கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சனி, 4 டிசம்பர், 2010

துபையில் பெரும் எழுச்சியோடு நடைப்பெற்ற தவ்ஹீத் மாநாடு


கடந்த வெள்ளிக்கிழமை 03.12.2010 அன்று துபாயில் உள்ள அல் மக்தூம் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் பெரும் எழுச்சியோடு தவ்ஹீத் மாநாடு மண்டலத் தலைவர் அப்துல் நாசிர் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. தாயகத்தில் இருந்து வருகைத் தந்த மேலாண்மைக்குழு தலைவர் சம்சுல்லுகா அவர்கள் வஞ்சிக்கப்பட்டோரின் கோரிக்கைகள் என்ற தலைப்பில் பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை விளக்கி கூறியதோடு தவ்ஹீதுக்கு எதிராய் புறப்பட்டுள்ள 19 கூட்டத்தை பற்றியும் விளக்கி பேசினார்.

துபாய் மண்டல தலைவர் ஹாமீம் இப்ராஹீம் அவர்கள் தடம் மாறாத தவ்ஹீத் ஜமாஅத் என்ற தலைப்பில் தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராய் சொல்லப்படுகின்ற, பரப்பபடுகின்ற பொய் புரட்டுகளை பற்றியும் இந்த ஜமாஅத் என்றும் கொள்கை மாறாமல் குரான் ஹதீஸ் வழிமுறையில் நிற்கிறது என்ற கருத்தோடு எழுச்சி உரை நிகழ்த்தினர்.

எத்துனை 19 கூட்டங்கள் வந்தாலும் தவ்ஹீத் எனும் சத்தியக் கொள்கையை அழிக்க முடியாது
((நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக.Al Quarn 17:81))என்பதை பறைச் சாற்றும் விதமாக மக்கள் பெரும் திரலாக கலந்துக்கொண்டு சிறபித்தனர்.

ஊர்களில் வருவதுபோல் மக்கள் பஸ்கலையும் வேன்கலையும் வைத்துக்கொண்டு வந்து மாநாட்டை வெற்றிப்பெற வைத்தனர் எல்லப் புகழும் அல்லாஹ்விற்கே !!!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக