கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

சனி, 28 ஆகஸ்ட், 2010

துபை ஹோர் அல் அன்ஸ் கிளையில் நடந்த சிறப்பு ரமளான் சொற்பொழிவு


கடல் கடந்து வாழ்ந்தாலும் தான் ஏற்றுக் கொண்ட ஓரிறைக் கொள்கையை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், மானுட சமூகம் இம்மையிலும் மறுமையிலும் நற்பேற்றினைப் பெற்றிட தன்னலம் பாராமல் செயல்பட்டுக் கொண்டு பீறுநடைப் போட்டு வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலத்தின் ஹோர் அல் அன்ஸ் கிளையில் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை வாராந்திர சொற்பொழிவு நடைபெறுவது வழக்கம்.


ரமளான் மாதத்தை முன்னிட்டு ரமளானில் ஒவ்வொரு வியாழக் கிழமையும் வாராந்திர சொற்பொழிவு நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக 26-08-2010 வியாழக்கிழமை அன்று இரவுத் தொழுகைக்குப் பிறகு 9.45 மணி முதல் 10.45 மணி வரை ரமளான் சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோ. எம்.எஸ். சுலைமான் அவர்கள் 'எது சத்தியம்?' என்ற தலைப்பில் குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையில் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். அதில் நுாற்றுக் கணக்கான சகோதரர்கள் கலந்துக் கொண்டு பயன்பெற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக