கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வெள்ளி, 8 ஜூலை, 2011

கொள்ளுமேடு த‌வ்ஹீத் ம‌ர்க‌ஸில் க‌ல்வி உத‌விக்காக‌ இந்த‌ வார‌ ஜும்மா வ‌சூல்

த‌மிழ்நாடு த‌வ்ஹீத் ஜமாத்தின் வேண்டுகோளுக்கு இண‌ங்க‌ க‌ல்வி உத‌வித்தொகைக்காக‌ கொள்ளுமேடு த‌வ்ஹீத் ம‌ர்க‌ஸில் இன்று ஜும்மா உறைக்கு பின்பு வ‌சூல் செய்ய‌ப்ப‌ட்ட‌து. அல்லாஹ்வின் உத‌வியால் ரூ.1500  வ‌சூல் ஆன‌து அதை த‌லைமைக்கு அனுப்பி வைக்க‌ப்ப‌ட்ட‌து.

இன்று கொள்ளுமேடு த‌வ்ஹீத் ம‌ர்க‌ஸில் மேல்பட்ட‌ம்பாக்க‌ம் ம‌வ்ல‌வி திவான் பிர்த‌வ்ஸி அவ‌ர்க‌ள் இணைவைப்பு ஒரு பெரும் பாவ‌ம் என்ற் த‌லைப்பில் உறையாற்றினார்.

திங்கள், 4 ஜூலை, 2011

தமிழகத்தில் ஷஃபான் பிறை ஆரம்பம்


கடந்த ஜூலை 2 ஆம் நாள் சனிக்கிழமை அன்று மாலை ரஜப் மாதம் 29ஆம் நாள் கழிந்து 30 நாள் இரவில் மஃரிபிற்கு பிறகு தமிழகத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக எந்த தகவலும் வரவில்லை.

எனவே மேகமூட்டமாக இருந்தால் அம்மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற நபி வழியின் அடிப்படையில் ரஜப் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, ஜூலை 3 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிபிலிருந்து ஷாஃபான் மாதம் பிறை 1 ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக்கொள்கின்றோம்