்ஆக்கினான்.

'தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார் ? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்'. (அல்குர்ஆன் 4:125)

இன்றைக்கு ஹாஜிகள் மக்காவில் செய்யும் பெரும்பான்மையான வணக்கங்களும், ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி நாம் செய்கின்ற குர்பானி எனும் வணக்கமும் அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடு தான். அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களை நமக்கு இமாமாக ஆக்கி வைத்து, அவர்களை அவர்களது கொள்கைகளை எதிர்த்த மக்களை வேரறுத்து விட்டான். இதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கூறுகின்றான்.

(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!' என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை'. (அல்குர்ஆன் 16:123)

நபி (ஸல்) அவர்கள் முதல் அவர்களது உம்மத்தினர் அனைவருக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கி வைத்தான்.

'உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. 'உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை' என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) (அல்குர்ஆன் 60:4)

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே.

'அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்'. (குர்ஆன் 9:114)

இணை வைப்பவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கடைப்பிடித்த அந்தக் கடுமையான அணுகுமுறையை அல்லாஹ் அழகிய முன்மாதிரி என்று கூறுகின்றான். ஆனால் இன்று ஏகத்துவவாதிகள் எனப்படுவோர், இணை வைப்பவர்களிடம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. முஸ்லிம் இணைவைப்பாளர்கள், காஃபிர் இணைவைப்பாளர்கள் என்று இரு கூறாகப் பிரித்துப் பார்க்கின்றனர். முஸ்லிம் இணைவைப்பாளர்களை திருமணம் முடிக்கலாம், அவர்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.

இதற்கு நம்மவர்கள் கூறும் சாக்கும் சமாதானமும், அவர்கள் ஹிதாயத்துக்கு நேர்வழிக்கு வந்து விடலாம் என்றவாதம்தான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல்குர்ஆன் 18:28)

மக்கத்து முஷ்ரிக்குகளின் பிரமுகர்கள் எப்படியேனும் இஸ்லாத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ் இந்தச் செயலை கண்டிக்கின்றான். இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தான் சரியான செயல் என்று கூறுகின்றான்.

இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். 'நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா? என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன. ஆதாரம் : திர்மிதி – 3452, 3328, முஸ்னத் அபூயஃலா–4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும் ? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். (அல்குர்ஆன் 80:1லி10) நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களின் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது, அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விட வேண்டும் என்பதற்காகத் தான்.

ஹிதாயத்துக்கு வந்து விடுவார்களே என்ற எதிர்பார்ப்பு தான் நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது. ஆனால் இறைவன் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது இஸ்லாத்தில் இருப்பவர்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டுமே தவிர, முஷ்ரிக்காக இருப்பவர் இஸ்லாத்திற்கு வந்து விடுவார் என்று நினைத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

ஆனால் இதை நமது சகோதரர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. இணை வைப்பில் மூர்க்கமாக நின்று பிரச்சாரம் செய்பவர்களிடம் கூட பெண் எடுக்கத் தயங்குவதில்லை. இது போன்று இன்ன பிற விஷயங்களிலும் இந்த ஹிதாயத் வாதத்தின் அடிப்படையிலேயே இணை வைப்பவர்களிடம் நெருக்கத்தை வைத்திருக்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம், இப்ராஹீம் (அலை) என்ற இமாமை முழுமையாகப் பின்பற்றாதது தான். அல்லாஹ் கூறும் அந்த அழகிய முன்மாதிரியைப் புறக்கணித்தது தான்.

அதற்காக இணை வைப்பவர்களிடம் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறவில்லை. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான்.

அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 60:8,9)

இந்த வசனங்களின் படி மார்க்க விஷயங்களில் நம்முடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காதவர்களுடன் பழகுவதோ அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதோ தவறில்லை. ஆனால் அவர்களும் இணை வைப்பாளர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து விட மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சனி, 6 நவம்பர், 2010

தொழுகை இல்லையேல்! தடாகம் இல்லை!!

மக்கள் விசாரணைக்காக ஒன்று திரட்டப்படும் அந்நாளின் கொடூரத்தைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம்.

கடும் தாகத்தால் மக்கள் துடிக்கக் கூடிய அந்நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் தாகம் தீர்ப்பதற்குத் தனி ஏற்பாட்டை அல்லாஹ் செய்வான்.

இதுபற்றி திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.அல்குர்ஆன் 108:1

"கவ்ஸர் என்றால் என்ன?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், "அது அல்லாஹ் எனக்கு வழங்கிய நதியாகும்'' என விடையளித்தார்கள்...
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி),நூல்: திர்மிதீ

அதன் சுவை பற்றியெல்லாம் நபி (ஸல்)அவர்கள் விளக்கமாகக் கூறியுள்ளார்கள்.

எனது தடாகம் ஒரு மாதப் பயணத் தொலைவு அகலமாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி),நூல்கள்: புகாரி 6579, முஸ்லிம்

அம்மான், ஐலா ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அளவு அதன் நீளம் இருக்கும். அதன் அகலமும் அவ்வாறே என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),நூல்கள்: முஸ்லிம் 4608, அபூதாவூத்

எமன் நாட்டின் ஸன்ஆ மற்றும் மதீனா ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அளவு அந்தத் தடாகம் அமைந்திருக்கும் என்பது நபிமொழி
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),நூல்கள்: புகாரி 6592, முஸ்லிம்

இந்த நபிமொழிகளிலிருந்து அந்தக் தடாகம் மிகவும் பிரம்மாண்டமான அளவுடையதாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.

அதன் தண்ணீர் பாலை விட வெண்மையாகவும் அதன் சுவை தேனை விட இனிமையாகவும் இருக்கும்நூல்கள்: புகாரி 6579, முஸ்லிம்

அதன் நறுமணம் கஸ்தூரியை விடச் சிறந்ததாக இருக்கும்.
நூல்கள்: புகாரி 6579, முஸ்லிம்

அதன் தண்ணீர் வெள்ளியை விட வெண்மையானதாகும்.
நூல்கள்: புகாரி 6579, முஸ்லிம் 4599

அந்தத் தடாகத்தில் உள்ள தண்ணீர் சொர்க்கத்தில் உள்ள தண்ணீராகும். சொர்க்கத்திலிருந்து இரண்டு குழாய்கள் மூலமாக அதற்குத் தண்ணீர் வரும். நூல்: முஸ்லிம் 4608

தங்கக் குழாய், வெள்ளிக் குழாய் ஆகிய இரு குழாய்களின் வழியாக அந்தத் தடாகத்திற்குத் தண்ணீர் வரும் .நூல்: முஸ்லிம் 4609

மக்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்கு முன் சொர்க்கத்து நீரை தடாகத்தின் வழியாக அருந்துவார்கள் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து நாம் அறியலாம்.

பல கோடி மக்கள் திரண்டுள்ள அந்த மன்றத்தில் நெருக்கடியின்றி மக்கள் தண்ணீர் அருந்துவதற்காக ஏராளமான பாத்திரங்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாத்திரங்களும் சொர்கத்தில் பயன்படுத்தவுள்ள பாத்திரங்களாகும்.

எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணைமாக அதன் பாத்திரங்கள் வானத்து நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். அவை சொர்க்கத்தின் பாத்திரங்களாகும்.
நூல்கள்: முஸ்லிம் 416, திர்மிதீ 2369

அந்தத் தண்ணீரின் பயன் யாது? அதை அருந்தியவர்க்கு தாகமே ஏற்படாது என்பது இதன் பயனாகும். விசாரணை என்பது ஒருநாளில் நடந்து முடிந்து விடும் என்றாலும் அந்த ஒரு நாள் ஆயிரம் வருடங்களுக்கு நிகரானதாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமான அந்நாளில் ஒரு தடவை அத்தடாகத்திலிருந்து அருந்தி விட்டால் அதன் பின்னர் தாகமே ஏற்படாது.
அதில் அருந்தியவர்களுக்கு தாகம் ஏற்படாது.
நூல்கள்: புகாரி 7051, முஸ்லிம், திர்மிதீ

கவ்ஸர் எனும் அத்தடாகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கும் தனிச்சிறப்பாகும். நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு வழங்குவார்கள்.

நான் ஹவ்லுக்கருகில் உங்களுக்காகக் காத்திருப்பேன்.
நூல்கள்: புகாரி 6589, முஸ்லிம்

"எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக ஒரு மனிதன் தனது தடாகத்தை விட்டும் தனக்குச் சொந்தமில்லாத ஒட்டகங்களை விரட்டுவானோ அதுபோல் மற்ற மனிதர்களை நான் தடாகத்தை விட்டும் விரட்டுவேன்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! எங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்களா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! உளூச் செய்ததன் காரணமாக கைகள், கால்கள், முகங்கள் வெண்மையானவர்களாக என்னிடம் நீங்கள் வருவீர்கள்''என்று விடையளித்தனர். நூல்கள்: முஸ்லிம் 417

ஹவ்ல் அல் கவ்ஸர் எனும் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தினருக்கு மட்டும் உரியது என்பதையும் இந்த உம்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தொழாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிட்டாது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

பித்அத் செய்தால் தடாகம் இல்லை:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் புதிதாக வணக்க வழிபாடுகளை ஏற்படுத்தியவர்கள் அவர்கள் நபித் தோழர்களாக இருந்தாலும் அந்தத் தடாகத்திற்கு வராதவாறு தடுக்கப் படுவார்கள்.

நான் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்திருப்பேன். சில மக்கள் என்னிடம் வருவார்கள். அவர்களுக்கு தண்ணீர் ஊற்ற நான் குனியும் போது அவர்கள் தடுக்கப்படுவார்கள். "இறைவா இவர்கள் என் தோழர்களாயிற்றே'' என நான் கூறுவேன். "உமக்குப் பின்னால் இவர்கள் (மார்க்கத்தின் பெயரால்) எவற்றை உருவாக்கினார்கள் என்பதை நீர் அறிய மாட்டீர்'' என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),நூல்: புகாரி 7049, முஸ்லிம்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாüல் என் தோழர்கüல் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் "இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்'' என்பேன். அதற்கு இறைவன் "உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்'' என்று சொல்வான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி 6585, முஸ்லிம்

அந்தத் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியம் ஏழு கோடிக்கும் அதிகமான மக்களுக்குக் கிடைக்கும்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இடத்தில் தங்கியிருந்தோம். "என்னிடம் லட்சத்தில் ஒரு பகுதியாகக் கூட நீங்கள் இருக்கவில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "நீங்கள் எவ்வளவு நபர்கள் அப்போது இருந்தீர்கள்?'' என்று ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. "எழுநூறு அல்லது எண்ணூறு நபர்கள் இருந்தோம்'' என விடையளித்தார்கள். நூல்: அபூதாவூத் 4121

அந்தத் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியத்தை வல்ல அல்லாஹ் நமக்கும் வழங்குவானாக!

- பி. ஜைனுல் ஆபிதீன்

திங்கள், 1 நவம்பர், 2010

கிழித்தெறியப் பட்ட பரேலவிக் கொள்கையும்,நிலைநாட்டப் பட்ட சத்தியமும்.

கடந்த சனி ஞாயிறு நாட்களில் ஒப்பந்தப்படி நடக்க வேண்டிய விவாதம் மிகவும் பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பமானது.

இமாம்களின் விளக்கம் இன்றி குர்ஆன் ஹதீஸை விளங்க முடியுமா? என்ற தலைப்பில் விவாதம் ஆரம்பமாகியது.

இமாம்களின் விளக்கம் இன்றி மிகத் தெளிவாக குர்ஆனும் ஹதீஸ{ம் விளங்கும் என்றும் இமாம்கள் என்பவர்களின் விளக்கத்தினால் தான் நிறைய சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன என்பதை விவாதிக்க தவ்ஹீத் ஜமாத் தரப்பில் சகோதரர் பி.ஜெயும் இமாம்களின் விளக்கம் இன்றி குர்ஆன் ஹதீஸ்கள் விளங்காது என்று வாதிக்க பரேலவி ஜமாத் சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் கலந்து கொண்டு வாதிக்க ஆரம்பித்தனர்.

ஆரம்பமே அசத்தலான பி.ஜெயின் வாதம் :
தனது தரப்பின் சார்பில் வாதிக்க ஆரம்பித்த பி.ஜெ குர்ஆன் அனைவருக்கும் இமாம்களின் விளக்கம் இன்றி மிகத் தெளிவாக விளங்கும் என்பதற்கான தனது முதல் ஆதாரமாக திருமறைக் குர்ஆன் வசனங்களை முன்வைத்து விவாதத்தை தொடங்கினார்.

ஆனால் இமாம்களின் கருத்துக்கள் இதற்கு மாற்றமாக பல சிக்கல்களைத் தான் உருவாக்கியுள்ளது என்று இமாம்களின் குருட்டுக் கருத்துக்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

ஒரு இரவை ஒரு வருடமாக மாற்றிய அபூஹனீபா :
அல்லாஹ் திருமறைக் குர்ஆனை லைலதுல் கத்ர் என்ற சிறப்புமிகு இரவில் இறக்கியதாக கூறுகிறான் (97:1-5)ஆனால் அபூஹனீபாவோ லைலதுல் கத்ர் இரவு ரமழானிலும்; வரும் ரமழான் அல்லாத காலங்களிலும் வரும் வருடம் முழுவதும் வரும் என்று லைலதுல் கத்ர் பற்றி விளக்கம் சொல்லியுள்ளார்.

அல்லாஹ் சொன்னது தெளிவாக விளங்குகிறது இமாம்கள் சொன்னதுதான் இவ்வளவு குழப்பம் மிக்கது என்பதை தனக்கே உரிய அழகிய பாணியில் விளக்கினார் பி.ஜெ.

அதே போல் பரேலவிகள் போற்றிப் புகழும் இப்னு அரபி என்பவர் லைலதுல் கத்ர் இரவு ஷஃபான், ரபியுள் அவ்வல், ரபியுள் ஆகிர், ரமழான் ஆகிய மாதங்களில் வரும் என்று 97வது அத்தியாயத்திற்கு விளக்கம் சொல்லியுள்ளார்.

முடிவு தெரிந்த ஜமாலியின் முதல் வாதம் :
பி.ஜெயின் கேள்விகளுக்கு பதில் சொல்லி தனது வாதத்தை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலி அவர்கள் முதல் வாதத்தை ஆரம்பித்தவுடனேயே இமாம்களின் துணையுடன் தான் குர்ஆன் ஹதீஸை விளங்க வேண்டும் என்ற தனது கருத்து தவறானது என்பதை ஒத்துக் கொண்டார்.

அதாவது இப்னு அரபி லைலதுல் கத்ர் தொடர்பாக சொன்ன கருத்தில் ஷஃபான் ரபியுள் அல்வல் ரபியுள் ஆகிர் போன்ற மாதங்களிலும் லைலதுல் கத்ர் வரும் என்று கூறியது தவறு ரமழானின் வரும் என்று அவர் சொன்னதை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி தான் கொண்டிருக்கும் கொள்கை தவறு என்பதை ஒத்துக் கொண்டார்.

நபி மீதே அவதூறு பரப்பிய இமாம்களின் விளக்கங்கள் :
ஸைத்(ரலி)அவர்களின் மனைவியை ஸைத் அவர்கள் தலாக் விட்ட பின் நபியவர்கள் திருமனம் செய்து கொண்டார்கள். அல்லாஹ்வே நபியவர்களுக்கு திருமனம் செய்து வைத்ததாக திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

இந்த சம்பவத்திற்கு விளக்கம் சொல்ல வந்த இமாம்கள் என்பவர்கள் நபியவர்கள் ஸைத் (ரலி)அவர்கள் ஸைனப் (ரலி)அவர்களுடன் குடும்பம் நடத்தும் போதே அவர்களை விரும்பியதாகவும் அவர்களை பார்க்கக் கூடாத தோற்றத்தில் பார்த்து விட்டதாகவும் எழுதி வைத்துள்ளதை சுட்டிக் காட்டி இதுதான் நபிமார்களுக்கு இமாம்கள் கொடுக்கும் கண்ணியமா? என்று கேட்டு கேள்வியை பி.ஜெ அவர்கள் முன்வைத்த போது எந்த இமாமும் இப்படிக் கூறவில்லை என்று மறுத்தார் ஜமாலி.

தப்ஸீர் ஜலாலைன் தபரி பகவி நஸபி கஷ்ஷாப் போன்ற கிதாபுகளை எடுத்துக் காட்டி தனது வாதத்திற்கான ஆதாரத்தை நிறுவினார் பி.ஜெ.

எப்படி இதற்கு முந்தைய விவாதங்களில் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் காலத்தை கடத்தினாரோ அதே பாணியில் இம்முறையும் எந்த பதிலையும் சொல்லாமல் காலத்தை கடத்த ஆரம்பித்தார்.ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் தன்னிடம் பதில் இல்லை என்பதை சொல்லும் விதமாக இமாம்கள் தவறு செய்திருந்தால் தவரை விடுத்து நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். இமாம்கள் தான் சரியாக விளங்குவார்கள் என்று கூறியவர் இறுதியில் இமாம்கள் தவறாக விளங்கியுள்ளதை ஒத்துக் கொண்டார்.
சொத்துப் பங்கீடும் சொதப்பிய ஜமாலியும்.
சொத்துப் பங்கீடு தொடர்பாக ஒரு கேள்வியை பி.ஜெயிடம் கேட்டார் ஜமாலி.அதாவது ஒரு பெண் இறக்கும் போது அவருக்கு தாய் தந்தை பெண்பிள்ளைகள் கணவன் ஆகியோர் இருந்தால் என்ன சட்டம் என்று கேட்டார் ஜமாலி.

திருக்குர்ஆன் மொழியாக்கம் 111வது குறிப்பில் இது தொடர்பாக கூறியுள்ளோம் தவறாக இருந்தால் அது எப்படி தவறு என்பதை வாதமாக முன்வையுங்கள் என்று சொன்னார் பி.ஜெ ஆனால் சமாளிப்பதில் வல்லவரான ஜமாலியோ அரங்கத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச கூட்டத்தையாவது தக்க வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் அதன் பின் எதுவும் பேசவில்லை.

ஜமாலிக்கு இலக்கணம் கற்றுக் கொடுத்த பி.ஜெ :
லா உக்ஸிமு என்பதில் முதலாவது லா வருகிறது லா என்றால் இல்லை என்று அர்த்தம் உக்ஸிமு என்றால் சத்தியம் செய்கிறேன் என்று அர்த்தம் இரண்டையும் சேர்த்தால் சத்தியம் செய்ய மாட்டேன் என்று தானே வரவேண்டும் ஆனால் தாங்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆனில் (மொழியாக்கங்கள் அனைத்திலும் இப்படித்தான் மொழிபெயர்பு செய்துள்ளார்கள்.) சத்தியம் செய்கிறேன் என்று மொழியாக்கம் செய்துள்ளீர்களே இமாம்களின் துணையின்றி இதனை விளக்குங்கள் என்று கேட்டார் ஜமாலி.

அரபி இலக்கணம் தெரியாததினால் ஏற்பட்ட குறைதான் இது என்பதை புரிந்து கொண்ட பி.ஜெ இலக்கணப் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

அதாவது சத்தியத்திற்கு முன்பாக லா எனும் சொல் இடம் பெரும் அந்த லா எனும் சொல்லுக்கு அதிகப் படியாக வரும் லா என்று பெயர். இப்படி சத்தியத்திற்கு முன்பு அதிகப் படியாக லா எனும் எழுத்து வரும் போது அதற்கு பொருள் கொள்ளக் கூடாது என்பது அரபி இலக்கண விதி (ஹிதாயா) இது தெரியாததினால் விளைந்ததுதான் இந்தக் கேள்வி என்பதை தெளிவு படுத்தினார்.

சாலிம் (ரலி) விஷயமாக எடுபடாத ஜமாலியின் சமாளிப்புகள் :
இளைஞராக இருந்த சாலிம் (ரலி)அவர்களுக்கு பாலுட்டும் படி நபியவர்கள் அபூஹ{தைபா அவர்களின் மனைவியிடம் கூறியதாக முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ் தவறானது நபியவர்கள் மீது யாரோ ஒருவர் பொய்யான கதையை இட்டுக் கட்டியிருக்கிறார் நபியவர்கள் இப்படிப்பட்ட ஒழுக்க சீர்கேட்டுக்கு வழி வகுக்க மாட்டார்கள் என்றும் பால் குடிச் சட்டம் என்பது குழந்தை பிறந்து இரண்டு வருடத்திற்குட்பட்டது என்பதாலும் இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி நாம் அந்த ஹதீஸை மறுக்கிறோம்.

ஆனால் குறிப்பிட்ட ஹதீஸ் சரியானது அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வாதிட வந்த ஜமாலியிடம் அந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் அதற்கு என்ன சட்டம் சொல்வீர்கள் என்று கேட்டார் பி.ஜெ ஆனால் விவாதத்தின் இறுதி வரை சாலிம் விஷயமாக சட்டத்தை ஜமாலி சொல்லவேயில்லை.

ஸாலிம் அவர்கள் வாய் வைத்தா குடித்தார்கள் கறந்து குடித்திருப்பார்கள் என்று சகட்டு மேனிக்கு ஒரு கேள்வியை முன்வைத்தார் ஜமாலி. அப்படியாயின் ஒருவன் ஒரு வீட்டிட்கு அடிக்கடி போய் வரவேண்டி ஏற்பட்டால் அவன் அந்த வீட்டுப் பெண்மணியிடம் பாலைக் கறந்து குடித்தால் சரி என்று சட்டத்தை சொல்வீர்களா? என்று பி.ஜெ அவர்கள் கேட்க வாய் திறக்காமல் இருந்தார் ஜமாலி.

அண்ணியப் பெண்ணிடம் பேன் பார்க்கும் அசிங்கம் :
ஆபாசத்தையும் அசிங்கங்களையும் மாத்திரமே மூலதனமாக கொண்டு இயங்குகின்ற மத்ஹபுவாதிகள் ஹதீஸ்கள் என்ற பெயரால் நபியவர்களைப் பற்றி வரும் ஆபாசங்களுக்கும் முட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

உம்மு ஹராம் (ரலி)அவர்கள் வீட்டிட்கு நபியவர்கள் சென்று அவர்களின் அருகில் தூங்குவார்கள் உம்மு ஹராம் அவர்கள் நபியவர்களுக்கு பேன் பார்த்து விடுவார்கள் என்று இடம் பெறும் ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுவதாக கூறி நாம் மறுத்து வருகிறோம்.

ஆனால் இந்த ஹதீஸ் சரியானது என்று கூற வந்த ஜமாலியிடம் சரி என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக நிரூபித்துக் காட்டுங்கள் என்று பல முறை கேட்டும் அதனை அவர் கண்டு கொள்ளவே இல்லை.

அதே போல் ஒருவன் அண்ணியப் பெண்ணின் மடியில் படுத்து தனது தலையில் பேண் பார்த்துவிடச் சொன்னால் அது சரியென்று நீங்கள் பத்வா கொடுப்பீர்களா? என்றும் பி.ஜெ அவர்கள் கேட்டதற்கு இறுதிவரை ஜமாலி வாய் திறக்கவில்லை.

உடலுறவும் கத்தம் தான் ஜமாலியின் புதிய ஆதாரம் :
மரணித்தவருக்காக குர்ஆன் ஓதி கத்தம் கொடுப்பதென்பது இஸ்லாத்தில் இல்லாத வழிமுறை பித்அத் ஆகும்.நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே பல நபித்தோழர்களும் நபியவர்களின் பிள்ளைகளும் பாசமிகு மனைவி கதீஜா அவர்களும் மரணித்துள்ளார்கள்.ஆனால் அவர்களில் யாருக்காகவும் நபியவர்கள் கத்தம் கொடுத்ததில்லை.கொடுக்கச் சொல்லவும் இல்லை.

ஆனால் கத்தம் என்றொன்று மார்க்கத்தில் இருப்பதாகக் கூறி பொது மக்களை ஏமாற்றி வயிற்றுப் பிழைப்பு நடத்துகிறார்கள் இந்த பரேலவிகள்.

அதன் உச்ச கட்டமாக ஒருவன் தனது மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டு மரணித்த எனது தந்தைக்கு இது கத்தமாக மாறிவிடும் என்று சொன்னால் அது கத்தம் தான் என்று இலங்கையில் நடந்த விவாதம் ஒன்றில் ஜமாலி பேசியதை திரையில் போட்டுக் காட்டி விளக்கம் கேட்டார் பி.ஜெ வாய்ச் சொல்லில் வீரரான் ஜமாலியோ மதில் மேல் பூனையைப் போல் விழித்துக் கொண்டிருந்தார்.

பட்டியல் போட்டார் பி.ஜெ பதறினார் ஜமாலி.
குர்ஆனையும் ஹதீஸையும் இமாம்களின் துணையின்றி விளங்க முடியாது என்று வாதிட வந்த ஜமாலியிடம் இமாம்கள் குர்ஆனையும் ஹதீஸையும் விளங்கிய லச்சணத்தை பட்டியலிட்டு இதற்கெல்லாம் பதில் என்னவென்று பி.ஜெ கேட்டார்.கிட்டத்தட்ட 98 கேள்விகள் கேட்கப்பட்டதில் ஒன்றிரண்டிட்கு மாத்திரம் சில் சமாளிப்புகளை சொன்ன ஜமாலி மீதமிருந்த சுமார் 95க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு வாய் திறக்கவில்லை.

சகோதரர் பி.ஜெ அவர்கள் முன்வைத்த கேள்விகளில் சில……..

(இவையெல்லாம் விளக்கம் என்ற பெயரில் இமாம்கள்(?)என்பவர்கள் கூறியவைகள்)

1.இறைவன் ஒன்றைப் படைக்க நாடினால் ஆகு என்று சொன்னால் அது ஆகிவிடும் என்பது திருமறைக் குர்ஆன் வசனம்.இந்த வசனத்திற்கு விளக்கம் சொன்ன கஸ்ஸாலி என்பவர் இந்த குர்ஆன் வசனம் தவறானது என்று கூறிய விளக்கத்தை பி.ஜெ சுட்டிக் காட்டி இதுதான் உங்கள் இமாம்கள் திருமறையை விளங்கும் லட்சனமா என்று கேட்டார்.
2.வருடம் முழுவதும் லைலதுல் கத்ர் என்ற ஹனபியின் விளக்கத்திற்கு பதில் என்ன?

3.இப்னு அரபி ஷஃபான் ரபியுள் அல்வல் ரபியுள் ஆகிர் ஆகிய மாதங்களிலும் லைலதுல் கத்ர் வரும் என்று சொன்னதற்கு என்ன பதில்?

4.அடுத்தவர் மனைவி மீது நபியவர்கள் ஆசைப் பட்டார்களா?

5.பிர்அவ்ன் முஸ்லிம் என்று இப்னு அரபி சொன்னதற்கு பதில் என்ன?

6.மழை பெய்யும் முறையை ராஸி என்ற இமாம் மறுத்ததற்கு என்ன பதில்?

7.மழை தொழுகை இல்லை என்ற இமாம்களின் விளக்கத்திற்கு என்ன பதில்?

8.கிரகணத் தொழுகையை மறுத்த இமாம்களின் நிலை என்ன?

9.ஏழு வானம் என்றால் இமாம்கள் சொன்ன விளக்கம் 1வது வானத்தில் சந்திரன் ஒட்டப் பட்டுள்ளது.2வது வானத்தில் மெற்குறியும் 3வது வானத்தில் வீனஸ் 4வது வானத்தில் சூரியன் 5வது வானத்தில் செவ்வாய் 6வது வானத்தில் வியாழன் 7வது வானத்தில் சனி வானத்திற்கே இன்னும் மனிதன் போகாத நிலையில் இந்தக் கண்டுபிடிப்புக்கு என்ன விளக்கம்?

10.உருவப் படமோ நாயோ உள்ள வீட்டிற்கு மலக்குகள் வரமாட்டார்கள் என்ற ஹதீஸிற்கு கஸ்ஸாலி கொடுத்த விளக்கம் சரியானதா? இவர்தான் இமாம் என்று சொல்லப்படுபவரா?

11.இடி பற்றிய வசனங்களுக்;கு மலக்குமார் என்று விளக்கம் சொன்னது சரியா?

12.இப்லீஸ் என்பதற்கு இமாம்கள் கொடுத்த விளக்கம் சரியானதா?

13.ஒரு ரக்அத் வித்ர் தொழ முடியும் என்று நபியவர்கள் சொல்லியிருக்க கூடாது என்று இமாம்கள் சொன்னதை ஏற்றுக் கொள்வது முறையா?

14.மஃரிபுக்கு முன் சுன்னத் இருக்கிறது என்று ஹதீஸ் இருக்க சுன்னத் தொழுகை கூடாது என்று சொன்னது சரியானதா?

15.விபச்சாரம் செய்த யூதனுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறது.ஆனால் யூதனுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்று அபூஹனீபா சொல்வது சரியானதா?

16.மழைத் தொழுகை ஜமாத்தாக தொழ வேண்டும் என்று ஹதீஸ் இருக்கும் போது ஜமாத்தாக தொழக்கூடாது என்று அபூஹனீபா சொன்னதற்கு விளக்கம் என்ன?

17.நடுத் தொழுகை எது என்பதில் ஏன் இத்தனை தடுமாற்றம்?

18.அத்தீன் என்பதற்கும் ஸைத்தூன் என்பதற்கும் ஏன் இவ்வளவு தடுமாற்றம்?

19.காளை மாட்டை வணங்கலாம் என்று இப்னு அரபி சொன்னதற்கு பதில் என்ன?

இப்படி கிட்டத்தட்ட 98 கேள்விகளை சகோதரர் பி.ஜெ அவர்கள் முன்வைத்தார் ஆனால் அதில் ஒன்றுக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கினார் ஜமாலி.

விவாத அரங்கம் சிரிப்பில் மூழ்கிய சில முக்கிய சந்தர்ப்பங்கள் :

இப்லீஸ் என்றால் யார் என்று இமாம்கள் கொடுத்த விளக்கத்தினை சகோதரர் பி.ஜெ எடுத்துக் காட்டியதும் அரங்கமே சிறிப்பில் மூழ்கியது.

அதாவது இப்லீஸ் என்பவன் தனது வாலை தன்னுடைய பின் துவாரத்தில் நுழைப்பானாம். பின்பு ஒரு முட்டை போடுவானாம் அது பல ஷைத்தான்களை உருவாக்குமாம்.அந்த இப்லீஸ் மொத்தம் 30 முட்டைகள் போடுவானாம் 10 முட்டை கிழக்கிலும் 10 முட்டை மேற்கிலும் 10 முட்டை மத்தியிலும் போடுவானாம்.(குர்ஆனை இமாம்கள் விளங்கிய லட்சனம் ?)

சிலை வணக்கத்தினை விட்டும் என்னையும் என் சமுதாயத்தையும் காப்பாற்றி விடு என்று இப்றாஹீம் நபி துஆ கேட்டதற்கு விளக்கம் சொன்ன கஸ்ஸாலி இந்த வசனம் தங்கம் வெள்ளியில் ஆசைப்படக் கூடாது என்றுதான் சொல்கிறது என்று விளக்கம் கூறியுள்ளார்.என்பதை பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்ட ஜமாலி தரப்பால் வந்திருந்தவர்களுக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை.

தலாக் பற்றி இமாம்கள் விளக்கம் சொல்லும் போது ஒருவன் தலாக் சொன்னால் கெட்ட தலாக், அகலத் தலாக், நீளத் தலாக், மார்பு தலாக், தலை தலாக், முடி தலாக், முதுகு தலாக், பெண் குறி தலாக், பெண் குறியில் உள்ள முடியின் அளவுக்கு தலாக், ரத்தம் தலாக் என்றெல்லாம் பகுதி பகுதியாக தலாக் சொல்லலாம் என்று விளக்கம் சொல்லியுள்ளார்கள். இதற்கு பதில் என்ன என்று பி.ஜெ கேட்க ஜமாலி தரப்பினரே முகம் சுழித்து இவ்வளவு அசிங்கமா இமாம்கள் எழுதியுள்ளது என்று நினைக்குமளவு ஆகிவிட்டது.

அதே போல் முடியில்லாத மர்ம உருப்பின் முடியளவுக்கு தலாக் என்று ஒருவன் சொன்னால் அதற்குறிய சட்டம் என்ன என்ற முஹம்மத் பின் ஹஸனிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தொடர்பாக ஜமாலியிடம் கேட்டதற்கு இறுதி வரை பதிலே இல்லை.

27:52வது வசனத்தில் மறுமையின் அடையாளமாக ஒரு மிருகம் வெளிப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான் அந்த மிருகத்தைப் பற்றி விளக்கம் சொன்ன இமாம்கள் அந்த மிருகத்தினை வர்ணிக்கிறார்கள் அதாவது அந்த மிருகம் மாட்டுத் தலையையும் பன்றிக் கண்ணையும் சிங்கத்தின் நெஞ்சையும் பூனையின் இடுப்பையும் ஒட்டகத்தின் காலையும் கொண்டிருக்குமாம் மூஸா நபியின் கைத் தடியையும் கையில் வைத்துக் கொண்டிருக்குமாம்.

மூஸா நபியவர்கள் பாம்மைப் போட்டதைப் பார்த்தவுடன் பிர்அவ்னுக்கு பெரும் சப்தத்துடன் காற்று வெளிப்பட்டதாம் அன்றுதான் அவன் முதலாவது காற்று விட்டானாம்.

இனிமேல் விவாதம் என்ற பேச்சையே பரேலவிகள் எடுக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு சத்தியம் நிலை நாட்டப் பட்டு அசத்தியம் குழி தோண்டிப் புதைக்கப் பட்டது.

விவாத வீடியோக்கள் வெளியிடப் பட்டுள்ளன அதனைப் பார்ப்பவர்கள் இமாம்கள் என்பவர்களின் அசிங்கமான விளக்கங்களையும் ஜமாலியின் சமாலிப்புகளையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.
நன்றி:http://www.rasminmisc.blogspot.com/

சனி, 30 அக்டோபர், 2010

துல்ஹஜ் மாதத்தின் சிறப்புகளும், செய்ய வேண்டியவைகளும்!


காலச் சக்கரத்தை சுழற்றும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...
வைகறையின் மீது சத்தியமாக! பத்து இரவுகள் மீதும் சத்தியமாக! (அல்குர்ஆன் 89:1, 2)

இந்த பத்து இரவுகளைப் பற்றி அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறும் போது...
(துல்ஹஜ் மாதத்தின்) 'பத்து நாட்களில் நல்லறங்கள் செய்வது ஏனைய நாட்களில் அவற்றைச் செய்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதாகும்'; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், 'அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத்(அறப்போர்) செய்வதை விடவுமா? என்று கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்வதை விடவும் சிறந்தது தான். ஆயினும் தனது உயிருடனும், தனது செல்வத்துடனும் புறப்பட்டுச் சென்று அவ்விரண்டில் எதையும் திரும்பக் கொண்டு வராத போராளியைத் தவிர' என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: திர்மிதீ 688

(துல்ஹஜ்) பத்து நாட்களில் செய்யும் எந்த நல்லறமும் 'அய்யாமுத்தஷ்ரீக் நாட்களில் செய்யும் எந்த நல்லறத்தையும் விட சிறந்ததல்ல? என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஜிஹாதை விடவுமா? என்று நபித்தோழர்கள் கேட்டனர். 'தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்து புறப்பட்டு இரண்டையும் இழந்து விட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி 969

இஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை இறையருளால் நாம் அடையவுள்ளோம். இஸ்லாம் குறிப்பிடும் புனித மாதங்களில் இந்த துல்ஹஜ் மாதமும் ஒன்றாகும். மனித இனத்தின் உயர்வுகளுக்கு வழிகாட்டும் ஏக இறைமார்க்கம், இம்மாதத்திலும் மனிதர்கள் இறையருளையும் இறையச்சத்தையும் பெறுவதற்குண்டான நேரிய காரியங்களைக் கற்றுத் தருகிறது.

இஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஹஜ் மற்றும் அதன் கிரியைகளுக்கான காலகட்டம் இம்மாதத்தின் முதல் பத்து நாட்களிலேயே அடங்கியுள்ளது. இன்னும் உம்ரா, அரஃபா தின நோன்பு, பெருநாள் தொழுகை, குர்பானி போன்ற நல்லறங்களும் அல்லாஹ்வின் கிருபையால் துல்ஹஜ்ஜின் பத்து நாட்களிலும் அதைத் தொடர்ந்து அய்யாமுத்தஷ்ரீக் நாட்களிலும் அனுகூலமாயிருப்பதை உணரலாம்.

'...அந்த நாட்களில் 'லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் ஆகியவற்றை அதிகமாக கூறுங்கள்' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: தப்ரானி)

அரஃபா தினத்தில் (ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் நாள்) நோன்பு நோற்பது, அதற்கு முந்தைய ஒரு வருடம், அதற்கடுத்த ஒரு வருடம் ஆகிய இரு வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கை வைக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுகதாதா(ரலி) நூல்: திர்மிதீ 680எனவே அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பது நபிவழியாகும்.

பெருநாள்!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவை வந்தடைந்த போது, மதினாவாசிகளுக்கு விளையாடுவதற்கென இரண்டு நாட்கள் இருந்தன. அந்த இரு நாட்களில் மதீனாவாசிகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் 'இந்த இரு நாட்கள் எவ்வகையைச் சேர்ந்தது? எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், 'அறியாமை காலத்தில் (இந்நாட்களில்) நாங்கள் விளையாடக் கூடியவர்களாக இருந்தோம் என்றனர். (அதைக்கேட்ட) அல்லாஹ்வினதூதர்(ஸல்) அவர்கள் 'நிச்சயமாக அல்லாஹ் அவ்விரு நாட்களை விடச் சிறந்ததாகவும், அவ்விரு நாட்களுக்குப் பதிலாகவும் 'அள்ஹா (எனும் ஹஜ்ஜுப் பெரு) நாளையும், ஃபித்ரு (எனும் ரமளான் பெரு) நாளையும் வழங்கியிருக்கிறான்' என்று கூறினார்கள். அனஸ்(ரலி) நூல்: ஸஹீஹ் அபுதாவுத் 1004

அறியாமைக் காலத்திலிருந்த இரு நாட்களுக்குப் பகரமாக மாட்சிமைமிக்க அல்லாஹ் தன் அடியார்களுக்கு நல்கிய நாட்கள்தான் இந்த இரு பெருநாட்கள். இந்த இரண்டு நாட்களிலும் தொழுவது, குத்பா (பிரசங்கம்) நிகழ்த்துவதோடு வேறு சில காரியங்களைச் செய்வதும் நபிவழியாகும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உண்ணும் வரை ஈதுல்ஃபித்ர் பெருநாளன்று (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஈதுல் அள்ஹா பெருநாளன்று தொழுது முடிக்கும் வரை உண்ண மாட்டார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1756

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஈது (தொழுகை)க்கு நடந்தவர்களாக வந்து, (தொழுதபின்) நடந்தே திரும்பிச் செல்வார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் ஸஅது(ரலி) நூல்: ஸஹீஹ் இப்னுமாஜா 1070

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்;முதலில் தொழுகையையே துவக்கு வார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப் பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (வலியுறுத்த வேண்டியதை) வலியுறுத்துவார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்கு படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப்பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவார்கள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள். அறிவிப்பவர்: அபூஸயீத்(ரலி) நூல்: புகாரி 956

நபி(ஸல்) அவர்கள் கன்னிப் பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் திடலுக்கு) புறப்படச் செய்யும்படி எங்களை ஏவினார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டு விலகி இருப்பார்கள். உம்மு அதிய்யா(ரலி) நூல்: புகாரி 974

நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் பாங்கு சொல்லப்பட்டதில்லை. அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 960

(ஈதுல்)ஃபித்ருவிலும், (ஈதுல்)அள்ஹாவிலும் நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் ருகூவின் தக்பீர் நீங்கலாக (இரண்டு ரக்அத்களிலும் கிராஅத்துக்கு முன்) ஏழு-ஐந்து தக்பீர்களை கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: ஸஹீஹ் அபூதாவுத் 1043

நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். 'யார் நமது தொழுகையைத் தொழுது, நாம் குர்பானி கொடுப்பது போல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத் தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர். என்று குறிப்பிட்டார்கள். பரா பின் ஆஸிப்(ரலி) நூல்: புகாரி 955

பெருநாள் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் (போவதற்கும், வருவதற்கும்) பாதைகளை மாற்றிக் கொள்வார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: புகாரி 986

பெருநாட்களையும், திருநாட்களையும் வீணான கேளிக்கைகளிலும் ஆடம்பரங்களிலும் திளைத்துக் கழிக்கின்ற உலகோர்க்கு மத்தியில் அந்த தினங்களையும் இறைவனுக்கு உவப்பான வழிகளில் கண்ணியப்படுத்தச் செய்யும் மார்க்கத்தின் அம்சங்களை கடைப்பிடிப்போமாக! அல்லாஹ் கருணையாளன்!

அன்புடன் வெளியிடுவோர்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (JT) - துபை மண்டலம்

புதன், 27 அக்டோபர், 2010

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!

தமிழகத்தில் பல வருடங்கள் பக்தி பரவசத்துடன் ஓதிவரும் சுப்ஹான மவ்லித் இஸ்லாத்திற்கு எதிரானது என்று பல ஆதாரங்களை எடுத்துக்காட்டி மக்களை சிந்திக்க வைத்துள்ளோம்.

மவ்லித் என்பது நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் அவை மூடநம்பிக்கையை வளர்ப்பதற்காகவும் உலக நோக்கத்திற்காகவும் தொகுப்பப்பட்டதுதான் என்பதை மவ்லித் ஓத வேண்டும் என்று வலியுறுத்தும் மவ்லவி தேங்கை சர்புத்தீன் என்பவர் எழுதிய சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் என்ற புத்தகத்திலிருந்து எடுத்து எழுதியுள்ளோம் வாசகர்கள் கவனத்தில் கொள்க!

சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார்?
தமிழகம் எங்கும் பரவலாக பாடப்படும் சுப்ஹான மவ்லிதை எழுதியவர் யார் என்பது தெரியாது. மகுடமாய்த் திகழும் சுப்ஹான் மவ்லிதை கல்விக்கடல் கஸ்ஸாலி இமாம் (ரஹ்) அவர்களோ, அல்இமாமுல் கத்தீப் முஹம்மதுல் மதனி (ரஹ்) அவர்களோ இயற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ‘இயற்றியவர் யார்?’ என்று திட்டவட்டமாக தெரியவில்லை. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 5)

சுப்ஹான மவ்லிதின் பெயர் காரணம்?
இந்த மவ்லித் ”ஸுப்ஹான அஸீஸில் ஃகஃப்பார் என்று தொடங்குவதால் இதன் முதல் சொல்லான ஸுப்ஹான என்பதே இந்த மவ்லிதுக்குரிய பெயராக அமைந்தது. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம்: 5)

மவ்லித்’ என்பதின் பொருள்?
‘மவ்லிது’ எனும் அரபிச் சொல்லின் அகராதிப் பொருள் ‘பிறந்த நேரம்’ அல்லது ‘பிறந்த இடம்’ என்பதாகும். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 8)

மவ்லித் ஓதுதலை உருவாக்கியவர் யார்?
மவ்லிது ஓதும் அமலை அரசின் பெருவிழாக்களில் முக்கியம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்திவர்,தலை சிறந்த-வள்ளல் தன்மை மிக்க-அரசர்களில் ஒருவரான ‘அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீத் கவ்கப்ரீ – பின்- ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்’ என்பவர் ஆவார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

ஆஹா மெகா ஆஃபர்
உங்கள் நோக்கம் நிறைவேற உங்களுக்கு முழுயைக பாதுகாப்பு பெற வருடத்தில் ஒருமாதம் மெகா ஆஃபர் நாள் வந்துள்ளது என்று மவ்லித் பிரியர்கள் அறிவித்துள்ளனர்.

மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லிதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டி ருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஈமானின் வெற்றிக்கு இலகுவான வழி
மறுமையில் வெற்றிபெற தொழுகை நோன்பு போன்ற எந்த கடமையும் செய்யாமல் இலகுவாக செல்லும் வழியை சொல்லுகிறார்கள் மவ்லித் பிரியர்கள்.

”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லிது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால் அவர், ஈமானின் மூலம் வெற்றிபெற்றுவிட்டார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் அல்லாஹ்வின் வெற்றிப்பெற்றவர்களை யார்? அவர்களின் நடவடிக்கைள் என்ன? என்று கூறுவதை பாருங்கள் : நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர்,(அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். வீணானதைப் புறக்கணிப்பார்கள். ஸகாத்தையும் நிறைவேற்றுவார்கள். தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர, தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். தமது அமானிதங்களையும், தமது உடன்படிக்கையையும் அவர்கள் பேணுவார்கள். மேலும் அவர்கள் தமது தொழுகை களைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.(23 : 1-11)

செலவு செய்யும் முறை
நம்மிடம் இருக்கும் செல்வத்தை எவ்வாறு செலவு செய்வது என்பதை மவ்லிது பிரியர்கள் கூறுவதை பாருங்கள் : ”உஹது மலையளவு தங்கம் என்னிடம் இருக்குமானால் நான் அதை நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது ஓதுவதற்காகச் செலவு செய்ய விரும்புவேன்” என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

ஆனால் திருக்குர்ஆனும் நபி மொழிகளும் கூறுவதை பாருங்கள். தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். “நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்” எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 214)

மவ்லித் சாப்பாடு கொடுத்தால் சுவர்க்கம்?
”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப் படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

அமுத சுரபி மவ்லித்
அள்ள அள்ள குறையாத அமுத சுரபியாக செல்வத்தை அள்ளித்தரும் பாத்திரம் மவ்லிதாம்.

”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டு விட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார்.மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”. (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

நல்லாடியர்களுடன் சுவர்க்கத்தில் இருக்க சுலபமான வழி
எந்த சிரமமும் இல்லாமல் சுவர்க்கத்திற்கு செல்ல அழகான ஒரு வழியை காட்டுகிறது மவ்லித்.

”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள்,ஷுதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன் , அல்லாஹ் எழுப்புவான் மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

படைத்தவன் கூறும் வழிமுறையை கவனியுங்கள் : அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4 : 19)

மலக்குகளின் வருகை
”எந்தவொரு வீட்டிலோ பள்ளி வாசலிலோ மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன்கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்” (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் : அல்லாஹ்வின் ஏதாவது ஒரு வீட்டில் ஒரு கூட்டத்தினர் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் வேதத்தை ஓதி அதை தங்களுக்குள் பாடம் நடத்தினால் அவர்கள் மீது அமைதி இறங்கும் அவர்களை ரஹ்மத் சூழ்ந்து கொள்ளும் மலக்குமார்கள் அவர்களை போர்த்திக் கொள்ளவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் (4867)

மவ்லிதுகள் தீனுக்காக அல்ல! தீனிக்காக!
மாநபி (ஸல்) மவ்லிதையொட்டி இந்த (அல்மலிக்குல் முழஃப்ஃபர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலிய்யிப்னு புக்தகீன்) மன்னர் ஏற்பாடு செய்த விருந்து வைபவத்தில் ஒரு முறை பங்கேற்றவர்களில் ஒருவர் கூறுகிறார்.’ அவ்விருந்தில் சமைக்கப்பட்ட ஐயாயிரம் ஆட்டுத் தலைகள், பத்தாயிரம் கோழிகள், ஒரு இலட்சதம் வெண்ணெய்ப் பலகாரங்கள் முப்பதாயிரம் ஹல்வா தட்டைகள் இருந்தன. அந்த விருந்தில் ஞானிகள் மற்றும் சூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

அவர்களுக்கொல்லாம் மன்னர், பொன்னாடைகள் போர்த்திக் கவுரவித்தார்,மேலும் அன்பளிப்புகளும் வழங்கினார். லுஹர் முதல் சுபுஹ் வரை சூஃபிகளுக்காவே மன்னர் தனியாக ஒரு இசையரங்கம் ஏற்பாடு செய்தார். அதில் பாடப்பட்ட பேரின்பப்பாடல் கேட்டு குதித்துக் களித்த சூஃபிகளுடன் சேர்ந்து மன்னரும் பக்திப் பரவசத்துடன் ஆடினார்.

ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்ஃபர் மாநபி (ஸல்) மவ்லிதுக்காவே செலவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

தொகுப்பு:-எம்.ஐ சுலைமான். TNTJ

செவ்வாய், 26 அக்டோபர், 2010

இந்தியா டுடே: பி.ஜே. யின் நேர்காணல்!








(பெரிதாக்கி பார்க்க அதன் மீது கிளிக் செய்யவும்)

19 இயக்கமே!!

திங்கள், 25 அக்டோபர், 2010

மத்ஹபுக்கு வக்காலத்து வாங்கச் வந்தவர் மானத்தை இழந்தார்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் கடந்த இரண்டு (2010-10-23.24) நாட்களாக சென்னை டி நகர் தியாகராஜர் மண்டபத்தில் வைத்து பகிரங்க விவாதம் நடந்தது.

இதில் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.

சுன்னத் ஜமாத் ஐ.பேரவையின் நிலைபாடு :
சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் அசிங்கங்களும் குர்ஆன் ஹதீஸிற்க்கு மாற்றமான கருத்துக்களும் இருக்கின்றன.

தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு :

சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் எந்தவொரு அசிங்கங்களோ குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான கருத்துக்களோ இல்லையென்பதும்.ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களின் பேச்சுக்கள் எழுத்துக்கள் தப்ஸீர்கள் ஆகியவற்றில் தான் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களும் கயமைகளும் பொய்களும் ஆபாசங்களும் நிறைந்துள்ளன.

விவாதத்தின் ஆரம்பமும் அரண்டு போன ஜமாலியும்.

விவாதம் ஆரம்பிப்பதற்காக இரு தரப்பு நடுவர்கள் சார்பாகவும் நாணயச் சுழற்சி மேற் கொள்ளப்பட்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தவ்ஹீத் ஜமாத் தரப்பால் சகோதரர் பி.ஜெ தனது வாதத்தை ஆரம்பித்தார்.

பொய்களின் மொத்த உருவம் ஜமாலி.

விவாதத்தின் ஒப்பந்தப் படி ஜமாலியினதும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களினதும் ஆபாசமான அசிங்கமான முன்னுக்குப் பின் முரனான கருத்துக்களை சகோதரர் பி.ஜெ பட்டியலிட ஆரம்பித்தார்.

முதலாவதாக அபூதாலிப் முஸ்லிம் என்று ஓரிடத்திலும் இன்னோரிடத்தில் அபூதாலிம் காபிர் என்றும் ஜமாலி பேசிய இரண்டு வீடியோ ஆதாரங்களை திரையில் போட்டுக் காட்டினார் சகோதரரர் பி.ஜெ அவர்கள்.

இடத்திற்கு தகுந்தால் போல் பேசுவதில் இவர் வல்லவர் என்பதற்கு எடுத்துக் காட்டப்பட்ட இந்த வீடியோவில் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கு இப்னு அஸாகீர் நஸயீ அபூதாவுத் ஆகிய கிரந்தங்களில் இருந்து ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டி அதன் ஒரு பகுதியை சொல்லி மறு பகுதியை மறைத்திருந்தார்.
அந்த ஹதீஸின் இரண்டாம் பகுதியே அபூதாலிப் அவர்கள் காபிர் தான் என்பதற்கு சான்றாக இருந்தது.

மீதியை ஏன் மறைத்தீர்கள் மக்கள் மத்தியில் ஏன் இப்படி பொய்களையும் புரட்டுகளையும் பறப்புகிறீர்கள் என்று விவாதத்தின் இருதிவரைக் கேட்டும் இந்தக் கேள்விக்கு ஜமாலி பதிலே தரவில்லை.

முதல் வாதத்திலேயே உளற ஆரம்பித்த ஜமாலி.

பி.ஜெவின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் ஆபாசங்கள் அசிங்கங்கள் இருக்கிறது என்று வாதிட வந்த ஜமாலி அவர்கள்.முதல் வாதத்திலேயே தலைபிற்கு கொஞ்சம் கூட சம்பந்தமின்றி பேச ஆரம்பித்தார்.

பி.ஜெ ஆண்கள் தொடையை மறைக்க வேண்டும் என்று கூறினார்.தற்போது ஆண்கள் தொடையை திறந்து கொள்ள அனுமதியுண்டு என்று கூறுகிறார் இது அவர்களது வெளியீடுகளில் உள்ள அபத்தம் என்று முதல் வாதத்தையும் கலாலா தொடர்பாக சகோதரர் பி.ஜெ அவர்களின் திருக்குர் ஆன் மொழியாக்கத்தில் 4வது அத்தியாயம் 12வது வசனத்திற்கு கொடுத்த விளக்கத்தினை அரைகுறையாக வாசித்துவிட்டு அதில் தவறு உண்டு என்று தனது இரண்டாவது வாதத்தையும் முன்வைத்தார்.

முரண்பாடு என்றால் என்னவென்று ஜமாலிக்கு பாடம் நடத்திய பி.ஜெ

விவாதம் ஆரம்பித்த அடுத்த கணமே உளறுவதற்கும் ஆரம்பித்தார் ஜமாலி இருந்தாலும் அவருடைய உளறளுக்கும் விவாதம் என்பதால் பதில் கொடுக்க வேண்டியது பி.ஜெயின் கடமை என்பதால் முதலில் முரண்பாடு என்றால் என்ன என்று விளக்கம் சொன்னார்.

ஒருவர் ஆரம்பத்தில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு பிறகு தான் சொன்ன கருத்து தவறு தற்போது திருத்திக் கொண்டு இந்தக் கருத்துக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்து விட்டு முதலாவது கூறிய கருத்துக்கு மாற்றமாக கருத்துச் சொன்னால் அதற்குப் பெயர் முரண்பாடு அல்ல திருத்தம் என்பதை கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் பாடமாக நடத்திக் காட்டினார் சகோதரர் பி.ஜெ அவர்கள்.

இதே நேரம் ஜமாலியைப் போல் ஒரு மேடையில் ஒரு கருத்தையும் இன்னொரு மேடையில் அதற்கு மாற்றமாக இன்னொரு கருத்தையும் சொல்லிவிட்டு மக்கள் மத்தியில் ஒரு கொள்கையற்றவனாக தன்னை காட்டிக் கொள்வதென்பது மூடத்தனம் கயமைத்தனம் பித்தலாட்டம் முரண்பாடு என்பதையும் மிக அழகாக விளக்கிச் சொன்னார்.

கிழித்தெறியப் பட்ட மத்ஹபு குப்பைகளும் மாட்டிக் கொண்ட ஜமாலியும்.

ஜமாலியுடையவும் அவர் ஆதரிப்பவர்களினதும் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இருக்கும் முரண்பாடுகளையும் ஆபாசங்களையும் கயமைத்தனங்களையும் பட்டியலிட ஆரம்பித்தார் பி.ஜெ

ஆனால் சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட ஒரு கேள்விக்குக் கூட ஜமாலியினால் இறுதி வரை பதில் தரவே முடியவில்லை.

மத்ஹபுகளில் மலிந்திருந்த அசிங்கங்கள்.

ஹனபி மற்றும் ஷாபி போன்ற மத்ஹபுகளில் ஒரு சாதாரண மனிதன் கூட நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசங்களும் அபத்தங்களும் கயமைகளும் நிறைந்துள்ளதை சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்டு சொன்னார்.

சகோதரர் பி.ஜெ பட்டியலிட்ட மத்ஹபு அசிங்கங்களை தலைப்புவாரியாக இங்கு குறிப்பிடுகிறோம்

1.தானாக காற்றை விட்டு தொழுகைகளை முடிக்கலாம்.

2.கிழக்கிலிருக்கும் ஒருவரும் மேற்கில் இருக்கும் இன்னொருவரும் திருமணம் முடிக்கலாம்.அப்படி முடித்து ஆறு மாதத்தில் மனைவி பிள்ளை பெற்றால் அதனை குறை சொல்ல முடியாது ஏனெனில் கராமத்தின் மூலம் அவன் அவளிடத்தில் வந்து போயிருக்கக் கூடும்.

3.ஹஜ்ஜுடைய நேரத்தில் மனைவி தவிர யாரோடு வேண்டுமானாலும் உடலுறவு கொண்டாலும் ஹஜ் முறியாது.

4.ஹஜ்ஜுடைய காலத்தில் கழுதையுடன் புணர்வது பெண்ணின் ஹஜ்ஜை முறிக்கும் ஆணின் ஹஜ்ஜை முறிக்காது.

5.சிறுமியுடன் விபச்சாரம் செய்தால் தண்டனையில்லை.(மத்ஹபு நூல்கள் அதற்காக சொல்லும் காரணங்களை விவாதத்தில் பார்த்துக் கொள்ளவும்.)

6.ஊமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை

7.விபச்சாரம் செய்துவிட்டு பணம் கொடுத்துவிட்டால் அதற்கு தண்டனை இல்லை.

8.பைத்தியத்துடன் விபச்சாரம் செய்தால் தண்டனை கிடையாது.

9.வெளிநாட்டுக் காபிர் உள்நாட்டு முஸ்லிம் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் காபிருக்கு தண்டனை கிடையாது.

10.ஒரு பெண்ணை கண்ணியா இல்லையா என்று கண்டுபிடிக்க அவளை சுவற்றில் சிறு நீர் கழிக்கச் செய்ய வேண்டும்.அது சுவற்றில் படுகிறதா? இல்லையா? என்பதை வைத்து அவள் கண்ணியா? இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.என்ற கேவலமான வழிமுறைகள்.

11.விபச்சாரம் செய்து மாட்டிக் கொண்டவன் விபச்சாரியை மனைவி என்று சொல்லிவிட்டால் தண்டனை இல்லை.

12.தனது மர்ம உருப்பை தன்னுடைய பின் துவாரத்தில் நுழைத்தால் அவனுக்கு சட்டம் என்ன? என்று அதற்கு சட்டம் தொகுத்துள்ள மத்ஹபுவாதிகள்.

13.தான் திருமணம் செய்த மனைவியுடன் இரவில் உணர்ச்சியுடன் நெருங்கும் போது அவளுடைய மகளின் மீது தவறுதலாக கை பட்டுவிட்டால் மனைவிக்கும் கணவனுக்கும் உள்ள திருமன உறவு நீங்கிவிடும்.

14.இரண்டு பேர் திருடச் சென்று ஒருவன் உள்ளே சென்று திருடிவிட்டு வெளியிலிருப்பவனுக்கு அதனை கொடுத்தால் இருவருக்கும் தண்டனை இல்லை.(உள்ளே போனவன் திருடியதை வெளியில் கொண்டுவரவில்லை வெளியில் இருந்தவன் உள்ளே போய் திருடவில்லை இதுதான் மத்ஹபின் விளக்கமாம்.)

15.தூங்கி எழுந்ததும் பல் துலக்கும் போது முதலாவது வரும் எச்சிலை விழுங்கிவிட வேண்டும்.

16.ஹஜ்ஜின் போது சுய இன்பம் செய்தால் அது ஹஜ்ஜை பாதிக்காது.

17.தொழ வைத்த இமாமையே குர்பானி கொடுக்களாம்.

18.சிறிதளவு கஞ்சா அடிக்கலாம்.

19.குழந்தையை கடத்தியவனுக்கு தண்டனை இல்லை.

20.பல் துலக்கும் போது தனது இரண்டு கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களைக் கொண்டு ஒரே நேரத்தில் பல் துலக்க வேண்டும்.

மத்ஹபில் உள்ள குப்பைகள் பட்டியல் போட்டு எடுத்துக் காண்பித்தார் சகோதர் பி.ஜெ அந்த அசிங்கங்களுக்கு விவாதத்தின் இறுதி வரை எந்த ஒரு பதிலையும் தராது தனது தோல்வியை ஒத்துக் கொண்டு அமைதி காத்தார் ஜமாலி.
நபியவர்கள் மீதே பொய் சொன்ன ஜமாலி. எடுத்துக் காட்டும் படி சவால் விட்டார் பி.ஜெ.

கழுதையுடன் புணருவது தொடர்பான மத்ஹபு குப்பைகளை பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்டும் போது மத்ஹபு தொடர்பாக எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாத ஜமாலி இதற்கு மட்டும் நபியவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஸை சொன்னார்.

அதாவது : யார் மிருகத்துடன் புணர்கிறானோ அவனுக்கு தண்டனை இல்லை. என்று நபியவர்கள் கூறிய செய்தி திர்மிதியில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக பொய் சொன்னார் ஜமாலி.

அப்படி ஒரு ஹதீஸே இல்லை இருந்தால் திர்மிதியில் இருந்து எடுத்துக் காட்டுங்கள்.என்று சவால் விட்டார் பி.ஜெ ஆனால் நபியின் மீது பொய் சொன்ன பொய்யர் ஜமாலி இருதிவரை அப்படி ஒரு ஹதீஸைக் காட்டவே இல்லை.

ஜமாலி நபியவர்கள் மீது துணிந்து இட்டுக் கட்டிய பொய்கள்.

அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக இப்னு அஸாகீரில் உள்ளதாக குறிப்பிட்டார் ஜமாலி ஆனால் இப்னு அஸாகீரில் உள்ள செய்தியோ அபூதாலிப் காபிர் என்பதைத் தான் குறிப்பிடுகிறது.

நபியவர்கள் அபூதாலிபை காபிர் என்று எந்த ஹதீஸில் சொன்னாரோ அதே ஹதீஸின் ஒரு பகுதியை மறைத்து அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக நபியின் மீதே பொய் சொன்னார் ஜமாலி.

இது தொடர்பாக அபூதாவுத் நஸாயி போன்ற கிரந்தங்களிலும் ஹதீஸ் வருவதாக சொன்னவர் கடைசி வரை ஹதீஸைக் காட்டவே இல்லை.

புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களிலும் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கான ஆதாரம் இருப்பாக சொன்னார் ஜமாலி ஆனால் அதற்கு மாற்றமாக அபூதாலிப் காபிர் என்பதற்கான ஆதாரம் தான் புகாரி முஸ்லிமில் உள்ளது.

வுழூ செய்யும் போது வாய்ப் பகுதியை மூன்று முறை தனியாகவும் மூக்கை மூன்று முறை தனியாகவும் நபியவர்கள் கழுவியதாக புகாரியை ஆதாரம் காட்டி பொய் சொன்னார்.

பெண்கள் ஜும்மாத் தொழுகைக்கு வரக்கூடாது என்று நபியவர்கள் சொன்னதாக முஸ்லிமில் ஹதீஸ் இருக்கிறது என்று இல்லாத ஹதீஸை இருப்பதாக நபியவர்கள் மீது இட்டுக் கட்டினார்.

பெருநாள் முடிந்து இரண்டு நாட்கள் வரை குர்பானி கொடுக்களாம் என்ற நபியவர்கள் கூறியதாக முஅத்தாவில் ஹதீஸ் இருப்பதாக இல்லாத செய்தியை நபியவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டினார்.

யார் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளட்டும் (முஸ்லிம்)

என்ற நபி மொழியை எடுத்துக் காட்டி இந்த ஹதீஸிற்கு ஏற்றாட் போல் உங்கள் வாதம் உள்ளது என்பதை பி.ஜெ அவர்கள் விவாதக் கலத்திலேயே ஜமாலியிடம் தெரிவித்தார்.

தண்டவாளம் ஏறியது ஜமாலியின் வண்டவாளம்.

விவாதத்தில் தவ்ஹீத் ஜமாத் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக செயல்படுகிறது என்று வாதிட வந்த ஜமாலியின் முரண்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் வீடியோ காட்சியாக போட்டுடைத்தார் பி.ஜெ

அதாவது கூட்டத்திற்கு தகுந்தாற் போல் இடத்திற்கு ஏற்றாற் போல் பேசுவதில் வல்லவரான ஜமாலி ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு தில்லு முல்லு வேலைகளை செய்வார்.

அவை வீடியோவாக அரங்கத்தில் போட்டுக் காட்டப்பட்டு அவரிடமே விளக்கம் கேட்கப் பட்டது.

விவாதம் செய்வாதாக அரங்கத்திற்கு வந்தவர் மதில் மேல் குந்திய பூனை போல் இருதி வரை உளரிக் கொட்டிக் கொண்டே இருந்தார்.

அரங்கத்தில் போடப்பட்ட ஜமாலியின் ஒன்றுக் கொன்று முரண்பட்ட வீடியோக்கள் தலைப்பு வாரியாக.

மார்க்க விஷயத்தில் பித்அத் புதிதாக ஒன்றும் உருவாகாது ஆனால் உலக விஷயத்தில் உருவாகும் (வாகனங்கள் நாம் பயன் படுத்தும் பொருட்கள்) என்று ஓரிடத்தில் பேசிய ஜமாலி இன்னோரிடத்தில் தான் சொன்னதை தானே மறுத்துப் பேசிய காட்சி போட்டுக் காட்டப் பட்டது.

அபூதாலிப் முஸ்லிம் என்று ஒரு மேடையிலும் அவர் காபிர் தான் என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய வீடியோ அரங்கத்தினர் மத்தியில் போட்டுக் காண்பிக்கப் பட்டது.

இறைவன் அர்ஷில் இருக்கிறான் என்று ஒரு மேடையிலும் அர்ஷில் இல்லை என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப் பட்டது.

ஒரு விஷயம் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை என்று தமிழகத்திலும் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்று இலங்கையிலும் ஜமாலி பேசிய வீடியோ போடப்பட்டு முரண்பாட்டிட்கு விளக்கம் கோறப்பட்டது.

மார்க்க விஷயத்திற்கு சவூதி ஆதாரமாகாது என்று ஒரு வீடியோவிலும் ஆதாரமாகும் என்று இன்னோர் வீடியோவிலும் தனக்குத் தானே முரண்பட்ட காட்சி அரங்கத்தினர் முன்னிலையில் போடப்பட்டது.

தவ்ஹீத் வாதிகள் மதிக்கும் அறிஞர்களை மரியாதையாக தான் பேசுவதாக குறிப்பிட்ட ஜமாலியிடம் இப்னு தைமிய்யா அவர்களை அவன் இவன் என்று ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப் பட்டது.

இறைவனுக்கு உருவம் உண்டு என்று இப்னு தைமிய்யா கூட கூறவில்லை என்று கடந்த விவாதத்தில் வாதித்தவர் இப்னு தைமிய்யா இறைவனுக்கு உருவம் உண்டு என்று கூறினார் என இப்னு தைமிய்யாவை மேடையில் வைத்து வசை பாடும் காட்சி போட்டுக் காண்பிக்கப் பட்டது.

இப்படி தனக்குத் தானே ஜமாலி அவர்கள் முரண்பட்டு பேசிய விடியோக்கள் அரங்கத்தில் திரையில் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

அந்த வீடியோக்களை பார்த்தவுடன் அவர்கள் தரப்பு மக்களே ஜமாலி யார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள்.

போடப்பட்ட எந்த ஒரு வீடியோவுக்கும் பதில் தர முடியாமல் திண்டாடினார் ஜமாலி.

பி.ஜெ விட்ட சவாலும் விரண்டோடிய ஜமாலியும்.

மத்ஹபு நூல்களில் உள்ள ஆபாசங்களையும் அசிங்கங்களையும் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட போது அதில் உள்ள அசிங்கங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேச திராணியற்றுப் போன ஜமாலி இப்படியெல்லாம் அசிங்கங்களை இவர்கள் வாசித்துக் காட்டுகிறார்கள் என்று நீழிக் கண்ணீர் வடித்தார்.

அப்போது பி.ஜெ அவர்கள் அவரிடத்தில் மத்ஹபில் உள்ள அசிங்கத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து அசிங்கம் இல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல் நீங்கள் இதை தைரியம் இருந்தால் படித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார்.

ஆனால் விவாதத்தின் இருதி வரை அதை அவர் படிக்கவே இல்லை.

விவாதத்திற்கு அவர்கள் தரப்பால் வந்தவர்களே முகம் சுழித்துப் போகும் அளவுக்குத் தான் ஜமாலியின் வாதங்கள் அமைந்தன.

அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.
அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களால் ஊதி அணைத்துவிட நினைக்கிறார்கள்.தன்னை மறுப்போர் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(61:8)

தொகுப்பு : RASMIN M.I.Sc

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

துவங்கியது ஜனவரி 4 போராட்ட சுவர் விளம்பரங்கள்-திருச்சி சமஸ்பிரான் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளையில் பாபர் மஸ்ஜித் வழக்கில் அலஹாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடைபெறவுள்ள ஜனவரி 4 போராட்டத்தை பற்றிய விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் வண்ணம் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது


புதன், 20 அக்டோபர், 2010

செல்கல்பட்டில் கூடிய" தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்"-தின் வின் மாநில செயற்குழு!


17.10.2010 அன்று இறையருளால் செங்கல் பட்டு ஷஃபா மர்வா மஹாலில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.


1. கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று அலகாபாத் நீதிமன்றம் 60 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த பாபர் மஸ்ஜித் தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் மீழ முடியாத அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது. அது இந்திய நாட்டின் அரசியல் சட்ட வரம்புகளைத் தாண்டி,இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு முரணாக அளிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களின் வாழ்வுரிமையான வழிபாட்டு உரிமையை பறித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டத்திற்கு புறம்பானது.

முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியும் அக்கிரமும் ஆகும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்துகளை பதிவு செய்து தங்களுடைய கடுமையான ஆட்சேபணைகளையும் கண்டணங்களையும் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்ப்பை தங்களுடைய நீதிமன்ற அனுபவம்,அறிவு ஞானம் எனும் உலைக்கூடத்தில் இராசயனப் பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது

1992 டிசம்பர் 6ந்தேதி அன்று இந்துத்துவா சங்கபரிவார வன்முறைக்கும்பல் பாபர் மஸ்ஜிதை அக்கிரமமாக இடித்து தரைமட்டமாக்கி தகர்த்தெரிந்தது.. இந்த அக்கிரம செயலை நீதிமன்றம் கண்டு கொள்ளாததுடன் அதைக் கண்டிக்காமலும் விட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பான கோரச் செயலை மன்னித்து அச்செயலை புனிமாக்கியுள்ளது. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்னர் 1993 ஐனவரி 7ம் தேதி அன்று குடியரசுத் தலைவர் ஆணைப்படி பாபரி மஸ்ஜிதை சுற்றி அமைந்துள்ளநிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியது. பின்னர் அதை நாடாளு மன்றத்தில் சட்டமாகக் கொண்டு வந்தது..

அந்தச் சட்டத்தின் விதி எண் : 4 உட்பிரிவு (3) பாபரி மஸ்ஜித் தொடர்பான அனைத்து உரிமையியல் வழக்குகளை செல்லாதது என்று அறிவித்திருந்தது.
பாபரி மஸ்ஜித் வழக்கு குறித்து குடியரசுத் தலைவர் கேட்டிருந்த கருத்திற்கு உச்ச நீதிமன்றம் அக்டோபர் 24, 1994ல் அளித்த தீர்ப்பில் இந்த பிரிவை ரத்து செய்தது. அந்த தீர்ப்பின் போது முஸ்லிம்கள் சர்ச்சைக்குரிய நிலத்தை 1528 லிருந்து 400 ஆண்டுகாலமாக அனுபவித்து வந்துள்ளனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய எதிரிடை அனுபவ உரிமை (Adverse possession) யை இது பாதிக்கச் செய்து பறித்து விடுவதால் இது செல்லாது என்று குறிப்பிட்டது. அதன்படி அலகாபாத் உயர் நீதிமன்றம் 30.09.2010 அன்று அளித்த இந்த தீர்ப்பு, உச்ச நீதி மன்றம் 1994 அக்டோபர் 24 அன்று அளித்த தீர்ப்பிற்கு எதிரானது.

ஒரு சொத்து குறித்த உரிமை தொடர்பான வழக்கு நீதி மன்றத்திற்கு வரும் போது அந்தச் சொத்து தனக்குச் சொந்தம் என்று நிரூபிக்க வேண்டிய பொருப்பும் கடமையும் சொத்தின் சொந்தக்காரர் மீது இல்லை. மாறாக இந்தச் சொத்திற்கு எதிராக யார் வழக்குத் தொடுக்கின்றாரோ அந்தப் பிரதிவாதியின் மீதுதான் அந்தப் பொறுப்பு இருக்கின்றது. இதுதான் இந்திய சாட்சிய சட்ட ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட 110 ன் விதியாகும். அலகாபாத் உயர்நீதிமன்றம் இதை அப்பட்டமாக மீறி உள்ளது. பாபரி மஸ்ஜிதின் உரிமையாளரும் அனுபவதாரருமான முஸ்லிம்களை வெளியில் தள்ளியதோடு மட்டுமல்லாமல் அவர்கள்தான் இந்த சொத்துக்கு உரியவர்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்பதை முஸ்லிம்கள் மீது சுமத்தி அவர்களிடமிருந்து இந்தச் சொத்தை அநியாயமாகப் பறித்துள்ளது.

தொல்லியல் ஆய்வு என்பது இந்திய சாட்சிய சட்டத்தின் கீழ் உள்ளதல்ல, நீதிமன்ற வரம்பிற்கு உட்பட்டதல்ல என்பது தெரிந்தும் அதையே முழு ஆதாரமாகக் கொண்டு அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தொல்லியல் ஆய்வு என்பது பாபரி மஸ்ஜித் இடிக்கப்படாத பட்சத்தில் சாத்தியமானதுமல்ல. பாபரி மஸ்ஜித் என்று ஒன்று அந்த இடத்திலேயே இல்லாதது போன்று தொல்லியல் ஆய்விற்கு உத்தரவிட்டு அதன்படியே தீர்ப்பும் அளித்தது அநியாயமும் அக்கிரமும் ஆகும். இது போன்று பாபரி மஸ்ஜித் என்றொரு கட்டிடம் இல்லாதது போன்றும் அது இடிக்கப்படாதது போன்றும் அந்த நிலத்தை மூன்று பங்காக பங்கு பிரித்திருப்பது இந்தத் தீர்ப்பின் மாபெரும் துரோகமாகும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியல் சாசன சட்டத்திற்கு அப்பாற்பட்டும், இந்திய அரசின் உயிர்மூச்சான மதச்சார்பின்மைக்கு எதிராகவும் பெரும்பான்மை மதத்தினரின் மூடநம்பிக்கை, புராணம், கற்பனை அடிப்படையிலும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மதநம்பிக்கை , புராணம் ,இதிகாசம் என்ற அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் இந்த அடிப்படையில் பிறமதத்தவரின் வழிபாட்டுத் தலங்கள் அல்லாமல் பிறருடைய சொத்துக்களை ஆக்கிரமிப்பதற்கும் அபகரிப்பதற்கும் இந்தத் தீர்ப்பு வழிகோலியுள்ளது. இப்படி இந்திய ஒற்றுமைக்கும் மதச் சார்பின்மைக்கும் வேட்டு வைப்பது இந்தத் தீர்ப்பின் மாபெரும் பாதக பயங்கர அம்சமாகும்.

சங்கப்பரிவாரம் இதுவரை எழுதியும் பேசியும் வந்த வசனத்தை அலஹாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பாக தந்துள்ளது. ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுவது போல் Judgment delivered justice not delivered (தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதி நியாயம் வழங்கப்படவில்லை) என்று இந்திய சட்ட வல்லுநர்கள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர்கள் குறிப்பிடுகின்ற அநியாயமான இந்தத் தீர்ப்பை முஸ்லிம் சமுதாயம் ஏற்கவில்லை. இனியும் ஏற்பதில்லை என்று கூறி இந்தத் தீர்ப்பை வன்மையாக கடுமையாக இந்தச் செயற்குழு கண்டிக்கின்றது.

2. ராமர் பிறந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டியது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு நேர்மாறானது. அது பள்ளிவாசலே இல்லை என்று கூறி இஸ்லாமிய மார்க்கத்திற்கு முட்டாள் தனமான விளக்கம் கொடுத்து இந்திய அரசியல் சட்டப்படி கூட தீர்ப்பளிக்க தகுதியற்ற நீதிபதி தரம்வீர் சர்மா வை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

3. பாபரி மஸ்ஜித் தீர்ப்பு குறித்து யாருக்கும் அஞ்சாமல் நியாயமான கருத்து தெரிவித்த முலாயம் சிங் யாதவ்,லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரை இந்த செயற்குழு வெகுவாகப் பாராட்டுகின்றது.

4. இந்தத் தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மதம் கடந்து ஆர்ப்பரித்து குரல் எழுப்புகின்ற நடுநிலையாளர்கள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், ஊடகத் துறையினர் உட்பட அனைவருக்கும் இந்தச் செயற்குழு நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

5. பாபர் மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு முடிவு செய்த பாபரி மஸ்ஜித் செயல்பாட்டுக் குழுவிற்கு (BMAC) இச்செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

6. அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான மாத்திரத்தில் இதை வரவேற்ற திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், சமுதாய இயக்கங்கள், குறிப்பாக இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம் இது வெற்றியின் முதற்படிக்கட்டு என்று தனது முகத்திரையை கிழித்து தனது துரோகத் தனத்தை வெளிப்படுத்திய தமுமுக, மற்றும் மமக வை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

7. பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்ற அத்வானி போன்றோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மென்மையான அணுகு முறை யைக் கையாண்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசை இச்செயற்குழு கண்டிக்கிறது. இத்தீர்ப்பிற்குப் பிறகு அவர்களை தப்புவிக்க சட்டமும் துணை போவதைக் கண்டு இச்செயற்குழு தனது வருத்தத்தை பதிவு செய்கிறது

8. காங்கிரஸ் கட்சி இழைத்த துரோகங்கள்.

துரோகம் : 1
1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23 நள்ளிரவில்தான் இராமர், இலட்சுமணர், சீதை ஆகியோரின் சிலைகள் பாபரி மஸ்ஜிதின் உள்வளாகத்தில் வைக்கப்பட்டன. அப்போது மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தச் சிலைகளை உடனே அப்புறப்படுத்தி , அத்து மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததோடு மட்டுமல்லாமல் ஐவேளை தொழவிடாமல் தடுத்து நிறுத்தி பள்ளிவாசலை இழுத்து மூடிய துரோகத்தை காங்கிரஸ்தான் செய்தது. அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் இந்த அக்கிரமத்திற்கு துணைபோனது.
துரோகம் : 2
1989 ராஜீவ் காந்தி பிரதம அமைச்சராக இருக்கும் போது நாடாளுமன்ற தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பாக இந்துக்கள் ஓட்டுக்களை பொறுக்குவதற்காக பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் அமைந்த நிலத்திற்குள் விஸ்வஹிந்து பரிஷத் குண்டர்கள் சிலா நியாஸ் என்ற பெயரில் அடிக்கல் நாட்டு வைபவத்தை நடத்துவதற்கு அனுமதிவழங்கியததான் 1992ல் பாபர் மஸ்ஜித் உடைப்பிற்கு காரணமானது. இது காங்கிரஸ் கட்சி செய்த அடுத்த துரோகமாகும்

துரோகம் : 3
1992 பாபரி பள்ளிவாசல் இடிக்கப்படப் போகின்றது என்று உளவுத் துறை தகவல் தெரிவித்தும் மாநில பிஜேபி அரசைக் கலைக்காமல் கரசேவை என்ற பெயரில் இராணுவத்தின் மேற்பார்வையில் இந்துத்துவா சக்தி கயவர்கள் பாபரி மஸ்ஜிதை இடிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததும் காங்கிரஸ் ஆட்சிதான்.
துரோகம் : 4
பள்ளிவாசல் இடிக்கப்பட்ட பிறகு அதே இடத்தில் தற்காலிக கோயில் கட்ட அனுமதித்ததும் காங்கிரஸ் அரசுதான்.

துரோகம் : 5
பாபர் மஸ்ஜித் இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்பது மஸ்ஜித் இடிக்கப்படுவதற்கு முன்னால் வெறும் சிந்தனையோட்டமாக மட்டுமே இருந்தது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசுதான் அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில் முதன் முதலாக பள்ளியின் கீழ் கோயில் இருந்ததா? என்பதை ஆய்வு செய்வதற்காக தன் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொல்லியல் துறை மூலம் அகழ்வாராய்ச்சிக்குரிய வழிகளை ஏற்பாடு செய்தது.. அதுதான் இன்றைய இந்தத் தீர்ப்பிற்கு காரணமாக அமைந்தது. இப்படி அடுக்கடுக்காக முஸ்லிம்களுக்கு துரோகங்களுக்காக காங்கிரஸ் கட்சியை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. .

9. தீர்ப்பு எழுதி அதன் மை காய்வதற்குள்ளாக முஸ்லிம்களுக்கென்று ஒதுக்கப்படட மூன்றில் ஒரு பங்கு இடத்தையும் தங்களுக்கு விட்டு விட வேண்டும் என்று கூறி முஸ்லிம்களின் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுகின்ற ஆர்எஸ்எஸ் விஹெச்பி பஜ்ரங்தள் பிஜேபி போன்ற இந்துத்துவா அமைப்புகளை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.

10. பாபரி மஸ்ஜித் பள்ளிவாசல் தீர்ப்பு வெளியான பிறகு பள்ளிவாசல்கள் புனிதத் தலமல்ல. அந்தப் பள்ளிவாசல்களை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் கையகப்படுத்தி சுகாதாரம் மற்றும் சாலைப் போடுதல் போன்ற பல்வேறு வகைக்கு பயன்படுத்தலாம் என்றும் பாபர் மஸ்ஜித் கட்டப்பட்ட இடம் இராமர் பிறந்த இடம்தான் என்று தீர்க்கப்பட்டது போன்று இனி இதுபோல் காசி விஸ்வநாத் கோயில், பிருந்தாவன் கோயில் விவகாரமும் தீர்க்கப்படவேண்டும் என்றும் கூறிய இந்துத்துவா வெறியன் அரசியல் அனாதை சுப்பிரமணிய சுவாமியை இந்தச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

11. பாபரி மஸ்ஜித் பாணியில் இனி வேறொரு மஸ்ஜிதில் கைவைப்பதற்கு பாசிச சங்பரிவாரக் கும்பமல் முயற்சி செய்தால் அதே பாணியில் முஸ்லிம்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணித்து பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டார்கள் என்பதை இந்த செயற்குழு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது.

12. சட்ட வரம்பைத் தாண்டி மதச் சார்பின்மைக்கு எதிராகவும் மதநம்பிககையின் அடிப்படையிலும் வழங்கப்பட்ட அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும் மேல் முறையீட்டின் போது சட்ட வரம்பிற்கு உட்பட்டு இவ்வழக்கில் தீர்ப்பளிக்கும்படி உச்ச நீதிமன்றத்தை கோரியும் வருகின்ற ஜனவரி 4 2011 அன்று தமிழகம் தழுவிய அளவில் சென்னையிலும் மதுரையிலும் மாபெரும் பேரணி மற்றும் கண்டண ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இச்செயற்குழு தீர்மானிக்கின்றது.

13. பாபர் மசூதி வழக்கில் முஸ்லிம்கள் இறுதியாக சுப்ரீம் கோர்ட்டின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். முஸ்லிம்களின் நம்பிக்கை வீண்போகாத வகையில் மதநம்பிக்கைக்கு அப்பாற்பட்டு, இந்திய அரசியல் சாசனச் சட்டத்திற்கு உட்பட்டு மேல்முறையீடு செய்யபடும் பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதீமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று இந்தச் செயற்குழு நம்பிக்கைவைக்கிறது.

14. தமிழக வரலாற்றிலேயே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜுலை 4 2010 அன்று 15 இலட்சம் மக்கள் மத்திய அரசிடம் இந்திய அளவில் இட ஒதுக்கீடு கோரி தீவுத் திடலில் ஒன்று கூடினர். ஒடுக்கப்பட்டோரின் இந்த உரிமை மாநாட்டிற்கு பின்னர் ஏற்பட்ட பிரதமர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சந்திப்பின் போது இக்கோரிக்கைகளை அவர்களிடம் முன்வைத்தனர். அப்போது விரைவில் அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தனர். அந்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றும்படி பிரதமர் மன்மோகன்சிங் அவர்களையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களையும் இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

15. திருவிடைச்சேரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கின்றது.அதே நேரத்தில் பள்ளிவாசல்களில் அல்லாஹ்வைத் துதிப்பதையும், தொழுவதையும் தடை செய்து குழப்பம் விளைவிப்பது கொலையை விடக் கொடியது. இத்தகைய அக்கிரமத்தனமான காரியங்களில் ஈடுபடுவர்கள் மீது பள்ளிவாசல் நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இத்தகையவர்கள் பள்ளிவாசல் நிர்வாகப் பொறுப்பில் இருந்தால் அவர்களை களையெடுக்க வேண்டும் என்றும் பள்ளிவாசல் நிர்வாகங்களையும் இஸ்லாமியப் பெருமக்களையும் இநதச் செயற்குழு வாயிலாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேண்டிக் கொள்கிறது.

16. திருவிடைச் சேரியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டிற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எவ்விதத் தொடர்புமில்லை என்பது வெள்ளிடை நீர் போல அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.தமிழகத்திலும் தமிழகத்திற்கு வெளியில் உலகமெங்கிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கு பொதுமக்களிடம் ஆதரவு பெருவருகின்றது. ஏராளமான இஸ்லாமிய பெருமக்கள் தவ்ஹீத் கொள்கையை பின்பற்றக்கூடிய மக்களாக மாறிவிட்டனர். 2010 ஜுலை 4 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கோரிக்கையை ஏற்று இட ஒதுக்கீட்டுப் போராட்டத்திற்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் அணிவகுத்து வந்ததே மிகப் பெறும் சான்றாகும். இதனைப் பொறுக்க முடியாத தவ்ஹீதிற்கு எதிரான சில அமைப்புகள் மற்றும் இலட்டர் பேடு இயக்கங்கள் பள்ளிவாசலில் தொழுவதை தடைசெய்பவர்களையும் குழப்பம் விளைவிப்பவர்களையும் கண்டிக்காமல் திருவிடைச் சேரி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மட்டும் பெரிது படுத்தி, பழியை தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது சுமத்தி இதன் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என பகற்கனவு காண்கின்றன. ஆனால் இவர்கள் எவ்வளவுதான் பழி சுமத்தினாலும், திட்டங்கள் தீட்டினாலும் சத்தியக் கொள்கையின் பேரொளியை அணைத்து விட முடியாதென்றும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் தவ்ஹீத் கொள்கைக்கும் எதிரான இவர்கள்தான் காணாமல் போவார்கள் என்றும் இந்த செயற்குழவின் வாயிலாக எச்சரிக்கிறோம்.

17. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அழைப்பை ஏற்று முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையான இந்திய அளவில் இட ஓதுக்கீட்டைப் பெறுவதற்காக தமிழக இஸ்லாமிய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஜுலை 4 அன்று சென்னைத் தீவுத் திடலில் சங்கமித்த இலட்சக் கணக்கான இஸ்லாமியப் பெருமக்களுக்கும், சகோதர, சகோதரிகளுக்கும், ஜமாஅத்தார்களுக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் பிரமுகர்களுக்கும் இந்தச் செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. இதற்காக பொருளாதார உதவி செய்த வெளிநாடு, உள்நாடு கொள்கைச் சகோதரர்களுக்கும் அயராது பாடுபட்ட அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் இந்தச் செயற்குழு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

8. தற்போது நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் முஸ்ம்கள் அனைவரின் எண்ணிக்கையும் விடுபட்டு விடாமல் இருப்பதற்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முஸ்ம்கள் மத்தியில் நிகழ்த்துமாறு இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும் இடம் பெயர்ந்து வாழும் முஸ்ம்களின் எண்ணிக்கையையும் ஒருங்கிணைத்து அவர்களின் மொத்த மக்கட்தொகையளவை வெளியிடுமாறு மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

19. இதற்கென இந்திய வெளியுறவு அமைச்சகத்தையும் மற்றும் வெளிநாட்டு தூதரங்களையும் அணுகி ஒரு தனிப் பிரிவை ஏற்படுத்தி இடம் பெயர்ந்த இந்தி யர்களின் மொத்த எண்ணிக்கையையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ளுமாறு இந்திய அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

20. அடிக்கடி பாலஸ்தீனத்தில் முஸ்ம்களைக் கொன்று குவித்து வரும் இஸ்ரேன் காட்டுமிராண்டித் தனத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு அதன் மீது பொரு ளாதாரத் தடையை ஏற்படுத்த உலக நாடு களை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்தியாவில் வாழும் 20 கோடி முஸ்லிம்க ளின் உணர்வுகளை மதித்து இஸ்ரேலுடன் உள்ள உறவைத் துண்டிக்குமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

21. முஸ்லிம்களுக்கு உரிய இட ஒதுக் கீட்டில் நடந்த குளறுபடிகளைச் சரி செய்வ தாக தமிழக அரசு முஸ்லிம் சமுதாயத்துக்கு கடந்த தேர்தலின்போது உறுதியளித்தனர். அதை நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுத் ததாகத் தெரியவில்லை. எனவே கொடுத்த வாக்கை நிறைவேற்றுமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

22. முஸ்லிம்களில் பிற்பட்டவர்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டா லும் பிற்பட்ட முஸ்லிம்களும் மற்ற முஸ்லிம்களும் பொதுப் பட்டியலிலும் விண்ணப் பிக்க சட்டப்படி உரிமை இருந்தும் அதிகாரி கள் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்து வருகின்றனர்.பொதுப் பட்டியலில் உள்ள 3% இடங்களிலும் முஸ்லிம்கள் போட்டியிடலாம் என்று தெளிவான ஆணை பிறப் பிக்குமாறு முதல்வரை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

23. சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி, கல்விக் கடன் ஆகியவை சென்ற ஆண்டு அதிகாரி களின் ஆணவப் போக்காலும் கல்வி நிலை யங்களின் அலட்சியப் போக்காலும் பெரும் பாலான முஸ்லிம்களுக்கு கிடைக்க வில்லை. அதுபோல் இந்த ஆண்டு நடக்கா மல் இருக்க தெளிவான வழிகாட்டுதலை வழங்கி அலைக்கழிக்காமல் முஸ்லிம் சமுதாயம் பயன் பெற தெளிவான வழிகாட் டுதலை அறிவிக்குமாறு தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

source: tntj.net