கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஞாயிறு, 17 மார்ச், 2013

நமதூரில் பெண்களுக்கான மாபெரும் தர்பியா நிகழ்ச்சி

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளையின் சார்பாக நமதூரில் பெண்களுக்கான மாபெரும் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

நமது கிளையின் சார்பாக மாதந்தோறும் இரண்டு முறை பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது இதன் மூலம் பெண்கள் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்துக்கொள்ளகூடிய வாய்ப்பு ஏற்பட்டது வாரந்திர பயான் என்றில்லாமல் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சியை  நடத்தி  அவர்களின் மார்க்க சம்மத்தமான சந்தேகங்களுக்கு விடை அளிக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு நமது கிளையின் சார்பாக பெண்களுக்கான இந்த தர்பியா நிகழ்ச்சி ஏற்ப்பாடு செய்யப்படடிருந்தது.

இந்நிகழ்ச்சியில் சகோதரி சம்சுல்ஹுதா ஆலிமா அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றி பெண்களுக்கான தொழுகை பயிற்சியையும் அளித்தார்.மேலும் சகோதரி ஆயிசா ஆலிமா அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் பெண்கள் என்றதலைப்பில் உரையாற்றினார்.மதிய உணவு இடைவேளையின் பொது சகோதரர் அப்துல்லாஹ் அவர்கள் சிறிய உரை நிகழ்த்தினார்.காலை 10 மணியளவில் ஆரம்பமான நிகழ்ச்சி மாலை 4 மணி வரை பெரும் நெகிழ்ச்சியோடு நடைபெற்றது.மதிய உணவு நமது கிளையின் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது.

சகோதரர் தல்ஹா அவர்களின் வீட்டில் பெண்களும் தவ்ஹீத் மர்க்கஸில் ஆண்களும் நிரம்பி இருந்ததனர்.இந்நிகழ்ச்சியில் சுமார் 150பெண்கள் கலந்துகொண்டனர்.மானியம் ஆடூர்,லால்பேட்டை,ஆயங்குடி மற்றும் T.நெடுஞ்ச்சேரி போன்ற ஊர்களில் இருந்தது பெண்கள் பெரும் அளவில் கலந்த்துக்கொண்டனர்.நெடுஞ்சேரில் இருந்து சுமார் 12 பெண்கள் கலந்துக்கொண்டது தவ்ஹீதின் எழுச்சி எந்த அளவிற்கு பெண்களின் உள்ளங்களில் சென்றடைந்துள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே அமைந்தது.எல்லா புகழும் கண்ணியம் பொருந்திய அல்லாஹ் ஒருவனுக்கே..


செய்தி:மு.இ.அன்வர்தீன்
படம்: த.முஹம்மது

வியாழன், 14 மார்ச், 2013

செவ்வாய், 5 மார்ச், 2013

குவைத்தில் சகோ.பிஜே உரை நிகழ்தினார்!


குவைத் மண்டல தவ்ஹீத் ஜமாஅத் பொது குழுவும் அதை தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பொதுக்கூட்ட நிகழ்ச்சியும் நேற்று (01.03.2013) நடைபெற்றது.

சுமார் 800 நபர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு அரங்கத்தை ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று வியாழன் இரவில் 11 மணிக்கு மேல் முறையான தகவல் மண்டல நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு அல்லாஹ்வின் கிருபையால் நேற்று 3.30 மணிக்கு பொது குழு ஆரம்பிக்கப்பட்டது.

பொதுக்குழு உறுப்பினர்களே சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

அதை தொடர்ந்து மாலை 6.00 மணி அளவில் பிஜே அவர்கள் ”இஸ்லாத்திற்கு எதிரான உலகளாவிய சதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

ஏற்கனவே பொதுகுழு உறுப்பினர்களால் அரங்கம் நிரம்பி வழிந்தது. பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கத்தின் முன்பு மக்கள் குவிய தொடங்கினர். 

இந்த கூட்டத்தை அறியாத அரங்க நிர்வாகதினர் எங்களால் சமாளிக்க முடியாது. நீங்கள் இப்போதே இடத்தை காலி செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்தனர்.


என்ன செய்வது என்று இருந்த நிலையில் அல்லாஹ்வின் அளப்பரிய கிருபை என்பார்களே அது நடந்தேறியது. ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தை விட இரு மடங்கு பெரிய இடம் கிடைக்கப்பட்டு 10 நிமிடத்திற்குள் எந்த வித விளம்பரம் இல்லாமல் ஆண்களும் -ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாரை சாரையாக மாற்று இடத்தை நோக்கி படை எடுத்தனர்.

அதன் பிறகு மாநில தலைவர் பிஜே அவர்கள் ”இஸ்லாத்திற்கு எதிரான உலகாளவிய சதி” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இது TNTJ WEB TV மூலம் நேரலை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், 110:2. மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும்,110:3. உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக - நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

நன்றி: மேலாப்பாளையம் ஹீசைன்