கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

செவ்வாய், 29 ஜூலை, 2014

TNTJ கொள்ளுமேடு மர்கசில் பெருநாள் திடல் தொழுகை!

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளை தவ்ஹீத் மர்கசில் இந்த ஆண்டிற்கான பெருநாள் தொழுகை சிறப்பான முறையில் நபி வழிபடி மார்க்சின் பின்புறத்திலுள்ள திடலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் வழக்கம்போல் ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.சகோதரர் முஹம்மது ரஜ்வீ  அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்





படங்கள்: இமாம் அலி 

கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிஃத்ரா விநியோகம் -2014

கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பிஃத்ரா  விநியோகம் கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் சிறப்பான முறையில் நடைப்பெற்றது...மேலும் கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் நமது பக்கத்துக்கு கிராமம் புத்தூர் மக்களுக்கும் பயன்படும் வகையில்  பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டது.. விபரம் வருமாறு

பிஃத்ரா பெற்று பயனடைந்த குடும்பங்கள் மொத்தம்: 105

மொத்த வரவுகள் :ரூ 46,350/- 
                                       உள்ளூர் வசூல் (ஜமாஅத்தினர் மட்டும் )ரூ 21,000/-
                                       வெளிநாடு வசூல் ரூ 15,350/-
                                       தலைமை மூலம் ரூ 10,000/-

மொத்த செலவுகள்: ரூ 41,574/-
மளிகை பொருட்கள் மொத்தம் ரூ 32,530/-
கோழி விநியோகம் மொத்தம்    ரூ:12,600/-
ரோக்கமாக வழங்கியது (6ஏழைகளுக்கு ) ரூ 1220/-



படங்கள் செய்திகள்:
யாசின்,இமாம் அலி மற்றும் ரஜ்வீ 

பெருநாள் தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கான உதவி !

கடலூர் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது விதவைகள் போன்றோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவிகளை செய்து வருகின்றது. இதனடிப்படையில் நமதூரில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டது.மொத்தம் 19 நபர்களுக்கு அவர்களுக்காக ஆடைகள் கொள்ளுமேடு தவ்ஹீத் சகோதரர்களால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..