கடலூர் : மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் விவரங்கள் அளிக்காதவர்களுக்கு, தேவையான விவரங்களை அளிக்க வசதியாக இறுதி அறிவிப்பு நோட்டீஸ் இன்று முதல் வழங்கப்பட உள்ளது.
தேர்தல் ஆணையம் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் ஆதார் அட்டை எண், மொபைல் எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படுகிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று விவரங்களை சேகரித்தனர். மேலும், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டசபை தொகுதிகளில் 9 லட்சத்து 48 ஆயிரத்து 314 வாக்காளர்கள் தேவையான விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.இதில், கடந்த 19ம் தேதி வரை, 7 லட்சத்து 56 ஆயிரத்து 551 பேரின் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 763 பேரின் விவரங்கள் படிப்படியாக இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆதார் அட்டை இருந்தும் அதன் விவரம் அளிக்காமல் இடம் பெயர்ந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் ஆதார் எண் விவரங்களை சமர்ப்பிக்க வசதியாக அவர்களுக்கு
தேர்தல் ஆணையம் தேசிய அளவில் வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி, வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் ஆதார் அட்டை எண், மொபைல் எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்கள் இணைக்கப்படுகிறது. இதற்காக, ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று விவரங்களை சேகரித்தனர். மேலும், சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன.
கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டசபை தொகுதிகளில் 9 லட்சத்து 48 ஆயிரத்து 314 வாக்காளர்கள் தேவையான விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்.இதில், கடந்த 19ம் தேதி வரை, 7 லட்சத்து 56 ஆயிரத்து 551 பேரின் விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 763 பேரின் விவரங்கள் படிப்படியாக இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்று, ஆதார் அட்டை இருந்தும் அதன் விவரம் அளிக்காமல் இடம் பெயர்ந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் ஆதார் எண் விவரங்களை சமர்ப்பிக்க வசதியாக அவர்களுக்கு