கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

புதன், 29 ஜனவரி, 2014

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டத்தில் கொள்ளுமேடு சகோதரர்கள்!

ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டத்தில் கொள்ளுமேடு சகோதரர்கள்!புகைப் படத்தொகுப்பு.
















செவ்வாய், 28 ஜனவரி, 2014

பல லட்சம் இஸ்லாமியர்கள் திரண்ட தவ்ஹீத் ஜமாத்தின் இட ஒதுக்கீடு போராட்டம்!


மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் முஸ்லீம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரியும், தமிழகத்தில் உள்ள முஸ்லீம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை உயர்த்த கோரியும் லட்சகணக்கான முஸ்லீம்களை ஒன்று திரட்டி தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை, கோவை, நெல்லை, திருச்சி ஆகிய இடங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை காந்திபுரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் கண்டன உரையாற்றினார்.அப்போது அவர், ”தமிழகத்தில் முஸ்லீம்களுக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு போதுமானதல்ல என்றும் அதை அதிகரித்துத் தருவோம் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். ஆனால், இரண்டரை ஆண்டு காலமாகியும் இன்னும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

அதேபோல், இந்திய அளவில் முஸ்லீம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் அரசு ஏமாற்றி வருகிறது.
உடனடியாக இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாடாளுமன்றம், சட்டமன்றத்தை முற்றுகையிட்டு அதன் செயல்பாட்டை முற்றிலுமாக முடக்குவோம்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை
இதேப்போன்று சென்னையிலும் ராஜரத்னம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

நெல்லை, வண்ணாரப்பேட்டை தெற்குப் புறவழிச்சாலையில் ஜமாத்அத் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. இதற்கு ஜமாத்அத் மாநில மேலாண்மை குழு தலைவர் எம்.எஸ்.சுலைமான் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், தேனி மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஜமாஅத் நிர்வாகிகள்

7 சதவீத இடஒதுக்கீடு கோரி முஸ்லிம்கள் போராட்டம்!

சென்னை, -முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் நடந்த சிறை செல்லும் போராட்டத்தில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர்.
சிறை செல்லும் போராட்டம்
மத்தியில் 10 சதவீதமும், தமிழகத்தில் 7 சதவீதமும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சென்னை, திருச்சி, நெல்லை, கோவை, புதுச்சேரி, காரைக் கால் மற்றும் மும்பை ஆகிய இடங்களில் சிறைசெல்லும் போராட்டம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் தனி மேடை அமைக்கப்பட்டு போராட்டம் நடந்தது. மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரை
தமிழகத்தில் முஸ்லிம்களின் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த மாநில அரசை வலியுறுத்தியும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் பரிந்துரைப்படி மத்தியிலும் அனைத்து மாநிலங்களிலும் 10 சதவிகிதம் தனி இடஒதுக்கீட்டை சட்டமாக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தின் 4 மையங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஒரே இடத்தில் நடத்தினால் நகரமும் கொள்ளாது, அனைவரையும் கைது செய்து சிறைக்கு அழைத்து செல்ல போலீசாரிடமும் அவ்வளவு வாகனங்களும் இல்லை. இதனால் 4 இடங்களில் பிரித்து நடத்தப்படுகிறது.
ஏமாற தயாராக இல்லை
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு காசு கொடுத்தும், சாராய பாக்கெட்டுகள் கொடுத்தும் கூட்டிவரவில்லை. இடஒதுக்கீட்டை பெறுவதை குறிக்கோளாக கொண்டு அனைவரும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டுள்ளனர். பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு பெற்று தரும் கட்சிக்கு எங்கள் ஆதரவை அளிக்க முடிவு செய்துள்ளோம். இனியும் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறுவதற்கு சமுதாயம் தயாராக இல்லை.
கடந்த சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க, மற்றும் தி.மு.க, தேர்தல் வாக்குறுதிகளில், ‘‘முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு போதுமானதாக இல்லை, என்பதால் வெற்றி பெற்றால், அதிகரித்து வழங்கபடும்’’ என்று இரண்டு கட்சிகளுமே ஒப்புக்கொண்டு அறிவித்தன. ஆனால் ஆட்சியில் அமர்ந்ததும் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
மிகப்பெரிய அதிசயம்
முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு பெற்று தந்த கட்சி தி.மு.க. தான். இதற்காக கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு