கண்ணியத்துக்குரிய வல்ல நாயன் தன் திருமறையில்:
அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே! (அல்குர்ஆன் 3:19) மேலும்,இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)
நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம்,இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு இழைத்த மிகக் கடுமையான துன்பம் எதுவென்று எனக்கு அறிவியுங்கள்!என்று கேட்டேன்.அதற்கவர்கள் கூறினார்கள்: ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் வளாகத்தில் (ஹிந்த் பகுதியில்) தொழுது கொண்டிருந்த போது, உக்பா பின் அபீமுஜத் என்பவன் முன்னோக்கி வந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது தோளைப் பிடித்து தன் துணியை அவர்களது கழுத்தில் போட்டு முறுக்கி (மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் முன்னால் வந்து அவனது தோளைப் பிடித்து இழுத்து விட்டு, (நபியவர்களைத் துன்புறுத்த விடாமல் தடுத்து) என் இறைவன் அல்லாஹ் தான் என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார் (அல்குர்ஆன் 40:28) என்று கேட்டார்கள். (உர்வா பின் ஸூபைர் (ரஹ்) புகாரி 4815, 3678,3856)
இஸ்லாம் என்பது தியாகங்களால் எழுப்பப்பட்ட மாளிகை! அலட்சியமாகவோ ஏனோ தானோ என்றோ பின்னப்ட்டதல்ல.ஏதோ பத்தோடு பதினொன்றாக தத்துவமாகவோ புரியாத புதிராகவோ சொல்லப்பட்டதல்ல.
மனித சமூகத்தை வீண் கற்பனைகளிலும் கனவுகளிலும் மிதக்க வைக்க வந்த புராணக் கதைகளின் கோர்வையுமல்ல.மாறாக உண்மை இறைவனின் உள்ளமையையும் வல்லமையையும் உணர்ந்து யதார்த்த வணக்கங்களால் ஏக நாயனை பணிந்து வாழ வகை செய்யும் உயர்வான கொள்கையே இஸ்லாம்.
அஞ்ஞானமும் அறியாமையும் காரிருளாய் மனித சமூகத்தை பீடித்து அழிவின் விளிம்பில் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த போது கருணையாளனின் கிருபையால் ஏகத்துவப் போராளி நபியின் வழியாக வேதத்தின் வழியாக மனித சமுதாயத்தின் ஒரு கூட்டத்தை எட்டியது. அந்தப் போராளியை உயிரினும் மேலாக அந்தக் கூட்டம் கருதியது.பற்றிப் பிடித்தது. அதற்காக அதைப் பின்பற்றுவதற்காக அந்தக் கொள்கையின் வளர்ச்சிக்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்யத் தயாரானது!
உயிரானாலும், பொருளானாலும், குடும்பம், நட்பு, எந்தவொன்றையும் இறைக்கொள்கைக்காக தியாகம் செய்யத் தயாரானது. செய்தது. அத்தகைய தியாகத்தால் உலகில் இஸ்லாம் சுவடுபதிக்காத இடமே இல்லை என்கின்ற அளவுக்கு வளர்ந்து மேன்மையுற்றது.
சிந்தனைகளும், செயல்களும் அல்லாஹ்வுக்காக என்ற நிலையே அவர்களிடம் மேலோங்கியிருந்ததால் இஸ்லாத்தினால் அவர்களும்,அவர்களால் இஸ்லாமும் சிறப்புற்றது. ஹிஜ்ரத் என்பது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு! கொள்கை வளர்ச்சிக்கு ஹிஜ்ரத் ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது.
ஹிஜ்ரா என்பது தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து சொந்த மண்ணில் உள்ள உடமைகளை அப்படியே விட்டு விட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த
நாட்டை,சொந்த ஊரை துறந்து அன்னிய நாட்டுக்கு அன்னிய ஊருக்கு செல்வதாகும். செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டி வரும்.உயிர் பறிபோகலாம். உடமைகள் அபகரிக்கப்படலாம். செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ?அங்கு என்னென்ன கவலைகளும் துக்கங்களும் துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று எதுவும் அறியாத நிலையில் மேற்கொள்ளப்படும் பயணமே ஹிஜ்ரத்தாகும்.
இவை அனைத்தையும் தெரிந்துதான் முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்யத் தொடர்ந்தனர். முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்து ஓரிடத்தில் ஒன்று கூடிவிட்டால் தங்களுக்கு ஆபத்துகள் ஏற்படலாம் என்று உணர்ந்திருந்த மக்கா முஷ்ரிக்குகள் முஸ்லிம்களை ஹிஜ்ரா செய்ய விடாமல் தடுத்தனர்.இதற்கு சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்.
ஹிஜ்ரா செய்த முதல் கூட்டத்தில் அபூஸலமாவும் ஒருவர். இவர் இரண்டாவது அகபாவிற்கு ஒரு வருடத்திற்கு முன் ஹிஜ்ரா செய்தார். அபூஸலமா(ரலி) தனது மனைவியுடனும், தனது சிறிய குழந்தையுடனும் ஹிஜ்ரா செய்ய நாடியபோது அவரது மனைவியின் உறவினர்கள் அபூஸலமாவை நோக்கி நீ எங்களை புறக்கணித்து விட்டதால், நீ வேண்டுமானால் சென்று விடு: எங்களுடைய பெண்ணை ஊர் ஊராக அழைத்துத் திரிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவரின் மனைவியையும் குழந்தையையும் அவரிடமிருந்து பிரித்து விட்டனர்.
இதைப் பார்த்த அபூஸலமாவின் குடும்பத்தினர் நீங்கள் உங்களது பெண்ணை எங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து வீட்டீர்கள்.எனவே, எங்கள் மகனுக்குப்