கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வியாழன், 24 நவம்பர், 2011

இஸ்லாமிய ஆண்டு உருவான வரலாறு!

மகத்தான படைப்பாளன் எல்லாம் வல்ல அல்லாஹ் கூறுகிறான்...

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரென்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி ( 9:36 )

இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி 1433வது ஆண்டு துவங்கியுள்ளது.

ஆண்டுக் கணக்குகளின் துவக்கத்தை பெரும்பாலும் முக்கிய நிகழ்ச்சியை கவனத்தில்; கொண்டு ஆரம்பம் செய்துள்ளனர். ஈஸா நபியின் பிறப்பை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவர்கள் ஆண்டை கணக்கிட்டுள்ளனர். கி.பி. (கிறிஸ்து பிறப்புக்கு பின்) கி.மு. (கிறிஸ்து பிறப்புக்கு முன்) என்று குறிப்பிடுகின்றனர். இந்த நடைமுறையே இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது.

இஸ்லாமியர்கள் ஹிஜ்ரி ஆண்டு என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது? என்பது இஸ்லாமியர்களில் பலருக்கே தெரியாது. இந்த ஹிஜ்ரி ஆண்டு எப்படி வந்தது என்பதை நாம் விரிவாக காண்போம்...!

நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த வரை இந்த ஹிஜ்ரி ஆண்டு இருந்ததில்லை. மேலும் ஆண்டின் முதல் மாதம் என்பது முஹர்ரம் என்றும் இருக்கவில்லை. நபிகளாரின் காலத்தில் யானை ஆண்டு என்றே குறிப்பிட்டு வந்தனர்.

நபி(ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்னர் அப்ரஹா என்ற மன்னன் யானைப் படையுடன் கஅபத்துல்லாவை அழிக்க வந்த போது அல்லாஹ் பறவைகள் மூலம் அந்தப் படையை முறியடித்தான். (திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் இது தொடர்பாக பேசுகிறது. இந்த அத்தியாயத்திற்கு ஃபீல் - யானை என்றே பெயரிடப்பட்டுள்ளது). இந்தச் சம்பவம் அரபுலகத்தில் பிரபலமானது. இந்தச் சம்பவம் நடந்த ஆண்டு தான் அன்றைய அரபுலகில் வருடத்தைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்டது.

நானும் நபி(ஸல்) அவர்களும் யானை ஆண்டில் பிறந்தோம் என்று கைஸ் பின் மக்ரமா(ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.(நூல்: திர்மிதி 3552, அஹ்மத் 17218)

இந்த செய்தி நபிகளார் காலத்தில் ஆண்டுக் கணக்கை, யானை ஆண்டு என்று குறிப்பிட்டு வந்ததை தெளிவாக எடுத்துரைக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் மதினாவுக்குச் சென்றபோது வருடத்தைக் கணக்கிடுமாறு கட்டளையிட்டார்கள். ரபீவுல் அவ்வல் மாதத்தில் கணக்கிடப்பட்டது என்ற செய்தி இமாம் ஹாகிமின் அல்இக்லில் என்ற நூலில் இடம் பெற்றிருக்கிறது. ஆனால் இது முஃளல் என்ற வகையை சார்ந்த மிகவும் பலவீனமான செய்தி என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (பத்ஹுல் பாரீ : பாகம் 7 பக்கம் 268)

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபுபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரி ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு

செவ்வாய், 22 நவம்பர், 2011

வேகமாக வளர்ந்து வரும் மானியம் ஆடூர் மஸ்ஜித்!!!

நன்றி:MY யாசீன் 

ஞாயிறு, 20 நவம்பர், 2011

எனது கஷ்டத்தை அல்லாஹ் நீக்கமாட்டானா ?


நன்றி:பிரான்ஸ்tntj
கேள்வி : அச்சலம் அலைக்கும், எனது கேள்வி நான் வழக்கை முழுவதும் கஷ்ட படுபவனாக உள்ளேன்,என் இரு மத குழைந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்தேன் பிறகு இரண்டு வருடத்திற்கு பிறகு என் தந்தைக்கு ஹார்ட் பிளாக் அறுவை சிகிச்சை செய்தேன் இதற்கு நடுவில் என் உடல்நிலை ரொம்ப மோச மாகிவிட்டது பிறகு தெரியவந்தது எனக்கு கிட்னியில் கல் உள்ளது ,இந்த நோய் அறியாமலேயே நான் ரொம்ப செலவு செய்தà  விட்டேன் ,இப்பொழுது மருந்து வாங்கி கொண்டுயிருக்கிறேன்,என் தொழிலும் சரியில்லை ,அப்பா பல வர்சமாக வெளிநாட்டில் உள்ளார் ,அவருக்கு அறுவைசிகிச்சை முடிந்த பின்பும் வெளிநாட்டுக்கு சென்று விட்டார் ,இன்று அவரால் முடியவில்லை, எனக்கும் அவரை அனுப்ப விருப்பம் இல்லை ,என் குடும்பமோ ,பெரியது நான் சம்பாரிப்பது பத்தாது ,என் குடும்பத்தை காப்பற்ற நான் மிகவும் வெயிலில் சுத்தி திர ிந்து கஷ்ட படுகிறேன் ஒண்ணுமே சம்பரிப்பு காணோம் ,அதிகமாக வெய்யிலில் சுத்தினாலும் என் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்னும் நோய் அதிகரிக்குது,ஏன் வழக்கை முழுவதும் கஷ்டங்களே உள்ளன,வறுமை தலைதுக்குது செலவுகளோ அதிகம் ,பெரி குடும்பத்தில் பிறந்து இன்று ஒரு மத விட்டின் செலவு மிகவும் பாரமாக உள்ளது ,ஒரு சின்ன குடும்பத்தின் செலவோ 3 ,000 ருபாய் ,அனால் நான் பிறந்து வளந்த குடு ம்ப மாத செலவு 10 ,000 ருபாய் இதற்காக நான் மிகவும் பாடுபடுகிறேன் ,என்னால் முடியவில்லை,ஏன் கேள்வி எனக்கு ஏன் அல்லாஹ் துன்பத்துக்கு மேல் துன்பம் தருகிறான் பல வருசங்கள் ஓடி விட்டன என் கஷ்டங்கள் இன்னும் போகவில்லை இதற்க்கு இஸ்லாமிக் முறையில் தீர்வு என்ன ? நான் அல்லாஹ் வை தவிர யாரையும் வணங்குவதில்லை ,நான் ஒரு தவ்ஹீத் வாதி,எனக்கு இஸ்லாமிக் முறையில் பதில் சொல்லுங்கள்

பதில் : உலக மக்களுக்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இந்த உலக மக்களின் விடிவுக்கு இறைவன் மூலமாக நமக்கு திருமறைக் குர்ஆன் என்ற ஒரு பொக்கிஷத்தை பெற்றுத் தந்துள்ளார்கள். திருமறைக் குர்ஆன் உங்கள் பிரச்சினைக்கு மிகத் தெளிவான பதிலைத் தருகிறது.

பிரச்சினைகள் நமது ஈமானை சோதிப்பதற்கே!

இறைவன் நமது வாழ்வில் பலவிதமான சோதனைகளையும் நமக்குத் தந்து நம்மை சோதிப்பான் அந்த நேரத்தில் உண்மையான ஓர் ஏகத்துவவாதி பிரச்சினைகளைக் கண்டு துவண்டு போகாமல் நமது கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.
ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் செல்வங்கள் உயிர்கள் மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! (2-155)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் நம்மை எப்படியெல்லாம் சோதிப்பான் என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகிறான். குறிப்பிட்டு விட்டு வசனத்தின் இறுதியில் பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!என்றும் குறிப்பிடுகிறான். நமக்கு துன்பங்களை அல்லாஹ் தந்து நம்மை சோதிக்கும் போது பொருமையாக நாம் இருக்கிறோமா? இல்லையா? என்பதைத் தான் இறைவன் கண்காணிக்கிறான்.
தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது 'நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள்.(2-156) 

அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும் அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். (2-157)
மேற்கண்ட வசனங்களில் துன்பம் நேருகின்ற நேரத்தில் நாம் என்ன பதில் சொல்ல வேண்டும் என்பதையும் இறைவன் குறிப்பிடுகின்றான்.

செல்வம் இருப்பதும் சோதனை இல்லாமல் இருப்பதும் சோதனையே!

செல்வத்தைப் பொருத்தவரையில் அது நம்மிடம் நிறைய இருப்பதும் சோதனை தான் இல்லாமல் இருப்பதும் சோதனைதான். இருப்பவன் அதை எப்படியெல்லாம்

திங்கள், 7 நவம்பர், 2011

கொள்ளுமேடு தவ்ஹீத் பள்ளி தியாக திருநாள்

நமதூர் தவ்ஹீத் பள்ளியில் இன்று சிறப்பான முறையில் தியாக திருநாள் தொழுகை, ஹஜ்ரத் நியமத்துல்லாஹ் அவர்களின் சிறப்பு பயானுடன் நடைபெற்றது.அதன் சமயம் ஆண்களும் பெண்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்....

தொழுகை முடிந்து குர்பானி கொடுக்கப்பட்ட ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகள் ஏழை எளிய மக்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டது.