கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

வெள்ளி, 28 ஜூன், 2013

இலகுவாக கிடைத்த இஸ்லாம்!

கண்ணியத்துக்குரிய வல்ல நாயன் தன் திருமறையில்: 

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே! (அல்குர்ஆன் 3:19) மேலும்,இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம்,இணைவைப்பவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு இழைத்த மிகக் கடுமையான துன்பம் எதுவென்று எனக்கு அறிவியுங்கள்!என்று கேட்டேன்.அதற்கவர்கள் கூறினார்கள்: ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் வளாகத்தில் (ஹிந்த் பகுதியில்) தொழுது கொண்டிருந்த போது, உக்பா பின் அபீமுஜத் என்பவன் முன்னோக்கி வந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களது தோளைப் பிடித்து தன் துணியை அவர்களது கழுத்தில் போட்டு முறுக்கி (மூச்சு திணறும்படி) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் முன்னால் வந்து அவனது தோளைப் பிடித்து இழுத்து விட்டு, (நபியவர்களைத் துன்புறுத்த விடாமல் தடுத்து) என் இறைவன் அல்லாஹ் தான் என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார் (அல்குர்ஆன் 40:28) என்று கேட்டார்கள். (உர்வா பின் ஸூபைர் (ரஹ்) புகாரி 4815, 3678,3856)

இஸ்லாம் என்பது தியாகங்களால் எழுப்பப்பட்ட மாளிகை! அலட்சியமாகவோ ஏனோ தானோ என்றோ பின்னப்ட்டதல்ல.ஏதோ பத்தோடு பதினொன்றாக தத்துவமாகவோ புரியாத புதிராகவோ சொல்லப்பட்டதல்ல.

மனித சமூகத்தை வீண் கற்பனைகளிலும் கனவுகளிலும் மிதக்க வைக்க வந்த புராணக் கதைகளின் கோர்வையுமல்ல.மாறாக உண்மை இறைவனின் உள்ளமையையும் வல்லமையையும் உணர்ந்து யதார்த்த வணக்கங்களால் ஏக நாயனை பணிந்து வாழ வகை செய்யும் உயர்வான கொள்கையே இஸ்லாம்.

அஞ்ஞானமும் அறியாமையும் காரிருளாய் மனித சமூகத்தை பீடித்து அழிவின் விளிம்பில் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த போது கருணையாளனின் கிருபையால் ஏகத்துவப் போராளி நபியின் வழியாக வேதத்தின் வழியாக மனித சமுதாயத்தின் ஒரு கூட்டத்தை எட்டியது. அந்தப் போராளியை உயிரினும் மேலாக அந்தக் கூட்டம் கருதியது.பற்றிப் பிடித்தது. அதற்காக அதைப் பின்பற்றுவதற்காக அந்தக் கொள்கையின் வளர்ச்சிக்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்யத் தயாரானது!

உயிரானாலும், பொருளானாலும், குடும்பம், நட்பு, எந்தவொன்றையும் இறைக்கொள்கைக்காக தியாகம் செய்யத் தயாரானது. செய்தது. அத்தகைய தியாகத்தால் உலகில் இஸ்லாம் சுவடுபதிக்காத இடமே இல்லை என்கின்ற அளவுக்கு வளர்ந்து மேன்மையுற்றது.

சிந்தனைகளும், செயல்களும் அல்லாஹ்வுக்காக என்ற நிலையே அவர்களிடம் மேலோங்கியிருந்ததால் இஸ்லாத்தினால் அவர்களும்,அவர்களால் இஸ்லாமும் சிறப்புற்றது. ஹிஜ்ரத் என்பது இஸ்லாமிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வு! கொள்கை வளர்ச்சிக்கு ஹிஜ்ரத் ஒரு திருப்பு முனையாகவும் அமைந்தது. 

ஹிஜ்ரா என்பது தனது எல்லா உலக ஆதாயங்களையும் இழந்து சொந்த மண்ணில் உள்ள உடமைகளை அப்படியே விட்டு விட்டு தன்னையும் தனது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்ள தனது சொந்த 

நாட்டை,சொந்த ஊரை துறந்து அன்னிய நாட்டுக்கு அன்னிய ஊருக்கு செல்வதாகும். செல்லும் வழியில் அல்லது செல்வதற்கு முன் பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டி வரும்.உயிர் பறிபோகலாம். உடமைகள் அபகரிக்கப்படலாம். செல்லுமிடத்தில் எத்தகைய எதிர்காலத்தை முன்னோக்க வேண்டியிருக்குமோ?அங்கு என்னென்ன கவலைகளும் துக்கங்களும் துயரங்களும் மறைந்திருக்கின்றனவோ? என்று எதுவும் அறியாத நிலையில் மேற்கொள்ளப்படும் பயணமே ஹிஜ்ரத்தாகும்.

இவை அனைத்தையும் தெரிந்துதான் முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்யத் தொடர்ந்தனர். முஸ்லிம்கள் ஹிஜ்ரா செய்து ஓரிடத்தில் ஒன்று கூடிவிட்டால் தங்களுக்கு ஆபத்துகள்  ஏற்படலாம் என்று உணர்ந்திருந்த மக்கா முஷ்ரிக்குகள் முஸ்லிம்களை ஹிஜ்ரா செய்ய விடாமல் தடுத்தனர்.இதற்கு சில உதாரணங்களை இங்கு பார்ப்போம்.

ஹிஜ்ரா செய்த முதல் கூட்டத்தில் அபூஸலமாவும் ஒருவர். இவர் இரண்டாவது அகபாவிற்கு ஒரு வருடத்திற்கு முன் ஹிஜ்ரா செய்தார். அபூஸலமா(ரலி) தனது மனைவியுடனும், தனது சிறிய குழந்தையுடனும் ஹிஜ்ரா செய்ய நாடியபோது  அவரது மனைவியின் உறவினர்கள் அபூஸலமாவை நோக்கி நீ எங்களை புறக்கணித்து விட்டதால், நீ வேண்டுமானால் சென்று விடு: எங்களுடைய பெண்ணை ஊர் ஊராக அழைத்துத் திரிய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவரின் மனைவியையும் குழந்தையையும் அவரிடமிருந்து பிரித்து விட்டனர்.

இதைப் பார்த்த அபூஸலமாவின் குடும்பத்தினர் நீங்கள் உங்களது பெண்ணை எங்கள் குடும்பத்தாரிடமிருந்து பிரித்து வீட்டீர்கள்.எனவே, எங்கள் மகனுக்குப்

செவ்வாய், 4 ஜூன், 2013

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்!

மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.

மிஃராஜ் ஓர் அற்புதம் மஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1) ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான். ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே! அழகிய தோற்றமுடைய வலிமைமிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்ன் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்நது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?. (53:5-12)

ஜிப்ரில் என்னும் வானவரை நபி (ஸல்) அவர்கள் முதன் முதல் சந்தித்ததை இறைவன் மேற்கூறிய வசனங்களில் கூறுகின்றான். இந்தச் சந்திப்பு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது நடந்தது. இந்த வசனங்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஜிப்ரீலை மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறான். ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:13-18) இந்தச் சந்திப்பு ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் நடந்ததாகவும் அந்த இடத்தில் தான் சுவர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் சென்றதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன.

இல்லையெனில் வானுலகில் உள்ள ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்திருக்க முடியாது. எனவே இதுவும் மிஃராஜ் பற்றியே கூறுகிறது. (முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60) இவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்கு சோதனையாக அமைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர். நபி (ஸல்) அவர்களை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியைக் கூறிய பொழுது மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று குறிப்பிடுகிறான்.

அக்காட்சியை நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டி அவர் மக்களுக்கு கூறும் பொழுது மக்கள் நம்புகிறார்களா? என்று சோதித்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார்? பலவீன நம்பிக்கை உள்ளவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்ட இதைச் செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான். எனவே நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் உண்மையான இறை நம்பிக்கையாளர்களைப் பிரித்து அடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக மிஃராஜ் என்னும் நிகழ்ச்சி அமைந்துள்ளது. மிஃராஜ் என்னும் விண்ணுலகப்பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த இதழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வைப் பற்றி முஸ்லிம்களிடம் பரவலாக நிலவி வரும் தவறான நம்பிக்கைகளை அடையாளம் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மிஃராஜ் நடந்தது எப்போது? மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதற்குச் சரியான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லை நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே மிஃராஜ் நடந்து விட்டது என்று வரலாற்று ஆசிரியர் இப்னு இஸ்ஹாக் என்பவர் குறிப்பிடுகின்றார். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என ஸுஹ்ரீ அறிவிப்பதாக பைஹகீயில் இடம் பெற்றுள்ளது. ஹிஜ்ரத் நடப்பதற்கு 16 மாதங்களுக்கு முன்னால் தொழுகை கடமையாக்கப் பட்டது. எனவே துல்காயிதா மாதத்தில் தான் மிஃராஜ் நடந்தது என்று இஸ்மாயீல் ஸதீ என்பவர் அறிவிப்பதாக ஹாகிமில் கூறப்பட்டுள்ளது. உர்வா, ஸுஹ்ரீ ஆகியோர் ரபிய்யுல் அவ்வல் மாதம் நடைபெற்றதாகக் கூறுகின்றார்கள். யானை ஆண்டில் திங்கட்கிழமை ரபிய்யுல் அவ்வல் பிறை 12ல் மிஃராஜ் நடைபெற்றது என்று ஜாபிர், இப்னு அப்பாஸ் (ர) ஆகியோர் கூறுகின்றார்கள். ரஜப் மாதம் 27ல் நடைபெற்றது என்று ஹாபிழ் அப்துல் கனி இப்னு ஸுரூருல் முகத்தஸ் கூறுகின்றார். ரஜப் மாதம் முதல் ஜும்ஆ இரவில் நடைபெற்றது என்று வேறு சிலர் குறிப்பிடுகின்றார்கள்.

இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இமாம் இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள். நபி (ஸல்) அவர்களின் விண்ணுலப் பயணம் எந்த ஆண்டு, எந்த மாதத்தில், எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை. எனவே இந்த விண்ணுலகப் பயணம் நடந்தது உண்மை என்று நம்பி அல்லாஹ்வின் வல்லமையை நாம் ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் துôதர் (ஸல்) அவர்களோ கூறிடவில்லை நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஓரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி எந்த நாளில் நடந்தது என்று அல்லாஹ்வும் அவனுடைய துôதருமே குறிப்பிடாத போது எப்படி நம்மால் கணிக்க முடியும்?

மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள் எல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத் எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச் செய்து வருகின்றது. ரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக் கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர். “மிஃராஜ் இரவில் வானத்திருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர்” என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர். இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்கள், மவ்த் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள். அந்த இரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று எண்ணுகின்றனர்.

எப்பொழுதும் வழமையாக ஒருவர் இரவில் தொழுது வருகிறாரென்றால் அவ்விரவில் தொழுவது தவறல்ல. ஆனால் பிரத்யேகமாக இந்த இரவுக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான் தவறு. அதிலும் வழக்கமான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதால் கூட பரவாயில்லை. புதிய புதிய முறைகளில் தொழுகையைத் தாங்களாக உருவாக்கி தொழுவது தான் இதில் வேதனைக்குரிய விஷயம். 6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3ம் கமா 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும். 3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும். இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃபவும், ஈலாஃபி குறைஷ் சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி தொழுகை முறையை மாற்றி, இதைத் தொழுதால் ஏராளமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர். இவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா? நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (2697) நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: முஸ்லிம் (3243) இவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக் கூடாது? என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கின்றான் உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா? (49:16) அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்குச் சமமாக ஆகி விடும். லைலத்துல் கத்ர் எனும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அது போல் இந்த மிஃராஜ் இரவுக்கும்

திங்கள், 3 ஜூன், 2013

இறைவனை அஞ்சுவோரின் இனிய பண்புகள்!

உண்மையான இஸ்லாமியர்களின் உன்னத குறிக்கோள் சொர்க்கத்தை அடைய வேண்டும் என்பது தான். இந்த இலட்சியத்திற்காகவே தொழுகின்றனர்.நோன்பு நோற்கின்றனர். தர்மம் அளிக்கின்றனர்.இது போன்ற நன்மையான காரியங்களில்,மார்க்கம் பணிக்கின்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.இவைகள் நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் காரியங்களே.இருப்பினும் சொர்க்கத்தை அடைய வேண்டுமெனில்,அதில் நாம் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்கப்பட வேண்டுமெனில் நம்மிடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கிய தகுதி என்ன?என்பதை சிந்திக்க மறந்து விட்டனர். 

இறையச்சம் தான் இறைவன் நிர்ணயித்திருக்கின்ற மிக முக்கிய தகுதி.நாம் இறைவனை உண்மையான முறையில் அஞ்சுபவர்களாக இருந்தால் மட்டுமே சொர்க்கத்திற்குள் நுழைய முடியும்.சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்க வேண்டுமெனில் இறையச்சம் எனும் தகுதி நிச்சயம் நம்மிடத்தில் இருந்தாக வேண்டும்.இதை பின்வரும் வசனத்தி­ருந்து புரிந்து கொள்ளலாம். 

உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சு வோருக்காக அது தயாரிக்கப்பட்டுள்ளது.(அல்குர்ஆன் 3:133)

இறைவனை அஞ்சுவோருக்குத்தான் சொர்க்கம் படைக்கப் பட்டுள்ளது என்பதை இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.சொர்க்கத்தில் புக வேண்டும் என்று விரும்புபவர்கள் இறைவன் விரும்பும் இந்த தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் அது சாத்தியமில்லை.

இனியவர்களின் இலக்கணங்கள்:

இறைவனை அஞ்சுவோர்களே சொர்க்கத்தில் நுழைவார்கள் என்பதை கூறிவிட்டு,அவர்களுக்கு சில இலக்கணங்களையும், பண்புகளையும் குறிப்பிட்டு இவைகள் ஒவ்வொரு இறையச்சவாதியிடத்திலும் இருக்க வேண்டும், அவர்களே உண்மையில் இறைவனை அஞ்சுவோர்கள் என்பதாக இறைவன் தெரிவிக்கின்றான்.நாம் உண்மையில் இறைவனை அஞ்சுவோர்களாக இருந்தால் இறைவன் கூறும் அந்த இலக்கணங்களுக்கு சொந்தக்காரர்களாக மாற வேண்டும். அந்த பண்புகள் அனைத்தையும் ஒரு சேர பெற்றுக்கொண்டாலே தவிர இறைவனது பார்வையில் அவனை உண்மையாய் அஞ்சும் விசுவாசிகளாக முடியும் என்பதை புரிந்து,அவைகளை வளர்த்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும். 

இனி இறைவன் கூறும் இலக்கணங்கள் :

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள்.அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்?தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்(அல்குர்ஆன்3:134, 135)
எந்நிலையிலும் தர்மம்   அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல்வழியில்) செலவிடுவார்கள்.(அல்குர்ஆன் 3 : 134,)

உண்மையான முறையில் இறைவனை அஞ்சுவோர்கள் எந்த ஒரு நிலையிலும் இறைவனது பாதையில் செலவிடுபவர்களாக இருப்பார்கள் என்பதாக ஒரு இலக்கணத்தை வகுக்கின்றான். அதாவது அவர்கள் இன்பத்தில் மூழ்கியிருந்தாலும் படைத்த இறைவனை மறக்காமல்,இந்த இன்பத்தை தந்தவன் இறைவனே என்று இறைவழியில் செலவிடுவார்கள், அதே போல் துன்பத்தில் துவண்டிருந்தாலும்,இதையளித்தவன் இறைவன் தான் என்றாலும் நம்மை சோதிப்பதற்காகவே இந்த துன்பத்தை அளித்திருக்கின்றான்.இதனால் என் இறைவனது 

பாதையில் தர்மம் செய்வதை நிறுத்த மாட்டேன் என்பதில் உறுதியாய் இருப்பார்கள் என்பதாக  இந்த வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

ஆனால் செல்வச் செழிப்புடன் இருக்கும் போது தர்மமளிக்கும் பல இஸ்லாமியர்கள் தங்களுக்கு துன்பம் ஏற்பட்டுவிட்டால் தாங்கள் தர்மம் செய்வதை நிறுத்திவிடுகின்றார்கள். எங்களுக்கு ஏன்? இறைவன் வறுமையை தர வேண்டும் என்று இறைவன் மீதே கோபித்துக் கொள்ளும் அதிக பிரசங்கித் தனத்தை மேற்கொள்கின்றார்கள்.

இன்னும் சிலர் தாங்கள் வறுமையில் இருக்கும் போது இறைவா! எங்கள் வறுமையை நீக்கிவிடு என்று பிரார்த்திப்பதுடன் அதற்காக  தர்மம் அளித்து வருவார்கள்.இறைவன் அவர்களது துன்பத்தை போக்கியவுடன் அத்தோடு இறைவனை மறந்து இன்பத்தில் மூழ்கி திளைத்திடுவார்கள்.இது போன்ற இழிவான குணம் இறைவனை அஞ்சுவோர்களிடம் இருக்காது.அவர்கள் தர்மம் அளித்து வருவதை இன்பம்,துன்பம்,வறுமை,செழிப்பு போன்ற எதுவும் தடுத்திராது என்று இறைவன் கூறுகின்றான்.இத்தகைய நிலையை நபிகளாரும்,அவர்களின் தோழர்களும் பெற்றிருந்தார்கள்.இந்த பண்பை நாமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கோபத்தை மென்று விழுங்குதல்:
கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். 

(அல்குர்ஆன் 3 : 134, )

இறைவனை அஞ்சும் அடியார்கள் தங்களுக்கு கோபம் ஏற்பட்டால் அவற்றை கட்டுப்படுத்திக் கொள்வார்கள் என மேற்கண்ட வசனத்தில் இறைவன் தெரிவிக்கின்றான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே ஆவான். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ர­), புகாரி 6114
இன்று கோபம் கொள்வது பெருமைக்குரிய விஷயமாக ஆகிவிட்டதை காண்கிறோம். ஒரு சிலர்கள் தாங்கள் கோபம் கொள்வதை(எனக்கெல்லாம் கோபம் வந்துச்சுன்னா என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது)என்பதாக பெருமை பொங்க கூறுகின்றார்கள்.பெண்கள் தங்கள் குழந்தைகளின் மீது கோபம்