கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

திங்கள், 22 நவம்பர், 2010

அவதூறுகளுக்கு அப்பால்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.., எல்லாம் வல்ல ஏக இறைவனான அல்லாஹ்வின் அளப்பரிய கிருபையினால் இன்று நாம் இணைவைத்தல் மற்றும் இன்னபிற வழிகேடுகளை விட்டும் விலகி இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் அறியும் வாய்ப்பை பெற்றுள்ளோம்.

ஒரு முப்பது வருடங்களுக்கு முன்னாள் சென்றால் முஸ்லிம்களுக்கு குர்ஆன் மட்டுமே தெரியும். அதுவும் நூற்றுக்கு இரண்டு மூன்று சதவீதத்தினர்களுக்கு மட்டுமே குர்ஆனை ஓதத் தெரிந்து இருந்தார்கள். அவர்களிடம் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பு பற்றிய எந்த அறிவும் அப்போது இருக்க வாய்ப்பில்லை.

ஏனென்றால் அந்த கால கட்டத்தில் குர்ஆன் மொழிபெயர்ப்புகளோ ஹதீஸ் மொழிபெயர்ப்புகளோ இன்று இருக்கும் நிலையைப் போல் இல்லை.

ஆலிம்கள் என்ன சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பிய காலம். மார்க்கம் என்ற பெயரில் இந்த ஆலிம்கள் செய்த காரியங்கள் ஒரு சாதாரண முஸ்லிம் சிறிது நேரம் சிந்தித்தால் விளங்கிவிடும். அதற்கென்று தனியாக ஒரு பட்டியல் தேவை.

நாம் பல வருடங்களாக பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். இந்த மக்கள் தங்கள் அறிவையும் பொருளாதாரத்தையும் மார்க்கத்திற்கு புறம்பான துளியும் சம்பந்தமில்லாத காரியத்திற்கு செலவழிப்பதை காணலாம். இதை தடுக்க வேண்டிய ஆலிம்கள் அதைப் பற்றி எந்த கவலையும் கொள்ளாமல் கண்டும் காணமல் இருப்பதை பார்க்கிறோம்.

இந்த ஆலிம்கள் பெயரளவில் தான் முஸ்லிம்களாக வாழ்கிறார்கள். இவர்களே இப்படி இருந்தால் மார்க்கம் தெரியாத அன்றைய முஸ்லிம்களின் நிலை. இந்த ஆலிம்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஆடம்பரத்திற்காக பெருமைக்காக மார்க்கத்தை மறைத்து உலக ஆதாயம் தேடினார்கள். இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இன்று அல்லாஹ் இதுபோன்ற அறியாமையில் இருந்தும் நம்மை காத்தான். குர்ஆன் என்றால் என்ன ஹதீஸ் என்றால் என்ன மொத்தத்தில் இஸ்லாம் என்றால் என்ன என்று சாதாரண முஸ்லிம்கள் கூட அறியும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்தினான். குர்ஆன் மொழிபெயர்ப்புகளும் ஹதீஸ் மொழிபெயர்ப்புகளும் இன்று நம் கையில் இருக்கிறது.

ஆனால் சில அல்ல பல மூட கோமாளிகள் இன்னும் உளறிக் கொண்டிருக்கிறார்கள் மார்க்க மேதை என்ற பெயரில். அது என்னவென்றால் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மொழிபெயர்ப்பை ஒரு சாதாரண முஸ்லிம் வாசித்தால் அவர்களால் விளங்க முடியாது என்று. ஆனால் அனைத்தையும் அறிந்த அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான் இந்த குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம் படிப்பினை பெறுவோர் உண்டா என்று.

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஏகத்துவ தென்றல் அல்லாஹ்வின் அளப்பரிய கிருபையினால் வீச ஆரம்பித்தது. அந்த தென்றலின் சுகத்தை பலர் உணர ஆரம்பித்தார்கள். தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பு கடந்த முப்பது வருடங்களாக இந்த தென்றலை பல பகுதிகளுக்கு சாதாரண முஸ்லிம்களுக்கு கொண்டு சென்றது.

இந்த ஜமாத்தை நிறுவி இஸ்லாத்தையும் அதன் ஓரிறைக் கொள்கையையும் உயிர் மூச்சாகக் கொண்டு இன்றளவும் இந்த ஜமாத்தை கட்டுக் கோப்பாக ஒரு சாதாரண முஸ்லிமாக ஜமாத்தின் பல உறுப்பினர்களில் ஒரு உறுப்பினராக இருந்து சேவையாற்றி வரும் மௌலவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்வானாக. அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.

மார்க்கத்தை வைத்து வயிறு வளர்த்த ஆலிம்கள் என்ற பெயரில் திரிந்தவர்களுக்கு இந்த தவ்ஹீத் ஜமாஅத் சாவு மணி அடித்தது. இதன் காரணமாக பொங்கி எழுந்த இந்த உலமா பெருமக்கள்??? தவ்ஹீத் ஜமாத்தின் மீதும் மௌலவி பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் மீதும் அதிகமான விமர்சனங்களையும் மற்றும் அவதூறுகளையும் பரப்பினார்கள். ஆனால் இதில் எந்த அடிப்படையும் இருக்காது ஆதாரமும் இருக்காது.

இந்த ஒன்றுக்கும் உதவாத ஆலிம்கள் இதுவரை மார்க்கத்திற்காக ஒரு போராட்டத்தையோ அல்லது முஸ்லிம்களுக்காக ஒரு போராட்டத்தையோ செய்தது கிடையாது. இவர்கள் தங்கள் வாழ்நாளை மௌலூது ஓதுவதிலும் பாத்திஹா ஓதுவதிலும் சந்தனம் பூசுவதிலும் சந்தனக் கூடு இழுப்பதிலும் கழிப்பவர்கள். இவர்கள் தங்கள் நிலையை குறித்து ஆராய வேண்டும்.

ஆனால் அல்லாஹ்வின் உதவியோடு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மார்க்கப் பணியோடு சமூகப் பணியையும் சேர்த்து செய்தது. அத்துடன் எதிர்தரப்பினர்களின் விமர்சனங்களுக்கும் அவதூறுகளுக்கும் அவ்வப்போது தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது இந்த ஜமாஅத். ஏனென்றால் இந்த ஜமாத்திற்கு இருக்கிற பணிகள் போதாத காரணத்தினால் இந்த எதிர்தரப்பினர்கள் அளிக்கும் கூடுதல் பணி இது.

எனவே இது போன்ற அவதூறுகளும் ஆரோக்கியமற்ற விமர்சனங்களும் இந்த அறிவிளிகளால் ஏறபடுவது எதிர்பார்த்த ஒன்று தான். இவைகளையும் இவர்களையும் அலட்சியம் செய்வோம். தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகளில் பங்கு கொள்வோம். நம் முஸ்லிம் சமுதாயத்தை பலமான சமுதாயமாக கல்வி வேலைவாய்ப்பில் முன்னேறிய சமுதாயமாக மாற்றுவது நம்மீது உள்ள கடமை. அல்லாஹ்வின் உதவியால் நாம் சாதனை படைப்போம். தவ்ஹீத் ஜமாஅத் சேவைகளுக்கு அரணாய் இருப்போம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் செயல்பாடுகள்

இஸ்லாம் ஒரு அறிமுகம் என்ற நிகழ்ச்சியை முதல் முறையாக தொலைக்காட்சி வாயிலாக அறிமுகப்படுத்தியது.
ஒவ்வொரு வருடமும் ரமளானில் தொடர் உரைகள் மூலமாக முஸ்லிம்களுக்கு சொற்பொழிவாற்றுதல்.
உண்மையான இஸ்லாத்தை முஸ்லிம்கள் அறிவதற்காக ஒவ்வொரு மாதமும் பல ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்துவது.


வரதட்சணை ஒழிப்பு கருத்தரங்குகள் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்தி வரதட்சணை என்ற சமூக கொடுமைக்கு எதிராக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
எந்த அரசு வந்தாலும் தவறை சுட்டிக் காட்டும் முதுகெலும்புடன், இடஒதுக்கீட்டிற்காக வரலாறு கண்டிராத போராட்டங்களை நடத்தி, முஸ்லிம்களுக்கு இறைவனின் நாட்டத்தால் இடஒதுக்கீடு பெற்றுத் தந்து 50 ஆண்டு கால வரலாற்றை மாற்றியமைத்தது.
தற்கொலைக்கு காரணமான கொடிய வட்டிக்கு எதிராக மக்களிடையே பிரச்சாரங்கள் செய்வது.


வட்டிக்கு எதிரான பிரச்சாரத்தோடு மட்டும் நின்று விடாமல் உதவி செய்யும் விதமாக ஜமாஅத் மூலம் பல கிளைகளில் வட்டியில்லா கடன் வழங்குவது. இன்னும் பல கிளைகளில் இதை செயல்படுத்த முயற்சி மேற்கொள்வது.
முஸ்லிம்களுக்காக உணர்வு என்ற வார இதழையும், ஏகத்துவம் என்ற மாத இதழையும் முஸ்லிம் பெண்களுக்காக தீன்குலப் பெண்மணி என்ற மாத இதழையும் நடத்துவது.
உயிர்காக்கும் இரத்ததான உதவி செய்தல்.
ஏழைகளுக்காக பல ஊர்களில் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம்கள்.


பித்ரா என்றால் என்னெவென்று தெரியாமல் இருந்த முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் முஸ்லிம்களிடம் இருந்து பித்ரா தொகை வசூல் செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தல்.
ஒவ்வொரு வருடமும் பல கிளைகள் மூலமாக கூட்டு குர்பானி ஏற்பாடு செய்து ஏழைகளுக்கு விநியோகம் செய்தல்.
சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நேரடியாகச் சென்று உதவி செய்தல். அவர்களுக்காக களத்தில் இறங்கி நிதி திரட்டி உதவி செய்தல்.


பொது மற்றும் நடமாடும் நூலகங்களை ஏற்படுத்தி அதன்மூலம் சிடி மற்றும் நூல்களை தங்கள் இல்லத்திற்கு இலவசமாக எடுத்துச் சென்று படிக்கும் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல்.
இஸ்லாத்தை தழுவும் சகோதரர்களுக்கு தாவா மையங்களை ஏற்படுத்தி அதன்மூலம் இலவசமாக மார்க்க கல்வி பயிற்றுவித்தல்.
இஸ்லாத்தை அறிய விரும்பும் சகோதரர்கள் ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்பினால் அவர்களுக்கு இலவசமாக நூல்களை அனுப்பி கொடுத்தல்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீடியாக்களின் மூலமாக உள்ளூர், வளைகுடா மற்றும் பிற நாடுகளில் வாழும் சகோதரர்களுக்காக மார்க்க நிகழ்சிகளை ஒளிபரப்புதல்.

முஸ்லிமல்லாதவர்களுக்காக இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியும் முஸ்லிம்களுக்காக இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சியும் பல ஊர்களில் நடத்தி வருவது.
அரசாங்கத்திடமிருந்து மக்களுக்கு கிடைக்கும் உதவிகளை அறிய விரும்புபவர்களுக்கு உதவி செய்தல்.
முதியோர் உதவித்தொகை, ஏழைப் பெண்கள் திருமண உதவித்தொகை, விதவைகளுக்காக உதவித்தொகை மற்றும் பிரசவ உதவித்தொகை மற்றும் இதுபோன்ற அரசு நலத் திட்டங்களை அறியாத மக்களுக்கு வழிகாட்டுதல்.
வீட்டிலிருந்து சம்பாதிக்க வழிமுறைகளை விளக்குதல்.
சமூகத்திற்கு பாதிப்பு, அநீதி, அரசாங்க அடக்குமுறை இவைகளுக்கு எதிராக களமிறங்கி போராடுவது.

இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக இழைக்கப்படும் கொடுமைக்காக சக்திக்கு உட்பட்டு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் செய்தல்.
இதுபோன்ற பணிகள் சிறப்பாக நடக்க நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் இந்த பணிகளை உங்கள் ஊரிலும் செயல்படுத்தவும் உங்களுக்காக உழைக்கவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத தயாராக இருக்கிறது. அதற்காக தலைமையகத்தை தொடர்பு கொண்டால் தகுந்த விளக்கத்தைப் பெறலாம்.

இதுபோன்ற பல மார்க்க மற்றும் சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் தவ்ஹீத் ஜமாஅத் மார்க்க வரம்புக்கு உட்பட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி மறுமை வாழ்கையை இலக்காகக் கொண்டு நாணயம் மற்றும் நேர்மையை கடைபிடித்து வெளிநாட்டு அரசாங்கத்திடமோ அல்லது வெளிநாட்டு நிறுவனத்திடமோ பொருளாதார உதவியை பெறாமல் பொதுமக்களுக்காக பொதுமக்களிடமே நிதி வசூல் செய்து அதில் ஒரு பைசாவைக் கூட முறைகேடாக பயன்படுத்தாமல் முறையாகப் பயன்படுத்தி வருகிறது.

எனவே அன்புள்ள இஸ்லாமிய சகோதரர்களே இந்த ஜமாத்தின் மீதுள்ள வெறுப்புகளையும் தவறான எண்ணங்களையும் விட்டுவிட்டு இந்த ஜமாத்தின் செயல்பாடுகளை அறிந்து உங்களை நீங்கள் இந்த ஜமாத்தில் இணைத்துக் கொள்ளுங்கள். மேலும் அறிய கிளிக் செய்யவும்.


வெள்ளி, 19 நவம்பர், 2010

பக்ரித் பெருநாளையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெருநாள் சிறப்புத் தொழுகை-படம்:தினகரன்

பக்ரித் பெருநாளையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் பெருநாள் சிறப்புத் தொழுகை நேற்று (18/11/2010) நடைபெற்றது. தொழுகைக்கு திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்



சனி, 13 நவம்பர், 2010

பிறை பார்த்து பெருநாள் கொண்டாடுவோம்


‘அதை (பிறையை) நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1909

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நோன்பு மற்றும் பெருநாட்கள் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் அமைந்து வருகின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் சமீப காலமாக இலங்கை, சவூதி என்று பிற நாடுகளையோ அல்லது கேரளா, கர்நாடகா என்று பிற மாநிலங்களையோ பிறை விஷயத்தில் பின்பற்றாமல் தமிழக அளவில் பிறை பார்த்து நோன்பு வைத்து வருவதால் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை.
கடந்த நோன்பு மற்றும் நோன்புப் பெருநாளில் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்ததால் அல்லாஹ்வின் அருளால் தமிழகமெங்கும் ஒரே நாளில் நோன்பும், பெருநாளும் அமைந்தது.
தமிழகத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதந்தோறும் பிறையைப் பார்த்து வருகின்றது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை (07.11.2010) அன்று பிறை தென்படுகிறதா என்று பார்த்த போது, தமிழகமெங்கும் மேகமூட்டமாக இருந்ததால் அன்று பிறை தென்படவில்லை.

‘மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907
மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக முழுமையாக்குங்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் உத்தரவுப்படி நமக்கு முன்னால் உள்ள ஒரே வழி துல்கஅதா மாதத்தை முப்பதாக முழுமைப்படுத்துவது தான்.

இதன் அடிப்படையில், திங்கள்கிழமை துல்கஅதா மாதத்தின் முப்பதாம் நாள் ஆகும். செவ்வாய்கிழமை (09.11.2010) அன்று துல்ஹஜ் பிறை 1 ஆகும். எனவே 17ம் தேதி அரஃபா நோன்பும், 18ஆம் தேதி வியாழக்கிழமையன்று துல்ஹஜ் பிறை 10 அன்று ஹஜ் பெருநாளும் வருகின்றது.
அந்தந்த பகுதிகளில் பிறை பார்த்தே நோன்பு மற்றும் பெருநாட்களை முடிவு செய்ய வேண்டும் என்று மார்க்கம் கூறும் அடிப்படையில் நாம் செயல்படுவதால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றது என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த ஆண்டின் அரஃபா நோன்பு மற்றும் ஹஜ் பெருநாளை அமைத்துக் கொள்வோமாக!
பொதுவாக முஸ்லிம்களிடம், ஹஜ் பெருநாளுக்காகப் பிறை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற எண்ணமும் இருந்து வருகின்றது. இது தவறாகும்.

காரணம், குர்பானி கொடுப்பவர்கள் பிறை தென்பட்டதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை நகம், முடிகளைக் களையக் கூடாது என்பது நபி (ஸல்) அவர்களின் கட்டளையாகும். இத்துடன் துல்ஹஜ் பிறை 9ல் நோன்பு நோற்பதும் சுன்னத்தாகும்.
எனவே இந்த வணக்கங்களைச் செய்வதற்காக துல்ஹஜ் பிறை 1 துவங்கியதும் மக்களுக்குப் பிறையை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை யாரும் பிறையை அறிவிக்கவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயம். எனவே தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இந்த அறிவிப்பைச் செய்கின்றது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்ற ஹதீஸ் அடிப்படையில் 18.11.2010 வியாழக்கிழமை அன்று பெருநாள் கொண்டாடி, நமது குர்பானி கடமைகளை நிறைவேற்றுவோமாக!

ஒவ்வொருவரும் தத்தமது பகுதியில் பிறை பார்க்க வேண்டும். தமது பகுதி அல்லாத வேறு பகுதிகளில் பார்க்கப்படும் பிறை நமது பகுதியில் பார்த்த பிறையாக முடியாது.
”பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1906

பிறையை கண்களால் பார்த்துதான் நோன்பை துவக்க வேண்டும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் வலியுறுத்துகிறது உலகில் எங்காவது பார்த்த பிறையை நாம் ஏற்றுக் கொள்ளலாமா? என்பதற்கும் இந்த ஹதீஸில் விடையிருக்கிறது.
உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்று பொருள் கொள்ள இந்த ஹதீஸின் பிற்பகுதியே தடையாக நிற்கிறது.உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற வாசகமே அது.உலகில் எங்காவது பார்த்தால் போதும் என்றால் இந்த பிற்பகுதி தேவையில்லை. ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.

எனவே மேற்கண்ட ஹதீஸின் பொருள் இது தான். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். பிறை பார்த்து நோன்பை விட வேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பகுதியினரும் தத்ததமது பகுதியாக எதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற உரிமையை நபியவர்கள் மக்களிடம் கொடுத்துள்ளார்கள். இதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாகும்.

”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

பகுதி எது என்பது குறித்து பலவிதமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. முடிவில் மொழியாலும் தனி நிர்வாகத்தாலும் ஒருங்கிணைக்க்கப்பட்டுள்ள தமிழகம் என்பது நமது பகுதி என்ற முடிவுக்கு நாம் வந்தோம். அது போல் சுன்னத் ஜமாஅத்தினரும் இந்த அடிப்படையில் தான் முடிவு செய்து வந்தனர்.
கடந்த பல வருடங்களில் வட மாநிலங்களில் பிறை பார்க்கப்பட்டு அவர்கள் நொன்பு நோற்ற போது தமிழகத்தில் உள்ள சுன்னத் ஜமாஅத்தினரும் நாமும் அதை ஏற்காமல் தமிழகத்தில் பிறை காணப்பட்டதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்து வந்துள்ளோம்.
டெல்லிக்கு ஒரு பெருநாள் சென்னைக்கு ஒரு பெரு நாள் என பல வருடங்களாக இருந்து வந்ததை நாம் மறந்து விட முடியாது.

அந்த அடிப்படையில் இந்த மாதம் தமிழகம் முழுவதும் நாம் சல்லடை போட்டு விசாரித்ததில் எங்கும் பிறை பார்க்கப்படவில்லை என்பது உறுதியானது. பிறை காணப்படாத போது இதற்கு முன் நாம் எவ்வாறு முடிவு எடுத்து வந்தோமோ அவ்வாறு முடிவு எடுப்பது தான் முரண்பாடு இல்லாத கொள்கை முடிவாக இருக்க முடியும்.
இந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் எங்கும் பிறை காணப்படாத நிலையில் வட மாநிலங்களில் அறிவிக்கப்பட்டதைப் பின்பற்றி முடிவு செய்தால் எதிர் காலத்தில் ஆண்டு தோறும் மீண்டும் குழப்பங்கள் தொடர் கதையாகி விடும். நபிவழியை மீறியதாகவும் ஆகி விடும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்
-TNTJ

செவ்வாய், 9 நவம்பர், 2010

ஞாயிறு, 7 நவம்பர், 2010

ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) அவர்கள்

அன்று இப்ராஹீம் (அலை) அவர்கள் ஏகத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் போது தன்னந்தனி மனிதர்! அவர்கள் பக்கம் யாருமே இல்லை அல்லாஹ்வைத் தவிர! ஆனால் இன்றோ இந்தச் சமுதாயத்திற்கே அவர்கள் இமாமாக இருக்கின்றார்கள்.

அவர்கள் இறந்த பிறகும் கூட அவர்களே இமாம்! ஏகத்துவத்திற்கே அவர்கள் தான் இமாம்! ஏன்? அல்லாஹ்வே தன் திருமறையில் சொல்கின்றான்.

'இப்ராஹீமை அவரது இறைவன் பல கட்டளைகள் மூலம் சோதித்த போது அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். 'உம்மை மனிதர்களுக்குத் தலைவராக்கப் போகிறேன்' என்று அவன் கூறினான். 'எனது வழித் தோன்றல்களிலும் (தலைவர்களை ஆக்குவாயாக!)' என்று அவர் கேட்டார். 'என் வாக்குறுதி (உமது வழித் தோன்றல்களில்) அநீதி இழைத்தோரைச் சேராது' என்று அவன் கூறினான். (அல்குர்ஆன் 2:124)

அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களை சோதித்ததாகக் கூறுகின்றானே! அந்தச் சோதனைகள் என்ன ?

இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகளில் மிகப் பெரிய சோதனை அவர்கள் சமுதாயத்தை விட்டு தனிமைப் படுத்தப் பட்டது தான். ஒரு மனிதனை ஊரெல்லாம் வெறுத்து ஒதுக்கும் போது சொந்த வீட்டில் அரவணைப்பும் அன்புப் பிணைப்பும் இருந்தால் அந்தத் தனிமையை அவர் ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இந்த ஏகத்துவ பெருந்தலைவரை பெற்ற தந்தையே எதிர்க்கும் போது அவர்களது நிலை எப்படி இருந்திருக்கும்? வீட்டில் எதிர்ப்பு! ஊரில் எதிர்ப்பு! சமுதயாம் எதிர்ப்பு! அரசாங்கம் எதிர்ப்பு! ஆனால் இதையெல்லாம் வகை வைக்காது இந்தப் பெருந்தகை தனது கொள்கையில் உறுதியாக நிற்கின்றார்.


இந்தக் கொள்கையில் நெருப்பாய் இருந்து, சிலைகளைத் தகர்த்தெறிந்ததால் நெருப்பில் தூக்கி எறியப்படுகின்றார். (பார்க்க அல்குர்ஆன் 21:51-70)

இந்த இரண்டும் பொது வாழ்வில் இப்ராஹீம் (அலை) அவர்கள் சந்தித்த சோதனைகள்!

இந்தக் கொள்கைக்காக நாட்டைத் துறந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 29:26)

நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் தவிக்கின்றார்கள். பின்னர் குழந்தை பிறந்து, அதன் முகம் பார்த்து அகமகிழ கொஞ்சும் வேளையில் மனைவியையும், பச்சிளம் குழந்தையையும் தண்ணீரில்லாத பாலைவெளியில் கொண்டு போய் விட வேண்டும் என்ற அல்லாஹ்வின் உத்தரவை ஏற்று அவ்வாறே அங்கு கொண்டு போய் விடுகின்றார்கள்.

குழந்தை இளவலாகி அவர்களுடன் நடை போடும் வயதை அடைந்ததும் அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று அக்குழந்தையை அறுக்க முன் வந்தார்கள். (பார்க்க அல்குர்ஆன் 37:99-107)

இவை அனைத்தும் அவர்களது சொந்த வாழ்க்கையில் அல்லாஹ் வைத்த சோதனைகள்! இந்த எல்லாச் சோதனைகளிலும் இப்ராஹீம் (அலை) அவர்கள் வென்றார்கள். அதனால் தான் அவர்களை இமாமாக ஆக்கியது மட்டுமல்லாமல் அவர்களை அல்லாஹ் தன் நண்பராகவும்ஆக்கினான்.

'தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார் ? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்'. (அல்குர்ஆன் 4:125)

இன்றைக்கு ஹாஜிகள் மக்காவில் செய்யும் பெரும்பான்மையான வணக்கங்களும், ஹஜ்ஜுப் பெருநாளையொட்டி நாம் செய்கின்ற குர்பானி எனும் வணக்கமும் அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடு தான். அந்த அளவுக்கு அல்லாஹ் அவர்களை நமக்கு இமாமாக ஆக்கி வைத்து, அவர்களை அவர்களது கொள்கைகளை எதிர்த்த மக்களை வேரறுத்து விட்டான். இதனால் தான் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு கூறுகின்றான்.

(முஹம்மதே!) உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுவீராக!' என்று உமக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். அவர் இணை கற்பிப்பவராக இருந்ததில்லை'. (அல்குர்ஆன் 16:123)

நபி (ஸல்) அவர்கள் முதல் அவர்களது உம்மத்தினர் அனைவருக்கும் இப்ராஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் முன்மாதிரியாக ஆக்கி வைத்தான்.

'உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. 'உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை' என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) (அல்குர்ஆன் 60:4)

இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே.

'அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர்'. (குர்ஆன் 9:114)

இணை வைப்பவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் கடைப்பிடித்த அந்தக் கடுமையான அணுகுமுறையை அல்லாஹ் அழகிய முன்மாதிரி என்று கூறுகின்றான். ஆனால் இன்று ஏகத்துவவாதிகள் எனப்படுவோர், இணை வைப்பவர்களிடம் இந்த அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. முஸ்லிம் இணைவைப்பாளர்கள், காஃபிர் இணைவைப்பாளர்கள் என்று இரு கூறாகப் பிரித்துப் பார்க்கின்றனர். முஸ்லிம் இணைவைப்பாளர்களை திருமணம் முடிக்கலாம், அவர்களுக்குப் பின்னால் நின்று தொழலாம் என்றெல்லாம் கூறுகின்றார்கள்.

இதற்கு நம்மவர்கள் கூறும் சாக்கும் சமாதானமும், அவர்கள் ஹிதாயத்துக்கு நேர்வழிக்கு வந்து விடலாம் என்றவாதம்தான்.

தமது இறைவனின் திருமுகத்தை நாடி காலையிலும், மாலையிலும் தமது இறைவனைப் பிரார்த்திக்கும் மக்களுடன் உம்மைக் கட்டுப்படுத்திக் கொள்வீராக! இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது. (அல்குர்ஆன் 18:28)

மக்கத்து முஷ்ரிக்குகளின் பிரமுகர்கள் எப்படியேனும் இஸ்லாத்திற்கு வந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க நினைக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ் இந்தச் செயலை கண்டிக்கின்றான். இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் வழங்குவது தான் சரியான செயல் என்று கூறுகின்றான்.

இதே போல் மற்றொரு சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் கண்டிக்கின்றான்.

அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் என்ற பார்வையற்ற தோழர் நபிகள் நாயகத்திடம் வந்தார். எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இணை வைப்பவர்களில் முக்கியப் பிரமுகர் ஒருவர் இருந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தப் பார்வையற்ற தோழரைப் புறக்கணித்து விட்டு, முக்கியப் பிரமுகரின் பால் கவனம் செலுத்தினார்கள். 'நான் கூறுவதில் தவறு ஏதும் காண்கிறாயா? என்று அந்தப் பிரமுகரிடம் நபியவர்கள் கேட்க, அவர் இல்லை என்று கூறினார். அப்போது தான் அல்குர்ஆன் 80வது அத்தியாயம் 1 முதல் பத்து வரையிலான வசனங்கள் அருளப்பட்டன. ஆதாரம் : திர்மிதி – 3452, 3328, முஸ்னத் அபூயஃலா–4848

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும் ? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர். (அல்குர்ஆன் 80:1லி10) நபி (ஸல்) அவர்கள் இணை வைப்பவர்களின் பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது, அவர்கள் இஸ்லாத்தை நோக்கி வந்து விட வேண்டும் என்பதற்காகத் தான்.

ஹிதாயத்துக்கு வந்து விடுவார்களே என்ற எதிர்பார்ப்பு தான் நபி (ஸல்) அவர்களுக்கும் ஏற்பட்டது. ஆனால் இறைவன் அந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது இஸ்லாத்தில் இருப்பவர்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப் பட வேண்டுமே தவிர, முஷ்ரிக்காக இருப்பவர் இஸ்லாத்திற்கு வந்து விடுவார் என்று நினைத்து அவருக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று அல்லாஹ் மேற்கண்ட வசனங்களில் கூறுகின்றான்.

ஆனால் இதை நமது சகோதரர்கள் விளங்கிக் கொள்ளவில்லை. இணை வைப்பில் மூர்க்கமாக நின்று பிரச்சாரம் செய்பவர்களிடம் கூட பெண் எடுக்கத் தயங்குவதில்லை. இது போன்று இன்ன பிற விஷயங்களிலும் இந்த ஹிதாயத் வாதத்தின் அடிப்படையிலேயே இணை வைப்பவர்களிடம் நெருக்கத்தை வைத்திருக்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம், இப்ராஹீம் (அலை) என்ற இமாமை முழுமையாகப் பின்பற்றாதது தான். அல்லாஹ் கூறும் அந்த அழகிய முன்மாதிரியைப் புறக்கணித்தது தான்.

அதற்காக இணை வைப்பவர்களிடம் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்குமாறு இஸ்லாம் கூறவில்லை. மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான்.

அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 60:8,9)

இந்த வசனங்களின் படி மார்க்க விஷயங்களில் நம்முடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்காதவர்களுடன் பழகுவதோ அல்லது அவர்களுக்கு நன்மை செய்வதோ தவறில்லை. ஆனால் அவர்களும் இணை வைப்பாளர்கள் என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து விட மாட்டார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சனி, 6 நவம்பர், 2010

தொழுகை இல்லையேல்! தடாகம் இல்லை!!

மக்கள் விசாரணைக்காக ஒன்று திரட்டப்படும் அந்நாளின் கொடூரத்தைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம்.

கடும் தாகத்தால் மக்கள் துடிக்கக் கூடிய அந்நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திற்கு மட்டும் தாகம் தீர்ப்பதற்குத் தனி ஏற்பாட்டை அல்லாஹ் செய்வான்.

இதுபற்றி திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் கூறப்பட்டுள்ளது(முஹம்மதே!) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.அல்குர்ஆன் 108:1

"கவ்ஸர் என்றால் என்ன?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், "அது அல்லாஹ் எனக்கு வழங்கிய நதியாகும்'' என விடையளித்தார்கள்...
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி),நூல்: திர்மிதீ

அதன் சுவை பற்றியெல்லாம் நபி (ஸல்)அவர்கள் விளக்கமாகக் கூறியுள்ளார்கள்.

எனது தடாகம் ஒரு மாதப் பயணத் தொலைவு அகலமாகும்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி),நூல்கள்: புகாரி 6579, முஸ்லிம்

அம்மான், ஐலா ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அளவு அதன் நீளம் இருக்கும். அதன் அகலமும் அவ்வாறே என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி),நூல்கள்: முஸ்லிம் 4608, அபூதாவூத்

எமன் நாட்டின் ஸன்ஆ மற்றும் மதீனா ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட தூரத்தின் அளவு அந்தத் தடாகம் அமைந்திருக்கும் என்பது நபிமொழி
அறிவிப்பவர்: அனஸ் (ரலி),நூல்கள்: புகாரி 6592, முஸ்லிம்

இந்த நபிமொழிகளிலிருந்து அந்தக் தடாகம் மிகவும் பிரம்மாண்டமான அளவுடையதாக இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்கிறோம்.

அதன் தண்ணீர் பாலை விட வெண்மையாகவும் அதன் சுவை தேனை விட இனிமையாகவும் இருக்கும்நூல்கள்: புகாரி 6579, முஸ்லிம்

அதன் நறுமணம் கஸ்தூரியை விடச் சிறந்ததாக இருக்கும்.
நூல்கள்: புகாரி 6579, முஸ்லிம்

அதன் தண்ணீர் வெள்ளியை விட வெண்மையானதாகும்.
நூல்கள்: புகாரி 6579, முஸ்லிம் 4599

அந்தத் தடாகத்தில் உள்ள தண்ணீர் சொர்க்கத்தில் உள்ள தண்ணீராகும். சொர்க்கத்திலிருந்து இரண்டு குழாய்கள் மூலமாக அதற்குத் தண்ணீர் வரும். நூல்: முஸ்லிம் 4608

தங்கக் குழாய், வெள்ளிக் குழாய் ஆகிய இரு குழாய்களின் வழியாக அந்தத் தடாகத்திற்குத் தண்ணீர் வரும் .நூல்: முஸ்லிம் 4609

மக்கள் சொர்க்கத்திற்குச் செல்வதற்கு முன் சொர்க்கத்து நீரை தடாகத்தின் வழியாக அருந்துவார்கள் என்பதை இந்த ஹதீஸ்களிலிருந்து நாம் அறியலாம்.

பல கோடி மக்கள் திரண்டுள்ள அந்த மன்றத்தில் நெருக்கடியின்றி மக்கள் தண்ணீர் அருந்துவதற்காக ஏராளமான பாத்திரங்கள் அங்கே வைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாத்திரங்களும் சொர்கத்தில் பயன்படுத்தவுள்ள பாத்திரங்களாகும்.

எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணைமாக அதன் பாத்திரங்கள் வானத்து நட்சத்திரங்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும். அவை சொர்க்கத்தின் பாத்திரங்களாகும்.
நூல்கள்: முஸ்லிம் 416, திர்மிதீ 2369

அந்தத் தண்ணீரின் பயன் யாது? அதை அருந்தியவர்க்கு தாகமே ஏற்படாது என்பது இதன் பயனாகும். விசாரணை என்பது ஒருநாளில் நடந்து முடிந்து விடும் என்றாலும் அந்த ஒரு நாள் ஆயிரம் வருடங்களுக்கு நிகரானதாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமான அந்நாளில் ஒரு தடவை அத்தடாகத்திலிருந்து அருந்தி விட்டால் அதன் பின்னர் தாகமே ஏற்படாது.
அதில் அருந்தியவர்களுக்கு தாகம் ஏற்படாது.
நூல்கள்: புகாரி 7051, முஸ்லிம், திர்மிதீ

கவ்ஸர் எனும் அத்தடாகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் வழங்கும் தனிச்சிறப்பாகும். நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தினரை அடையாளம் கண்டு அவர்களுக்கு வழங்குவார்கள்.

நான் ஹவ்லுக்கருகில் உங்களுக்காகக் காத்திருப்பேன்.
நூல்கள்: புகாரி 6589, முஸ்லிம்

"எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக ஒரு மனிதன் தனது தடாகத்தை விட்டும் தனக்குச் சொந்தமில்லாத ஒட்டகங்களை விரட்டுவானோ அதுபோல் மற்ற மனிதர்களை நான் தடாகத்தை விட்டும் விரட்டுவேன்'' என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! எங்களை நீங்கள் அறிந்து கொள்வீர்களா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! உளூச் செய்ததன் காரணமாக கைகள், கால்கள், முகங்கள் வெண்மையானவர்களாக என்னிடம் நீங்கள் வருவீர்கள்''என்று விடையளித்தனர். நூல்கள்: முஸ்லிம் 417

ஹவ்ல் அல் கவ்ஸர் எனும் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தினருக்கு மட்டும் உரியது என்பதையும் இந்த உம்மத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தொழாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிட்டாது என்பதையும் இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.

பித்அத் செய்தால் தடாகம் இல்லை:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் புதிதாக வணக்க வழிபாடுகளை ஏற்படுத்தியவர்கள் அவர்கள் நபித் தோழர்களாக இருந்தாலும் அந்தத் தடாகத்திற்கு வராதவாறு தடுக்கப் படுவார்கள்.

நான் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்திருப்பேன். சில மக்கள் என்னிடம் வருவார்கள். அவர்களுக்கு தண்ணீர் ஊற்ற நான் குனியும் போது அவர்கள் தடுக்கப்படுவார்கள். "இறைவா இவர்கள் என் தோழர்களாயிற்றே'' என நான் கூறுவேன். "உமக்குப் பின்னால் இவர்கள் (மார்க்கத்தின் பெயரால்) எவற்றை உருவாக்கினார்கள் என்பதை நீர் அறிய மாட்டீர்'' என்று கூறப்படும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி),நூல்: புகாரி 7049, முஸ்லிம்


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாüல் என் தோழர்கüல் ஒரு குழுவினர் என்னிடம் வருவார்கள். அப்போது அவர்கள் (அல்கவ்ஸர்) தடாகத்தை விட்டு ஒதுக்கப்படுவார்கள். உடனே நான் "இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்'' என்பேன். அதற்கு இறைவன் "உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) உருவாக்கியது குறித்து உங்களுக்குத் தெரியாது. இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே (தங்கள் பழைய மதத்திற்குத்) திரும்பிச் சென்று விட்டார்கள்'' என்று சொல்வான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),நூல்: புகாரி 6585, முஸ்லிம்

அந்தத் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியம் ஏழு கோடிக்கும் அதிகமான மக்களுக்குக் கிடைக்கும்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இடத்தில் தங்கியிருந்தோம். "என்னிடம் லட்சத்தில் ஒரு பகுதியாகக் கூட நீங்கள் இருக்கவில்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "நீங்கள் எவ்வளவு நபர்கள் அப்போது இருந்தீர்கள்?'' என்று ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. "எழுநூறு அல்லது எண்ணூறு நபர்கள் இருந்தோம்'' என விடையளித்தார்கள். நூல்: அபூதாவூத் 4121

அந்தத் தடாகத்தில் நீரருந்தும் பாக்கியத்தை வல்ல அல்லாஹ் நமக்கும் வழங்குவானாக!

- பி. ஜைனுல் ஆபிதீன்

திங்கள், 1 நவம்பர், 2010

கிழித்தெறியப் பட்ட பரேலவிக் கொள்கையும்,நிலைநாட்டப் பட்ட சத்தியமும்.

கடந்த சனி ஞாயிறு நாட்களில் ஒப்பந்தப்படி நடக்க வேண்டிய விவாதம் மிகவும் பெரிய எதிர்பார்ப்புடன் ஆரம்பமானது.

இமாம்களின் விளக்கம் இன்றி குர்ஆன் ஹதீஸை விளங்க முடியுமா? என்ற தலைப்பில் விவாதம் ஆரம்பமாகியது.

இமாம்களின் விளக்கம் இன்றி மிகத் தெளிவாக குர்ஆனும் ஹதீஸ{ம் விளங்கும் என்றும் இமாம்கள் என்பவர்களின் விளக்கத்தினால் தான் நிறைய சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன என்பதை விவாதிக்க தவ்ஹீத் ஜமாத் தரப்பில் சகோதரர் பி.ஜெயும் இமாம்களின் விளக்கம் இன்றி குர்ஆன் ஹதீஸ்கள் விளங்காது என்று வாதிக்க பரேலவி ஜமாத் சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் கலந்து கொண்டு வாதிக்க ஆரம்பித்தனர்.

ஆரம்பமே அசத்தலான பி.ஜெயின் வாதம் :
தனது தரப்பின் சார்பில் வாதிக்க ஆரம்பித்த பி.ஜெ குர்ஆன் அனைவருக்கும் இமாம்களின் விளக்கம் இன்றி மிகத் தெளிவாக விளங்கும் என்பதற்கான தனது முதல் ஆதாரமாக திருமறைக் குர்ஆன் வசனங்களை முன்வைத்து விவாதத்தை தொடங்கினார்.

ஆனால் இமாம்களின் கருத்துக்கள் இதற்கு மாற்றமாக பல சிக்கல்களைத் தான் உருவாக்கியுள்ளது என்று இமாம்களின் குருட்டுக் கருத்துக்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.

ஒரு இரவை ஒரு வருடமாக மாற்றிய அபூஹனீபா :
அல்லாஹ் திருமறைக் குர்ஆனை லைலதுல் கத்ர் என்ற சிறப்புமிகு இரவில் இறக்கியதாக கூறுகிறான் (97:1-5)ஆனால் அபூஹனீபாவோ லைலதுல் கத்ர் இரவு ரமழானிலும்; வரும் ரமழான் அல்லாத காலங்களிலும் வரும் வருடம் முழுவதும் வரும் என்று லைலதுல் கத்ர் பற்றி விளக்கம் சொல்லியுள்ளார்.

அல்லாஹ் சொன்னது தெளிவாக விளங்குகிறது இமாம்கள் சொன்னதுதான் இவ்வளவு குழப்பம் மிக்கது என்பதை தனக்கே உரிய அழகிய பாணியில் விளக்கினார் பி.ஜெ.

அதே போல் பரேலவிகள் போற்றிப் புகழும் இப்னு அரபி என்பவர் லைலதுல் கத்ர் இரவு ஷஃபான், ரபியுள் அவ்வல், ரபியுள் ஆகிர், ரமழான் ஆகிய மாதங்களில் வரும் என்று 97வது அத்தியாயத்திற்கு விளக்கம் சொல்லியுள்ளார்.

முடிவு தெரிந்த ஜமாலியின் முதல் வாதம் :
பி.ஜெயின் கேள்விகளுக்கு பதில் சொல்லி தனது வாதத்தை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜமாலி அவர்கள் முதல் வாதத்தை ஆரம்பித்தவுடனேயே இமாம்களின் துணையுடன் தான் குர்ஆன் ஹதீஸை விளங்க வேண்டும் என்ற தனது கருத்து தவறானது என்பதை ஒத்துக் கொண்டார்.

அதாவது இப்னு அரபி லைலதுல் கத்ர் தொடர்பாக சொன்ன கருத்தில் ஷஃபான் ரபியுள் அல்வல் ரபியுள் ஆகிர் போன்ற மாதங்களிலும் லைலதுல் கத்ர் வரும் என்று கூறியது தவறு ரமழானின் வரும் என்று அவர் சொன்னதை மாத்திரம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி தான் கொண்டிருக்கும் கொள்கை தவறு என்பதை ஒத்துக் கொண்டார்.

நபி மீதே அவதூறு பரப்பிய இமாம்களின் விளக்கங்கள் :
ஸைத்(ரலி)அவர்களின் மனைவியை ஸைத் அவர்கள் தலாக் விட்ட பின் நபியவர்கள் திருமனம் செய்து கொண்டார்கள். அல்லாஹ்வே நபியவர்களுக்கு திருமனம் செய்து வைத்ததாக திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

இந்த சம்பவத்திற்கு விளக்கம் சொல்ல வந்த இமாம்கள் என்பவர்கள் நபியவர்கள் ஸைத் (ரலி)அவர்கள் ஸைனப் (ரலி)அவர்களுடன் குடும்பம் நடத்தும் போதே அவர்களை விரும்பியதாகவும் அவர்களை பார்க்கக் கூடாத தோற்றத்தில் பார்த்து விட்டதாகவும் எழுதி வைத்துள்ளதை சுட்டிக் காட்டி இதுதான் நபிமார்களுக்கு இமாம்கள் கொடுக்கும் கண்ணியமா? என்று கேட்டு கேள்வியை பி.ஜெ அவர்கள் முன்வைத்த போது எந்த இமாமும் இப்படிக் கூறவில்லை என்று மறுத்தார் ஜமாலி.

தப்ஸீர் ஜலாலைன் தபரி பகவி நஸபி கஷ்ஷாப் போன்ற கிதாபுகளை எடுத்துக் காட்டி தனது வாதத்திற்கான ஆதாரத்தை நிறுவினார் பி.ஜெ.

எப்படி இதற்கு முந்தைய விவாதங்களில் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் காலத்தை கடத்தினாரோ அதே பாணியில் இம்முறையும் எந்த பதிலையும் சொல்லாமல் காலத்தை கடத்த ஆரம்பித்தார்.ஆனால் இந்த கேள்விகளுக்கெல்லாம் தன்னிடம் பதில் இல்லை என்பதை சொல்லும் விதமாக இமாம்கள் தவறு செய்திருந்தால் தவரை விடுத்து நல்லதை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். இமாம்கள் தான் சரியாக விளங்குவார்கள் என்று கூறியவர் இறுதியில் இமாம்கள் தவறாக விளங்கியுள்ளதை ஒத்துக் கொண்டார்.
சொத்துப் பங்கீடும் சொதப்பிய ஜமாலியும்.
சொத்துப் பங்கீடு தொடர்பாக ஒரு கேள்வியை பி.ஜெயிடம் கேட்டார் ஜமாலி.அதாவது ஒரு பெண் இறக்கும் போது அவருக்கு தாய் தந்தை பெண்பிள்ளைகள் கணவன் ஆகியோர் இருந்தால் என்ன சட்டம் என்று கேட்டார் ஜமாலி.

திருக்குர்ஆன் மொழியாக்கம் 111வது குறிப்பில் இது தொடர்பாக கூறியுள்ளோம் தவறாக இருந்தால் அது எப்படி தவறு என்பதை வாதமாக முன்வையுங்கள் என்று சொன்னார் பி.ஜெ ஆனால் சமாளிப்பதில் வல்லவரான ஜமாலியோ அரங்கத்தில் இருக்கும் கொஞ்சநஞ்ச கூட்டத்தையாவது தக்க வைத்துக் கொள்ளும் எண்ணத்தில் அதன் பின் எதுவும் பேசவில்லை.

ஜமாலிக்கு இலக்கணம் கற்றுக் கொடுத்த பி.ஜெ :
லா உக்ஸிமு என்பதில் முதலாவது லா வருகிறது லா என்றால் இல்லை என்று அர்த்தம் உக்ஸிமு என்றால் சத்தியம் செய்கிறேன் என்று அர்த்தம் இரண்டையும் சேர்த்தால் சத்தியம் செய்ய மாட்டேன் என்று தானே வரவேண்டும் ஆனால் தாங்கள் மொழியாக்கம் செய்த திருக்குர்ஆனில் (மொழியாக்கங்கள் அனைத்திலும் இப்படித்தான் மொழிபெயர்பு செய்துள்ளார்கள்.) சத்தியம் செய்கிறேன் என்று மொழியாக்கம் செய்துள்ளீர்களே இமாம்களின் துணையின்றி இதனை விளக்குங்கள் என்று கேட்டார் ஜமாலி.

அரபி இலக்கணம் தெரியாததினால் ஏற்பட்ட குறைதான் இது என்பதை புரிந்து கொண்ட பி.ஜெ இலக்கணப் பாடம் நடத்த ஆரம்பித்தார்.

அதாவது சத்தியத்திற்கு முன்பாக லா எனும் சொல் இடம் பெரும் அந்த லா எனும் சொல்லுக்கு அதிகப் படியாக வரும் லா என்று பெயர். இப்படி சத்தியத்திற்கு முன்பு அதிகப் படியாக லா எனும் எழுத்து வரும் போது அதற்கு பொருள் கொள்ளக் கூடாது என்பது அரபி இலக்கண விதி (ஹிதாயா) இது தெரியாததினால் விளைந்ததுதான் இந்தக் கேள்வி என்பதை தெளிவு படுத்தினார்.

சாலிம் (ரலி) விஷயமாக எடுபடாத ஜமாலியின் சமாளிப்புகள் :
இளைஞராக இருந்த சாலிம் (ரலி)அவர்களுக்கு பாலுட்டும் படி நபியவர்கள் அபூஹ{தைபா அவர்களின் மனைவியிடம் கூறியதாக முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ் தவறானது நபியவர்கள் மீது யாரோ ஒருவர் பொய்யான கதையை இட்டுக் கட்டியிருக்கிறார் நபியவர்கள் இப்படிப்பட்ட ஒழுக்க சீர்கேட்டுக்கு வழி வகுக்க மாட்டார்கள் என்றும் பால் குடிச் சட்டம் என்பது குழந்தை பிறந்து இரண்டு வருடத்திற்குட்பட்டது என்பதாலும் இந்த ஹதீஸ் குர்ஆனுக்கு முரண்படுவதாகக் கூறி நாம் அந்த ஹதீஸை மறுக்கிறோம்.

ஆனால் குறிப்பிட்ட ஹதீஸ் சரியானது அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வாதிட வந்த ஜமாலியிடம் அந்த ஹதீஸை ஏற்றுக் கொண்டால் அதற்கு என்ன சட்டம் சொல்வீர்கள் என்று கேட்டார் பி.ஜெ ஆனால் விவாதத்தின் இறுதி வரை சாலிம் விஷயமாக சட்டத்தை ஜமாலி சொல்லவேயில்லை.

ஸாலிம் அவர்கள் வாய் வைத்தா குடித்தார்கள் கறந்து குடித்திருப்பார்கள் என்று சகட்டு மேனிக்கு ஒரு கேள்வியை முன்வைத்தார் ஜமாலி. அப்படியாயின் ஒருவன் ஒரு வீட்டிட்கு அடிக்கடி போய் வரவேண்டி ஏற்பட்டால் அவன் அந்த வீட்டுப் பெண்மணியிடம் பாலைக் கறந்து குடித்தால் சரி என்று சட்டத்தை சொல்வீர்களா? என்று பி.ஜெ அவர்கள் கேட்க வாய் திறக்காமல் இருந்தார் ஜமாலி.

அண்ணியப் பெண்ணிடம் பேன் பார்க்கும் அசிங்கம் :
ஆபாசத்தையும் அசிங்கங்களையும் மாத்திரமே மூலதனமாக கொண்டு இயங்குகின்ற மத்ஹபுவாதிகள் ஹதீஸ்கள் என்ற பெயரால் நபியவர்களைப் பற்றி வரும் ஆபாசங்களுக்கும் முட்டுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

உம்மு ஹராம் (ரலி)அவர்கள் வீட்டிட்கு நபியவர்கள் சென்று அவர்களின் அருகில் தூங்குவார்கள் உம்மு ஹராம் அவர்கள் நபியவர்களுக்கு பேன் பார்த்து விடுவார்கள் என்று இடம் பெறும் ஹதீஸை குர்ஆனுக்கு முரண்படுவதாக கூறி நாம் மறுத்து வருகிறோம்.

ஆனால் இந்த ஹதீஸ் சரியானது என்று கூற வந்த ஜமாலியிடம் சரி என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தெளிவாக நிரூபித்துக் காட்டுங்கள் என்று பல முறை கேட்டும் அதனை அவர் கண்டு கொள்ளவே இல்லை.

அதே போல் ஒருவன் அண்ணியப் பெண்ணின் மடியில் படுத்து தனது தலையில் பேண் பார்த்துவிடச் சொன்னால் அது சரியென்று நீங்கள் பத்வா கொடுப்பீர்களா? என்றும் பி.ஜெ அவர்கள் கேட்டதற்கு இறுதிவரை ஜமாலி வாய் திறக்கவில்லை.

உடலுறவும் கத்தம் தான் ஜமாலியின் புதிய ஆதாரம் :
மரணித்தவருக்காக குர்ஆன் ஓதி கத்தம் கொடுப்பதென்பது இஸ்லாத்தில் இல்லாத வழிமுறை பித்அத் ஆகும்.நபியவர்கள் உயிருடன் இருக்கும் போதே பல நபித்தோழர்களும் நபியவர்களின் பிள்ளைகளும் பாசமிகு மனைவி கதீஜா அவர்களும் மரணித்துள்ளார்கள்.ஆனால் அவர்களில் யாருக்காகவும் நபியவர்கள் கத்தம் கொடுத்ததில்லை.கொடுக்கச் சொல்லவும் இல்லை.

ஆனால் கத்தம் என்றொன்று மார்க்கத்தில் இருப்பதாகக் கூறி பொது மக்களை ஏமாற்றி வயிற்றுப் பிழைப்பு நடத்துகிறார்கள் இந்த பரேலவிகள்.

அதன் உச்ச கட்டமாக ஒருவன் தனது மனைவியிடம் உடலுறவு கொண்டு விட்டு மரணித்த எனது தந்தைக்கு இது கத்தமாக மாறிவிடும் என்று சொன்னால் அது கத்தம் தான் என்று இலங்கையில் நடந்த விவாதம் ஒன்றில் ஜமாலி பேசியதை திரையில் போட்டுக் காட்டி விளக்கம் கேட்டார் பி.ஜெ வாய்ச் சொல்லில் வீரரான் ஜமாலியோ மதில் மேல் பூனையைப் போல் விழித்துக் கொண்டிருந்தார்.

பட்டியல் போட்டார் பி.ஜெ பதறினார் ஜமாலி.
குர்ஆனையும் ஹதீஸையும் இமாம்களின் துணையின்றி விளங்க முடியாது என்று வாதிட வந்த ஜமாலியிடம் இமாம்கள் குர்ஆனையும் ஹதீஸையும் விளங்கிய லச்சணத்தை பட்டியலிட்டு இதற்கெல்லாம் பதில் என்னவென்று பி.ஜெ கேட்டார்.கிட்டத்தட்ட 98 கேள்விகள் கேட்கப்பட்டதில் ஒன்றிரண்டிட்கு மாத்திரம் சில் சமாளிப்புகளை சொன்ன ஜமாலி மீதமிருந்த சுமார் 95க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு வாய் திறக்கவில்லை.

சகோதரர் பி.ஜெ அவர்கள் முன்வைத்த கேள்விகளில் சில……..

(இவையெல்லாம் விளக்கம் என்ற பெயரில் இமாம்கள்(?)என்பவர்கள் கூறியவைகள்)

1.இறைவன் ஒன்றைப் படைக்க நாடினால் ஆகு என்று சொன்னால் அது ஆகிவிடும் என்பது திருமறைக் குர்ஆன் வசனம்.இந்த வசனத்திற்கு விளக்கம் சொன்ன கஸ்ஸாலி என்பவர் இந்த குர்ஆன் வசனம் தவறானது என்று கூறிய விளக்கத்தை பி.ஜெ சுட்டிக் காட்டி இதுதான் உங்கள் இமாம்கள் திருமறையை விளங்கும் லட்சனமா என்று கேட்டார்.
2.வருடம் முழுவதும் லைலதுல் கத்ர் என்ற ஹனபியின் விளக்கத்திற்கு பதில் என்ன?

3.இப்னு அரபி ஷஃபான் ரபியுள் அல்வல் ரபியுள் ஆகிர் ஆகிய மாதங்களிலும் லைலதுல் கத்ர் வரும் என்று சொன்னதற்கு என்ன பதில்?

4.அடுத்தவர் மனைவி மீது நபியவர்கள் ஆசைப் பட்டார்களா?

5.பிர்அவ்ன் முஸ்லிம் என்று இப்னு அரபி சொன்னதற்கு பதில் என்ன?

6.மழை பெய்யும் முறையை ராஸி என்ற இமாம் மறுத்ததற்கு என்ன பதில்?

7.மழை தொழுகை இல்லை என்ற இமாம்களின் விளக்கத்திற்கு என்ன பதில்?

8.கிரகணத் தொழுகையை மறுத்த இமாம்களின் நிலை என்ன?

9.ஏழு வானம் என்றால் இமாம்கள் சொன்ன விளக்கம் 1வது வானத்தில் சந்திரன் ஒட்டப் பட்டுள்ளது.2வது வானத்தில் மெற்குறியும் 3வது வானத்தில் வீனஸ் 4வது வானத்தில் சூரியன் 5வது வானத்தில் செவ்வாய் 6வது வானத்தில் வியாழன் 7வது வானத்தில் சனி வானத்திற்கே இன்னும் மனிதன் போகாத நிலையில் இந்தக் கண்டுபிடிப்புக்கு என்ன விளக்கம்?

10.உருவப் படமோ நாயோ உள்ள வீட்டிற்கு மலக்குகள் வரமாட்டார்கள் என்ற ஹதீஸிற்கு கஸ்ஸாலி கொடுத்த விளக்கம் சரியானதா? இவர்தான் இமாம் என்று சொல்லப்படுபவரா?

11.இடி பற்றிய வசனங்களுக்;கு மலக்குமார் என்று விளக்கம் சொன்னது சரியா?

12.இப்லீஸ் என்பதற்கு இமாம்கள் கொடுத்த விளக்கம் சரியானதா?

13.ஒரு ரக்அத் வித்ர் தொழ முடியும் என்று நபியவர்கள் சொல்லியிருக்க கூடாது என்று இமாம்கள் சொன்னதை ஏற்றுக் கொள்வது முறையா?

14.மஃரிபுக்கு முன் சுன்னத் இருக்கிறது என்று ஹதீஸ் இருக்க சுன்னத் தொழுகை கூடாது என்று சொன்னது சரியானதா?

15.விபச்சாரம் செய்த யூதனுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ் இருக்கிறது.ஆனால் யூதனுக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்று அபூஹனீபா சொல்வது சரியானதா?

16.மழைத் தொழுகை ஜமாத்தாக தொழ வேண்டும் என்று ஹதீஸ் இருக்கும் போது ஜமாத்தாக தொழக்கூடாது என்று அபூஹனீபா சொன்னதற்கு விளக்கம் என்ன?

17.நடுத் தொழுகை எது என்பதில் ஏன் இத்தனை தடுமாற்றம்?

18.அத்தீன் என்பதற்கும் ஸைத்தூன் என்பதற்கும் ஏன் இவ்வளவு தடுமாற்றம்?

19.காளை மாட்டை வணங்கலாம் என்று இப்னு அரபி சொன்னதற்கு பதில் என்ன?

இப்படி கிட்டத்தட்ட 98 கேள்விகளை சகோதரர் பி.ஜெ அவர்கள் முன்வைத்தார் ஆனால் அதில் ஒன்றுக்குக் கூட பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கினார் ஜமாலி.

விவாத அரங்கம் சிரிப்பில் மூழ்கிய சில முக்கிய சந்தர்ப்பங்கள் :

இப்லீஸ் என்றால் யார் என்று இமாம்கள் கொடுத்த விளக்கத்தினை சகோதரர் பி.ஜெ எடுத்துக் காட்டியதும் அரங்கமே சிறிப்பில் மூழ்கியது.

அதாவது இப்லீஸ் என்பவன் தனது வாலை தன்னுடைய பின் துவாரத்தில் நுழைப்பானாம். பின்பு ஒரு முட்டை போடுவானாம் அது பல ஷைத்தான்களை உருவாக்குமாம்.அந்த இப்லீஸ் மொத்தம் 30 முட்டைகள் போடுவானாம் 10 முட்டை கிழக்கிலும் 10 முட்டை மேற்கிலும் 10 முட்டை மத்தியிலும் போடுவானாம்.(குர்ஆனை இமாம்கள் விளங்கிய லட்சனம் ?)

சிலை வணக்கத்தினை விட்டும் என்னையும் என் சமுதாயத்தையும் காப்பாற்றி விடு என்று இப்றாஹீம் நபி துஆ கேட்டதற்கு விளக்கம் சொன்ன கஸ்ஸாலி இந்த வசனம் தங்கம் வெள்ளியில் ஆசைப்படக் கூடாது என்றுதான் சொல்கிறது என்று விளக்கம் கூறியுள்ளார்.என்பதை பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்ட ஜமாலி தரப்பால் வந்திருந்தவர்களுக்கே சிரிப்பை அடக்க முடியவில்லை.

தலாக் பற்றி இமாம்கள் விளக்கம் சொல்லும் போது ஒருவன் தலாக் சொன்னால் கெட்ட தலாக், அகலத் தலாக், நீளத் தலாக், மார்பு தலாக், தலை தலாக், முடி தலாக், முதுகு தலாக், பெண் குறி தலாக், பெண் குறியில் உள்ள முடியின் அளவுக்கு தலாக், ரத்தம் தலாக் என்றெல்லாம் பகுதி பகுதியாக தலாக் சொல்லலாம் என்று விளக்கம் சொல்லியுள்ளார்கள். இதற்கு பதில் என்ன என்று பி.ஜெ கேட்க ஜமாலி தரப்பினரே முகம் சுழித்து இவ்வளவு அசிங்கமா இமாம்கள் எழுதியுள்ளது என்று நினைக்குமளவு ஆகிவிட்டது.

அதே போல் முடியில்லாத மர்ம உருப்பின் முடியளவுக்கு தலாக் என்று ஒருவன் சொன்னால் அதற்குறிய சட்டம் என்ன என்ற முஹம்மத் பின் ஹஸனிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில் தொடர்பாக ஜமாலியிடம் கேட்டதற்கு இறுதி வரை பதிலே இல்லை.

27:52வது வசனத்தில் மறுமையின் அடையாளமாக ஒரு மிருகம் வெளிப்படும் என்று அல்லாஹ் கூறுகிறான் அந்த மிருகத்தைப் பற்றி விளக்கம் சொன்ன இமாம்கள் அந்த மிருகத்தினை வர்ணிக்கிறார்கள் அதாவது அந்த மிருகம் மாட்டுத் தலையையும் பன்றிக் கண்ணையும் சிங்கத்தின் நெஞ்சையும் பூனையின் இடுப்பையும் ஒட்டகத்தின் காலையும் கொண்டிருக்குமாம் மூஸா நபியின் கைத் தடியையும் கையில் வைத்துக் கொண்டிருக்குமாம்.

மூஸா நபியவர்கள் பாம்மைப் போட்டதைப் பார்த்தவுடன் பிர்அவ்னுக்கு பெரும் சப்தத்துடன் காற்று வெளிப்பட்டதாம் அன்றுதான் அவன் முதலாவது காற்று விட்டானாம்.

இனிமேல் விவாதம் என்ற பேச்சையே பரேலவிகள் எடுக்க மாட்டார்கள் என்ற அளவுக்கு சத்தியம் நிலை நாட்டப் பட்டு அசத்தியம் குழி தோண்டிப் புதைக்கப் பட்டது.

விவாத வீடியோக்கள் வெளியிடப் பட்டுள்ளன அதனைப் பார்ப்பவர்கள் இமாம்கள் என்பவர்களின் அசிங்கமான விளக்கங்களையும் ஜமாலியின் சமாலிப்புகளையும் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும்.
நன்றி:http://www.rasminmisc.blogspot.com/